Jump to content

நிலம் தழுவாத நிழல்கள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

                                                                                                                                                                   உ.

                                                                                                                                              நிலம்  தழுவாத நிழல்கள்.

 

நிலம் ..... 1.

                                    அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர்.

                                           அந்த ஆற்றின் ஒரு கரையில் ஒரு சிறிய  பூங்கா. அங்கு அழகழகான பூச்செடிகளும்,கலைநயத்துடன் கத்தரித்து விட்ட சிறிய மரங்களும் இருக்கின்றன.பூக்களை தென்றல் உச்சி முகர்ந்து கொண்டு போகும்போது வாசனையையும் காவிச்சென்று தூவி விடுகின்றது. அங்கிருந்த ஒரு நீளமான வாங்கில் மிகவும் நெருக்கமாய் ஒட்டி உட்க்கார்ந்திருக்கும் சாரதாவும் பிரேமனும் கூடவே சேர்ந்து அச் சிறுவர்களுக்கு இசைவாகக் கைகளை அசைக்கின்றார்கள். சாரதாவின் வலதுகை அவன் இடையோடு அணைத்திருக்க பிரேமனின்  இடது மேற்கை அவள் மார்போடு தெரிந்தும் தெரியாததுபோல் உரசி உறவாடி கொண்டிருக்கு. சமீபத்தில்தான் சாரதாவுக்கும் பிரேமனுக்கும் திருமணம் ஆகி இருந்தது.

                                   சாரதா பிரேமனிடம், ஏன் பிரேம் நாங்கள் எமது ஹனிமூனை ரியூனியன் ஐலண்டுக்கு சென்று கொண்டாடுவோமா....!

பிரேம் ;  இப்போது வேண்டாம் சாரு.....!

சாரதா ;  ஏன் பணத்துக்கு யோசிக்கிறாயா டார்லிங்....நான் தாறன்.முழுச்செலவும் என்னோடது.என்ன சொல்கிறாய்.....!

பிரேம் ; அதுக்கில்லை சாரும்மா,உனக்கு தெரியும்தானே, ஊரில் இருக்கும் எனது தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும்.மாப்பிள்ளையும் எங்கட சொந்தத்துக்குள்ளேயே அப்பா பார்த்து கதைத்து வைத்திருக்கிறார்.அதுக்கு நிறைய பணம் தேவை.அதுதான் யோசிக்கிறன்  என்று சொல்லி இழுத்தவன்.....நான் இப்ப கொஞ்சம்  பணம் சேர்த்திருக்கிறேன்.  ஆயினும் சீர்வரிசை எல்லாம் செய்ய வேண்டும்.வாறமாதம் சீட்டை எடுத்து வீட்டை  அனுப்பலாம் என்று இருக்கிறன்.  

சாரதா; சரி உன் இஷ்டம். நான் உன் தங்கை ரேவதியின் கலியாணச் செலவுகளுக்கு காசு தருகிறேன் என்றாலும் நீ மறுக்கிறாய்.நீ போடும் சீட்டு கூட இப்பதான் தொடங்கி இரண்டு மாதம் போய் இருக்கு.இப்ப எடுத்தால் நிறைய கழிவு போகும்.கையில கொஞ்ச பணம்தான் வரும்....!

பிரேம் ; எனக்கு தெரியும் சாரதா.நீ பணம் தருவாய் என்று.ஆனாலும் இந்த விடயத்தை எனது சொந்த முயற்சியில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். மேலும் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.செய்வாயா......!

சாரதா ; என்ன சொல்லு பிரேம்.உன்னையே நம்பி வந்துட்டேன், இது நீ கேட்கணுமா என்னெண்டு சொல்லு.....!

பிரேம் ; தங்கையின் திருமணம் எல்லாம் நல்லபடியாய் முடியும்வரை எமக்கு குழந்தை பிறப்பதை சிறிது காலம் தள்ளிப் போடலாம், என்ன சொல்கிறாய்....!

சாரதா ; ப்ளீஸ் பிரேம்... அது மட்டும் வேண்டாமே.....உனக்கே தெரியும் எனக்கு பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று.சற்றுமுன் கூட அந்தப் படகில் சென்ற பிள்ளைகளிடம் எவ்வளவு ஆசையுடன் கையசைத்தனான் பார்த்தனித்தானே.....!

பிரேம் ; எனக்கும் பிள்ளைகளை மிகவும் பிடிக்கும் சாரதா.ஆனால் அது எனது இலட்சியத்தை  திசைதிருப்பி விடுமோ என்றுதான் யோசிக்கிறன்.....!

சாரதா ; சரி....சரி கவலைப்படாதே, இப்பதான் திருமணம் செய்திருக்கிறோம்.அதுக்குள்ளே கவலைகளை இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டாம். மேலும் நான் இப்போது உன்னுடைய மனைவி.உன்னுடைய இன்பதுன்பங்கள் எல்லாவற்றிலும் எனக்கும் பூரண பங்குண்டு.அதனால் நான் இப்ப சொல்வதை கேள்....கேட்பாயா....!

பிரேம் ; சரி கேட்கிறன் சொல்லு சாரு....!                                     

சாரதா ; ம் ....இப்ப நீ சீட்டு ஒண்டும் எடுக்க வேண்டாம். நான் பணம் தருகிறேன்.அதை ஊருக்கு அனுப்பு.பின்பு சீட்டை  எடுத்து எனக்குத் தா... சரியா......!

சிறிது நேரம் மௌனமாக யோசித்த பிரேமன் அவள் சொல்வது சரிதான்....வீணாக அவளின் மனசையும் வேதனைப் படுத்த வேண்டாம் என நினைத்து அவளது கையை எடுத்து தனது இரு கைகளுக்குள்ளும் பொத்திப் பிடித்துக் கொண்டு  ஐ லவ் யு சாரு, ஐ லவ் யு சோ மச் என்கிறான்....!

மீ  ரூ  என்று சொல்லிக்கொண்டே சாரதாவும் அவன் மார்பில் சாய்கிறாள்.....!

 

நிழல் நீளும்.....!

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

சுவி டாலிங் ,

ஆதி ஆசிரமத்திற்கு துருச்சாமி வந்து சேர்ந்திட்டாப்பல..... மனுசன் ரொம்ப துருவிட்டிருக்கார் எதைப்பத்தி என்றெல்லாம் அப்புறமாச் சொல்றன். ஆமா டாலிங் சாருக்குட்டியை ரொம்ப அழுவிச்சிட வேணாம் ஆதிக்குப் பிடிக்காது ஆமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஆதிவாசி said:

சுவி டாலிங் ,

ஆதி ஆசிரமத்திற்கு துருச்சாமி வந்து சேர்ந்திட்டாப்பல..... மனுசன் ரொம்ப துருவிட்டிருக்கார் எதைப்பத்தி என்றெல்லாம் அப்புறமாச் சொல்றன். ஆமா டாலிங் சாருக்குட்டியை ரொம்ப அழுவிச்சிட வேணாம் ஆதிக்குப் பிடிக்காது ஆமா.

