Jump to content

நிலம் தழுவாத நிழல்கள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் பகுதியை நீங்கள் எதோ வேண்டாவெறுப்பாக எழுதியதுபோல் இருக்கண்ணா 🙂

நான் சில வர்ணனைகளில்தான் அடக்கி வாசிக்கிறதே தவிர கதையின் போக்கில் காம்ரமைஸ் செய்வதில்லை சகோதரி.ஒருபோதும் வேண்டாவெறுப்பாக எழுதுவதில்லை....ஒருவேளை இந்த பகுதியில் சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்....!

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
On 3/18/2020 at 9:47 PM, suvy said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.நீங்கள் சொல்வது சரியே......! நான் இந்த யாழ் இணையத்தின் ஊக்குவிப்பில்தான் முதன்முதலாக கதைகள் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இதுவரை ஒரு ஐந்தாறு கதைகள் எழுதியுள்ளேன்.ஆரம்பத்தில் கன்றுக்குட்டி துள்ளுவதுபோல் தலை கால் புரியாமல் கொஞ்சம் ரசனைகளுடன் எழுதியிருக்கிறேன். பின் வர வர இங்கு அறிமுகமானவர்கள் நிறைய படிக்கும் இடம் ஆகையால் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறேன்.கலாசாரத்திலும் கூட, நிழலி கூட  முந்தைய கதைகளில் நீங்கள் அவசர படுகிறீர்கள் போல் இருக்கு என்றெல்லாம் கருத்திட்டுள்ளார். ஆனால் நான்தான் சுயகட்டுப்பாட்டுடன் எழுதுகின்றேன்.....யாழின் சென்ற அகவைகளில் மற்றும் கதைக்களத்தில் அந்தக் கதைகள் இருக்கு நேரமிருந்தால் படித்து கருத்திடவும்.......!  😁

நிச்சயமாக நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலம்..............(14). 🐀 🐀 🐀 🐀 🐀 🐀 🐀

                                    🐀 🐀 🐀 🐀 🐀 🐀 🐀.

 

                                                               இப்போதெல்லாம் ஷாலினி வேலை முடிந்ததும் மெட்ரொவிலும் சில சமயம்  நிக்கோலாவோடும்  அவன் வீட்டுக்கு போய் விடுகிறாள்.நிக்கோலாவின் பெற்றோரும் தினமும் அவளின் வரவை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.மூவருமாக கதைத்து பேசிக் கலகலப்பாக பல வேலைகளையும் செய்கின்றனர்.ஆந்தரேக்கும் மரியத்துக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.பல வருடங்களின் பின் இழந்த வாழ்வு மீண்டதுபோல் இருக்கின்றது.தோட்ட வேலைகள் எல்லாம் செய்யும்போது அவள் கஸ்ரப்படாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள்.நீச்சல் குளம் எல்லாம் நவீனமாகச் செய்ப்பவர்களிடம் குடுத்து புது நீர் நிரப்பி நவீனப் படுத்தி இருந்தார்கள்.வீட்டின் திரைசீலைகள் எல்லாம் புதிதாக மாற்றி குழந்தைக்காக தனி அறையும்,ஷாலினி நிக்கோலாவுக்காக ஒரு கட்டில் மற்றும் புது மெத்தைகள் தலையணைகள் எல்லாம் போட்டிருந்தார்கள்.அநேக இரவுகளில் கிரில் போட்டு இறைச்சிகள் வாட்டிச் சாப்பிட்டார்கள். இப்போதெல்லாம் நிக்கோலாவும் அதிகம் வெளியே தங்குவதில்லை.இவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.ஷாலினி வேலை செய்யும் போது மூச்சு வாங்குவதையும் தாரா போல் நடப்பதையும் பார்த்துகேலியும் கிண்டலும் செய்ய ஜாலியாக பொழுது போகின்றது.போரடிக்கும் போது" லா சப்பல்" போய்   தமிழ் சாப்பாட்டு கடைகளில் இட்லி தோசை,இடியப்பம் சாம்பார் என்று சாப்பிட்டு விட்டு வரும் போது  ஷாலினியை வீட்டில்  இறக்கி விட்டு செல்வார்கள்…… !

                                                                      அன்று ஒரு சனிக்கிழமை.ஷாலினி காலையிலேயே எழுந்து வேலைக்கு போய் விட்டாள்.சாரதா வைக்கூம் கிளீனரால் வீட்டை சுத்தமாக்கிக் கொண்டு இருக்கிறாள்.பிறேமன் தொலைக்காட்சியில் கால்பந்து ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அப்போது சாரதா பிரேமனிடம், பிரேம் நான் ஒன்று கேட்டால்  தப்பா நினைக்க மாட்டியே.... இல்லை சொல்லு.....வந்து நீ ஷாலினிக்கு பணம் ஏதாவது குடுத்தனியா.....

