Jump to content

வராக்கடன் வழங்கி திவாலான விவகாரம் யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் ரெய்டு:


Recommended Posts

வராக்கடன் வழங்கிய விவகாரத்தில் திவாலான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை விடியவிடிய சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று காலை அவரை அமலாக்கத்துறையினர் மும்பை அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ‘யெஸ்’  வங்கியும் ஒன்று. இந்த வங்கி குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைந்தது. இதனால் பங்குசந்தையில் இதன் மதிப்பு அதிகரித்தது. பொதுமக்களும், வர்த்தகர்களும் ஏராளமான பணத்தை வங்கியில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை விட கடன்களை வாரி வழங்கியது. குறிப்பாக கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் கோடிக்கணக்கில் கடன்களை கொடுத்தது. நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் கடன் கொடுத்தது. திவால் நிலையில் கம்பெனிகள் இருந்தாலும் அதையும் கண்டுகொள்ளாமல் கடன் வழங்கியது. இந்த மூன்று வகை கடன்களால் யெஸ் வங்கியின் வாராக்கடன் மதிப்பு பல லட்சங்களை கடந்தது. இதனால் யெஸ் வங்கிக்கு மூலதன நெருக்கடி ஏற்பட்டது. யெஸ் வங்கியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அடைந்தது.

உடனடி நடவடிக்கையாக அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் தான் எடுத்துக் கொண்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கிக்கு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு கடன்கள் வழங்குவதை  நிறுத்திவைக்க உத்தரவிட்டது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி  கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், மறு  உத்தரவு வரும்வரை மேற்கண்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தை மறுசீரமைக்கவும் உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின்  மும்பையின் ஒர்லி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி  சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விடியவிடிய விசாரணை நடந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் அள்ளிச் ெசன்றனர். இந்நிலையில் நேற்று திடீரென அவர் தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் வங்கியில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் வீட்டில் நடந்த சோதனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கான கடனை வராக்கடனாக அறிவித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

குறிப்பாக திவால் நிலையில் உள்ள கம்பெனிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் கொடுக்கப்பட்டது. கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுத்தது ஏன் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தனர். மேலும் பல்லாயிரம் கோடி கடனை வராக்கடன் பட்டியலில் சேர்த்தது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட நடவடிக்கையா என்றும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரித்தனர். பல ேகள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆதாரங்களை காட்டி விசாரித்தபோது அதற்கு மவுனமாக இருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்  அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவும் செய்துள்ளது. விசாரணை முடியும்  வரை கபூருக்கு எதிராக அமலாக்கத்துறை ‘எல்ஓசி’ வெளியிட்டுள்ளது. இதனால்  அவர், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. எல்ஓசி-யின் நகல் அவரது பாஸ்போர்ட்  விவரங்களுடன் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பண மோசடி தடுப்புச் சட்டத்தின்  ராணா கபூரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். வங்கி வழக்கு தொடர்பாக சில  இடங்களில் தேடல்கள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் எங்களால் மேலும்  விபரங்களை வெளியே சொல்ல முடியாது. 1 லட்சம் போலி கடன் வாங்குபவர்களைப்  பயன்படுத்தி 80 ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.12,733 கோடியை வழங்கியது ஆரம்பகட்ட  விசாரணையில் தெரியவருகிறது. இந்த பரிவர்த்தனைகள் 2015ம் ஆண்டிற்கு  முந்தையவை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=569754

 

 

Link to comment
Share on other sites

Lehman Brothers என்ற வங்கியால் அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் வங்கிகள் உட்பட உலக பொருளுதாராம் சரிந்தது  (2009). இந்த இந்திய வங்கியால் என்ன நிகழும் ?  

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.