ஆஞ்சனேயர் மாதிரி வந்து வாழ்த்திவிட்டாய் ஆதி, இதில் மனிதர்கள் அந்தந்த நேரத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் குறை நிறைகளுடன் வருவார்கள் என நினைக்கிறேன். இதுவரை எனக்கும் சரியாய் சொல்லாத தெரியவில்லை.துருச்சாமியுடன் பழகியவர்கள் எல்லோரும் அப்புறம் அவரை மறக்கவில்லை. நன்றி ஆதி வருகைக்கும் கருத்துக்கும்.......இன்றைய மகளிர்தின வாழ்த்துக்கள்.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் ------ 2 🦜 🦜

                                பின்பு அவனது காரில் சென்று முன்கூட்டியே பதிவு செய்து வைத்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ரிசர்வ் செய்து வைத்திருந்த ஹோட்டல் அறைக்கு செல்கின்றனர்.இருவரும் சாவகாசமாய் முகம் கை கால் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்து கட்டிலில் அமர அவள் அப்படியே அவன் மடியில் சாய்கிறாள். ஓர் அழகிய மரகத வீணையை மடியில் வைத்து சுகமான ராகத்தை மீட்டுவதுபோல் பிரேம் பிரேமையுடன் கையாள போதையில் செருகிய கண்களுடன் பேதை அங்கும் இங்குமாக அசைந்து அசைந்து கூடலை சுவாரஸ்யம் குறையாமல் கூட்டிக் கொண்டே போகிறாள். பசித்தவன் இதழ்களில் தேன் பருகிட  இலை மூடிய மலர் இரு விரல்களின் ஸ்பரிசத்தில்  மலர்கின்றது.தொடத் தொட மலர்ந்த மேனி  சுடச் சுட நனைகின்றது…… !

 

                                                         அடுத்தநாள் காலை எழுந்தபின் பிரேம் சாரதாவிடம் அவளது முதுகை ஆதுரத்துடன் வருடிக் கொண்டே சாரு  ஐ லவ் யு.....இப்ப உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன், என்னவென்று சொல்லு பார்க்கலாம்.....!

சாரதா : எனக்கு ஏதாவது நகை வாங்கி வைத்திருக்கிறாய்.அந்த மரகதப் பதக்கமும் சங்கிலியும் சரியா....!

பிரேம்; இல்லை இன்னும் சொல்லு....!

சாரதா; யுரோப்புக்குள்ளேயே எங்காவது ஹனிமூன் ட்ரிப் போகிறோம் ...... இல்லையென்று பிரேம் சொல்கிறான். சாரதாவும் யோசித்து எனக்குத் தெரியவில்லை , நீயே சொல்லு. சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை  என்றவள், கொஞ்சம் பொறு ..... வீடு ஏதாவது பார்த்திருக்கிறாய் சரியா....!

பிரேம்; கள்ளி .....அப்படியே பிடிச்சுட்டாய். நான் இப்போது இருக்கும் சேர்விஸ் றூம் அப்பார்ட்மெண்டிலேயே  பண்ணிரண்டாவது  மாடியில்  நாலு பியர்ஸ் அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு வந்திருந்தது. முகர்வருடன் போனில் கதைத்து விட்டேன், எங்கள் இருவரின் சம்பளப் பாத்திரமும், முன்பணமும் கொண்டு வரச் சொன்னவர். நீ நாளை மாலை வேலையால் நேரே அங்கே வா, நானும் வாறன்.அவரும் வீட்டு சாவியுடன் அங்கு வருவார்.வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என்ன....!

 

                           

                                    இந்நேரத்தில் நல்ல செய்தி சொல்கிறாய் பிறேம்.எனக்கும் அது முன்பே தெரியும்தானே அது புத்தம்புது அப்பார்ட்மென்ட், பண்ணிரண்டாவது மாடி என்றால் ஈபிள் டவர், மேலே நிலா, மழை எல்லாம் அழகாய்த் தெரியும் இல்லையா. இரவில் பார்க்கும்போது லைட் அலங்காரங்களுடன் சுப்பராய் இருக்கும். மேலும் உன்னுடைய சேர்விஸ் ரூமும் உன்னிடமே இருக்கும் இல்லையா.....!

ஓம் சாரு, அது இல்லாமலா..... உனக்கு அந்த இடம் பிடித்திருக்கா.....!

ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு பிரேம். நானும் நாளைக்கு எனது சிநேகிதி ஷாலினியுடன் அங்கு வருகின்றேன் சரியா....!

என்ன ஷாலினியுமா அவ எதுக்கு சாரு, நீ மட்டும் வந்தால் போதுமே.அவளுக்கு ஒரு பிரெஞ்சுக்காரனுடன் சிநேகிதம் வேறு வைத்துக்கொண்டிருக்கிறாள்.....!

என்ன பிரேம் இப்படிச் சொல்கிறாய், அவள் மிகவும் நல்லவள். நானும் அவளும் எவ்வளவு காலமாய் ஒரு சிறிய ஸ்ரூடியோவில் வரவு செலவு எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.திடீரென்று நான் தனியாக வந்தால் அவளால் அந்த வாடகை,மின்சாரம், தண்ணி மற்றும் சார்ஜஸ் எல்லாவற்றையும் சமாளிக்க முடியாது தெரியுமா......!

பிரேம் மௌனமாக இருப்பதைப் பார்த்தவள், வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் பிரேம்..... என்ன சொல்லு...... ஷாலினிக்கு ஒரு அறையை குடுத்து விடலாம்,மிச்ச செலவுகளிலும் அவள் பங்கெடுத்து கொள்ளட்டும்.என்ன சொல்கிறாய்...... ஓகே சாரு. எதோ உன்னிஷ்டம்....என்று பிரேம் சொல்கிறான்.....!

 

சின்னச் சின்ன முத்தங்களுடன் இருவரும் எழுந்து பகல் சாப்பாட்டுக்காக "ஸியேல் து பாரிஸ்"ரெஸ்டாரண்டுக்கு செல்கின்றனர்......!

 

                                       பிறேமன் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்கின்றான்.மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மேடம் வீட்டில் எந்த நேரமாயினும் சரி ஆடைகளை இஸ்திரி போட்டு அலுமாரியில் அடுக்கி வைப்பது, பின்பு இரவு ஒரு இறைச்சிக் கடையில் மூன்று மணித்தியாலங்கள் சுத்தம் செய்யும் வேலை என்று ஒரு நாளில் ஒரு மணி நேரத்தையும் வீணாக்காமல் பல வேலைகள் செய்கின்றான்.மிகுந்த பிரயாசி......!

                                     

                                                     சாரதா மிகவும் புத்திசாலியான பெண்.ஒரு  ஐ. ரி  கொம்பனியில் வேலை.மாதத்தில் அரைவாசி நாட்கள் வேறு நாடுகளுக்கு எல்லாம் வேலை நிமித்தமாக சென்று வருவாள். சில ஆண்டுகளுக்கு முன் பொழுது போக்காக ஆரம்பித்த பங்கு சந்தையில் இப்பொழுது நிறைய வருமானம் வருகின்றது. மேலும் ஒரு பிரபலமான சென்ட் கம்பெனியின் பிராண்டட் கடையில் பங்குதாரரும் கூட. பணம் அவளைத் தேடி வந்து கொட்டுது. அவளது நெருங்கிய தோழி ஷாலினி. கொஞ்சம் நடுத்தரமான வருமானத்தை கொண்டவள்.....!

