Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

சீ வேண்டாம் விட்டுடூங்கோ 

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

அவ பாவம் என்று சொன்னது நாயையும் பாம்பையும்தான்.....!  🤔

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

இதென்ன சீனாக்காரன் மாதிரி நிற்பன, பறப்பன , மிதப்பன  எண்டு எல்லாத்தையும் சாப்பிட்டு கோரோனோ மாதிரி வைரஸ் தான் கிடைக்கும். அது எல்லாம் உண்மை இல்லை. தசைக்கு தேவை நல்ல ஒட்சிசன் (அதுதான் சுவாசப் பயிற்சி என்று சொன்னேன்)புரதம், கொழுப்பு, விட்டமின் , மினெரல்ஸ், detoxifying food  மற்றும் படுப்பதுக்கு நல்ல firm ஆன  மெத்தை போன்றவை. தசைக்கு ஒட்சிசன் பத்தாட்டி  நோ அதிகமாகும்

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இதென்ன சீனாக்காரன் மாதிரி நிற்பன, பறப்பன , மிதப்பன  எண்டு எல்லாத்தையும் சாப்பிட்டு கோரோனோ மாதிரி வைரஸ் தான் கிடைக்கும். அது எல்லாம் உண்மை இல்லை. தசைக்கு தேவை நல்ல ஒட்சிசன் (அதுதான் சுவாசப் பயிற்சி என்று சொன்னேன்)புரதம், கொழுப்பு, விட்டமின் , மினெரல்ஸ், detoxifying food  மற்றும் படுப்பதுக்கு நல்ல firm ஆன  மெத்தை போன்றவை. தசைக்கு ஒட்சிசன் பத்தாட்டி  நோ அதிகமாகும்

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 15:25, பாலபத்ர ஓணாண்டி said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

On 11/4/2020 at 18:47, nilmini said:

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

 

மிகவும் நன்றி உடையார். எமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்கள் தேவைகளையும்  கொஞ்சமாவது உணர்ந்து செய்வது மிகுந்த மன நிறைவை தருகிறது. 

10 hours ago, ராசவன்னியன் said:

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

அண்ணை நல்ல பகிடிக்காரன் என்று தெரியும். என்றாலும் தப்பித்தவறி பாம்பை சாப்பிட்டாலும் என்றுதான் ........

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 

விரல் நுனி நரம்புகள் அல்லது குருதிக் குழாய்கள் பாதிப்படைந்தால் இப்படியான விறைப்பு வரும். சிலருக்கு இது அப்பப்ப வந்து போகும். ஆனால் தொடர்ந்து இருந்து வழமையான வாழ்க்கை முறையை பாதித்தால் இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். 
டயபெடீஸ் உள்ளவர்களுக்கு விரல் நுனி நரம்புகள் பாதிக்கப்பட்டு விறைப்பு ஏற்படும் (“peripheral neuropathy”) நரம்புகள் தாக்கப்பட்டால் திரும்பி உயிர்பெறும். ஆனால் முற்றாக பாதிக்கப்பட்டால் திரும்ப வரவே வராது. அதனால் தான் நரம்பு சம்பந்தமான எந்த நோயையும் மாற்றமுடியாது.  antidepressants, anticonvulsants, skin creams போன்ற மருந்துகள் விறைப்பை உணராமல் இருக்க உதவும். 
Carpal Tunnel Syndrome: மணிக்கட்டில் ஒரு சிறு இடைவெளி மூலம்தான் கை விரல்களுக்கு செல்லும் நரம்புகளும் , குருதிக்குழாய்களும்  செல்லும். இதனால் மணிக்கட்டுக்கு அழுத்தம் தரக்கூடிய வேலைகளை தொடர்ந்து நீண்ட நேரம் செய்வதால் வருவது (computer keyboard , packing , cutting ) 
இவை தவிர தசைகள் இழுபடுவதாலும் , குருதிக்குழாய்கள் இழுபடுவதாலும் மிகச்சிறிய கட்டிகள் உருவாவதாலும் விறைப்பு ஏற்படலாம். இதற்கு சத்திரசிகிச்சை முறைகள் இருக்கு. 
Alcoholic polyneuropathy: மதுபானம் அதிகமாக குடிப்பவர்களுக்கு வரும் விறைப்பு 
Fibromyalgia: விரல் நுனி விறைப்போடு மட்டுமல்ல தசைகளை பாதித்து உடல் முழுதும் நோ எடுக்கும். 
விட்டமின் B 12  அதிகமாக இருக்கும், கோழி, ஈரல், salmon , tuna மீன் , நண்டு, கணவாய், oyster , clams பால், சீஸ். தயிர் , முட்டை போன்றவை பொதுவாக விறல் நுனி விறைப்பை குறைக்க உதவும்.

