Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

  • Sad 1
Link to comment
Share on other sites

On 14/3/2020 at 06:38, nilmini said:

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு (

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 19:54, ஈழப்பிரியன் said:

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Edited by nilmini
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kali said:

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2020 at 13:04, nochchi said:

 

ஒரு மருத்துவத்துறையில் முனைவராக இருந்தவாறு களஉறவுகளின் வினாக்களுக்கு விடை ஆலோசனை என்று அற்புதமாகச் செயலாற்றும் உங்களுக்கு எனது வணக்கத்தையும் வாழ்த்தையும் பதிவுசெய்கின்றேன்.
நில்மினி அவர்களே!

களத்தில் உங்கள் பணி தொடரட்டும்.

மிகவும் நன்றி. இன்னும் நிறைய மருத்துவ ஆலோசனைகளை பகிரலாம் என்று இருக்கிறேன் 

On 6/4/2020 at 18:47, உடையார் said:

 நில்மினி நல்ல பயனுள்ள ஆலோசனைகள், தொடருங்கள்

வணக்கம் உடையார். மிக்க நன்றி.

On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

இன்றுதான் உங்கள் கேள்வியை பார்த்தேன். யாரவது கேள்வி போட்டால் அல்லது பதில் அளித்தால் noticing இல் தெரியும் என்று நினைத்தேன்.  இதற்கு பதில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவிடுகிறேன் . 

On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

இன்றுதான் இந்த கேள்வியை பார்த்தேன். நிச்சயம் இரண்டு நாற்களுக்குள் பதில் பதிவிடுகிறேன் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

அல்லது பார்த்துவிட்டு இங்க வேலையில யாராவது மண்டையை குழப்பி மறந்து விட்டேனோ தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

Link to comment
Share on other sites

11 hours ago, nilmini said:

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

உங்கள் நேரத்துக்கும் பதிலுக்கும் நன்றிகள் 

Link to comment
Share on other sites

17 hours ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

 

Cortisone ஒரு steroid மருந்து.இது உடலில் மற்ற ஒரு இயற்கையான செய்முறைகளை நிப்பாட்டி செயற்கை முறையில் inflammation ஐயும் நோவையும் குறைக்கும். இதனால் இயற்கையான நோய் எதிர்க்கும் தன்மை குறையும். ஆனால் வேறு வழி இல்லாவிட்டால் எடுத்ததுதான் ஆக வேணும். Cartilage இரு எலும்புகளுக்கு நடுவில் உடல் முழுவதும் இருப்பதால் Cartilage replacement ஆர்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு செய்ய முடியாது. Sports Injury இல் சிறு துண்டு கார்டிலேஜ் உடைந்து போனால் replace பண்ணலாம். Cartilage க்கு எலும்பு மாதிரி சொந்த ரத்த குழாய்கள் இல்லை . அதனால் தான் sports injury, Juvenile arthritis, Osteoarthritis இன் போது காயப்பட்ட Cartilage கள் ஆற முடியாமல் இறந்து போய் விடுகின்றன . Muscle /தசைகள் எலும்புடன் ஒட்டி இருப்பதால் அவற்றை massage செய்து Hot /Cold  pads வைத்தால் நோ கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 21:45, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய கலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

 

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய காலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

 

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய  External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய  External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும். polyps எனப்படும் முளைகள் உணவுக்குழாயின் முடிவுப்பகுதியில் இருந்தால்  Colonoscopy மூலம் கண்டுபிடிப்பார்கள் . அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள் (சிலவேளை கான்செர் ஆகிவிடுமோ என்று ) மற்றபடி மூல  கான்சராக  வர 0.1% யிலும் குறைந்த சந்தர்ப்பமே இருக்கு.  சில  hemorrhoids தானே போய்விடும். ஆனால் இரத்த நாளங்கள் அதற்குள் இருந்து உறைந்துபோய்விட்டால் தானே போகாது. அப்போதுதான் நான் குறிப்பிட்ட 3 வகை விதங்களை செய்யலாமா என்று பார்ப்பார்கள். அதுவும் முடியாவிட்டால் தான் அறுவை சிகிச்சை.  Sitz bath உடன் Epsom உப்பு  வெது வெதுப்பான நீரில் கலந்து பாவிக்கலாம் 

2 hours ago, suvy said:

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

நன்றி சுவி 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணை 

சாதாரணமாக Leflunomide 20mg ஒவ்வொரு நாளும் தான் எடுப்பார்கள். 10mg  தான் குறைந்த டோஸ். நீங்கள் Prednisone 2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுப்பது நல்ல அறிகுறி . ஏனென்றால் இந்த மருந்து 2 mg இலிருந்து 15 mg வரை டோஸ் குடுப்பார்கள் . அதுவும் ஒவ்வொரு நாளும்.  அத்துடன் Prednisone  மருந்து ஒருநாளைக்கு இரண்டு பங்காக பிரித்து எடுக்க சொல்வார்கள். ஏனென்றால் இதன் வீரியம் இரத்தத்தில் கன நேரம் இருக்காது. இவற்றை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு தகுந்த நேரத்தில் diagnose பண்ணி இருப்பார்கள் போல இருக்கு. இரண்டு மருந்துமே வெள்ளை கலங்களை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. அதனால் உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய, ஈரல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கூடிய உணவு வகைகளை நிறைய உண்ணவேண்டும். இவற்றை பற்றி இன்னொரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

நல்ல தகவல் உடையார்.வல்லாரையை பற்றி நிறைய ஆய்வு நடக்கிறது. உங்கள் பதிவை பார்த்தபின் சில ஆய்வு கட்டுரைகளை படித்தேன். எழுதி முடித்துவிட்டு பதிவிடுகிறேன். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 22:28, nilmini said:

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 17:32, குமாரசாமி said:

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

இரண்டு மருந்துகளுமே  குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம்  நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை  சாப்பாட்டுடன்  1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA

Edited by nilmini
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இரண்டு மருந்துகளுமே  குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம்  நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை  சாப்பாட்டுடன்  1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.