 

                                                    ஷாலினி ஒரு பெரிய சூப்பர் மார்க்கட்டில் காஷியராக வேலை செய்கிறாள்.விரைவில் அவளுக்கு வேளையில் பதவி உயர்வும், கூடிய சம்பளமும் கிடைக்கும் சந்தர்ப்பம் கூடி வருகிறது. ஷாலினியும் சாரதாவும் ஒரு வசதியான ஸ்ரூடியோவில் ஒன்றாக வாழ்கின்றனர்.அந்த அறையின் வாடகை உட்பட சகல செலவீனங்களையும் இருவரும் சமமாக பிரித்து கொள்வார்கள். மேற்கொண்டு எல்லாவிதத்திலும் சாரதாவுக்கு உதவியாக இருப்பவள்.ஆயினும் சாரதாவிடம் எந்தவிதமான சலுகையும் எதிர்பார்காதவள். என்றாலும் இந்த வீட்டுக்கு முன்பணமாக (கீ மணியாக) பத்தாயிரம் ஈரோ குடுத்த வகையில் சாரதாவுக்கு ஐயாயிரம் ஈரோ குடுக்க வேண்டும். ஒருநாள் அதில் கொஞ்ச பணம் ஷாலினி குடுக்க வரும்போது, சாரதாவும் அது இப்ப அவசியமில்லை, பிறகு தரலாம் என்று சொல்லி விட்டாள். இது போன்ற குணங்களால்  சாரதாவுக்கும் ஷாலினியை மிகவும் பிடிக்கும்.....!

 

                                                                       மேலும் ஷாலினிக்கு நிக்கோலா என்று ஒரு பிரெஞ் நண்பன் இருக்கிறான்.அவன் ஒரு ஜாலியான டைப்.நிறைய பணம். நிக்கோலாவை சாரதாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் கூட பெரும்பாலும் அவன் சாரதா இல்லாத நாட்களில் ஷாலினியை அறையில் வந்து சந்தித்து பொழுது போக்கி விட்டு செல்வான். நிக்கோலாவும் ஷாலினி வேலை செய்யும் அந்த சூப்பர் மார்க்கட்  வளாகத்தில் சொந்தமாக ஒரு குழந்தைகளுக்கான பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் விற்கும் கடை வைத்திருக்கின்றான்......!

நிழல் நீளும் ......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா வந்தவுடன் இந்தப் பகுதி களை கட்டத்  தொடங்கீட்டுது. தொடருங்கள் அண்ணா. ஆவல் நானும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா ....வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாகுமோ ஏதாகுமோ எனறு ஏங்கவிடாடல் கெதியா தொடருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

   நிலம் ......... 3 🐧  🐧  🐧.                               

 

                                 வருடாந்த விடுமுறைகளில் நிக்கோலாவும் ஷாலினியும் எங்காவது உல்லாசமாக சுற்றுலாவுக்கு போய் வருவார்கள்.சில தடவைகள் தானும் நிக்கோலாவும் எல்லைகளின்றி உல்லாசமாய் இருந்ததாகவும் அவள் சாரதாவிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு சப்பைக் கட்டாக அதது அந்தந்த இடங்கள்,காலநிலை,சூழ்நிலைகள் முடிவில் அப்படியான உறவில் கொண்டு வந்து விட்டிடும் என்கிறாள். அதை சாரதாவும் அவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.இந்த நாடுகளில் இவையெல்லாம் சாதாரணம்தானே என்று. ஆனால் ஷாலினி தங்கள் சென்ற இடங்களின் அழகிய காட்சிகளை,தங்கிய ஹோட்டல்கள், அறைகள் எல்லாம் படங்களாகவும், வீடியோவாகவும், செல்பீயாகவும் எடுத்து உடனுக்குடன் வாட்ஸப்பில்  அனுப்பும்போது சாரதாவுக்கு அதுபோல் தானும் பிரேமனுடன் போய்வர வேண்டும் என்னும் ஆசை அவள் உள்ளத்தில் "நீறு பூத்த நெருப்பாய்" கனன்று கொண்டிருக்கு.சாரதா தனது வேலையின் நிமித்தம் பல நாடுகளுக்கு சென்று வந்தாலும் தனக்கே தனக்கேயான ஒருவனுடன் சென்று வருவது ஜாலியாய் இருக்கும் என்று நினைக்கிறாள்.....!

                 

                                                   சில நாட்களின் பின் அவர்கள் பார்த்த வீட்டின் அலுவல்கள் எல்லாம் சரிவந்து சாரதாவும் பிரேமனும் ஷாலினியுமாக புது அப்பார்ட்மெண்டுக்கு வந்து விட்டனர்.அங்கு குடியேறிய சில நாட்களில் ஷாலினிக்கு ஒரு சங்கடம் காத்திருந்தது.இந்த வீட்டுக்கு வந்ததன் பின் நிக்கோலாவும் அவளிடம் இருந்து விலகி செல்வதை உணர்ந்து கொள்கிறாள்.முன்புபோல் அவளிடம் அதிகம் பழக்கம் வைத்து கொள்வதில்லை.இது ஷாலினிக்கு மிகவும் கவலையாக இருந்தது.இந்த வீட்டில் பிரேமும் சாரதாவும் குடும்பமாய் இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நிணைக்கிறாள்......!

 

                                                                  அடுத்த ஓரிரு மாதங்களில் ஊரில் இருக்கும் பிரேமனின் தங்கை ரேவதிக்கும் உறவுக்காரப் பையன் மனோகரனுக்கும் திருமணம் வெகு விமரிசையாய் நடந்து முடிந்தது.பிரேமனுக்கும் இந்தக் கலியானத்தால் கொஞ்ச கடன் சுமை ஏற்பட்டிருந்தாலும் தனக்கு இருந்த ஒரு பெரிய கடமை முடிந்தது என நிம்மதி ஏற்பட்டது. எந்த நிலையிலும் புருஷனை கலங்க விடாமலும்,கவலைப்பட விடாமலும் சாரதா பார்த்துக் கொண்டாள். பிரேம் நீ என்னிடம் பணம் கேட்க கூச்சப் படுகிறாய் என்று எனக்குத் தெரியும்.ஆனாலும் இந்தா எனது அலுமாரியின் இன்னொரு சாவி இதை நீ வைத்துக் கொள்.உனக்கு பணம் தேவைப்படும் போது தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம்.என்று சாவியைக் கொடுக்கிறாள்.அவள் மனம் நோகக் கூடாதென்று அவன் அந்த சாவியை வாங்கிக் கொள்கிறான்.ஆயினும் அவனுக்கு அந்த சாவியை உபயோகிக்கும் தேவை ஏற்படவில்லை.....!