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2020 at 21:41, nilmini said:

வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும்.

உங்களின் விளக்கமான பதிலுக்கு மீண்டுமொருமுறை நன்றி...
நீங்கள் கூறியபடி  வலிகளுக்கு எடுக்கும் Tilidin மாத்திரை கொஞ்சம் வித்தியாசமானதுதான். அந்த குளிசை எடுத்து 10 நிமிடத்தில் உடம்பு முழுவதும் இனம் புரியாத வெப்பம் பரவும்.எந்தவித வலிகளும் தெரியாமல் உடம்பு முழுவதும் காற்றுப்போல் இருக்கும்.20 வயது வாலிப புத்துணர்ச்சி, உற்சாகம் இருக்கும்.இந்த மாத்திரை உடம்புக்கு பக்கவிளைவுகள் கெடுதல் இல்லாவிட்டால் தொடர்ந்து எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உங்களின் விளக்கமான பதிலுக்கு மீண்டுமொருமுறை நன்றி...
நீங்கள் கூறியபடி  வலிகளுக்கு எடுக்கும் Tilidin மாத்திரை கொஞ்சம் வித்தியாசமானதுதான். அந்த குளிசை எடுத்து 10 நிமிடத்தில் உடம்பு முழுவதும் இனம் புரியாத வெப்பம் பரவும்.எந்தவித வலிகளும் தெரியாமல் உடம்பு முழுவதும் காற்றுப்போல் இருக்கும்.20 வயது வாலிப புத்துணர்ச்சி, உற்சாகம் இருக்கும்.இந்த மாத்திரை உடம்புக்கு பக்கவிளைவுகள் கெடுதல் இல்லாவிட்டால் தொடர்ந்து எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

Opium drug, poppy  செடிகளின் காய்களில் இருந்து தான் எடுத்து போதை பொருளாக பாவிப்பார்கள். உண்மையில்  இது அளவாக பாவித்தால் நன்மையே ஒழிய தீமை இல்லை. ஆனால் போதைக்கு அடிமையாகிறவர்களே அதிகம். இந்த drug வலியை  வாங்கி மூளைக்கு அனுப்பும் செய்முறையை தடுப்பதோடு மட்டும் அல்லாது, Dopamine எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இரசாயனத்தையும் மூளையில் இருந்து சுரக்கத்தூண்டும் ( இப்ப விளங்கும் ஏன் 20 வயது பொடியன் மாதிரி உற்சாகம் வருகுது என்று)🕺

எனவே இயற்கையான ஓபியம், Tilidin மாதிரியான செயற்கை ஓபியம் மருந்து வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது . அமெரிக்கா போன்ற நாடுகள் ஓபியம் போதை கூடியது என்று Heroin என்ற drug ஐ கண்டு பிடித்தார்கள். ஆனால் Heroin ஒப்பியத்தை விட மிக அதிகமான போதையை கொடுப்பதுடன், மிக அதிகமான dopamine ஐ சுரக்கத்தூண்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகும். அதனால் அதை எடுப்பவர்களுக்கு நமக்கு ஏற்படும் சிறிய மகிழ்ச்சிகள் எல்லாம் அவர்களால் உணரமுடியாது. Heroin ஐ எடுத்து அதிகமான dopamine சுரந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கடைசியில் உண்மையில் heroin மருந்து தேவைப்படுபவர்களை விட போதைக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக எடுக்கிறார்கள். spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

