Jump to content

நிலம் தழுவாத நிழல்கள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்........... (8).  🐥 🐥 🐥 🐥

                                 🐥 🐥 🐥 🐥.

 

                                                         என்ன செய்தி சொல்லு..... கட்டிலில் இருந்தபடி பணியனைக் கழட்டிக்கொண்டு அவன் கேட்கிறான்.அவனை நெருங்கிச் சென்ற ஷாலினி கொத்தாக அவன்தலையைபி பிடித்து தனது வயிற்றின் மீது அவன் கன்னத்தையும் காதையும் அழுத்திப் பிடித்து உனது பேபி உள்ளே இருக்கு,அதன் துடிப்பு உனக்கு கேட்குதா என்கிறாள்... ஒரு நிமிடம் பரவசமான நிக்கோலா, அடுத்தகணம் அவளைத் தள்ளி விட்டு நோ..... வேண்டாம் அபார்ஷன் பண்ணிவிடு என்கிறான்.குரலில் கலக்கம். கண்ணில் சிறு பயம்தெரிகிறது.....!

ஷாலினி: இல்லை நிக்கோலா நான் குழந்தையைப் பெற்று வளர்க்கப் போகிறேன்......!

நிக்கோலா: ம்கூம்..... இது சரிவராது.வேண்டாம் ஷாலினி. ஓ நீ என்னை பிளாக்மெயில் பண்ணுகிறாய்....!

ஷாலினி: பதறாதே நிக்கோலா, நான் உனக்கு ஒரு பிரச்சினையும் தரமாட்டேன்.பயப்பிடாதே நீ என்னை நம்பு ப்ளீஸ்.நீ வேறு நண்பர்களுடனும் இருந்திருக்கலாம்தானே.உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு நான் தருகிறேன்.ஆனால் இது வேண்டாம்.....!

ஷாலினி:முட்டாளா நீ.பணம் தேவை என்றால் நான் ஆசையாய் சேர்த்து வைத்த நகைகளை அடைவு வைப்பேனா. உனக்கு பத்து, நூறு தோழிகள் இருக்கலாம்.அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.இனிமேலும் நீ எப்போதும் போலவே இரு.நான் ஏனென்று கேட்க மாட்டேன்,உன் வழியில் குறுக்கிட மாட்டேன்.நீ என்னை சந்திக்கவும் வர வேண்டாம்.ஆனால் நான் உன் ஒருத்தனுடன்தான் என் அன்பைப் பகிர்ந்து கொண்டேன்.நீ ஒருத்தன்தான் என்னை நெருங்கலாம், என் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். நிறைய நம்பிக்கை குடுத்து அவனை சமாதானப் படுத்துகிறாள்....அவனும் ஒருவாறு சமாதானமாகி நீ ரொம்ப வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாய், பிடிவாதக்காரியாகவும் இருக்கிறாய் ஷாலினி.....அப்படியே அவளை அனைத்து வயிற்றை வருடியபடி மார்பில் முகம் புதைத்து கொள்கிறான். இருவரும் ஒருவித பரவசமான மயக்கத்தில் படுத்திருக்கிறார்கள். நிக்கோலாவும் வாழ்வில் முதன்முறையாக ஒரு பெண்ணோடு கட்டிலில் உறவு கொள்ளாமல் படுத்திருக்கிறான்.....!

           அன்று சாரதா வேலையில் இருந்து போனைப் பார்த்தபோது அதில் அவளது வாங்கிக் கணக்கில் ஐயாயிரம் ஈரோ ஷாலினியால் போடப் பட்டிருந்தது.திடீரென்று சாரதாவுக்கு சந்தேகம்.ஷாலினிக்கு எப்படி இவ்வளவு கெதியாய் பணம் கிடைத்திருக்கும்.ஒருவேளை பிரேமன் குடுத்திருப்பானோ, இருக்கலாம் என்று நினைக்கிறாள்.

                                              சில நாட்களின் பின் ஷாலினி சூப்பர் மார்கெட்டுக்கு வேலைக்கு செல்கிறாள்.அங்கு அவளுடன் கூட வேலை செய்யும் பத்துமாத்தா (கறுப்பினப் பெண்) வந்து பிரெஞ் மொழியில் ஹே ஷாலினி, எஸ்க்கு தே ஒக்குறோன் துலா நுவல். (உனக்கு விடயம் தெரியாதா).....!

ஷாலினி:நோ.... சே குவா....!(இல்லையே என்ன விடயம்).

                  

பத்துமாத்தா:உனது நண்பன் நிக்கோலாவின் சகோதரி ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இருந்தாள் அல்லவா....!  ஓம் ...தெரியும்......அவள் இறந்து விட்டாள். இன்று மாலை அருகில் இருக்கும் சவக்காலையில் அடக்கம் செய்கிறார்கள்....! ஷாலினி போனைப் பார்க்கிறாள்.அதில் நிக்கோலா மெசேஜ் போட்டிருந்தான்.நான்தான் கவனிக்க வில்லை.....சே.....நன்றி பத்துமாத்தா, அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். நான் லீவு எடுத்துக் கொண்டு இப்பவே அங்கு போகிறேன்.....!

 

             வெளியே சாதாரணமாக மழை தூறிக்கொண்டிருக்கு.  ஷாலினி மெட்ரொ ரயிலில் அந்த சவக்காலைக்கு வந்து சேர்கிறாள்.அங்கு அதிக கூட்டமில்லை.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே.சுமார் எழுபத்தைந்து பேர்வரை இருக்கலாம்.அங்குள்ள சர்ச்சில் பாதர் செபம் சொல்லிக்கொண்டிருந்தார்.அது முடிந்ததும் ஒவ்வொருவராக சென்று அங்கிருந்த ட்ரேயில் இருந்த நீண்ட தண்டுடன் சேர்ந்த செக்கச் சிவந்த ரோஜா மலர்களில் ஒவ்வருவரும் ஒவ்வொரு மலர் எடுத்து சென்று எமிலியின் பாதத்தில் வைத்து விட்டு அப்பால் நகர்கின்றார்கள்.நிக்கோலாவின் தாயும் தந்தையும் ஆளுக்கொரு மலர் வைத்து விட்டு வர அங்கு ஒரு மலர் மட்டும் மிதமுள்ளது.அதை தான் எடுத்து வைப்பம் என்று ஷாலினி முன்னால் வர நிக்கோலாவும் அருகே வருகின்றான். அவன் அதை வைக்கட்டும் என்று ஷாலினி சற்று பின்வாங்க நிக்கோலாவும் அவளைத் தடுத்து அம் மலரை தான் எடுத்து அவளின் கையில் கொடுத்து தோளோடு அணைத்துக் கொண்டு சென்று இருவருமாக மலரை எமிலியின் பாதத்தில் சமர்பிக்கின்றார்கள்.....!

 

                            பின்பு எல்லோரும் வெளியில் வருகின்றனர்.சவப்பெட்டியை நாங்குபேர் தூக்கி வருகின்றனர்.வெளியே மழை தூறிக்கொண்டிருப்பதால் எல்லோரும் ஒரேமாதிரி நீண்ட பிடியுள்ள பெரிய  கறுப்புக் குடை பிடித்துக் கொண்டு நிக்கிறார்கள்.ஷாலினி மட்டும் தனியாக தூறலில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்த நிக்கோலா அவளைத்  தனது குடைக்குள் அழைத்துக் கொள்கிறான்.சவப்பெட்டி கயிற்றின் மூலம் குழிக்குள் இறக்கப் படுகின்றது.ஷாலினி உட்பட எல்லோரும் ஒவ்வொரு பிடி மண் எடுத்துப் போடுகின்றார்கள்.பின்பு எல்லோரும் கலைந்து செல்கின்றனர்..... நிக்கோலாவின் பெற்றோர் மனசால் மிகவும் உடைந்து போய் இருந்தார்கள்.ஷாலினி கொஞ்ச நேரம் அவர்கள்கூட  இருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பின் நிக்கோலாவிடமும் விடை பெற்றுக் கொண்டு செல்கிறாள்......!