          வழக்கம்போல் சாரதா வேலைக்குப் போனால் திரும்பி வர ஒருவாரம் பத்துநாள் ஆகும்.     அன்றைக்கு பாரிஸ் நகரத்தில் வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது.வழமையாய் நடைபெறுவதுதான்.அதனால் போக்கு வரத்து மிகவும் சீர்குலைந்து இருந்தது.பேருந்துகளும்,மெட்ரோக்களும் குறித்த நேரங்களுக்கு ஓடவில்லை.அதனால் பிரேமன் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வருகின்றான்.வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டியில் குறைவான ஒலியில் படம் ஓடிக்கொண்டிருக்கு. அதை பார்த்தபடியே ஷாலினி சோபாவில் உறங்கிக் கிடக்கிறாள்.சோபாவுக்கு கீழே அவளின் கை தொங்க கையில் இருந்த ரிமோட் தரையிலும் கையிலுமாகக் கிடக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே பிரேமன் பாத்ரூம் சென்று நன்றாகக் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வருகிறான்.

                            சாப்பாட்டு மேசைமேல் ஹாட் பாக்கட்டில் உணவு சூடாக இருக்கிறது.அருகில் சுடுதண்ணிப் போத்தலில் கோப்பியும் கூடையில் பழங்களும் இருக்கின்றன. சாப்பிட ஒரு கதிரையில் இருந்தவன், தொலைக்காட்சியில்  அன்றைய செய்திகள் பார்ப்பதற்காக ரிமோட்டை எடுப்பதற்கு சோபா அருகே செல்கிறான்.சோபாவில் ஷாலினி இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்.அவள் வீட்டில் இருக்கும்போது குறைவான நவீனமான ஆடைகள்தான் அணிந்திருப்பது வழக்கம்.அது அவளின் உடல் வாகுக்கு அம்சமாய் இருக்கும்.அவையும் இப்போ ஆங்காங்கே விலகிக் கிடக்கின்றன.பிரேமனின் மனதில் இனம்புரியாத தவிப்பு.தொண்டையில் ஒரு பந்து அடைப்பதுபோல் உணர்வு. அவன் உடலிலும் மனசிலும் சிறு மாற்றம்.அவன் மனசை அலைக்கழிப்பது அவள் கால்களின் கவர்ச்சியா,அல்லது மூச்சு விடும்போது எழுந்து தணியும் மார்பகங்களின் திரட்சியா,சற்றே மேடிட்டு செவ்வகமாய் கீழிறங்கு வயிற்றுப் பகுதியா, இரு பற்கள் சிறிது தெரிய விரிந்திருக்கும் ஈரலிப்பான உதடுகளா.கண்களின் வழி செல்லும் காற்றில் காமத் தீ பற்றுகிறது.கால்வரை தகிக்கின்றது.மூச்சுக்காற்றில் வெப்பம் வெளியேறுகின்றது. சாதாரணமாக எப்போதும் வீட்டில் பார்க்கும் பெண்தான் அவள். ஆனால் இன்று, இப்போது பேரழகியாய் புது ஓவியமாய் திகழ்கிறாள்,தெரிகிறாள்.ஒரு கணநேரத் தடுமாற்றம்.உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.அவளருகே குனிந்து கையருகில் இருந்த றிமோட்டை எடுத்து சேனலை மாற்றி சத்தத்தை கூட்டுகிறான்.உடனே ஷாலினியும் அருன்டு எழும்புகிறாள்.....!

நிழல் நீளும் .......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா பிரேமு...ஏற்கனவே மூன்றிடத்தில வேலை. இதுல நாலாவது இடத்துக்கும் அப்ளிகேசனா😂

கதை களை கட்டுகிறது, தொடருங்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 3:18 PM, suvy said:

ஐ லவ் யு சாரு, ஐ லவ் யு சோ மச் என்கிறான்....!

இதை அழகாக பிரெஞ்சில் சொல்வதில்லையா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

இதை அழகாக பிரெஞ்சில் சொல்வதில்லையா?🤔

je t'aime .......!   நான் உன்னை காதலிக்கிறேன்.

je t'aime aussi  mon  cœur.  நானும் உன்னை உளப்பூர்வமாய்(இதயபூர்வமாய்) காதலிக்கிறேன்.

பொதுவாக எமது ஆட்கள் ஆங்கிலத்தில்தான் சொல்வார்கள்.  இங்கு படிக்கும் பிள்ளைகள் "ஜெ தெம்" என்றும் , "ஜெ தெம் மொன் க்யூர்" என்றும் சொல்வார்கள்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் ............ 4  🕷️ 🕷️ 🕷️ 🕷️.

 

                                                                              அண்ணா ...! எப்ப வந்தனீங்கள்.நான் நல்லா நித்திரை கொண்டிட்டன் கவனிக்கவில்லை. ஓம் நான் இப்பதான் வந்தனான்.நித்திரை வந்தால் அறைக்குள்ளே போய் படுக்கிறதுதானே ஷாலினி, ஹாலில் நண்பர்கள் யாராவது திடீரென வந்தாலும்......ஸாரி அண்ணா,நான் மருந்து குடித்திருந்தனான்.அப்படியே டீ .வி யும் பார்த்து கொண்டிருக்கும்போதே தூங்கிட்டன். அதுசரி நீங்கள் சாப்பிட்டீங்களா.ஹாட்பாக்சில்  சாப்பாடு எடுத்து வைத்திருந்தேன்...... ம்......பார்த்தனான்.இன்றைக்கு மெட்ரொ ஸ்ட்ரைக் அதுதான் வரத் தாமதமாகி விட்டது. சாரதா இன்னும் வரவில்லையா.இன்று வருவதாக போனில் சொன்னாளே..... இல்லையண்ணா இன்னும் வரவில்லை.எங்கேயும் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டாள் போல......ஓம் அப்படித்தான் இருக்கும். நீ போய் படு ஷாலினி.நான் போட்டு சாப்பிடுகிறன்.....பரவாயில்லை அண்ணா நீங்கள் இருங்கோ நான் பரிமாறுறன்.மேலும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும். அது நல்லதா இல்லையா என்றும் தெரியவில்லை.கொஞ்சம் பொறுங்கள் சாரதாவும் வரட்டும் இரண்டுபேரிடமும் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கலைந்திருந்த தலைமுடிக்கு ரப்பர் பாண்ட் போட்டுக்கொண்டு சாப்பாட்டு மேசையை நோக்கி போகிறாள். 

                       தொலைக்காட்சியில் ஒரு பெரியவர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்....!

"எனக்கு கல்வி அனைத்தும் கற்பித்தாய். உன்னிடம் நேசம் கொள்ள வைத்தாய்.இந்த உலகம் ஒரு மாயை என்பதை எனக்கு அறிவுறுத்தினாய்.அது மட்டுமா தடையின்றி உன் அருளைத் தந்து உதவுகின்றாய்.யாரிடமும் சென்று யாசிக்காத நிலை வைத்தாய்.இத்தனை உயர்வுகளை எனக்களித்த உன் பெருங் கருணையை என்னவென்பது.

                                  இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே நாட்டமுள்ளதாக இருக்கின்றது.இதனாலதான் மக்களிடம் துன்பமும்,துயரமும், அழிவும் பெருகி வருகின்றன.இந்த வாழ்க்கை முறை மிகத் தவறான முறையாகும்.முதலில் இதை அடியோடு மாற்றியாக வேண்டும்".....!

(அவர் வள்ளலாரின் அமுதத்தை வழங்கிக் கொண்டு போகின்றார்).