பிரேம் :இல்லையே ....அவ ஒருநாளும் என்னிடம் பணம் கேட்டதில்லை.எவ்வளவு....!

சாரதா: ஒரு ஐயாயிரம் வரை. முன்பு ஒரு முறை அவள் என்னிடம் ஐயாயிரம் ஈரோ வாங்கியிருந்தாள்அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தர வந்தவள்.நான்தான் பறவாய்இல்லை இருக்கட்டும் பிறகு எடுக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.ஆனால் அன்று இருந்த கோபத்தில் பணத்தை உடனே தரச் சொல்லி மெசேஜ் போட்டு விட்டேன்.பின்பு அது தப்பு என்றும் மனசில் பட்டது. ஆனால் அன்று பின்னேரமே அவள் எனது அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி இருந்தாள்.திடீரென்று அவ்வளவு பணம் யார் தருவார்கள்.அந்நேரம் அவளிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எனக்குத் தெரியும். ஒருவேளை நீ குடுத்திருப்பியோ என்று நினைத்தேன்.....!

பிரேமன்: அது எனக்குத் தெரியாது.ஷாலினி என்னிடம் எதுவும் கேட்கவில்லை.உன்னுடைய கடிதத்தை கண்டு இடிஞ்சு போனவள்தான்.அதன்பின் அவள் முகத்தில் சந்தோஷத்தையே நான் காணவில்லை.( நீ உடனே அப்படிக் கேட்டது தப்பு என்று சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று சொல்லவில்லை).....!

சாரதாவும் ஹாலைச் சுத்தம் செய்துவிட்டு ஷாலினியின் அறைக்குள் சுத்தம் செய்யப் போகிறாள்.மேசையை ஒழுங்கு படுத்தும்போது ஒரு சோடி இமிட்டேசன் தோடும் வளையலும் கண்ணில் படுகிறது.ஷாலினி எப்பொழுதும் பவுன் நகைகள்தான் அணிவாள்.ஒரு நாளும் இதுபோல் ரோல்ட்கோல்டு நகைகள் வாங்கவே மாட்டாள்.இது எப்படி இங்கு....யோசித்தவள் உடனே சென்று அவளின் அலுமாரியைத் திறந்து பார்க்க அவள் நகைகள் வைத்திருக்கும் பெட்டி இருக்கு.உடனே தன்னிடம் இருக்கும் சாவியால் (இருவரிடமும் சாவி உண்டு) அதைத் திறந்து பார்க்கும்போது அதற்குள் றம்புத்தே வங்கியில் ஐயாயிரம் ஈரோவுக்கு நகை அடைவு வைத்த ரசீது இருக்கின்றது. அதை எடுத்து பார்த்தவள் ஓ ...வென்று பெரிதாக அழுது அரற்றிக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டாள். இதுவரையும் ஷாலினி பிரேம் மீது ஒரு சிறு சந்தேகம் மனசுக்குள் ஒழிந்து இருந்து கொண்டே இருந்தது.காரணம் தான் ஒரேயொருநாள் அதுவும் ஒரு அந்நியனுடன் தங்கிய போதே தன்னை இழக்க இருந்து மனேஜரால் காப்பாற்றப் பட்டதை நினைக்கிறாள்.ஆனால் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாரக்கணக்காக தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம், சும்மா இருப்பார்களா..... ஆனால் அந்த சந்தேகமும் இப்போது பூரணமாகத் தீர்ந்து விட்டது. எதுக்காக அழுவது என்று தெரியாமல் தனக்காக தன்னையே நொந்து அழுகிறாள். என்னவோ ஏதோ என்று பிரேமன் "மெஸ்ஸியின் பனால்ட்டி கிக்கையும் பார்க்காமல்"  ஓடிவந்து பார்க்க அடைவு துண்டை அவனிடம் கொடுக்கிறாள்.... ஓ ....அவள் தன் நகைகளை அடைவு வைத்துத்தான்  உனக்கு பணம் போட்டிருக்கிறாள்.....சரி....சரி...நீ அழாதே என்று சாரதாவைத் தேற்றுகிறான்.......!

                                                              