நிழல் நீளும்..........! (8).

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிலம்........(9).  🦎 🦎 🦎 🦎🦎

                               🦎 🦎 🦎 🦎.

 

சாரதா வீடை விட்டு போயும் சில மாதங்களாகின்றன. அவளை சந்திக்க முடியவில்லை.IT கம்பெனியிலும் போய் விசாரித்தும் பலனில்லை.அவள் இவர்களை சந்திப்பதை தவிர்த்தே வருகின்றாள்.....நண்பர்களிடமெல்லாம் விசாரித்தாகி விட்டது.ஒரு பிரயோசனமும் இல்லை.அவள் எழுதிய கடிதத்தைப் படித்தபின் இயல்பாகவே பிரேமனும் ஷாலினியும் பேசிக்கொள்வது குறைந்து விட்டது.அவரவர் தத்தமது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவசியம் ஏற்பட்டால் ஓரிரு வார்த்தை அவ்வளவுதான்.யந்திர கதியில் நாட்கள் வாரங்களாக ஓடுகின்றன......!

                                    

                                    இப்போதெல்லாம் ஷாலினி தனது வேலை முடிந்ததும் நிக்கோலாவின் வீட்டுக்கு சென்று அவனின் பெற்றோருக்கு ஆறுதலாக இருந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு வருவது வழக்கமாகி விட்டது.வீட்டில் உம்  என்று இருப்பதைவிட இது எவ்வளவோ ஆறுதலாக இருக்கின்றது.அப்போது நிக்கோலாவும் வந்து இவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பான்.இப்படியான சந்தர்ப்பத்தில் ஒருநாள் நிக்கோலாவின் தந்தை ஆந்தரே ஷாலினியிடம் உனக்கு ஒரு விடயம் தெரியுமா.....என்ன அங்கிள்.......முன்பெல்லாம் நிக்கோலாவை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை.வாறதும்  போறதும் தெரியாது.ஆனால் இப்போது அவன் மாலையிலேயே வீட்டுக்கு வந்து விடுகிறான்..... ஓம் ஷாலினி நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று அவனின் தாய் மரியம் சொல்கிறாள்.ஷாலினி புன்முறுவல் பூக்க, நிக்கோலா மெதுவாக எழுந்து  நீங்கள் கதையுங்கள் நான் கோப்பி போட்டுக் கொண்டு வருகிறேன் என்று குசினிக்குள் போகிறான்......!

                                                                      அப்போது மரியம் ஷாலினியிடம் ஷாலினி நானும் ஆந்தரேயும் இன்னும் சில நாளில் எங்களின் கிராமத்துக்கு போகலாம் என்று இருக்கிறோம்..... ஏன் அன்ரி பாரிஸ் பிடிக்கவில்லையா.... அதுக்கில்லை ஷாலினி எமிலி எம்மை விட்டுப் பிரிந்ததில் இருந்து மனசெல்லாம் வெறுமையாயும்,விரக்தியாயும் இருக்கின்றது.நிக்கோலாவும் வேலைக்கு போனால் நாங்கள் இருவரும் தனியே இருப்பது சலிப்பாக இருக்கின்றது அதுதான்...... ஷாலினியும் நீங்கள் அங்கு சென்றும் தனியாகத்தானே இருக்கப் போறீங்கள்.அதுக்கு இங்கேயே இருக்கலாமே அன்ரி..... இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டே நிக்கோலாவும் கோப்பி தயாரித்துக் கொண்டிருக்கிறான்.....!

                      அதுக்கில்லை ஷாலினி எங்களுக்கும் வயதாகி விட்டது.அங்கே சில உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்.சிலகாலம் அங்கு இருந்து விட்டு பின் அப்படியே முதியோர் இல்லத்துக்கு செல்ல வேண்டியதுதான்.மரியம் சொல்ல ஆந்தரேயும் கவலையுடன் கேட்டுக்கொண்டு அருகில் இருக்கிறார்.நிக்கோலாவுக்கும் கவலையாக இருக்கின்றது.இப்பவே பார் ஷாலினி இந்த வீட்டை..... தோட்டமெல்லாம் குப்பையாய் கிடக்கிறது.நீச்சல் குளமும் அழுக்காக இருக்கிறது. (இவர்களின் வீடுகளில் ஹாலுக்கும் குசினிக்கும் நடுவே சிறிய குட்டைச் சுவர் மட்டும்தான் இருக்கும்.அதனால் பேசுவதை பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கலாம்.....!).

                அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவுகின்றது.

சிறிது நேரத்தின் பின் ஷாலினி சொல்கிறாள்..... நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா.... என்ன சொல்லு பார்ப்போம்......! இன்னும் சில நாளில் நான் ஒரு பிள்ளை பெற்று விடுவேன்.அந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் இருவரும் வைத்து வளர்க்கக் கூடாது...... என்ன சும்மா பகிடி பண்ணுகிறாயா ஷாலினி  நாங்கள் சீரியஸாகக் கதைக்கிறோம்......!

ஷாலினி: நானும் சீரியஸாகத்தான் சொல்கிறேன்.....இப்போ நீ கர்ப்பமாய் இருக்கிறாயா ஆந்தரே கேட்கிறார்..... ஓம் அங்கிள்......,மரியம் சொல்கிறாள் அப்பவும் நான் நினைத்தேன் நீ ஓவர்கோட்டை கழட்டி ஹாங்கரில் மாட்டும்போது வயிறு பெரிதாக இருக்கு கர்ப்பமாய் இருக்கும் என்று..... ஆந்தரே குறுக்கிட்டு நீ பிள்ளையை வளர்க்கத் தந்தாலும் உன் கணவன் ஒத்துக் கொள்வானா.... ம் ....ஒத்துக் கொள்ளலாம் அல்லது ஒத்துக் கொள்ளாமலும் போகலாம்.அனால் நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதைப்பற்றிக் கவலையில்லை.... நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்..... மரியம் குறுக்கிட்டு நீ சொல்வது கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால்  இன்னொருவரின் பிள்ளையை நாங்கள் எப்படி ஷாலினி எவ்வளவு நாட்களுக்குத்தான் வளர்ப்பது. பின்பும் பிரியும்போது கவலை இன்னும் அதிகமாய் இருக்குமே. இல்லையா ஆந்தரே .... ஆமாம் மரியம்.....!

ஷாலினி: சரி.....இன்னொருவர் பிள்ளை வேண்டாம், உங்களின் பேரனாக இருந்தால் மறுக்க மாட்டீர்கள்தானே..... இருவரும் வியப்புடன் ஷாலினியைப் பார்க்கின்றார்கள்.இவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டே நிக்கோலாவும் காபி ட்ரேயைக் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு சீனிப் பைக்கட்டுகளையும் அருகில் வைக்கிறான்.....!