                                                                                                                                   இது தனக்காகத்தான் சொன்னதுபோல் இருக்கின்றது.பிரேமனின் மனதில் உதித்த சபலம் முற்றாக  அழிகின்றது. அவன் சாப்பிடுவதற்கு போய் கதிரையில் அமர்கின்றான்.......!

                                                 பிரேமன் அடுத்தநாள் காலை வெள்ளனவே எழுந்தவன், கோப்பி போட்டுக் குடித்து விட்டு .....என்ன இன்னும் சாரதாவைக் காணவில்லை. போனும் எடுக்கிறாள் இல்லை. ஒருவேளை சார்ஜ் இல்லையோ தெரியவில்லை.என நினைத்துக் கொண்டு அந்த அப்பார்ட்மெண்டை சுத்தமாக்குவதற்கு தனது சேர்விஸ் ரூமுக்கு படிக்கட்டில் ஏறிச் செல்கிறான்.பொதுவாக அவன் லிப்டில் செல்வது குறைவு.அங்கு சென்று கதவைத் திறந்து தனது யூனிபோர்மை அணிந்துகொண்டு ஜன்னலைத் திறந்தபோது கட்டிலில் ஒரு கடிதம் படபடத்துக் கொண்டிருக்கிறது. இது என்னவென்று அதை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான்.அதை சாராதாதான் எழுதி இருந்தாள். அப்படி என்றால் நேற்றிரவு சாரதா வந்திருந்தாளா.... பிறகு ஏன் வீட்டிற்குள் வரவில்லை.பல்லாயிரம் எண்ணங்கள் மனசில் ஓட கடிதத்தைப் படிக்கிறான்......!

 

என்னை வஞ்சித்த பிரேமுக்கு,

                                                            என் வாழ்க்கை முழுதும் நீ கூட வருவாய் என நான் நம்பி இருந்தேன்.ஆனால் நீ என்னை ஏமாற்றி விட்டாய்.நீ மட்டுமல்ல, இவ்வளவு காலமும் எவளை என் உயிர்த் தோழி என நம்பினேனோ அந்த ஷாலினி கூட எனக்குத் துரோகம் செய்து விட்டாள்.அன்றொருநாள் அவள் மிகவும் இக்கட்டில் இருந்தபோது ஒரு தொகை பணம் தந்து அவள் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டேன்.நம்பிக்கைத் துரோகி அதைக் கூட சுலபமாய் மறந்து விட்டாள்.உங்கள் இருவரின் முகத்தில் முழிக்கவும்  எனக்கு விருப்பமில்லை.உன்னைச் சொல்லி குற்றமில்லை.என்னில்தான் பிழை.என் விதி. புது வீட்டுக்கு வரும்போது ஷாலினியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக வரும்படி நீ சொன்னாய்.ஆனால் நான்தான் முட்டாள். நட்பை வெகுவாக நம்பினேன்.ஆனால் பஞ்சையும்  நெருப்பையும் பக்கத்துக்கு பக்கமாய் வைத்து விட்டு வாரக்கணக்காய் வேலை வேலை என்று அலைந்தது என் குற்றம்தான். நீங்கள் இருவரும் உல்லாசமாக இருந்து கொள்ளுங்கள்,அபலை நான் எங்கோ போகிறேன்........!

                                                                                                                                                                     சாரதா.....!

 

        பிரேமன் அந்த நிமிடமே அதிர்ச்சியாகி ஆ....கடவுளே என குளறியபடி நிலத்தில் அமர்ந்து விட்டான்.இறைவா எனது ஒரு கணநேரச் சபலத்துக்கா இந்தத் தண்டனை. சாரதா நீ இப்போது எங்கேயம்மா இருக்கிறாய்.போனை எடு சாரதா, தயவு செய்து போனை எடடி.அறை திறந்தபடி இருக்க நிலை இடித்ததும் தெரியாமல் கடிதத்துடன் வீட்டுக்குள் ஓடி வருகின்றான். …… !

நிழல்  நீளும் .........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறு எதையோ நினைக்க வேறு எப்படியோ மாறுகிறதே கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் வேறு எதையோ நினைக்க வேறு எப்படியோ மாறுகிறதே கதை.

மாற்றம் ஒன்றே நியதி, மாற்றம் ஒன்றே மாறாதது சகோதரி......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலம்........... 5 🙊  🙊  🙊  🙊  🙊

                                                            கதவுச் சத்தத்துடன் பிரேமனின் குளறல் சத்தத்தையும் கேட்டு வெளியே ஓடி வந்த ஷாலினி நெற்றியில் ரத்தம் கொட்ட நின்ற பிரேமனின் நிலையை கண்டு கலங்கி என்ன அண்ணா என்ன நடந்தது.ஏன் இப்படி அழுது கொண்டு ஓடி வாறீங்கள் என்று கேட்க பிரேமனும் தன் கையில் இருந்த கடிதத்தை அவளிடம் குடுக்கிறான். அதை வாங்கிப் படித்த ஷாலினியும் அதிர்ச்சியுடன் அப்படியே தரையில் சாய்ந்து விட்டாள். பின்பு ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்தவள், உவளுக்கு என்ன விசரே....!இப்படி எங்களைச் சந்தேகப் படலாமோ.... நான் இவள் வருவாளென்று அவளுக்கு பிடித்தமான சாப்பாடெல்லாம் செய்து வைத்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறன். அண்ணா ! நான் நேற்றிரவே உங்களிடம் சொன்னனான் தானே, சாரதாவும் வரட்டும் உங்களிடம் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று......என்ன செய்தி ஷாலினி.... அண்ணா, நேற்றுக்காலை ஆஸ்பத்திரி அப்பாயிண்ட் மென்ட். அங்கு போனனான்.அவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்த்து நான் கர்ப்பமாய் இருப்பதை உறுதிப் படுத்தினார்கள்.பிள்ளையும் நல்ல நிலைமையில் இருக்கு. அதைத்தான் உங்கள் இருவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.அப்போது டாக்டர் தந்த குளிசை போட்டதால்தான் நல்ல தூக்கம் வந்து அப்படியே ஹாலில் படுத்து உறங்கி விட்டேன். மீண்டும் மீண்டும் சாரதாவுக்கு போனில் கதைக்க முயற்சிக்கிறாள் ஷாலினி.குறுஞ் செய்திகள் போடுகிறாள்.எல்லாம் கிணற்றில் போட்ட கல்போல் அமுங்கி விட்டது.....!

     (அவள் சொன்னதை கேட்டதும் அவனுக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது....சே என்ன காரியம் செய்யத் துணிந்தேன். ஏதோ என் குலதெய்வம்தான் என்னைக் காப்பாற்றியது.இல்லையென்றால் எவ்வளவு அவமானமாய் போயிருக்கும் என அவன் மனம் எண்ணியது......, அன்று என்ன நடந்ததெனில்)....!