                                                                                          நிக்கோலாவின் வீட்டில் ஷாலினி ஆந்தரே மரியம் மூவரும் தோட்டத்தில் புதிதாக பூச் செடிகள் நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அப்போது ஷாலினிக்கு லேசாக வயிறு வலிக்கிறது.மரியத்துக்கு புரிந்து விட்டது.ஆந்தரேயிடம் காரை போர்டிகோவுக்கு கொண்டுவரச் சொல்லிவிட்டு ஷாலினியையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.அந்த நிலையிலும் அவள் சாரதாவுக்கும்,நிகோலாவுக்கும் தான் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்புகிறாள்.அந்நேரம் பிரேமனும் சாரதாவும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்ததால் உடனே கவனிக்க வில்லை.நிக்கோலா உடனே அங்கு வந்து விட்டான். அவளைப் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லும்போது நர்ஸ் நிக்கோலாவிடம்  நீதான் அப்பாவா என்றால் விரும்பினால் உள்ளே வரலாம்என்கிறாள்.அவன் தயங்க ஷாலினி அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே போகிறாள்.சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறக்கின்றது.ஷாலினியை கட்டிலுடன் கொண்டுவந்து அறையில் விடுகின்றனர்.நிக்கோலா பிள்ளையுடன் வந்து அதை தன் தாயின் கைகளில் தந்து விட்டு அப்படியே மண்டியிட்டு தாயின் கால்களைக் கட்டிப் பிடித்து கொள்கிறான்.ஆந்தரே சரி  சரி என்று சொல்லி அவன் தலையைக் கோதி விடுகின்றார். ....!

                                                                                       நர்ஸ் வந்து பிள்ளையை ஷாலினியிடம் குடுத்து  பால் குடுக்க வைக்கிறாள்.நிக்கோலா அவள் தலையை வருடிக்கொண்டு குழந்தையின் கன்னத்தை ஒரு விரலால் நிமிண்டிக் கொண்டு நிக்கிறான்.மரியம் அவளுக்கு ஒரெஞ் ஜூஸ் போட்டுக் கொண்டு வருகிறாள்.அறை வெப்பமாய் இருப்பதால் ஷாலினிக்கு வேர்க்கிறது. ஆந்தரே வெளியில் சென்று டீப்போவில் இருந்த பழைய சஞ்சிகைகளில் ஒன்றை எடுத்து வந்து  அவளுக்கு விசுறுகிறார்.  அந்த நேரத்தில் சாரதாவும் பிரேமனும் கையில் ஒரு அழகிய பார்சலுடன் வருகின்றார்கள்.  அப்படி ஒரு குடும்பத்தின் அன்பைச் சம்பாதித்து வைத்திருக்கும்  ஷாலினியைப் பார்த்த சாரதாவுக்கு ஒரு கணம் பொறாமை தோன்றி பின் புண்ணகையாய் மலர்கின்றது.எல்லோரிடமும் ஒரு செல்ல முத்தம் பரிமாறிக்கொள்கிறாள்.பிரேம் கை குலுக்கிக் கொள்கிறான்.ஷாலினி தன் மார்பில் உறங்கிய பிள்ளையை எடுத்து சாரதாவிடம் தருகிறாள். அப்போது நர்ஸ் ஒரு விண்ணப்ப படிவத்துடன் வந்து நிக்கோலாவிடம் தார அதை அவன் நிரப்பி என்ன பெயர் வைக்கலாம் என்று ஷாலினியிடம் கேட்க அவளும் உங்களின் குடும்பப் பெயருடன் உன்னுடைய பெயர் முதல் எழுத்தும் எனது பெயர் முதல் எழுத்தும் சேர்த்து  "நிசாந்தன்" என்று வைக்கலாம் என்கிறாள்.அது எல்லோருக்கும் பிடித்திருந்தது.அவனும் அப்படியே நிரப்பி தந்தையின் இடத்தில் தனது பெயரையும் போட்டு பதிவதற்கு எடுத்துக் கொண்டு போகிறான்.கூடவே ஆந்தரேயும்  மரியமும் பிறகு வருவதாக சொல்லிக் கொண்டு போகிறார்கள்......!

நிலம்............(14).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தொடருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2020 at 7:18 AM, suvy said:

சாரதா ;  ஏன் பணத்துக்கு யோசிக்கிறாயா டார்லிங்....நான் தாறன்.முழுச்செலவும் என்னோடது.என்ன சொல்கிறாய்.....!

உறவு உறவாக இருந்தாலும் பறி தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 4:13 AM, suvy said:

பிரேம் மௌனமாக இருப்பதைப் பார்த்தவள், வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் பிரேம்..... என்ன சொல்லு...... ஷாலினிக்கு ஒரு அறையை குடுத்து விடலாம்,மிச்ச செலவுகளிலும் அவள் பங்கெடுத்து கொள்ளட்டும்.என்ன சொல்கிறாய்...... ஓகே சாரு. எதோ உன்னிஷ்டம்....என்று பிரேம் சொல்கிறான்.....!

புதுவீடு போக முதலே ஏழரைச்சனியை உள்ள இறக்கிறதா முடிவு பண்ணியாச்சா?

On 3/9/2020 at 2:12 AM, suvy said:

ஆனாலும் இந்தா எனது அலுமாரியின் இன்னொரு சாவி இதை நீ வைத்துக் கொள்.உனக்கு பணம் தேவைப்படும் போது தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம்.என்று சாவியைக் கொடுக்கிறாள்.அவள் மனம் நோகக் கூடாதென்று அவன் அந்த சாவியை வாங்கிக் கொள்கிறான்.ஆயினும் அவனுக்கு அந்த சாவியை உபயோகிக்கும் தேவை ஏற்படவில்லை.....!