அவர்களின் பார்வை நிக்கோலாவின் பக்கம் திரும்பி நிஜமா என்று வினவுகிறது. அவனும் ஆம் எனது தலை மட்டும் அசைக்கின்றான்..... மரியம் ஷாலினியின் பக்கம் திரும்பி என்னம்மா நீ, அவன் ஒரு விளையாட்டுப்பிள்ளை பொறுப்பே இல்லாதவன்.அவனை நீ எப்படி நம்பினாய்.அப்பவே அபார்சன் செய்திருக்கலாமே..... நிக்கோலா விளையாட்டுப் பிள்ளை என்று தெரிந்துதான் நானும் விளையாட்டாகத்தான் பழகினேன்.எதிர்பாராமல் கரு உருவாகி விட்டது. ஆனால் நான் அவனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.அவன் எவ்வளவு பேரோடும் பழகி இருக்கலாம்,இப்பவும் பழகிக் கொண்டிருக்கலாம்.அதையிட்டும் நான் கவலைப்படவில்லை.ஆனால் இது என்னிடம் முதன்முதலாக வந்த பிள்ளை.இதை அழிக்க நான் விரும்பவில்லை. உங்கள் குடும்பத்துடன் ஏதோ ஒரு தொடர்பு இருந்ததால்தான் அன்று எமிலியின் மரணச்சடங்கில் கூட இது கலந்து கொண்டு மலர் அஞ்சலி செய்து மண்ணும் இட்டது. இப்பவும் உங்களது விரக்தியைப் போக்கி உங்களை மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.மீண்டும் சொல்கிறேன் நான் உங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. உங்களின் சந்தோசத்துக்கு குறையாக நானோ என் பிள்ளையோ ஒருநாளும் இருக்க மாட்டோம்.நிக்கோலாவுக்கே தெரியும், நான் நல்ல வேலையோடும் சம்பளத்தோடும் இருக்கின்றேன்.குழந்தையை தனியாக வளர்க்க என்னால் முடியும் என்கிறாள்.....!

நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் ஷாலினி. வரும் ஞாயிற்றுக் கிழமை வருகிறாயா மீண்டும் கதைக்கலாம்..... தாராளமாக என்று சொல்லிக் கொண்டே ஷாலினி அவர்களிடம் விடை பெறுகிறாள். மூவருமாக கேட் வரை வந்து அவளை வழியனுப்பி விட்டு வருகின்றனர்.... அப்போது மரியம் நிக்கோலாவிடம் என்னடா இந்தப் பெண் இப்படிச் சொல்கிறாள்.ஒன்றும் பிரச்சினை இல்லையே.....இல்லை மம்மி, நான் சந்தித்த பெண்களிலேயே இவள் மிகவும் வித்தியாசமானவள் மம்மி. மிகவும் உணர்ச்சி பூர்வமானவளாகவும் பாரம்பரியம் மிக்கவளுமாய் இருக்கிறாள்.எதையும் நேர் படப் பேசுகிறாள்.ஏதோ ஒரு கவர்ச்சி அவளிடம் இருக்குது மம்மி.இவளை விலக்கி விடவோ அல்லது ஏமாத்தவோ வேண்டும் என்று எண்ணம் கூட  எனக்கு வருவதில்லை மம்மி.....!

ஆந்தரே:  இவள் எந்த நாட்டுப் பெண்....!

நிக்கோலா :இவள் ஸ்ரீலங்கா டமில்ஸ்.....!

இருவருமாக ஓ....ஓ....ஸ்ரீலங்கா டமில்ஸ் என்று வியக்கின்றனர்......!

நிழல் நீளும்...........! (9).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை மிக நன்றாகச் செல்கின்றது. நேரம் கிடைக்கும் பொழுதுகளில் தொடர்ந்து வாசிக்கின்றேன். தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்.............(10).  🦩 🦩 🦩 🦩 🦩

                                     🦩 🦩 🦩 🦩 🦩.

 

அன்று சாரதாவின் IT கம்பெனியில் மானேஜர் அவளை அழைத்து சுவிஸில் ஒரு அவசர வேலை. போய் வருகிறாயா என்று கேட்க ஓம் போய் வருகின்றேன். இனிமேல் எனக்கு இங்கேயே இருந்து செய்கிற மாதிரி வேலை வேணும் என்று கேட்கிறாள்.அவரும் சரி இப்ப நீ போய் வா,  நான் பார்த்து வைக்கிறேன் என்று சொல்கிறார்..... உடனே  வீட்டுக்கு சென்ற சாரதா தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வனிதாவுக்கு போனில் தகவல் சொல்லிவிட்டு விமானத்தில் சுவிஸுக்கு செல்கிறாள்.இப்ப இருக்கும் மனநிலையில் இந்தப் பயணம் ஒரு மருந்தாக அமைகின்றது.....!

 

                                                                                  சாரதா சுவிஸில் போய் இறங்குகின்றாள்.அப்பொழுது சீசன் காலமானதால் ஹோட்டல்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றது.அவசரத்தில் முன் பதிவும் செய்யவில்லை.போய் பார்க்கலாம் என்று வந்து விட்டாள். எப்போதும் ஆடம்பரமான ஹோட்டல்களில் தான் தங்குவது வழக்கம். சரி,வழக்கமாய் தங்கும் இடத்தில் நேரே போய்ப் பார்க்கலாம் என்று ஒரு ஹோட்டலுக்கு போகிறாள்.வரவேற்பறையில் இருந்தவர் பழக்கமானவர்.அவர் சொன்னார் இப்போது அறையெல்லாம் நிறைந்திருக்கு.அநேகமாய் மாலையில் சில அறைகள் காலியாகலாம். அப்போது வாருங்கள்,நான் உங்களுக்கு எப்படியாவது ஒரு அறை தரப் பார்க்கிறேன்.....சரி சார் நான் மாலையில் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பும்போது மனேஜர் அவளிடம், மேடம் நீங்கள் விரும்பினால் அருகில் உள்ள மைதானத்தில் கூடைப் பந்து விளையாட்டு நடைபெறுகின்றது.நீங்கள் இந்த டிக்கட்டில் போய் இருந்து பார்த்து விட்டு வாருங்கள் என்று ஒரு சீட்டை கொடுக்கிறார். சாரதாவும் அதை வாங்கிக் கொண்டு இதுவும் நல்ல யோசனைதான் சார், நான்கூட பாடசாலையில் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொன்டு பரிசெல்லாம் வாங்கியிருக்கிறேன். என்று வெளியே போகிறாள்.

                                           கூடைப்பந்துப் போட்டி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து கொண்டிருக்கு.ஒவ்வொரு பக்கமும் பந்து கூடைக்குள் விழும்போதும் அந்தந்த ரசிகர்களின் ஆரவாரம் அபரிதமாய் இருக்கிறது.விளையாட்டின் கொமண்ட்ரி சுப்பராய் இருக்கு.அடிக்கடி மில்டன் என்னும் பெயர் தனியாக ஒலித்துக் கொண்டிருக்கவே சாரதாவும் ஆர்வமாய் போட்டியை கவனிக்கிறாள்.மில்டனின் கையில் பந்து வரும் போதெல்லாம் அவன் எதிராளியை ஏமாற்றி பந்தை கூடைக்குள் போடுவது ரசிக்கக் கூடியதாய் இருக்கின்றது.சத்தம் விண்ணைப் பிளக்கின்றது.பந்து அவன் நினைத்தபடியெல்லாம் முதுகாலும் தோளாலும் கால்களுக்கிடையாலும் சுழன்று சுழன்று வருகின்றது.சாரதாவுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது.அந்த விளையாட்டின் விதிமுறைகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.அதனால் கை தட்டி ரசிக்க முடிகின்றது.மில்டனின் விளையாட்டை அடிக்கடி ரிப்ளை பண்ணிக் காட்டுகின்றார்கள்.