                                                  அன்று கம்பெனி காரில் வீட்டு வாசலில் வந்து இறங்குகிறாள் சாரதா.கதவைத் திறந்து வழக்கம்போல் முன் கொரிடோரில் கோட்டை ஸ்ராண்டில் மாட்டிவிட்டு சப்பாத்தையும் கழட்டி விட்டு நிமிரும்போது உள்ளே பிரேமன் மெல்ல நடந்து சோபாவை நோக்கி போகிறான்.சோபாவில் ஷாலினி கலைந்த ஆடைகளுடன் விட்டேற்றியாக படுத்திருக்கிறாள்.பிரேமனும் அவளை நெருங்கி முகத்தருகே குனிகிறான்.அவனது ஒரு கை அவளருகில் சோபாவிலும் மறுகை அவளின் கையைப் பிடிப்பதுபோல் கீழே நகர்கின்றது.அந்நிலையில் அவன் அவளை முத்தமிடுவதுபோல் ஒரு தோற்றம்.....அதற்கு மேல் சாரதாவால் அங்கு நிக்க முடியவில்லை.ஒரு பக்கம் கட்டிய கணவன் மறுபக்கம் இன்னுயிர்த் தோழி....சே ....என்ன அசிங்கம். மெதுவாகத் தனது கோட்டையும் ஷூவையும் கையில் எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல்  வெளியே வருகிறாள்.அங்கிருந்து லிப்டில் மேலே சென்று சேர்விஸ் ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வந்தது.அடக்க முடியவில்லை.எவ்வளவு நேரம் அப்படி அழுதிருப்பாளோ தெரியாது.பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்த சாரதா தனது கைப்பையில் இருந்து காகிதத்தையும் பேனாவையும் எடுத்து கடிதம் எழுதி கட்டிலில் வைத்து விட்டு அடிபட்ட புலியாய் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள்.......!  
                                                                            அங்கிருந்து ஒரு ஹோட்டலுக்கு சென்ற சாரதா அங்கு படுத்து தூங்க முயற்சித்தும் முடியாமல் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கிறாள்.ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் நிதானித்துக் கொண்டு தனது தோழியொருத்திக்கு போன் செய்கிறாள். சிறிது நேரம் கழித்து போன் எடுக்கப் படுகிறது. ஹலோ ரத்தி நான் சாரதா பேசுகிறேன் நலமா.....ஓ.....சாரதா நான் நலம்.என்னடி கலியாணத்துக்கு பிறகு உன்னைப் பிடிக்கவே முடியவில்லை.ஆனாலும் இந்தநேரம் போன் பண்ண மாட்டாயே, என்ன விடயம் சொல்லு.என்னை மறந்துட்டியோ என்று நினைத்திருந்தேன்.
சாரதா; ஒன்றுமில்லை ரத்தி நான் சில நாட்கள் உன்கூட தங்க முடியுமா.....விம்மல் வெடிக்கிறது.....!
ரத்தி ;  என்னடி சாரதா அழுகிறாயா....என்ன ஏதாவது பிரச்சனையா.....!
சாரதா : ஒன்றுமில்லை....நேரில் வந்து சொல்கிறேன்.....!
ரத்தி : இப்ப எங்கிருக்கிறாய் சொல்லு....நான் உடனே எனது பைக்கில் வருகிறேன்.( அவவிடம் ஒரு BMW பைக் இருக்கு)
சாரதா : வேண்டாம் நீ வீட்டில் இரு, நான் டாக்சியில் வருகிறேன்........சரி நீ வா பேசிக்கொள்ளலாம்.....!
            ரத்தியினுடையது இரு அறையுள்ள அழகிய அப்பார்ட்மெண்ட்.அந்த கட்டடத் தொகுதி முழுதும் சுத்தமாகவும் சிறிய பூந்தோட்டத்துடனும் மனசை கவரும் வண்ணம் இருக்கின்றது.வீட்டுக்குள் ஹால் சுவரில் ஓரிரு பிரசித்தமான ஓவியங்கள்,ஜன்னல்களில் அழகிய திரைச்சீலைகள், கோர்னர்களில் பச்சை இலை மரங்கள் வண்ணச் சாடிகளில்.இண்டீரியர் டெக்கரேஷன் அழகாய் இருக்கு. சமையலறைத் தொட்டியில் முதல்நாள் இரவு சாப்பிட்ட கோப்பைகளும் பாத்திரங்களும் இன்னும் கழுவாமல் கிடக்கு. அவற்றை வேகமாக வழித்துப் போட்டு கோப்பை கழுவுற மிஷினுக்குள் தள்ளி விட்டு நிமிர காலிங் பெல் சத்தம்....போய் கதவு திறந்ததைத் தொடர்ந்து சாரதா சூட்கேசுடன் உள்ளே வருகிறாள். அவளிடம் பெட்டியை வாங்கிக் கொண்டு அனைத்து வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு போகிறாள் ரத்தி......!
                                                                              ஹாலில் அமர்ந்ததும் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு விம்மிக்கொண்டே தான் நேற்றிரவு வந்ததில் இருந்து வீட்டில் பார்த்தது நடந்தது எல்லாவற்றையும் மூக்கைச் சிந்திக்கொண்டு ரத்தியிடம் சொல்கிறாள் சாரதா.அவற்றைக் கேட்ட ரத்தியும் அவளிடம் மூக்கு துடைக்க  ரிசூ பேப்பரை நீட்டியவாறே "இந்த ஆண்களே இப்படித்தான்.எப்பவும் சபல புத்தியுடையவர்கள்.கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் எங்க எப்ப எதைப் பார்க்கலாம் என்று அலைவார்கள்.அதுதான் நான் ஒருத்தரையும் நம்புறதில்லை.நம்பவும் மாட்டன்".என்கிறாள்.
சாரதா: அதில்லையடி ரத்தி அவர்களுக்கு நான் வீட்டில் இல்லாதது கும்மாளம் போட வசதியாய் போச்சு....ஷாலினியும் ஆடை விலகியதுகூடத் தெரியாமல் நட்ட நாடு ஹாலில் படுத்திருக்கிறாள்.இவன் போய் அவளை முத்தமிடுகிறான் என்றால் எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும். உவள் ஷாலினியும் எனக்கு கொஞ்ச காசுதர வேண்டும்,இப்ப மெசேஜ் போடுறன் காசு எனக்கு உடனே வேண்டும் அக்கவுண்டில் போடு என்று.ஏன் விடுவான் கொஞ்ச நஞ்ச காசே, ஐயாயிரம் ஈரோ.....!
ரத்தி : பொறு சாரதா,அவசரப்படாதே.எனக்கு என்னமோ நீ அவசரப் படுகிறதுபோல் தெரிகிறது.....!
சாரதா: நான் நேரில பார்த்தனான் சொல்லுறன் நீ நம்ப மறுக்கிறாய்......!
ரத்தி : குழப்பத்தில் எடுக்கும் முடிவு தவறாகப் போயிடும் சாரதா. நீ கொஞ்ச நாள் என்கூட இருந்து வேலைக்குப் போய் வா. நீயும் வேலை வேலை பணம் பணம் என்று வெளியில அலைந்து கொண்டிருந்தால் ஆண்களின் மன நிலைகளையும் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும் சாரதா.நீ போய் குளித்து விட்டு வா..... நான் போய் சமைக்கிறன் என்று உள்ளே போகிறாள்.
ஆனாலும் சாரதாவுக்கு கோபம் குறையவில்லை. பணத்தை உடனே வங்கியில் போடும்படி ஷாலினிக்கு மெசேஜ் தட்டிவிட்டு போனையும் நிறுத்தி வைத்து விட்டு குளிக்கப் போகிறாள்.....!

