Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

25 minutes ago, nilmini said:

😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க  சோறு  சாப்பிட முடியாது. 

நன்றி. இது கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது .

இல்லாவிட்டால், இந்த நிலைமைக்குத்தான்  அடியேன் போயிருக்கவேண்டும் 🙂 

Image result for manorama eating chicken

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின்  இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு

உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது.

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நல்ல பதிவு நில்மினி.

உங்கள் சேவை யாழுக்குத் தேவை👍🏿 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

Link to comment
Share on other sites

23 hours ago, nilmini said:

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

நன்றி தெளிவுபடுத்தியமைக்கு.

ஆனால், தேநீர் இல்லை கோப்பியுடன் (அடிக்கடி) குடித்தால் கெடுதியானதாக இருக்குமா? 

12 minutes ago, nilmini said:

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

,peanut பட்டர் - ஒப்பீட்டளவில் கனடாவில் மலிவாக கிடைக்ககூடியது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   Agave nectar குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

11 minutes ago, nilmini said:

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

நன்றி சகோதரி. இவ்வளவு நாளும் எனது பார்வை இதற்கு மாறாக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

On 11 mars 2020 at 5:33 AM, தமிழ் சிறி said:

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

தமிழ்சிறியின் பதிவு கண்ணில் பட்டதா அல்லது ரதியின் பதிவு கண்ணில் பட்டதா :39_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நன்றாக சாப்பிடுங்கள்.
நேரம் போட்டு கயிறடியுங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

சரி. இது உங்களுக்கன பதில்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் அவரது நடவடிக்கைகளையும் பொறுத்து ஒரு நாளைக்கு இத்தனை கலோரி சக்தி தேவைப்படும் என்ற நிர்ணயம் உண்டு. நிர்னயிக்கப்பட்ட கலோரியின் அளவை மட்டும் சாப்பாட்டின் மூலம் உடலுக்குக் கொடுத்தால் உடல் நிறை மாறாது. அதற்கு மேலான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமான கலோரிகளை உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக் கொள்ளும். அதாவது உடல் நிறை அதிகரிக்கும். தேவையான அளவுக்குக் குறைவான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமாகத் தேவைப்படும் சக்தியைப் பெறுவதற்காக உடல் தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும். உடல் நிறை குறையும். ஜிம்முக்குப் போகத் தேவையில்லை. 

இது மிகச் சாதாரணமான சமன்பாடு. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் பருமன் கூடுவது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதற்கான காரணங்கள் பல உண்டு.

உடற்பயிற்சி செய்தால் நாளாந்தம் தேவையான கலோரிகளின் அளவு அதிகரிக்கும். வழமையாகச் சாப்பிடுவதைக் குறைக்காமலே மெலியலாம்.

அதிகமாகச் சாப்பிடாமலே உடம்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களின் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பதை அறியாமலே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறார்கள். கொழுப்பு மட்டும் உடல் பருமனைக் கூட்டுகிறது என்பது தவறான கருத்து. கொழுப்பு உடலுக்கு இன்றியமையாத ஒன்று. கொழுப்பு இல்லாமல் உடல் இயங்க முடியாது. இதனால்தால் உடலுக்குத் தேவையான 70 வீதமான கொலஸ்ரோலினை உடலே உருவாக்கிக் கொள்கிறது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

Edited by nilmini
text
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தவறாது கடைப்படித்து எடையை விரும்பியளவு 2017 இல் குறைத்திருந்தேன். ஒரு நிகழ்வுக்குப் போனபோது வந்திருந்த அக்கா ஏதாவது வருத்தமா என்று கேட்டு கடுப்பேத்திவிட்டா😖

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில்கள் நில்மினி நன்றி

என்னிடம் சில கேள்விகள் உள்ளன‌

நான் 2018 அக்டோபருக்கு பிறகு சடுதியாட மிக மெலிந்து கொண்டு எடை குறைந்து போனேன்.
6 மாதத்திற்கு இடையில் 8 கிலோ அளவில், அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் கேள்வி கேட்பார்கள்? எங்கும் போகமுடியவில்லலை ஒரே மன அழுத்தமாக இருந்தது. நான் நினத்தேன் எனக்கு எதேனும் சீரியசான நோய் உள்ளது என்று. பின்பு நான் வைத்தியசாலைக்கு சென்றபோது எனப்படும் IV contrast ஒரு மருந்தை கை நரம்பில் செலுத்தி  உடலை scan செய்து பார்த்தார்கள் எந்தவித tumar ம் இல்லை. பின்பு நானே அமர்ந்து யோசித்தபோது ஒரு உண்மை புலப்பட்டது.

இரத்த அழுத்தத்திற்கு எனக்கு ஒரு வித மருந்தை குடிக்க தந்த போது அத்துடன் புதிதாக diuretics (water pills) கொடுத்திருந்தார்கள் 9 மாதங்கள் நானிதை குடித்துள்ளேன் இது உடலிலுள்ள நீரை உறிந்து வெளியேற்றியுள்ளது இதனால் உடலில் உள்ள எல்லா வித கனியுப்ப்க்களும் உறிஞப்பட்டு உடல் பலவீனமடந்துள்ளது. இந்த மருந்து உண்மையில் இரத்த அழுத்தத்தை விட உடலில் உள்ள மேலதிக நீரை உறிஞ்சவே இதை கொடுப்பார்கள். (water retention)
 

இதை நிறுத்தி 8 மாதங்களகி விட்டது. ஆனல் மறுபடி எடையை கூட்ட முடியவில்லை. 

 என்னுடயே கேள்விகள் 

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 
2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?
3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.
4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்ப‌டுமா?  
5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?
7. உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 

2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?