                                                                                                                                                                         அவன்தான் எவ்வளவு உயரமானவன்.கால்களும்,கைகளும் உருண்டு திரண்டு முறுக்காக இருக்கின்றன.குட்டையான சுருள் முடிகளுடன் தொடைகள்தான் எவ்வளவு இறுக்கமாக இருக்கின்றது.விளையாடும்போது எவ்வளவு உயரத்துக்கு எம்பிக் குதிக்கிறான்.இவன் மில்டன் இல்லை முரடன் என்றால் சரியாய் இருக்கும்.குறுந்தாடியுடன் கூடிய களையான முகம்,முகத்தில் இருந்து விடாமல் ஒழுகும் வியர்வைத் துளிகள், வியர்வையை அவன் விரல்களால் வழித்து எறியும் லாவகம் எல்லாம் அவள் நினைக்காமலே புளகாங்கிதமடையச் செய்கிறது.....!

                                             ஒரு வழியாக போட்டி முடிய மில்டன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றார்கள்.அன்றைய சிறந்த விளையாட்டு வீரனுக்கான பரிசும் அவனுக்கே கிடைக்கிறது.ஏனைய வீரர்கள் எல்லோரும் சேர்ந்து மில்டனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மைதானத்தை சுற்றி வருகின்றார்கள்.எல்லோருடனும் சேர்ந்து சாரதாவும் எழுந்து நின்று கரகோஷம் செய்து ரசிக்கின்றாள்.பின்பு வீதிக்கு வந்து அங்குள்ள ஒரு  உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு வருகிறாள்.அப்போதும் அங்கு அறை காலியாக இல்லை. என்ன செய்வது என்று மனேஜருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறாள்.அங்கே ஒரு மேசையில் ரிலாக்ஸ்டாக சிறிது மது அருந்திக் கொண்டிருந்த ஒருத்தன் எழுந்து வந்து மேனேஜரிடம் ப்ரோ நீண்ட நேரமாக நீங்கள் பேசுவது என் காதில் விழுந்தது. இந்தப்பெண்ணுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் எனது அறையில் வந்து தங்கிக் கொள்ளலாம்.அங்கு இரண்டு கட்டில்கள் தனித்தனியாக இருக்கின்றன.என்கிறான். அவன் கதைக்கும்போதுதான் சாரதா அவனைப் பார்க்கிறாள்.ஓ...இன்று மாலை மைதானத்தில் அபாரமாய் விளையாடிய மில்டன்..... மானேஜர் சாரதாவைப் பார்த்து உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் இன்று மட்டும் நீங்கள் அங்கு தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி என்னுடன் பழக்கமோ அப்படியே இவரும் எனக்கு பழக்கமானவர்தான். எப்படியும் ஏதாவது ஒரு அறை நாளைக்கு காலியாகும் அது உங்களுக்குத்தான்.

                                                                                                                                                        சாரதாவுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. எதுக்கும் நான் ஒருமுறை அறையைப் பார்த்து விட்டு சொல்கிறேன் என்று சொல்ல மூவருமாக லிப்டில் அறைக்குச் செல்கின்றனர்.அது மிகவும் விசாலமான அறை.ஒரு டபுள் கட்டிலும் அதிக இடைவெளியில் ஒரு தனிக் கட்டிலும் இருந்தன. பெரிய வசதியான பாத்ரூமும் இருக்கு.தற்போது அவளுக்கும் வேறு வழி இல்லை.நாளைக்கு காலை ப்ரெஷ்சாக வேலைக்குப் போக வேண்டும். அரை மனசுடன் தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறாள்......!

                                                                            அன்றைய இரவு மில்டனும் சாரதாவும் பொதுவாக பல விடயங்களையும் கதைத்துக் கொண்டிருந்தனர். சாரதாவும் அவனிடம் இன்று மாலை மைதானத்தில் உங்களது விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது.... அப்படியா ....மகிழ்ச்சி. எங்கே  டி. வி யிலா பார்த்தீர்கள்....! இல்லை நான் அந்த மைதானத்தில் இருந்து நேரடியாகவே பார்த்தேன்.....!

மில்டன்: உங்களுக்கு கூடைப்பந்து விளையாட்டு பிடிக்குமா.இப்போது எல்லோரும் கால்பந்தாட்டத்தைத்தான் மிகவும் விரும்புகிறார்கள்.....ம்கூம் ....நான் பாடசாலை அணியின் சாம்பியனாக்கும். இந்த விளையாட்டில் உங்களின் உயரம்தான் ப்ளஸ் பாயிண்ட்.....ஓ கே. குட்நைட்... எஸ். குட்நைட்... இருவரும் ஆளுக்கொரு கட்டிலில் படுத்து கொள்கின்றார்கள்.....!

                                அடுத்தநாள் காலை சாரதா நேரத்துக்கே எழுந்து குளித்து வெளிக்கிட்டு சின்னதா ஒரு மேக்கப்பும் செய்து கொண்டு வருகிறாள். மில்டன் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறான்.அவள் அவனை எழுப்பாமல் தனது பெட்டியில் இருந்து பைலை மட்டும் எடுத்துக் கொண்டு பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு கம்பெனிக்கு டாக்சியில் போகிறாள்.....!

நிழல் நீளும்.............(10).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ் பெண் ஒரே அறையில் யாரென்றும் தெரியாத ஆணுடன் இன்ரஸ்ட்டிங் 😀...தொடருங்கள் சுவியண்ணா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்....................(11). 🐊 🐊 🐊 🐊 🐊 🐊

                                          🐊 🐊 🐊 🐊 🐊.

                                                                                                                                              சுமார் 3:00 மணியளவில் அவள் வேலை முடிந்து மீண்டும் அறைக்கு வந்தபோது மில்டன் வெளிக்கிட்டு ப்ரெஷ்சாக ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு வெளியே ஆல்ப்ஸ் மலையின் பனிச்சிகரங்களைப் பார்த்துக் கொண்டு நிக்கிறான்.கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவன் என்ன சாரதா வேலை எல்லாம் முடிந்ததா....ஓம் ....முடிந்தது மில்டன்.இன்னும் கொஞ்சம் இருக்கு அதை நாளைக்கு போன் மூலமாகவும் செய்யலாம்.....அது கிடக்கட்டும், என்ன நீங்கள் வெளிக்கிட்டு டிப்டாப்பாய் நிக்கிறீங்கள்,வெளியே கிளம்புகிறீர்களா....!

மில்டன்: ஆமாம், கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.வேலை இல்லை என்றால் நீங்களும் வரலாம்......! ஓ...யெஸ் ...அதுக்கென்ன சுவிஸ் ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் எவ்வளவு தரம் பார்த்தாலும் சலிக்காது....இருங்கள் ஒரு நிமிடம் ட்ரஸ் மாற்றிக்கொண்டு வருகிறேன்....!

 

                                         சொல்லியவாறு கெதியாக ஆடை மாற்றிக் கொண்டு வருகிறாள்.குளிர் தாங்கக்  கூடிய நீலநிறத்தில் ஓவர்கோட்டும் விலங்கின் ரோமத்தினாலான தொப்பியும் தடிமனான கறுப்பு நிற லெக்கின்சும் ஒரு முழம்வரை லேஸ் கயிற்றால் கட்டிய நீண்ட சப்பாத்தும் பூப்போட்ட  வெள்ளை மப்ளரோடும் தேவதைபோல் வருகிறாள்......சாரதா நீங்கள் மிகவும் அழகாய் இருக்கின்ரீர்கள்என்று பாராட்டுகின்றான்..... நன்றி மிஸ்டர் மில்டன்.நான் ரெடி கிளம்பலாம்......!