நிழல் நீளும் ........! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா,நான் உங்களோட ஏதாவது வம்பிற்கு வந்தனானோ 😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 4:18 PM, suvy said:

      நிலம்  தழுவாத நிழல்கள்.

அருமை சுவி தொடருங்கள் ———

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுதி ஓ மன்னிக்கவும் சுவி
ஒவ்வொரு தொடருக்கும் பகுதி ஒன்று இரண்டு மூன்று என்று அடையாளமிட்டால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும்.
ஏற்கனவே எழுதியதில் மட்டுறுத்தினருக்கு உங்கள் விருப்பத்தை சொல்னால் பதிவார்கள்.
இப்போது கொஞ்சம் பிசி.சனி ஞாயிறு வாசித்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்........(6).  🦘 🦘 🦘 🦘 🦘 🦘.

                                                 


                                                       சிறிது நேரத்தில் அலுப்புத்தீர குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வருகிறாள்.அப்போது அவளைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் வந்த ரத்தி சாரதா கவனமடி.நீ உள்ளே குளிக்கும்போது பிரேமன் இங்கு வந்திருந்தான்.உன்னை விசாரித்தான்.நான் வாசலிலேயே கதைத்து அனுப்பி விட்டேன். ஆனாலும் அவன் சந்தேகத்துடன்தான் போறதுபோல் இருக்கு.......நான் நினைத்தேன்  ரத்தி அவன் இங்கே தேடி வருவான் என்று. நல்லகாலம் தப்பீட்டன்.உடனே ஒரு டாக்சிக்கு போன்பண்ணி அழைத்து தனது பெட்டியுடன் ரத்தியிடம் சொல்லிக்கொண்டு  IT கம்பெனிக்கு போகிறாள். அங்கே போனதும் அவளது மானேஜர் என்ன சாரதா உனக்கு இன்று ஓய்வுதானே வேலைக்கு வந்திருக்கிறாய். ஓம் சேர் ஆனால் எனக்கு இரண்டு வாரம் லீவு வேண்டும் அதுதான்.உன்னுடைய போனவருடத்து லீவே நிறைய கிடக்கு.தாராளமாய் எடுத்துக் கொள். தனது இடத்துக்கு வந்து அமரும்போது அவளருகே கூட வேலைசெய்யும் வனிதா, ஏன் சாரதா மதியமாகி விட்டது. சாப்பிடவில்லையா வா கண்டீனுக்கு போகலாம் என்று அழைக்கிறாள்.அவளுடன் சாரதாவும் போகிறாள்.அங்கே சாரதா சாப்பிடாமல் போனை நோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்ன பார்க்கிறாய் என்று கேட்க, நான் அவுட் ஒவ் பாரிஸில் ஒரு ஸ்டூடியோ பார்க்கிறேன் என்று சொல்கிறாள்.நானும் பரிசுக்கு வெளியேதான் இருக்கிறேன்.நாங்கள் மூன்று பெண்களாக ஒரு வீடு எடுத்து செலவுகளை சேர் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.இன்னும் ஒரு அறை காலியாக இருக்கு. கிச்சன் மட்டும் பொதுவானது மற்றும்படி றூம் அட்டாச் பாத்ரூம் எல்லாம் ஓகே. சால் டி ஹோல் எயார்போட் பத்து  நிமிடம். எங்கட வேலைக்கு அதுதானே முக்கியம். R E R ...Bயும் இருபது நிமிடத்தில் பாரிஸ் வந்து விடும்.வேலைக்கு வந்து போகவும் சுலபம்.விரும்பினால் சொல்லு மற்ற இருவரிடமும் கேட்டு சொல்கிறேன்.சாரதாவுக்கும் அது நல்ல யோசனையாகப் படுகின்றது. பிரேமன் ஷாலினியின் தொந்தரவும் இருக்காது. ஓகே வனிதா நீ கேட்டு சொல்லு என்று சொல்கிறாள்.வனிதாவும் போனிலேயே மற்ற இருவருடனும் ஒரே சமயத்தில் கதைத்து விட்டு, எல்லாம் சரி நீ என்னுடன் வா இன்று பின்னேரம் அங்கு செல்லலாம் என்று சொல்லுகிறாள்.பின்னேரம் அவளுடன் ட்ரெயினில் போகும்போது வனிதா ஏன் சாரதா சமீபத்தில்தானே உனக்கு திருமணமாச்சு அதுக்குள்ளே தனி வீடு பார்க்கிறாய்.நான் கூட உன் திருமணத்துக்கு வந்திருந்தேன். கிராண்டா செய்திருந்தாய்.ஓம் வனிதா.ஆனால் இப்ப சிறு மனஸ்தாபம் என்று கொஞ்சம் மேலோட்டமாய் சொல்கிறாள்...... நீ சொல்லும் பெண் சிலசமயம் கொம்பனிக்கு வந்து  உன்னை அழைத்துப் போவாளே அவளா .....ம் ....அவள்தான் ஷாலினி என்கிறாள்.....!

அப்படி இப்படி என்று ஒருவாரம் பத்து நாட்கள் போய்விட்டன.வனிதாவும் வேலை நேரம் போக இருவருமாக ஜாக்கிங் போவதும் ஜிம்முக்கு போவதும் லீவு நாட்களில் நீண்ட தூரம் பைக்கில் சென்று வருவதுமாய் இருந்தார்கள். வனிதாவின் முயற்சியில் சாரதாவும் இப்ப மிக நவநாகரீகமான ஆடைகள் அணிகிறாள்.தலை அலங்காரமும் மாறி விட்டிருந்தது. நீளமான கூந்தல் பிரேமனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே அதையும் குட்டையாக கத்தரித்து ஆங்காங்கே மண்நிறத்தில் டையும் அடித்திருந்தாள்.  நாட்கள் செல்ல செல்ல கவலைகளும் குறைந்திருந்தன.இனி இந்த நாடு நாடாக ஊர் சுத்துற வேலையை விட்டிட்டு கம்பெனியிலேயே இருந்து செய்கிற மாதிரி வேலையை மாத்தி எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள்….. !


நிழல் நீளும் .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சுதி ஓ மன்னிக்கவும் சுவி
ஒவ்வொரு தொடருக்கும் பகுதி ஒன்று இரண்டு மூன்று என்று அடையாளமிட்டால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும்.
ஏற்கனவே எழுதியதில் மட்டுறுத்தினருக்கு உங்கள் விருப்பத்தை சொல்னால் பதிவார்கள்.
இப்போது கொஞ்சம் பிசி.சனி ஞாயிறு வாசித்து எழுதுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியன்..... நான் முதலில் இருந்து  1,2,3, 4,5. ( 🦜🐧🕷️🙊🦘) என்று படங்கள் போட்டிருந்தேன்.நீங்கள் சொன்னதன் பின் 6 ல் இருந்து இலக்கங்களும் இடுகிறேன்.ஆயினும் மட்டுறுத்தினார்கள் யாராவது கவனித்தால் 1 ல் இருந்து 5 வரை இலக்கங்கள் போட்டு விடவும்......!   😁

On 3/11/2020 at 8:03 PM, ரதி said:

ஏன் அண்ணா,நான் உங்களோட ஏதாவது வம்பிற்கு வந்தனானோ 😢

 

😁  😁

On 3/11/2020 at 11:37 PM, uthayakumar said:

அருமை சுவி தொடருங்கள் ———

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உறவுகளே.....!   😁  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை மட்டுக்கட்ட முடியாமல் இருக்கு. இடைவெளி அதிகம் இன்றி எழுதுவதற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

சுவி அண்ணா!
குறுநாவல் சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு தொடரில் இருந்தும் மாறும் கதை , ஆவலை தூண்டுகிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்.................. (7) 🐕 🐕 🐕 🐕 🐕 🐕 🐕.

