Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

25 minutes ago, nilmini said:

😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க  சோறு  சாப்பிட முடியாது. 

நன்றி. இது கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது .

இல்லாவிட்டால், இந்த நிலைமைக்குத்தான்  அடியேன் போயிருக்கவேண்டும் 🙂 

Image result for manorama eating chicken

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின்  இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு

உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது.

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நல்ல பதிவு நில்மினி.

உங்கள் சேவை யாழுக்குத் தேவை👍🏿 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

Link to comment
Share on other sites

23 hours ago, nilmini said:

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

நன்றி தெளிவுபடுத்தியமைக்கு.

ஆனால், தேநீர் இல்லை கோப்பியுடன் (அடிக்கடி) குடித்தால் கெடுதியானதாக இருக்குமா? 

12 minutes ago, nilmini said:

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

,peanut பட்டர் - ஒப்பீட்டளவில் கனடாவில் மலிவாக கிடைக்ககூடியது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   Agave nectar குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

11 minutes ago, nilmini said:

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

நன்றி சகோதரி. இவ்வளவு நாளும் எனது பார்வை இதற்கு மாறாக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

On 11 mars 2020 at 5:33 AM, தமிழ் சிறி said:

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

தமிழ்சிறியின் பதிவு கண்ணில் பட்டதா அல்லது ரதியின் பதிவு கண்ணில் பட்டதா :39_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நன்றாக சாப்பிடுங்கள்.
நேரம் போட்டு கயிறடியுங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

சரி. இது உங்களுக்கன பதில்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் அவரது நடவடிக்கைகளையும் பொறுத்து ஒரு நாளைக்கு இத்தனை கலோரி சக்தி தேவைப்படும் என்ற நிர்ணயம் உண்டு. நிர்னயிக்கப்பட்ட கலோரியின் அளவை மட்டும் சாப்பாட்டின் மூலம் உடலுக்குக் கொடுத்தால் உடல் நிறை மாறாது. அதற்கு மேலான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமான கலோரிகளை உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக் கொள்ளும். அதாவது உடல் நிறை அதிகரிக்கும். தேவையான அளவுக்குக் குறைவான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமாகத் தேவைப்படும் சக்தியைப் பெறுவதற்காக உடல் தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும். உடல் நிறை குறையும். ஜிம்முக்குப் போகத் தேவையில்லை. 

இது மிகச் சாதாரணமான சமன்பாடு. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் பருமன் கூடுவது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதற்கான காரணங்கள் பல உண்டு.

உடற்பயிற்சி செய்தால் நாளாந்தம் தேவையான கலோரிகளின் அளவு அதிகரிக்கும். வழமையாகச் சாப்பிடுவதைக் குறைக்காமலே மெலியலாம்.

அதிகமாகச் சாப்பிடாமலே உடம்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களின் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பதை அறியாமலே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறார்கள். கொழுப்பு மட்டும் உடல் பருமனைக் கூட்டுகிறது என்பது தவறான கருத்து. கொழுப்பு உடலுக்கு இன்றியமையாத ஒன்று. கொழுப்பு இல்லாமல் உடல் இயங்க முடியாது. இதனால்தால் உடலுக்குத் தேவையான 70 வீதமான கொலஸ்ரோலினை உடலே உருவாக்கிக் கொள்கிறது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

Edited by nilmini
text
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தவறாது கடைப்படித்து எடையை விரும்பியளவு 2017 இல் குறைத்திருந்தேன். ஒரு நிகழ்வுக்குப் போனபோது வந்திருந்த அக்கா ஏதாவது வருத்தமா என்று கேட்டு கடுப்பேத்திவிட்டா😖

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில்கள் நில்மினி நன்றி

என்னிடம் சில கேள்விகள் உள்ளன‌

நான் 2018 அக்டோபருக்கு பிறகு சடுதியாட மிக மெலிந்து கொண்டு எடை குறைந்து போனேன்.
6 மாதத்திற்கு இடையில் 8 கிலோ அளவில், அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் கேள்வி கேட்பார்கள்? எங்கும் போகமுடியவில்லலை ஒரே மன அழுத்தமாக இருந்தது. நான் நினத்தேன் எனக்கு எதேனும் சீரியசான நோய் உள்ளது என்று. பின்பு நான் வைத்தியசாலைக்கு சென்றபோது எனப்படும் IV contrast ஒரு மருந்தை கை நரம்பில் செலுத்தி  உடலை scan செய்து பார்த்தார்கள் எந்தவித tumar ம் இல்லை. பின்பு நானே அமர்ந்து யோசித்தபோது ஒரு உண்மை புலப்பட்டது.

இரத்த அழுத்தத்திற்கு எனக்கு ஒரு வித மருந்தை குடிக்க தந்த போது அத்துடன் புதிதாக diuretics (water pills) கொடுத்திருந்தார்கள் 9 மாதங்கள் நானிதை குடித்துள்ளேன் இது உடலிலுள்ள நீரை உறிந்து வெளியேற்றியுள்ளது இதனால் உடலில் உள்ள எல்லா வித கனியுப்ப்க்களும் உறிஞப்பட்டு உடல் பலவீனமடந்துள்ளது. இந்த மருந்து உண்மையில் இரத்த அழுத்தத்தை விட உடலில் உள்ள மேலதிக நீரை உறிஞ்சவே இதை கொடுப்பார்கள். (water retention)
 

இதை நிறுத்தி 8 மாதங்களகி விட்டது. ஆனல் மறுபடி எடையை கூட்ட முடியவில்லை. 

 என்னுடயே கேள்விகள் 

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 
2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?
3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.
4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்ப‌டுமா?  
5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?
7. உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 

2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?