                                                                                 இருவரும்  வெளியில் வந்து ஒரு பேரூந்தில் ஏறுகின்றார்கள்.அதன் குலுக்களில் ஒருத்தரை ஒருத்தர் உரசிக்கொண்டு பிரயாணம் செய்து ஒரு படகுக் கரையை அடைகின்றனர். பின் ஆற்றிலே குஷாலாக படகுச் சவாரி.சுற்றிலும் வெண்பனி மலைகள் அழகாய் இருக்கின்றன.அதன்பின் கேபிள் காரில் ஒரு மலையின் உச்சியை அடைகின்றனர்.அங்கு ஒரு சின்ன ரெஸ்ரூரண்ட்டும் இருக்கிறது.அவன் ஒரு பிரபலமான விளையாட்டு வீரனாகையால் ஆங்காங்கே சிலர் அவர்களுடன் படங்களும் எடுத்து கொள்ளுகின்றனர். அவனும் சலிக்காமல் அவர்களுக்கு போஸ் குடுக்கிறான்.அந்த மலையின் உச்சியில் இருந்து மற்ற மலைகளை டெலஸ்கோப் ஊடாகவும் நேரிலும்  பார்க்கும்போது கண்களுக்கு நல்ல விருந்தாக இருக்கின்றது.ஒரு இடத்தில் மலை ஓரத்தில் இருந்து ஐந்து மீற்றர் வெளியே தடுப்பு கம்பிகள் போட்டிருந்தார்கள்.கீழே கண்ணாடித் தரை. இருவரும் அதில் ஏறிநின்று கீழே பார்க்க படு பாதாளமாய் பயங்கரமாய் இருக்கின்றது.சாரதா மில்டனின் கையை மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் .ஆங்காங்கே சிலர் அந்த இயற்கையின் பிரமாண்டத்தை வியந்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.மில்டனும் அதே கிறக்கத்துடன் சாரதாவைப் பார்க்க சாரதாவும் புன்சிரிப்புடன் தலை குனிந்து கொள்கிறாள்.இருவரின் கைகளும் ஒன்றையொன்று பற்றியபடி இருக்க அவன் ஒருகையால் அவள் தாடையை உயர்த்தி அவள் எதிர்பாராத தருணத்தில் உதட்டுடன் உதடு பதித்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு விட்டு என்றென்றும் இருவரின் நினைவுகளில் இருக்கட்டும் என்று சொல்லி சிரிக்கிறான். மில்டன் நான் இதை எதிர் பார்க்கவில்லை என்று அவள் கோபமாய் கூற முயன்றவள், கோபம் வராததால் பனிக்கட்டிகளை கொத்தாக உருட்டி எடுத்து அவன் மீது ஏறிகிறாள். பதிலுக்கு அவனும் பனியை அள்ளி எறிய சற்று நேரத்தில் அந்த விளையாட்டு அங்கிருந்த எல்லோரிடமும் "கொரோனா" போல் தொற்றிக் கொள்கிறது......!

                                பின் அங்கே ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு இறங்கி வந்து இன்னோர் இடத்தில் மொன்ட்கோல் பியரில் (பறக்கும் பலூன்) உயரத்தில் பறக்கும் பொழுது அவர்கள் மிகவும் அந்நியோன்னியமாக இருந்தார்கள்.அந்த உயரத்திலும் ஓரிருதடவை அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள்.பின் அங்கிருந்து வந்து ஒரு ரெஸ்டாரண்டில் இரவு உணவை சாப்பிடும்போது மில்டன் மதுவும் எடுத்துக் கொள்கிறான்.சாரதாவையும் கொஞ்சம் அருந்தும்படி கேட்க அவள் மறுக்கிறாள். எனக்காகக் கொஞ்சம் என்று சொல்லி கிளாசில் சிறிது மதுவும் கோலாவும் கலந்து இது பெண்களுக்கானது.ஆல்கஹால் குறைவு என்று சொல்லிக் குடுக்கிறான்.அவளும் எனக்கு இது பழக்கமில்லை என்று சொல்லிவிட்டு உனக்காக சிறிது டேஸ்ட் பண்ணுகிறேன் என்று சொல்லி குடிக்கிறாள்.இப்ப அவள் மனம் முழுதும் ஷாலினியும் பிரேமனும் செய்த துரோகம் நெஞ்சைப் பிசைய பீட்ஸாவை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கிறாள் .....ம்கூம் குடித்துக் கொண்டே சாப்பிடுகிறாள். பின்பு அந்த மாலில் இருந்த சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.புதிய படம்.நிறைய துப்பாக்கிச் சண்டை, கார் ரேஸ்களுடன் காதல் காட்சிகளுக்கும் குறைவில்லை. அங்கேயும் கொஞ்சமாய் பியர் குடித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள்.இரவு அறைக்கு வரும்போது நேரம் 11:00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது......!

                            அறைக்குள் நுழைந்ததுமே மில்டன் சாரதாவை அலேக்காக அணைத்துத்   தூக்கிக் கொண்டு கட்டிலை நெருங்க நெருங்க சப்பாத்துகள் சட்டைகள்  எல்லாம் ஆங்காங்கே ஒவ்வொன்றாக விடைபெறுகின்றன.சாராதாவால் நிகழும் தப்பை உணர முடிகின்றது ஆனால் தடுக்க முடியவில்லை.அந்த போதையில் அதுவும் தேவையாக இருக்கின்றது.ஷாலினியும் பிரேமனும் கண்முன்னே வருகிறார்கள்.கூடவே அவர்கள் தனக்குச் செய்த துரோகமும்.மில்டனுக்கும் பொறுமையில்லை. அவளை ஒரு பாஸ்கட் பந்தாகவே நினைத்து விட்டான். நேற்று அவன் விளையாட்டில் பெற்ற வெற்றிக்கு  இன்று எதிர்பாராமல் கையில்கிடைத்த பரிசுதான் இந்தத் தேவதை.   இடை மீதும் மார் மீதும் தோள் மீதும்   அவளை உருட்டி புரட்டி எடுக்க அவளும் தளிராக கொடியாக மாறி அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம்  இணங்கி வருகிறாள் என்ற நிறைய நினைவுகளுடன் சாரதாவை பிடித்தபடி மில்டன் லிப்டில் ஏறிப் போகிறான்.அப்போதே அவனது கரங்கள் ஆனந்த லீலையை ஆரம்பிக்க துறுதுறுக்கின்றன......!

                         அவர்கள் ஹொட்டலில் நுழையும்போதே கவுண்டரில் இருந்து பார்த்த மானேஜர், என்ன இது பொதுவாக இந்தப் பெண் மது அருந்த மாட்டாளே....இப்ப என்ன தள்ளாடிக் கொண்டு வருகிறாள்.எதோ சரியில்லாமல் இருக்கு பார்ப்பம் என்று நினைத்துக் கொண்டு விறு விறு என்று லிப்டில் மேல போகிறார்…… !

                                                         அவர்களுக்கு முன் அந்த அறைக்கு சென்றவர் அவளது பெட்டியை எடுத்து வேறொரு அறையில் வைத்து விட்டுவர இருவரும் ஒருவரை யொருவர் அணைத்தபடி அறைக்கு முன்னால் வருகின்றனர்.அவர் மில்டனோடு கை குலுக்கி விட்டு அவனை அவனது அறைக்குள் தள்ளாத குறையாய் அனுப்பிவிட்டு, வாருங்கள் மேடம் உங்களின் ரூம் தயாராகி விட்டது என்று சொல்லி அவளை அழைத்து சென்று அந்த அறைக்குள் விட்டு கதவை சாத்திவிட்டு செல்கிறார்.....!