Opium drug, poppy  செடிகளின் காய்களில் இருந்து தான் எடுத்து போதை பொருளாக பாவிப்பார்கள். உண்மையில்  இது அளவாக பாவித்தால் நன்மையே ஒழிய தீமை இல்லை. ஆனால் போதைக்கு அடிமையாகிறவர்களே அதிகம். இந்த drug வலியை  வாங்கி மூளைக்கு அனுப்பும் செய்முறையை தடுப்பதோடு மட்டும் அல்லாது, Dopamine எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இரசாயனத்தையும் மூளையில் இருந்து சுரக்கத்தூண்டும் ( இப்ப விளங்கும் ஏன் 20 வயது பொடியன் மாதிரி உற்சாகம் வருகுது என்று)🕺

எனவே இயற்கையான ஓபியம், Tilidin மாதிரியான செயற்கை ஓபியம் மருந்து வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது . அமெரிக்கா போன்ற நாடுகள் ஓபியம் போதை கூடியது என்று Heroin என்ற drug ஐ கண்டு பிடித்தார்கள். ஆனால் Heroin ஒப்பியத்தை விட மிக அதிகமான போதையை கொடுப்பதுடன், மிக அதிகமான dopamine ஐ சுரக்கத்தூண்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகும். அதனால் அதை எடுப்பவர்களுக்கு நமக்கு ஏற்படும் சிறிய மகிழ்ச்சிகள் எல்லாம் அவர்களால் உணரமுடியாது. Heroin ஐ எடுத்து அதிகமான dopamine சுரந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கடைசியில் உண்மையில் heroin மருந்து தேவைப்படுபவர்களை விட போதைக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக எடுக்கிறார்கள். spacer.png

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 18:34, Nathamuni said:

நல்லெண்ணெய், எள்ளு எண்ணெய் இரண்டும் ஒண்டு தானே...? 

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

Edited by nilmini
  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 

இப்ப வேலையும் குறையத்தானே. அத்துடன் எனக்கு இந்த பதிவுகள் இடுவது மகிழ்ச்சியே. வலி என்று ஒரு உணர்வு இருப்பதே எமது உடலை நாமே காயப்படுத்தாமல் இருப்பதுக்குத்தான் (இப்ப மேலை நாடுகளிலும் எமது உயர்மட்ட மக்களினதும்  Cosmetic surgery விசரால் காது மூக்கு எல்லாம் வெட்டி சரி செய்வதுபோல கை காலையும் வெட்டி சரி பார்க்க நிற்பார்கள்)    நடைப்பயிற்சி  போன்ற அன்றாட வேலைகளினால் பெரிய பாதிப்பொன்றும் வராது. ஒன்று ரெண்டு நாளைக்கு மருந்தை எடுக்காமல் விட்டு முந்தின வலியிலும்  பார்க்க மிகவும் அதிகமான வலி இருக்கா என்று பார்க்கலாம். அத்துடன் இரண்டு மூண்டு  வருடங்களில் டோசை கூட்டுவார்கள். ஏனெனில் உடல் இந்த டோசுக்கு பழகிப்போய் மருந்து எடுத்தாலும் வலிக்கும்.

Edited by nilmini
  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி நீண்டகால குழப்பம் உங்கள் மூலமாகவாவது தெளிவடையலாம் என எதிர்பார்க்கிறேன்.

தேங்காய்
தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டையும் பல டாக்ரர்மாரே குளப்பியடிக்கிறார்கள்.
இதன் நன்மை தீமை பற்றி ஆறுதலாக ஆராந்து ஒரு பதிவை தாருங்கள்
மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 21:45, nilmini said:

 

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

இருவருக்கும் அவசரமில்லாத பிரச்சனை .ஆனபடியால் ஆறுதலாக எழுதுங்கள்.நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 22:24, nilmini said:

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

 

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

வணக்கம். இது Circadian rhythm சம்பந்தப்பட்டது. இதைப்பற்றி விரைவில் விரிவாக விளக்கம் தருகிறேன். 

குறிப்பு: நான் MD இல்லை. PhD .மருத்துவ கல்லூரியில் படிப்பிப்பதனாலும், research செய்வதனாலும்   எனக்கு தெரிந்த சில விடயங்களை பதிவிடுகிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

எனக்கு அந்த சுடுதண்ணி (Hot water ) மேட்டர் கொஞ்சம் அர்ஜன்ட் கண்டியளோ....😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

வணக்கம். விரைவில் பதில் போடுகிறேன் 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

குடிக்கலாம் ரதி. மேலும் விரிவாக பதில் தருகிறேன் 

Link to comment
Share on other sites

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

 

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

 

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.