என்னய்யா பிரான்ஸ்சில் பணத்தை அலுமாரியிலா முடக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 1:28 AM, suvy said:

நகைகளா, அவ்வளவு பெறுமதியானவையா... ஓம் எல்லாம் 22 காரட் கோல்ட். பிரெஞ் கடைகளில் 18 காரட்டில்தான் நகைகள் இருக்கும்.

இங்கு 14 கரட்டில் பெரிய சங்கிலி போட்டு கோட்டு சூட்டுக்கு மேல் விட்டிருப்பார்கள்.
பார்க்க சிரிப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 1:33 AM, suvy said:

பின்பு எல்லோரும் வெளியில் வருகின்றனர்.சவப்பெட்டியை நாங்குபேர் தூக்கி வருகின்றனர்.வெளியே மழை தூறிக்கொண்டிருப்பதால் எல்லோரும் ஒரேமாதிரி நீண்ட பிடியுள்ள பெரிய  கறுப்புக் குடை பிடித்துக் கொண்டு நிக்கிறார்கள்.ஷாலினி மட்டும் தனியாக தூறலில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்த நிக்கோலா அவளைத்  தனது குடைக்குள் அழைத்துக் கொள்கிறான்.சவப்பெட்டி கயிற்றின் மூலம் குழிக்குள் இறக்கப் படுகின்றது.ஷாலினி உட்பட எல்லோரும் ஒவ்வொரு பிடி மண் எடுத்துப் போடுகின்றார்கள்.பின்பு எல்லோரும் கலைந்து செல்கின்றனர்..... நிக்கோலாவின் பெற்றோர் மனசால் மிகவும் உடைந்து போய் இருந்தார்கள்.ஷாலினி கொஞ்ச நேரம் அவர்கள்கூட  இருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பின் நிக்கோலாவிடமும் விடை பெற்றுக் கொண்டு செல்கிறாள்......!

இழப்பிலும் ஒரு கிழுகிழுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

                                 

 நிலம் ............(15).  🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝

                                       🐝 🐝 🐝 🐝 🐝 🐝 🐝.

                                             

                                         நீங்கள் கதைத்து கொண்டிருங்கள் நான் தொழிற்சாலை வரைக்கும் போயிட்டு வருகின்றேன் என்று சொல்லி பிரேமன் வெளியேறுகின்றான். இருவரும் தனியாக இருக்கின்றார்கள்.அப்போது ஷாலினி சாரதாவிடம் ஏதோ சொல்ல வந்து சொல்லத் தயங்குவது போல் இருக்கின்றது.என்ன ஷாலினி என்ன ஏதோ சொல்ல வருவது போல் இருக்கின்றது.....இல்லை சாரதா இதை எப்படி சொல்வது, நீ எப்படி எடுப்பாய் என்றுதான் குழம்புகிறேன்...... எதுவானாலும் சொல்லு ஷாலினி இந்த சில மாதங்களில் நிறைய அனுபவம் ஏற்பட்டு விட்டது.முன்பை விட இப்போது உன்னிடம் நிறைய அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கு.எதுவானாலும் சொல்லு நான் தப்பாய் நினைக்க மாட்டேன்.....நான் நேற்று மாலை இங்கு வந்ததும் வெளியே இருக்கும் பொழுது தற்செயலாக இந்த யூர்னலை பார்க்க நேர்ந்தது....சரி ... சரி என்று சொல்லி தனது தலையணையின் கீழ் இருந்து ஒரு சஞ்சிகையை எடுத்து அவளிடம் குடுக்கிறாள்.சாரதாவும் என்ன என்ற கேள்வியுடன் அதை வாங்கி பிரிக்க, இங்கு வேண்டாம் டாய்லட்டில் போய் இருந்து நடுப்பக்கத்தைப் பார். பிறகு அதைக் கிழித்து உள்ளே போட்டு பிளாஷ் பண்ணிவிடு......ஒரு விணாவுடன் அவளைப்  பார்த்தபடியே அந்த பளபளப்பான ஸ்போர்ட்ஸ் யூர்னலுடன் சாரதா டாய்லட்டுக்குள் போகிறாள்.....!