நிழல் நீளும்........!(11).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் நெஞ்சிடிக்கப் பண்ணிப்போட்டியள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்ச நேரம் நெஞ்சிடிக்கப் பண்ணிப்போட்டியள் 😀

கொஞ்சம்  முதலே தொடரும் போட்டிருக்க வேண்டும். கொரோனா பிரச்சினையில யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டால் கொஸ்பிட்டலுக்கு போறதெல்லாம் சிரமம் என்றுதான் கடைசி இரண்டு பந்தியும் எழுதியது......!  😂

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டு வரும் அனைவருக்கும் மிக்க நன்றி......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சத்தை நாங்கள் வாசிச்சு முடிக்க நீங்களும் கவனமா இருந்துகொள்ளுங்கோ அண்ணா 😀

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள் சுவியண்ணா. சுவாரிசியத்திற்கு குறைவில்லாமல் வாசகர்களை அடுத்தது என்ன நடக்கும் என்ற ஒரு விறுவிறுப்புடன் அடுத்த தொடருக்காக காத்திருக்கவைக்கிறது உங்கள் எழுத்து.  நாவல் எழுதுவதற்கான அனைத்து தகமையும் உங்ககளுக்கு உள்ளது என்னால் அது மிகையாகாது!

தொடரட்டும் உங்கள் நி.த.நி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவசியமின்றி வெளியில் சென்று பிடிபட்டால் 135 ஈரோ தண்டம்.மேலும் செக்கப்பு அது இது எண்டு ...வேண்டாம்.......!   😎

மிக்க நன்றி சகோதரி தமிழினி......!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஒட்டி இருக்கும் கலாச்சாரமும் ,பண்பாடும் விடவில்லை போல 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நிலம்..........(12). 🐞 🐞 🐞 🐞 🐞 🐞

                                 🐞 🐞 🐞 🐞 🐞 🐞.

                              

                                             அதிகாலை அலாமின் சிணுங்கல்களில்  சாரதா முழித்து விட்டாள்.  மதுப் பழக்கமில்லாததால் தலை லேசாக வலிக்கிறது.நேற்று மாலை நடந்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவில் வருகிறது.ஓ...மை காட்.அந்தச் சமயத்தில் மானேஜர் மட்டும் வரவில்லையென்றால் வாழ்நாள் முழுதும் நீங்காத அவமானம் ஏற்பட்டிருக்கும்.அவன் தொட்ட, முத்தமிட்ட இடமெல்லாம் மேனியில் அரவம் ஊர்வதுபோல் அருவருப்பாக இருக்கிறது. போர்வையை சுற்றிக்கொண்டே பாத்ரூமில் நுழைகிறாள்.ஷவரின் நீரிலும் ஷாம்பூவின் நுரையிலும் உடலின் அழுக்குகள் கழுவுப்பட்டு கரைந்து போக அன்றைய பாவம் உள்ளத்தில் ரணமாகத் தங்கி விடுகின்றது.யாரைப் பழிவாங்க, எதற்காக இந்த அவஸ்தை.சிறுவயதில் படித்த கதையில் "குளிக்க மாட்டேன்  என்று ஓடிய நாய்குட்டி குளத்துக்குள் விழுந்ததுபோல்" ஆகி விட்டது. அவள் அறியாமலே அவள் அழுகிறாள். பின் அவள் வெளிக்கிட்டு  கவுண்டருக்கு வருகிறாள்.அங்கு மனேஜரைக் கண்டதும் பெட்டியைப் போட்டுவிட்டு ஓடிச்சென்று அவரின் கையை பிடித்துக்கொண்டு அழுகிறாள் வார்த்தைகள் வரவில்லை.அவரும் ஆதரவாக அவளை அணைத்து கவலைப் படாதே சாரதா நீயும் என் மகள் போலத்தான்.எல்லாம் சரியாகி விட்டது.  என்னிலும் பிழை இருக்கு.நானும் உன்னைத் தனியாக அங்கு விட்டிருக்கக் கூடாது.இங்குள்ள பெண்களில் அநேகமானோர் ஒரு பிரபலத்துடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்வர்.எப்படியோ எமது ஹோட்டலின் நற் பெயரும் காப்பாற்றப் பட்டு விட்டது.சந்தோசமாகப் போய்வா.இனிமேல் குடிக்காதே.முன்பு இருந்ததுபோல் இரு என்ன....ஓம் என்றவள் உங்களுக்கு மிகவும் நன்றி சார்.என்றும் உங்களை மறக்க மாட்டேன் சார். அவர்களின் பில்லைச் செட்டில் பண்ணிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு ராக்சியில் விமான நிலையம் வந்து பாரிஸ் செல்லும் விமானத்தில் ஏறுகின்றாள்.....!    

                                                                             

 

                                                        அன்று ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் எதிர்பாராவிதமாக வனிதாவும் ஷாலினியும் சந்திக்கின்றனர்.ஷாலினி ஒரு சிநேகமான புன்னகையுடன் வனிதாவைப்  பார்க்க வனிதாவும்  கொஞ்சம் கடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு ஷாலினி அருகே வருகிறாள்.....என்ன ஷாலினி என்ன இந்தப்பக்கம் ஷொப்பிங் செய்யவா....இல்லை வனிதா, நான் இப்போது ஷொப்பிங் செய்யும் மனநிலையில் இல்லை.....வேறென்ன விசேஷம் .... ஒன்றுமில்லை சாரதாவின் உடைகள் இங்கு ட்ரைகிளினிங்கில் கொடுத்தது.அதை எடுக்க அண்ணாவும் நானும் வந்தனாங்கள்..... ஓ......அண்ணாவா அது யார்....!

ஷாலினி : என்ன வனிதா தெரியாதமாதிரி கேட்கிறாய். பிரேமன் அண்ணாதான்.....!

வனிதா : ம்.....ஜோடியாகத்தான் வந்திருக்கிறீங்கள்.அப்ப சாரதா வரவில்லையா....!

ஷாலினி : என்ன வனிதா பொடிவைத்து பேசுகிறாய்.ஒரு சிறு மனஸ்தாபத்தில் சாரதா வீட்டுக்கு வருவதில்லை.போனிலும் தொடர்பில்லாமல் இருக்கு.அதுதான் கவலையுடன் இருக்கிறோம்.உனக்கு சாரதா இருக்குமிடம் தெரியுமா சொல்லு வனிதா ப்ளீஸ்....!

வனிதா : இஞ்ச பார் ஷாலினி, நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பவில்லை.நீயும் பிரேமனும் சேர்ந்து அவளுக்கு துரோகம் செய்து போட்டீங்கள். ஒரு பக்கம் உயிர்த்தோழி  மறுபக்கம் காதலித்துக் கைப்பிடித்த கணவன். அவள் பாவம், எவ்வளவு வேதனைப் பட்டிருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா.....!

அப்பொழுது அங்கு உடுப்புப் பார்சலுடன் பிரேமன் வருகிறான்.வந்து என்ன வனிதா நலமா என்று  விசாரிக்கிறான்.சவரம் செய்யாத முகத்துடன் வாடிப்போய் சோகமாய்  இருக்கிறான்.....ஷாலினி குறுக்கிட்டு வனிதா எங்கள் இருவர் மீதும் செம கடுப்பில் இருக்கிறாள் அண்ணா.....சாரதா இவளைச் சந்தித்திருக்கலாம்.அல்லது இவள் கூடத்தான் இருக்கிறாளோ தெரியாது.....!

பிரேமன் வனிதாவிடம் ஏன் வனிதா சாரதாவை நீ சந்தித்திருந்தால் அல்லது அவள் உன்னோடு இருந்தால் ஒரு போன் அடிச்சு சொல்லி இருக்கக் கூடாதா......

வனிதா : அதெப்படி அண்ணா நான் சொல்லுவன் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.நீங்கள் சாரதாவுக்கு துரோகம் செய்து போட்டு இப்பவும் சோடி போட்டுக்கொண்டுதானே திரிகிறீங்கள்....ஷாலினியைப் பார்த்து நீ ஆமான ஆள் என்றால் அன்றே நீ வீட்டை விட்டுப் போயிருக்க வேண்டும்.கதைக்கிறாய் கதை.....!