Water pills உடலில் அநாவசியமாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி உயர் குருதி அழுத்தத்தை குறைக்கும்.எமக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது மிகவும் உப்பு கூட பாவித்தால் அநாவசிய நீர் தேங்கும். அல்லது அது சிறுநீர், வியர்வை , சுவாசம் மற்றும் தோலினூடாக வெளியேறி விடும். அதனால் மருத்துவர் சொன்னாலே ஒழிய நாங்களாக water pills எடுக்க கூடாது. நீர் உடலை விட்டு நீக்கப்படும் போது பல எலெக்ட்ரோலைட்  கள் (முக்கியமாக நரம்புக்கும் தசைக்கும் இயக்கத்துக்கு தேவையான சோடியம்  மற்றும் பொட்டாசியம், கல்சியம்) என்பனவும்  அகற்றப்படுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்.

எமது உடல் 60% நீரால் ஆனது. அந்த நீர் எமது கலங்களுக்குள் , குருதியில் மற்றும் கலங்களுக்கு இடையில் ஒரு விகித அடிப்படியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விகித அளவு மாறினால் நோய் ஏற்படும். அதனால் water tablets மருந்தாக மட்டுமே பாவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிறை குறைவு தற்காலிகமானது . அத்துடன் ஆபத்தானது . மெலிவதற்கு இந்த மருந்தை பரிந்துரைக்கும் வைத்தியர்களை என்ன சொல்வது?

உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாக பதில் எழுதுகிறேன்

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.

கன்னங்களில் சின்ன சின்ன தசைகள் அவற்றின் வேலையை செய்வதுக்கு இருக்கிறது ( முக பாவனை, உணவு உண்ணல் , சிரிப்பு, கோபம், அதிருப்தி போன்றவை) கன்னங்கள் உப்பி உள்ளவர்களுக்கு கொழுப்பு சேகரிப்பு அதிகம். முழங்கை பின்னால் கொழுப்பு சேர்வது குறைவு (மிகபருமனான ஆட்களுக்கு இருக்கும்). மெலிவது என்றால் இந்த சேகரித்த கொழுப்புகளை அகற்றுவது தான். கொழுப்பு தசைகளையும், உடல் உறுப்புகளையும் முக்கியமாக வயிற்று பகுதிகளில் நிறைய சேரும். வயிறு வைப்பதற்கு காரணம் Omantum எனப்படும் ஒரு தலையணை போன்ற ஒரு கவசம். அதை குறைப்பதற்கு வயிற்று தசைகளை வேலை செய்ய வேண்டும் (நடை பயிற்சி, push-ups போன்றவை). மற்றப்படி எமது தசைகளில் இருக்கும் புரதம் உடல்  பயிற்சியால்  அல்லது கடும் gym பயிற்சியால் கூடுமே தவிர குறையாது. நீரிழிவு நோய்  உள்ளவர்களுக்கு இது கொஞ்சம் கரையும். அது நல்லதல்ல. இன்சுலினை உழுங்காக எடுத்து மாச்சத்து /சீனி சத்தை பாவிக்கவேணுமே அன்றி தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கக்கூடாது. நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். 

உடல் பருமன் கூடிய குறைந்த Omantum  ( சிறு பெருங்குடலை போர்த்தி இருக்கும் )

fat.pngslim.jpg

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

எனவே உங்கள் மெலிவுக்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாம்.  நல்ல protein, fat  நிறைந்த உணவுகளை காய் கறி , பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.பசுப்பாலை தவிர்க்கவும். ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடாமல் பல்வகையான உணவுகளை சாப்பிடவும். அதையும் மீறி மெலிந்தால் ஏதாவது வைரஸ் , parasite infection இருக்கா என்று பார்க்கவேண்டும். அதிகம் கவலை பட்டாலும் உடல் மெலியும். Hyper Thyrodism , உணவுக்குழாய் அழற்சி போன்றவையம் காரணமாக இருக்கலாம்.

Hyper Thyrodism போன்ற காரணங்களால் metabolism அதிகரித்து உடல் மெலியும் 

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் பருமன் கூடியவருக்கும் குறைந்தவர்க்கும் Omantum அளவு மாறுபடும். எஞ்சிய கொழுப்பு எல்லாம் இதில் தான்  அதிகமாக சேமிக்கப்படும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nilmini said:

சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

சர்க்கரை நோய்க்கு சொத்தை பற்களுக்கும் தொடர்பு உண்டா.? வரிசை வரிசையாக வந்து கொண்டே இருப்பதால் கேட்கிறேன்.. அடிக்கடி சிறு நீர் கழிக்க நினைப்பதற்கும் தொடர்பு உண்டா.? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎14‎/‎2020 at 1:08 AM, nilmini said:

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால்  நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ  மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் 
இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்றுtw_cry: ...பரம்பரை காரணமாய் இருக்குமோ?

குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2020 at 2:50 PM, nilmini said:

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

 

கட்டுப்படுத்தாத diabetes இருந்தும் உடல் மெலிவு ஏற்படாமைக்கு ஏதும் காரணம் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை

Yikes Smile GIF - Yikes Smile Sarcastic GIFs

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி எடுக்கும்போது உடல் கலங்கள் நிறைய குளுக்கோஸை உறிஞ்சி எடை அதிகரிக்கும். பிறகு ஒழுங்காக மருந்து எடுக்காட்டி  நிச்சயம் மெலிவர். மாச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டாம். வேளைக்கு சாப்பிடவும். விரதம் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் டயபடீஸ் க்கு  கூடாது 

Edited by nilmini
text
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.