 

                            சம்பவம் நடந்ததில் இருந்து அடுத்தநாள் ஷாலினியின் போனுக்கு ஒரு மெசேஜ், வங்கியில் பணம் ஐயாயிரம் ஈரோவையும் உடனே போடும்படி சாரதா அனுப்பியிருந்தாள்.அது ஷாலினிக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது.ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.உடனே தான் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த அத்தனை நகைகளையும் பெட்டியில் இருந்து எடுத்து பையில் போட்டுக்கொண்டு வெளியே வருகிறாள்.உடனேயே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் வீணான பழியைச் சுமந்து கொண்டு போவதா....கூடாது என்று நினைக்கிறாள்.மேலும் பிரேமன் அண்ணாவை நினைக்க பாவமாய் இருக்கு.ஒரு குற்றமும் செய்யாமல் மனுசன் கிடந்தது அல்லாடுது.அப்படியே மெட்ரொ (பாதாள ரயில்) நிலையத்தை நோக்கி நடந்து வரும்போது அவளை உரசிக்கொண்டு ஒரு கார் வந்து நிக்கிறது.அது நிக்கோலாவின் கார்.முன் கண்ணாடியை கீழிறக்கியவன் அவளை பார்த்து ஷாலினி வா  வந்து வண்டியில் ஏறு என்று அழைக்கிறான்.பின்னால் வாகனங்கள் ஹாரன் அடிக்கின்றன. ஷாலினிக்கும் அவனுடன் நிறைய கதைக்க வேண்டும் போல் இருக்கிறது.கதவைத் திறந்து காரில் ஏறுகின்றாள்......!

 (இந்த இடத்தில் வாசகர்களின் ஆரோக்கியம் கருதியும் எனது நலன் கருதியும் இனி வரும் பிரெஞ்மொழி உரையாடல்கள் அனைத்தும் தமிழிலேயே தரப்படுகின்றது).

 

நிக்கோலா: எங்கே போகிறாய் ஷாலினி. நான் உன்னை அங்கு இறக்கி விடுகிறேன்.....!

ஷாலினி : நான் றம்புத்தே வங்கிக்கு போகிறேன்....ஏன் ஷாலினி பக்கத்தில் இவ்வளவு வங்கிகள் இருக்குதே நீ ஏன்  அங்கு போகிறாய்..அப்படி என்ன விசேஷம் அந்த வங்கியில்.....!

ஷாலினி : அதில்லை நிக்கோலா, அந்த வங்கியில்தான் குறைந்த வட்டியில் பவுன் நகைகளை அடைவு வைக்க முடியும்.இப்ப எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகின்றது.தமிழ் ஆட்கள் அநேகர் அங்குதான் அடைவு வைப்பினம். அதுதான்.....!

நிக்கோலா ; நகைகளா, அவ்வளவு பெறுமதியானவையா... ஓம் எல்லாம் 22 காரட் கோல்ட். பிரெஞ் கடைகளில் 18 காரட்டில்தான் நகைகள் இருக்கும்.

நிக்கோலா ; எங்கே நான் பார்க்கலாமா..... ஓம் அதுக்கென்ன, ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறாள். பதக்கம் சங்கிலிகள், காப்புகள்,தோடுகள், மோதிரங்கள்,நெக்கிலஸ்  என்று எல்லாம் பெட்டிகளில் சிகப்பு வெல்வெட்டில் கண்ணைப் பறிக்கின்றன.....எல்லாவற்றையும் பார்த்து வியந்தவன் ஓ ...கடவுளே, மகாராணிகள் அணிவது போலல்லவா எல்லாம் இருக்கின்றன.இவ்வளவு நகைகளுக்கும்  எவ்வளவு பணம் தருவார்கள்.....!

ஷாலினி : எனக்கு இப்பொழுது 5000 ஈரோதான் தேவை.அதற்கு பெறுமதியானவற்றை குடுத்து விட்டு மிகுதியை கொண்டு வந்து விடுவேன்....!

வீதி ஓரமாகக் காரை நிறுத்தியவன், ஷாலினியைப் பார்த்து அந்தப் பணத்தை நான் தருகிறேன் நீ இந்த நகைகளை திருப்பி வீட்டுக்கு எடுத்துச் செல். பின்பு எனக்கு பணத்தைத் தா....!

 ஏண்டா நீங்கள் எல்லாரும் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா....அவள் ஒருத்தி தந்திட்டு தா என்கிறாள். நீ வேற எனக்கு வருகுது வாயில.... வேண்டாம் நிக்கோலா, என்னை வங்கிக்கு கூட்டிக்கொண்டு போறியா இல்லையென்றால் சொல்லு  இங்கேயே இறங்கி விடுகிறேன்..... சரி....சரி  கோவிக்காதே நீ ஏதோ கோபத்தில் இருக்கிறாய் போல என்று சொல்லி அவளுடன் கூடவே வங்கிக்கு செல்கிறான். வங்கியில் அடைவு வைத்து பணம் எடுத்து தனது வங்கியில் போட்டு தனது போன் மூலம் சாரதாவின் அக்கவுண்டுக்கு அனுப்பி விடுகிறாள்.இப்போதுதான் நிம்மதியாய் இருக்கு. பின்பு நிக்கோலாவுக்கு நன்றி சொல்லி விட்டு அவனது பெற்றோர் எல்லோரையும் சுகம் விசாரிக்கிறாள்..... அப்போது நிக்கோலா சொல்கிறான் எனது சகோதரி எமிலிக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டது. சீரியஸாய் ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்.அதுதான் பார்த்து விட்டு வருகிறேன்.....!

                                                                 ஷாலினி: ஓ...பார்தோம் நிக்கோலா எனக்குத் தெரியாது.நானும் ஏதோ ஆத்திரத்தில் உன்னைப் பேசிப் போட்டேன்......பார்தோம் (மன்னிக்கவும்).  உனக்கு இப்போது நேரம் இருக்கா நிக்கோலா இருந்தால் ஒரு நல்ல ஹோட்டலுக்கு போகலாம்.நான் உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும்.....!

நிக்கோலா : வாவ் ....நீ எனக்கு ட்ரீட் தரப் போகிறாயா.....இப்ப நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்.கன்னங்களும் உப்பி கொஞ்சம் சதையும் போட்டு....... நீ ஒரு பொறுக்கி நிக்கோலா செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள்.

                    

                          (இருவரும் ஒரு ஹோட்டல் அறையில்).

நிழல் நீளும் ..........(7).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.