பிரேமன் : வா வனிதா, எல்லோரும் பாக்கினம் அந்த பாருக்குள் போய் இருந்து கதைப்பம்.மூவரும் பாருக்குள் சென்று ஓரமாய் ஒரு மேசைப்பக்கம் சென்று அமர்கின்றார்கள்.அப்போது ஷாலினி தனது ஓவர்கோட்டை கழட்டி கதிரையில் போடும்போது அவளது வயிற்றைப் பார்த்த வனிதா என்ன ஷாலினி நீ கர்ப்பமாய் இருக்கிறாயா....!

ஷாலினி : ஓம் வனிதா, சாரதா வீட்டை விட்டுப் போன அன்றுதான் நான் காலையில் டொக்டரிடம் சென்று கர்ப்பத்தை உறுதிப் படுத்திக் கொண்டு வந்தனான்.அப்போது அவர் சில மாத்திரைகள் தந்தவர்.அதைப் போட்டுக்கொண்டு சாரதா வந்ததும் இருவரிடமும் இதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.அப்படியே ஹாலில் டி. வி  பார்த்தபடி தூங்கி விட்டேன்.பின்பு அண்ணா வந்ததோ சாரதா வந்ததோ எனக்குத் தெரியாது.பின் அண்ணா டி.வி. போட்ட சத்தத்தில்தான் எழுந்து கொண்டேன்.அப்ப அண்ணாவும் என்னைக் கடிந்து கொண்டார்.விசிட்டர்ஸ் வருவினம் ஹாலில் படுக்காதை அறையிலே போய்ப் படு என்று. பின் நான் அண்ணாவுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு அறைக்குப் போய் விட்டேன்.....!

வனிதா : ஷாலினியிடம் கர்ப்பத்தைக் காட்டி இது அந்த பிரெஞ்சுப் பொடியனுடன் திரிவியே  அவனா என்று கேட்க .....ஓம் வனிதா அவன் பெயர் நிக்கோலா.அவன் இதை அபார்சன் செய்யச்சொல்லி அடம்பிடித்தான்.நான்தான் மறுத்து விட்டேன்.....!

வனிதா : ஏன்டி செய்திருக்கலாமே, அவனுக்கு இது எத்தனையாவதோ என்று சொல்ல ஷாலினியும் அவனுக்கு இது எத்தனையாவதாயும் இருக்கலாம், ஆனால் எனக்கு என் கர்ப்பத்தில் தங்கிய முதல் பிள்ளை.இந்தப் பிள்ளையின் அப்பா நிக்கோலாதான்.அதில் சந்தேகமே இல்லை....!

பிரேமனும் அன்று நடந்ததை அப்படியே வனிதாவிடம் சொல்லி விட்டு அடுத்தநாள் காலை சேர்விஸ் ரூமில் சாரதாவின் கடிதத்தைக் கண்டதும் இடி விழுந்ததுபோல் இருந்தது என்றான். அப்போது தலையில் பட்ட காயத்தின் தழும்பும் நெற்றியில் இருந்தது. அதையும் வனிதா பார்க்கிறாள்....எவ்வளவோ தடவை சாரதாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்றவன் வனிதா சாரதா இப்போது எங்கிருக்கிறாள். உன்கூடத்தான் இருக்கிறாளா.தயவு செய்து சொல்லு வனிதா. அப்படி இப்படி என்று ஏழு எட்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.....!

வனிதா : நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது உங்கள் மேல் பிழை இல்லை என்றே தோன்றுகிறது.சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காட்சிப் பிழைகளும் வஞ்சித்து விட்டன.சாரதாவின் பேச்சைக் கேட்டு நானும் உங்களைத் தவறாக நினைத்து விட்டேன்..... நீங்கள் இரண்டு பேரும் குறை நினைக்காதையுங்கோ.சாரதாவும் மிக்க கவலையுடன்தான் எனக்குத் தெரிந்த இடத்தில் இருக்கிறாள்.ஆனால் இப்ப வேலை அலுவலாய் சுவிஸுக்கு போய் இருக்கிறாள்.அவள் வந்ததும் நான் பக்குவமாய் சொல்லி உங்களுக்கும் போன் செய்கிறேன்.அப்போது நீங்கள் வந்து அவளைச் சந்திக்கலாம். பிரேம் பில்லிற்கு பணம் செலுத்தி விட்டு முன்னால் போக வனிதாவும் ஷாலினியும் சற்று பின்னால் வருகிறார்கள்.அப்போது ஷாலினி வனிதாவிடம், வனிதா நீ சொன்னதுபோல் அன்று நானும் உடனேயே வீட்டை  விட்டுப் போயிருப்பேன். ஆனால் வீண் பழியை சுமந்து கொண்டு அங்கிருந்து போக விரும்பவில்லை.அத்துடன் அன்னையை நினைக்கவும் பாவமாய் இருந்தது.ஒரு குற்றமும் செய்யாமல் இவ்வளவு நாளும் அவர் படும் துன்பத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றாள்.....!

             சே .....சாரதாவின் பேச்சை  நம்பி நானும் இவர்களைத் தப்பாய் நினைத்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சி வனிதாவின் மனசில் முள்ளாய் குத்தியது.சாரதா வந்ததும் அவளுடன் கதைக்கிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு வனிதா விடை பெற்றுக்கொண்டு செல்கிறாள்......!

நிழல் நீளும் ......! (12).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை போட விடுகுதில்லை.தொடருங்கள் அண்ணா. ஆவலாய் வாசிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சை போட விடுகுதில்லை.தொடருங்கள் அண்ணா. ஆவலாய் வாசிக்கின்றேன்.

பச்சையை விடுங்கள்.....சிறு கருத்திட்டாலே மிக மகிழ்வேன். நன்றி சகோதரி.....!   👍

Link to comment
Share on other sites

சுவி அண்ணா

கதை நன்றாக போகின்றது. ஆனால் இரு பெண்களையும் நடைமுறை கலாச்சாரத்தினுள் நகர்த்திச் செல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

சுவி அண்ணா

கதை நன்றாக போகின்றது. ஆனால் இரு பெண்களையும் நடைமுறை கலாச்சாரத்தினுள் நகர்த்திச் செல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.நீங்கள் சொல்வது சரியே......! நான் இந்த யாழ் இணையத்தின் ஊக்குவிப்பில்தான் முதன்முதலாக கதைகள் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இதுவரை ஒரு ஐந்தாறு கதைகள் எழுதியுள்ளேன்.ஆரம்பத்தில் கன்றுக்குட்டி துள்ளுவதுபோல் தலை கால் புரியாமல் கொஞ்சம் ரசனைகளுடன் எழுதியிருக்கிறேன். பின் வர வர இங்கு அறிமுகமானவர்கள் நிறைய படிக்கும் இடம் ஆகையால் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறேன்.கலாசாரத்திலும் கூட, நிழலி கூட  முந்தைய கதைகளில் நீங்கள் அவசர படுகிறீர்கள் போல் இருக்கு என்றெல்லாம் கருத்திட்டுள்ளார். ஆனால் நான்தான் சுயகட்டுப்பாட்டுடன் எழுதுகின்றேன்.....யாழின் சென்ற அகவைகளில் மற்றும் கதைக்களத்தில் அந்தக் கதைகள் இருக்கு நேரமிருந்தால் படித்து கருத்திடவும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 10:54 AM, suvy said:

  இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே நாட்டமுள்ளதாக இருக்கின்றது.இதனாலதான் மக்களிடம் துன்பமும்,துயரமும், அழிவும் பெருகி வருகின்றன.இந்த வாழ்க்கை முறை மிகத் தவறான முறையாகும்.முதலில் இதை அடியோடு மாற்றியாக வேண்டும்".....!