                                                                                                        அங்கே அந்த நடுப்பக்கத்தைப் பார்த்ததும் அவள் தலையே கிறுகிறுக்கிறது.அது ஒரு பழைய யூர்னல்தான்.அந்தப் பக்கத்தில் அவளும் மில்டனும் சுவிஸின் மலை உச்சியில் முத்தமிட்ட படம் அழகிய வர்ணத்தில் இருக்கிறது.அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லையென்றால் யார் நம்புவார்கள்.வேர்க்கிறது.அன்று தங்களைச் சுற்றி பலர் படம் எடுத்தது தெரியும். காரணம் அவன் ஒரு பிரபல விளையாட்டு வீரன். ஆனால் அதுக்குள்ளே ஒரு ரிப்போர்ட்டர் இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லையே. அந்த மாலை நேரம் எதிர்பாராமல் அவனோடு முத்தமிட்டது தப்புதான்.வேறொரு தப்பும் செய்யவில்லையே. ஏன் நீ மதுவும் அருந்தி போதையில் இருந்தாயே மனம் இடித்துரைக்கிறது. கடவுளே இதென்ன சோதனை. நாம் ரகசியம் என்று நினைக்கும் எல்லா இடத்திலும் ஏதோ சில கண்கள் எம்மைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.ஷாலினி சொன்னபடி அந்தப் பக்கத்தை கிழித்து போட்டு   பிளாஷ் பண்ணிவிட்டு வருகிறாள். ஷாலினி என்னை நம்புடி நான் ஒரு தப்பும் செய்யவில்லை. அது நானே எதிர்பாராமல் நடந்தது என்று சொல்ல. நீ எதுவும் சொல்ல வேண்டாம் சாரதா.நான் உன்னை தப்பாகவே நினைக்கவில்லை. இப்ப கூட நான் இதை உனக்கு காட்டியதற்கு காரணம் எப்போதாவது யாரும் ஏன் அண்ணா கூட  இது பற்றி பிரஸ்தாபித்தால் நீ அதை எதிர்கொள்ள தயாராய் இருக்க வேண்டும், மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் சுலபமாய் கடந்து போக வேண்டும் என்றுதான்.....அழுகிறவளை தன்நெஞ்சுடன் சேர்த்து அனைத்துக் கொண்டாள்.எல்லாவற்றையும் மறந்து விடு, போய் முகத்தைக் கழுவிக் கொண்டுவா.இனி ஆட்கள் வருவினம்.....! !!

                                                                                அப்போது அங்கு பிரேமனும் வந்து விடுகிறான்.சாரதா ஷாலினியிடம் எப்ப துண்டு வெட்டுவார்கள் ஷாலினி. நான் உனக்காக உனது அறையில் நீ பிள்ளையுடன் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைக்கிறேன்.....!

ஷாலினி: அது அவசியமில்லை சாரதா. நான் பிள்ளையுடன் நிக்கோலா வீட்டுக்குத்தான் போகிறேன்.நிக்கோலாவும் அவன் பெற்றோர்களும் பிள்ளைக்காக தமது வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்து வைத்து விட்டு காத்திருக்கிறார்கள்.....!

சாரதா: என்னடி நீ, அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை, சுத்தமாகப் பொறுப்பு இல்லாதவன்.அவனை நம்பி நீ போறேன் என்கிறாய்.பைத்தியமாடி நீ.......!

ஷாலினி: நான் பைத்தியம்தான் சாரதா.ஆனால் இப்ப தெளிஞ்சுட்டுது. நான் நிக்கோலாவை நம்பி போவதாக யார் சொன்னது. இப்ப நான் யாரையுமே நம்புவதில்லை. எமிலி மரணத்துக்கு பின் ஒருநாள் அவள் பெற்றோர்களுடன் கதைக்கும்போது அவர்கள் விரக்தியுடன் சொன்னார்கள்.தங்களுக்கும் வயசாகி விட்டது. மகளும் இறந்து விட்டாள். இந்த வீட்டில் இருக்க வெறுமையாய் இருக்கு.நிக்கோலாவுக்கும் இன்னும் பொறுப்பு வரவில்லை.கண்டபடி கண்ட கண்ட பெண்களுடன் ஊர் சுற்றுகிறான்." நீ சொன்னது போலவே "அதனால நாங்கள் எங்களுடைய கிராமத்துக்கும் பின் முதியோர் இல்லத்துக்கும்  போகப் போவதாக சொன்னார்கள்.எனக்கு நெஞ்சு திக் என்று இருந்தது.என்ன இருந்தாலும் அவர்களது பேரன் என் வயிற்றில் வளர்கிறது.மேலும் என்னுடைய பெற்றோர் மாதிரித்தானே அவர்களும்..... அப்போதுதான் நான் சொன்னேன் எனது வயிற்றில் வளர்வது உங்களின் பேரப்பிள்ளைதான்.நீங்கள் விரும்பினால் இவனுக்காக இவனுடன் நீங்கள் இங்கே இருக்கலாம் என்று சொன்னேன்.அவர்களும் கூட முதலில் நான் ஏதோ அவர்களை ஏமாத்தவும் அவர்களது சொத்துக்காக  நாடகமாடுவதாகவும்  கூறி என்னை நம்பவில்லை.நான் அவர்களுடன் மிகவும் தயவாகக் கதைத்து நான் அப்படியான பெண் இல்லை.உங்களது சொத்து எனக்கோ என் பிள்ளைக்கோ அவசியமில்லை என்று சொல்லித்தான் அவர்களை ஒருவாறு சமாதானம் செய்தேன். இப்போது அவர்களுக்கே வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஆர்வமும் ஏற்பட்டு விட்டது.நாளடைவில் என்மீதும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.நீங்கள் வரும்போது பார்த்தனீங்கள்தானே.

