Jump to content

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை

 

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

நாவாந்துறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து செயற்படுவதற்காகத்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம் ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகின்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம்மேற்கொண்டிருந்த அத்தனை நடவடிக்கைகளையும் இல்லாது செய்துவிட்டார்கள். இத்தகைய நிலைமையில் தான் இன்று நாங்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒருமித்து செயற்படுவதன் மூலம்தான் எமக்கான தீர்வினை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐக்கியதேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியை உருவாக்கியது. 

இந்தச் சந்தர்ப்பத்தை நாங்களும் பயன்படுத்தி நீண்டகாலமாக பிரச்சினையாக இருந்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு தீர்வைக்காண்பதற்காக அதற்கேற்ற முன்னேற்பாடான தீர்வுமுயற்சிகளை நாம்மேற்கொண்டிருந்தோம் அதேவேளை அது எமது பகுதியில் அபிவிருத்தியையும் செய்வதற்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்தோம். 

இவ்வாறான முயற்சிகள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என தென்னிலங்கையைச் சார்ந்தோர் நினைத்தமையினால் அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி அத்தனை முயற்சிகளையும் இல்லாது செய்துள்ளார்கள் அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தலும் நாங்கள் ஒருமித்த கருத்துக்களை வெளியிட்டபோதும் ஆட்சியில் அமர்ந்துள்ள கோத்தாபய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினால் ஆட்சியில் அமர்ந்துள்ளேன் எனவும் அவர்களுக்காகத்தான் செயற்படப்போகிறேன் என கருத்துக்களைக் தெரிவித்துள்ளார்.

mawai_senadhiraja.jpg

அது மட்டுமன்றி இந்த நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றியோ இனப்பிரச்சினை பற்றியே எத்தகைய கதைகளையும் கூறாது அவர்கள் செயலாற்றிவருகின்றார்கள். 

அவரது இந்தச் செயற்பாடானது தமிழ் மக்களை இன்னும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது எங்களை இன்னும் அச்சத்திலேயே ஆழ்த்தியுள்ளது. 

இத்தகைய நிலையில் பாராளுமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில் எங்களுக்குள்ளேயே பல கூட்டணிகள் உருவாகியுள்ளது. நாங்கள் எதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டோமோ அவ்வாறே மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். 

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/77294

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

நாங்கள் எதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டோமோ அவ்வாறே மீளவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். 

எதற்காக??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்த்றையில் இன்னுமொரு மாளிகை கட்ட..

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.

அரசியல் என்றால்.... படிச்சவர்; பட்டம் பெற்றவர்; முன்னாள் அவர் / இவர்; .... என்று பார்க்காமல்

நேர்மையானவர்; வெளிப்படையானவர்; உண்மையானவர்; தேசியப்பற்று உள்ளவரா? என்று மட்டும் தான் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும்

சரிங்க நைனா! பலம் பெற்றிருந்து எதைச் சாதிச்சீங்க? ஒவ்வொரு தடவையும் அரைச்ச மாவையே அரைச்சு அலுக்கேலையா  உங்களுக்கு? இந்தத் தடவை இனொருவருக்கு சந்தர்ப்பம் கொடுத்து பார்த்தால் மாற்றம் வருகுதோ பார்க்கலாம். ஒன்றையே பார்த்து, கேட்டு சலித்துவிட்டது எமக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

  

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததே அத்கைய பலம்தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/77294

இதான் இவங்களோட தொழில் ரகசியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்ட காலத்திலையே விடுதலைக்கு உதவாத கூட்டம்.. இப்ப தமக்கு வாக்குச் சேகரித்து விடுதலை வாங்கித் தரப்போகுதாம்.

தாங்கள் தங்கள் பொக்கட்டுக்களை நிரப்ப.. விடுதலை ஒரு கோசம்.. இவங்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யுற அநியாயம்  எல்லாத்தையும், செய்து போட்டு...
எந்த முகத்துடன், இப்படி கேட்கிறார்கள்  என்று புரியவில்லை. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

AEA10-E4-E-6-A91-47-A8-BAF9-241-F383-AB5

Link to comment
Share on other sites

19 hours ago, தமிழ் சிறி said:

செய்யுற அநியாயம்  எல்லாத்தையும், செய்து போட்டு...
எந்த முகத்துடன், இப்படி கேட்கிறார்கள்  என்று புரியவில்லை. 😡

மக்கள் வாக்கு போடும்வரை இப்படி கேட்பது அவர்களுக்கு இலாபகரமானது. இவர்களுக்கு பாடம் படிப்பிக்கவாவது மக்கள் ஒட்டுமொத்தமாக மொட்டு கட்சியை அல்லது யூ. என். பி. யை  ஒரு முறையாவது முற்றாக ஆதரிக்க வேண்டும். இவர்கள் அனைவரையும் அப்படியே ஓரம்கட்டி விட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.