Water pills உடலில் அநாவசியமாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி உயர் குருதி அழுத்தத்தை குறைக்கும்.எமக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது மிகவும் உப்பு கூட பாவித்தால் அநாவசிய நீர் தேங்கும். அல்லது அது சிறுநீர், வியர்வை , சுவாசம் மற்றும் தோலினூடாக வெளியேறி விடும். அதனால் மருத்துவர் சொன்னாலே ஒழிய நாங்களாக water pills எடுக்க கூடாது. நீர் உடலை விட்டு நீக்கப்படும் போது பல எலெக்ட்ரோலைட்  கள் (முக்கியமாக நரம்புக்கும் தசைக்கும் இயக்கத்துக்கு தேவையான சோடியம்  மற்றும் பொட்டாசியம், கல்சியம்) என்பனவும்  அகற்றப்படுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்.

எமது உடல் 60% நீரால் ஆனது. அந்த நீர் எமது கலங்களுக்குள் , குருதியில் மற்றும் கலங்களுக்கு இடையில் ஒரு விகித அடிப்படியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விகித அளவு மாறினால் நோய் ஏற்படும். அதனால் water tablets மருந்தாக மட்டுமே பாவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிறை குறைவு தற்காலிகமானது . அத்துடன் ஆபத்தானது . மெலிவதற்கு இந்த மருந்தை பரிந்துரைக்கும் வைத்தியர்களை என்ன சொல்வது?

உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாக பதில் எழுதுகிறேன்

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.

கன்னங்களில் சின்ன சின்ன தசைகள் அவற்றின் வேலையை செய்வதுக்கு இருக்கிறது ( முக பாவனை, உணவு உண்ணல் , சிரிப்பு, கோபம், அதிருப்தி போன்றவை) கன்னங்கள் உப்பி உள்ளவர்களுக்கு கொழுப்பு சேகரிப்பு அதிகம். முழங்கை பின்னால் கொழுப்பு சேர்வது குறைவு (மிகபருமனான ஆட்களுக்கு இருக்கும்). மெலிவது என்றால் இந்த சேகரித்த கொழுப்புகளை அகற்றுவது தான். கொழுப்பு தசைகளையும், உடல் உறுப்புகளையும் முக்கியமாக வயிற்று பகுதிகளில் நிறைய சேரும். வயிறு வைப்பதற்கு காரணம் Omantum எனப்படும் ஒரு தலையணை போன்ற ஒரு கவசம். அதை குறைப்பதற்கு வயிற்று தசைகளை வேலை செய்ய வேண்டும் (நடை பயிற்சி, push-ups போன்றவை). மற்றப்படி எமது தசைகளில் இருக்கும் புரதம் உடல்  பயிற்சியால்  அல்லது கடும் gym பயிற்சியால் கூடுமே தவிர குறையாது. நீரிழிவு நோய்  உள்ளவர்களுக்கு இது கொஞ்சம் கரையும். அது நல்லதல்ல. இன்சுலினை உழுங்காக எடுத்து மாச்சத்து /சீனி சத்தை பாவிக்கவேணுமே அன்றி தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கக்கூடாது. நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். 

உடல் பருமன் கூடிய குறைந்த Omantum  ( சிறு பெருங்குடலை போர்த்தி இருக்கும் )

fat.pngslim.jpg

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

எனவே உங்கள் மெலிவுக்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாம்.  நல்ல protein, fat  நிறைந்த உணவுகளை காய் கறி , பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.பசுப்பாலை தவிர்க்கவும். ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடாமல் பல்வகையான உணவுகளை சாப்பிடவும். அதையும் மீறி மெலிந்தால் ஏதாவது வைரஸ் , parasite infection இருக்கா என்று பார்க்கவேண்டும். அதிகம் கவலை பட்டாலும் உடல் மெலியும். Hyper Thyrodism , உணவுக்குழாய் அழற்சி போன்றவையம் காரணமாக இருக்கலாம்.

Hyper Thyrodism போன்ற காரணங்களால் metabolism அதிகரித்து உடல் மெலியும் 

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் பருமன் கூடியவருக்கும் குறைந்தவர்க்கும் Omantum அளவு மாறுபடும். எஞ்சிய கொழுப்பு எல்லாம் இதில் தான்  அதிகமாக சேமிக்கப்படும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nilmini said:

சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

சர்க்கரை நோய்க்கு சொத்தை பற்களுக்கும் தொடர்பு உண்டா.? வரிசை வரிசையாக வந்து கொண்டே இருப்பதால் கேட்கிறேன்.. அடிக்கடி சிறு நீர் கழிக்க நினைப்பதற்கும் தொடர்பு உண்டா.? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎14‎/‎2020 at 1:08 AM, nilmini said:

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால்  நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ  மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் 
இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்றுtw_cry: ...பரம்பரை காரணமாய் இருக்குமோ?

குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2020 at 2:50 PM, nilmini said:

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

 

கட்டுப்படுத்தாத diabetes இருந்தும் உடல் மெலிவு ஏற்படாமைக்கு ஏதும் காரணம் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை

Yikes Smile GIF - Yikes Smile Sarcastic GIFs

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி எடுக்கும்போது உடல் கலங்கள் நிறைய குளுக்கோஸை உறிஞ்சி எடை அதிகரிக்கும். பிறகு ஒழுங்காக மருந்து எடுக்காட்டி  நிச்சயம் மெலிவர். மாச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டாம். வேளைக்கு சாப்பிடவும். விரதம் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் டயபடீஸ் க்கு  கூடாது 

Edited by nilmini
text
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.