                                                                                                  அதைவிட அதிசயம் நிக்கோலா இப்போதெல்லாம் கடையும் வீடுமாய் இருக்கிறான். வியாபாரத்தையும் ஒழுங்கா கவனிக்கிறான்.முன்பு போல் பார்ட்டி பெண்கள் என்று அலைவதில்லை. ஒருநாள் ஏண்டா நீ உன் சிநேகிதிகளுடன் டேட்டிங்  போவதில்லையா என்று கேட்டேன்.அதுக்கு அவன் இல்லை ஷாலினி.இப்போதெல்லாம் சிநேகிதிகளுடன் முழு ஈடுபாடாய்  என்னால் அவர்களுடன் இயங்க முடிவதில்லை.எங்கும் நீயும் இந்தப் பிள்ளையும்தான் வந்து டிஸ்டார்ப் பண்ணுது. நான் இப்ப சிகரெட் மது எல்லாம் கூட அதிகம் எடுப்பதில்லை தெரியுமா.நீ இங்கு வந்தபின் எனது அம்மா அப்பாவின் சந்தோஷத்தைப் பார்க்கவே எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கு என்கிறான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதைவிட வேறென்ன வேண்டும் சொல்லு சாரதா.

  சாரதா: அவளின் கைகளை பிடித்துக் கொண்டு என்னை மன்னித்துக் கொள்ளடி ஷாலினி. நான் நிறைய தப்பு பண்ணி விட்டேன் என்று குரல் தளதளக்க சொல்கிறாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது......சீ ....அழாதையடி.....எதிர்பார்க்காத திருப்பங்களால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாய் இருக்கின்றது. என்று சொல்லி சாரதாவின் கண்களைத் துடைத்து விடுகிறாள்.

 

                                                          அன்று நிக்கோலா ஒரு புதிய பென்ஸ் காருடன் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நிக்கிறான்.ஷாலினி முன்னே வர பின்னால் குழந்தையுடன் சாரதாவும் பிரேமும் வருகிறார்கள்.காரின் பின் சீட்டில் ஆந்தரேயும் மாரியமும் இருக்க அவர்களுக்கு நடுவில் குழந்தையின் துணியாலான கூடை இருக்கிறது.மரியம் சாரதாவிடம் பிள்ளையை வாங்கி அதில் படுக்க வைத்து பிடித்துக் கொள்கிறாள்.ஷாலினி முன்னால் எற கார் இவர்களுடன் விடை பெற்றுக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் அசைந்து செல்கிறது.இவர்கள் இருவரும் கை அசைக்கிறார்கள்.....!

பிரேமன்:  ம்....தப்பென்று நினைத்தது சரியாய் இருக்கு என்று சொல்கிறான்.....!

சாரதா: அவசரமாக  என்ன சொல்கிறாய் பிரேம்.....!

பிரேம்: இல்லை சாரதா, ஷாலினியை அன்று நீ வீட்டுக்கு அழைத்து வருவதாகச் சொன்னதும் நான் வேண்டாம் என்று தடுத்தேன்.காரணம் நிக்கோலா ஒரு பிளேபாய்யாக இருந்தான்.இவள் வேறு அவனுடன் சிநேகிதமும் தொடர்புமாய் இருக்கிறாள் என்று பயந்தேன்.ஆனால் அவள் தனது பொறுமையாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல எண்ணங்களாலும் அவனையும் திருத்தி அவன் பெற்றோர்களுக்கு வயதான காலத்தில் ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறாள்.அதன் பிரதிபலனாய் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என்கிறான்...... ஓம் பிரேம் அவள் ஒரு பெருமைப்படத்தக்க இனிமையான பெண் என்று சாரதா அதை ஆமோதிக்கிறாள்......!

                                                                                    சுபம்.  🦚

யாழ் 22 அகவைக்காக

ஆக்கம் சுவி......!                                                                                  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொடர்' பின்னீட்டீங்கள் சுவியர். சட்டுப்புட்டு என்டு அடுத்ததுக்கு அடுக்கு பண்ணுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திருப்பத்துடன் கொண்டுபோகிறீர்கள் என்று எண்ண பட்டென்று கதையை முடித்து சுபம் போட்டுவிட்டீர்களே அண்ணா. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

உண்மை தான் ரதி .மனுசனுக்கு என்ன பிரச்சனையோ.அது தான் நான் கனக்க நோன்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2020 at 1:51 AM, suvy said:

அவர்களுக்கு முன் அந்த அறைக்கு சென்றவர் அவளது பெட்டியை எடுத்து வேறொரு அறையில் வைத்து விட்டுவர இருவரும் ஒருவரை யொருவர் அணைத்தபடி அறைக்கு முன்னால் வருகின்றனர்.அவர் மில்டனோடு கை குலுக்கி விட்டு அவனை அவனது அறைக்குள் தள்ளாத குறையாய் அனுப்பிவிட்டு, வாருங்கள் மேடம் உங்களின் ரூம் தயாராகி விட்டது என்று சொல்லி அவளை அழைத்து சென்று அந்த அறைக்குள் விட்டு கதவை சாத்திவிட்டு செல்கிறார்.....!