இப்படி எத்தனையோ பேர் சொன்னாலும் உலகமாந்தர்கள் கேட்கவா போகின்றார்கள்!

கதை அந்தமாதிரி களைகட்டியிருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா , நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அதையே எழுதுங்கள் ...மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது அவர்களுக்காய் கதையை மாத்த வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

சுவியண்ணா , நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அதையே எழுதுங்கள் ...மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது அவர்களுக்காய் கதையை மாத்த வேண்டாம் 

A story is a letter the author writes to himself, to tell himself things that he would be unable to discover otherwise.

- from "The Shadow of the Wind"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்............(13). 🦗 🦗 🦗 🦗 🦗 🦗 🦗

                                    🦗 🦗 🦗 🦗 🦗 🦗.

 

                                           வனிதா வீட்டுக்கு வரும்போது மாலையாகி விட்டிருந்தது.நேராக சாரதாவின் அறைக்கு வருகிறாள்.சாரதா ஒரு குட்டித் துக்கம் போட்டு விட்டு கோப்பி குடித்துக் கொண்டிருக்கிறாள். வனிதாவை கண்டதும் என்ன வெளியே நல்ல குளிர் போல.உனக்கும் ஒரு கோப்பி போடவா எனக்கேட்க வனிதாவும் ம்....போடு என்றபடியே வந்து எதிர் சோபாவில் அமருகின்றாள்..... வனிதா தான் இன்று எதேட்சையாக அந்தப் பெரிய கடைத் தொகுதியில் பிரேமனையும் ஷாலினியையும் சந்தித்ததாகவும் அப்பொழுது நடந்த உரையாடல்கள் அத்தனையையும் விபரமாக சாரதாவிடம் சொல்கிறாள்.சொல்லி விட்டு எனக்கென்னவோ அவர்கள் தப்பு செய்கிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. மேலும் ஷாலினி தற்போது கர்ப்பமாய் இருக்கிறாள்.விரைவில் குழந்தை பிறக்கும் போல் இருக்கிறது.அன்று அதை உன்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாய் இருந்ததாகவும் சொல்கிறாள்.....!

                                                                                                                                       எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட சாரதா அன்று நடந்ததை மீண்டும் யோசித்துப் பார்க்கிறாள்.அன்று தான் மெதுவாக கதவை சாத்திக் கொண்டு வரும் போது டீ. வீ  யின் சத்தம் பெரிதாகக் கேட்டது போல்தான் இருக்கிறது.நான் உள்ளே போகும்போது சத்தமில்லை....அப்படி என்றால் நான்தான் தப்பாக நினைத்து விட்டேனோ.....ஓ....நோ, என்ர கடவுளே இது என்ன கொடுமை என மனதுக்குள் நினைத்து கொள்கிறாள்.நேற்றிரவு தான் சுவிஸில் ஒரு பெருத்த அவமானத்தில் இருந்து தப்பி வந்தது வேறு மனசை உறுத்துகிறது.ஆனால் இதையெல்லாம் வனிதாவிடம் சொல்லவில்லை.....!

வனிதா: ஏன் சாரதா இப்ப நீ என்ன சொல்கிறாய். உன்னுடன் கதைத்து விட்டு அவர்களுக்கு போன் செய்வதாகச் சொல்லி இருக்கிறேன்.(கொஞ்ச நேரம் இருவரும் விவாதிக்கின்றார்கள்) பின்பு சாரதா ஒருவாறு சமாதானமாகி அவர்களுக்கு போன் செய்யச் சொல்ல வனிதாவும் செய்துவிட்டு வாட்ஸாப்பில் முகவரியையும் அனுப்பி வைக்கிறாள்.....!

                                                                                  ஒரு மணித்தியாலத்தின் பின் ஷாலினியும் பிரேமனும் வனிதாவின் வீட்டுக்கு வருகின்றனர்.வனிதாவும் அவர்களை வரவேற்று வீடு ஹாலில் உட்காரவைத்து விட்டு உள்ளே சென்று சாரதாவைக் கூட்டி வருகின்றாள்.சாரதாவும் வந்து கதவோடு நிக்கின்றாள்.....அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவுகின்றது.... அந்த நிசப்பத்தை கலைத்து வனிதா கேட்கிறாள் என்ன சாப்பிடுகிறீர்கள் பிரேம்.குளிர்பானம் அல்லது சூடாக கோப்பி ஏதாவது.... ஒன்றும் வேண்டாம் வனிதா இப்பதான் சாப்பிட்டோம் என்றவன் நேராக சாரதாவைப் பார்த்து என்ன சாரதா இப்படிப் பண்ணிட்டியே, அன்று நேரே உள்ளே வந்து பேசியிருக்கலாமே.நாங்கள் உனக்காக நெடுநேரம் காத்திருந்தோம் தெரியுமா.....!

சாரதா: வனிதா எல்லாவற்றையும் சொன்னாள். அன்று நான் உங்களைப் பார்த்த நிலையில் என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னை மன்னிச்சு கொள்ளுங்கோ.அவள் குரல் கம்முகிறது.கண்ணீர் கொட்டுகிறது.ஷாலினி எதுவும் பேசாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.அவள் இதயம் ரணமாக இருக்கிறது. சரி சாரதா வா வீட்டுக்கு போகலாம்.நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று தயாவாகக் கேட்டுக் கொள்கிறான்.வனிதாவும் கண்களால் போகும்படி ஜாடை காட்டுகிறாள்.கொஞ்சம் பிகு செய்த சாரதா பின் தன் அறைக்குச்  சென்று தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வனிதாவிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வருகின்றாள். கடைசியாக எழுந்து வந்த ஷாலினி வனிதாவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரெம்ப நன்றி வனிதா இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று சொல்லும்போது இரு சொட்டு கண்ணீர் வனிதாவின் கைகளில் விழுகிறது.....!

வீட்டில் சாரதாவும் பிரேமனும் நடந்தவைகளை மறந்து பழக ஆரம்பித்து விட்டார்கள்.ஷாலினியும் வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறாள்.ஆனால் இரவுகளில் தாமதமாகத்தான் வருகிறாள்.வெளியே சுபாபமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் மூவருக்குள்ளும் ஒரு மெல்லிய திரை விழுந்து விட்டது.சாரதாவும் தனது கம்பெனியில் கேட்டு தனக்கு விருப்பமான ஊர் சுற்றும் வேலையை மாற்றிக் கொண்டாள். அதனால் சில நாட்கள் கம்பெனியிலும் சில நாட்கள் வீட்டிலும் இருந்து செய்வது போலவும் அவள் வேலை அமைகின்றது. ஒருநாள் ஷாலினி தாமதமாக வீட்டுக்கு வருவதைப் பார்த்து சாரதா அவளிடம் என்ன ஷாலினி தினமும் தாமதமாக வருகிறாயே வேலை நேரம் ஏதாவது மாற்றியுள்ளார்களா என்று கேட்கிறாள்.... அப்படி எதுவும் இல்லை.நான் நிக்கோலாவுடன் பொழுதைக் கழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் போகிறாள்.....!

நிழல் நீளும்..........(13).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் அவசரமாக முடிக்கப்போறீங்களோ என்டு.நீளும் என்டதைப் பாத்த பின்தான் இன்னும் விடுப்பு இருக்கு என்டு நிம்மதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியை நீங்கள் எதோ வேண்டாவெறுப்பாக எழுதியதுபோல் இருக்கண்ணா 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.