ஆஆஆ
சிவபூசைக்குள் கரடியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

இப்போதெல்லாம் சிநேகிதிகளுடன் முழு ஈடுபாடாய்  என்னால் அவர்களுடன் இயங்க முடிவதில்லை.எங்கும் நீயும் இந்தப் பிள்ளையும்தான் வந்து டிஸ்டார்ப் பண்ணுது. நான் இப்ப சிகரெட் மது எல்லாம் கூட அதிகம் எடுப்பதில்லை தெரியுமா.நீ இங்கு வந்தபின் எனது அம்மா அப்பாவின் சந்தோஷத்தைப் பார்க்கவே எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கு என்கிறான்

கால்கட்டு பாரிஸ்காரனுக்கும் வேலை செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி
இந்தத் தொடரில் கதை இப்படித் தான் போகப் போகுது என்று தொடரும்போது திடீரென்று கதையின் போக்கை மாற்றிக் கொண்டு போகும் திறன் அபாரம்.
மிகுந்த பாராட்டுக்கள்.

இன்னும் கொஞ்ச காலம் வெளியே போக முடியாது.அடுத்த கதையை ஆரம்பிக்க வேண்டியது தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

இது ஏதோ அவசரத்தில் முடித்த மாதிரி இருக்குது அண்ணா ...கதாநாயகன் ,நாயகியை விட்டு விட்டு துணை நடிகையை கொண்டு படத்தை ஏனோ தானோ என்று முடித்து விட்டிர்களோ என்று தோன்றுகின்றது 

 

16 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை தான் ரதி .மனுசனுக்கு என்ன பிரச்சனையோ.அது தான் நான் கனக்க நோன்டவில்லை.

அப்படியெல்லாம் இல்லை. நான் முன்பே குறிப்புகள் எடுத்து வைத்து கொண்டு ஆறுதலாகத்தான் எழுதியிருக்கிறேன்.இதுக்கு மேல் போனால் சும்மா வழ வழ வென்று போய் விடும் என்று நினைத்தேன்.மேலும் இதில் யாருக்கும் ஹீரோயிசம் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.அதை முதல் அத்தியாயத்தில் ஆதிவாசியின் பதிலில் குறிப்பிட்டுள்ளேன். யதார்த்தமாய் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத்தான் மனிதர்கள் மாறுபடுவார்கள். இப்பவும் பாருங்கள் சாதாரணமாக வரிசையில் ஒழுங்கு பேணும் பிரெஞ்சுக்காரர்களும் கடைகளுக்குள் நின்று இழுபறிப்படுகிறார்கள்.இதுதான் நிஜம்.இதை வெளிப்படுத்த ஒரு கொரோனா தேவையாய் இருக்கு.இதில்  சாரதாவும் பிரமனும் கூட விதிவிலக்கில்லை. உங்கள் அணைவரின்  ஊக்கத்தினால்தான் என்னால் இவ்வளவு எழுத முடிந்தது. .......!

ஆஞ்சனேயர் மாதிரி வந்து வாழ்த்திவிட்டாய் ஆதி, இதில் மனிதர்கள் அந்தந்த நேரத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களின் குறை நிறைகளுடன் வருவார்கள் என நினைக்கிறேன். இதுவரை எனக்கும் சரியாய் சொல்லாத தெரியவில்லை.துருச்சாமியுடன் பழகியவர்கள் எல்லோரும் அப்புறம் அவரை மறக்கவில்லை. நன்றி ஆதி வருகைக்கும் கருத்துக்கும்.......இன்றைய மகளிர்தின வாழ்த்துக்கள்.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுவி அவர்களே!

ஒரு அழகான ஆழமான குறுநாவல். சிறப்பு. யாழ்களத்தை மேலொமொரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளீர்கள். கடந்த துருச்சாமி ஒருவகையென்றால்; சாரதா-பிறேம். சாலினி - சாராதா படிப்பினையான படைப்பு. மேற்போக்கான ஐயங்கள் குடும்பங்களை விரைந்து சிதைத்துவிடும் ஆபத்தானது என்பதை சாரதா பதிவுசெய்துள்ளார். கடவுளாக வந்து காத்த முகாமையாளரையும் மறக்கமுடியாது. 

பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக. படையலைப் பெருக்குக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 9:38 AM, suvy said:

ரத்தியும் அவளிடம் மூக்கு துடைக்க  ரிசூ பேப்பரை நீட்டியவாறே "இந்த ஆண்களே இப்படித்தான்.எப்பவும் சபல புத்தியுடையவர்கள்.கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் எங்க எப்ப எதைப் பார்க்கலாம் என்று அலைவார்கள்.அதுதான் நான் ஒருத்தரையும் நம்புறதில்லை.நம்பவும் மாட்டன்".என்கிறாள்

ஹய்!! ரத்தி வந்திட்டா😃 நான் லேட்டாக வந்திட்டன் போலிருக்கே!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 9:57 AM, suvy said:

வனிதாவின் முயற்சியில் சாரதாவும் இப்ப மிக நவநாகரீகமான ஆடைகள் அணிகிறாள்.தலை அலங்காரமும் மாறி விட்டிருந்தது. நீளமான கூந்தல் பிரேமனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே அதையும் குட்டையாக கத்தரித்து ஆங்காங்கே மண்நிறத்தில் டையும் அடித்திருந்தாள்.

கலியாணத்திற்கு முன்னர் நவநாகரீகமான மங்கையாக இருக்கவில்லையா?

கூந்தலைக் கட்டையாக வெட்டி மண்ணிற டையும் அடித்தால் அழகு கூடும் என்று நம்புகின்ற கூட்டம் இருக்குத்தான்!

On 3/13/2020 at 8:28 AM, suvy said:

ஷாலினியைப் பார்த்து அந்தப் பணத்தை நான் தருகிறேன் நீ இந்த நகைகளை திருப்பி வீட்டுக்கு எடுத்துச் செல். பின்பு எனக்கு பணத்தைத் தா....!

 ஏண்டா நீங்கள் எல்லாரும் என்னை என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா

இவ்வளவு முட்டாளாக இருக்கின்றானே என்று நினைத்தபோது அடைவு கொடுக்காமல் கிடைக்கக்கூடிய பணத்தை தட்டிக் கழித்த ஷாலினி முட்டாளாக இருக்கிறாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 8:33 AM, suvy said:

உனக்கு பத்து, நூறு தோழிகள் இருக்கலாம்.அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.இனிமேலும் நீ எப்போதும் போலவே இரு.நான் ஏனென்று கேட்க மாட்டேன்,உன் வழியில் குறுக்கிட மாட்டேன்.நீ என்னை சந்திக்கவும் வர வேண்டாம்.ஆனால் நான் உன் ஒருத்தனுடன்தான் என் அன்பைப் பகிர்ந்து கொண்டேன்.நீ ஒருத்தன்தான் என்னை நெருங்கலாம், என் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம்

ம்ம்ம். இப்படி ஒருத்தி கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்😲 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சுவியரே அந்த பெண் கிளிச்சு போட்டு தண்ணிய அமிழ்த்திச்சென்ற அந்த மெகசீன் ஒரு நாள் கண்ணில் படும் பிரேமுக்கு  அப்போது பகுதி ரெண்டை அடுத்த வருடம் எதிர்பார்க்கிறேன்

கதை அருமை பெண் புத்தி எப்பவும்ம் தீர விசாரிக்காமல்  துள்ளிக்குதிப்பது வழமை

பெட்டை கோழி பெட்டைக்கோழிதான் கொக்கரிப்பு கொக்கரிப்பு 😃😃

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2020 at 09:44, suvy said:

மிகவும் உணர்ச்சி பூர்வமானவளாகவும் பாரம்பரியம் மிக்கவளுமாய் இருக்கிறாள்.எதையும் நேர் படப் பேசுகிறாள்.ஏதோ ஒரு கவர்ச்சி அவளிடம் இருக்குது

நிக்கோலாவுக்கு அட்டமத்தில சனி வந்திருக்குப் போல😬. அப்பத்தான் இப்படியெல்லாம் பேசவைக்கும்😜

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2020 at 09:29, சுவைப்பிரியன் said:

அருமையான தொடர்' பின்னீட்டீங்கள் சுவியர். சட்டுப்புட்டு என்டு அடுத்ததுக்கு அடுக்கு பண்ணுங்கோ.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவை......எழுதலாம் என்றுதான் யோசிக்கிறேன்.....எதைப்பற்றி எழுதுவது என்பதுதான் பிரச்சினை......!  🤔

On 21/3/2020 at 10:24, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல திருப்பத்துடன் கொண்டுபோகிறீர்கள் என்று எண்ண பட்டென்று கதையை முடித்து சுபம் போட்டுவிட்டீர்களே அண்ணா. 🤔

திருப்பங்கள்தான் கதையை சுவாரஸ்யமாக்கும் சகோதரி......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.