Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வணக்கம்! மீண்டும் ஒரு அலுப்புக் கேள்வியுடன்.......

அக்குபஞ்சர் சிகிச்சை  மூட்டுவலிகளுக்கு பலன் தருமென சொல்கிறார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

எனக்கு பதில் சொல்லுறதுக்கு முதல் தேங்காய் எண்ணை நல்லதோ எண்டு கேட்டுப்போட்டு  அங்கை ஒராள்  காய்ஞ்சு போய் நிக்கிறார் அவருக்கு  பதிலை சொல்லீட்டு எனக்கு ஆறுதலாய் சொல்லலாம்.😁

 

ஓம் குமாரசாமி அண்ணை , தேங்காய் எண்ணெய் மற்றும் நித்திரை பற்றிய விடயங்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் பிராக்கு கூடிப்போச்சு. புதன் கிழமை போடுவேன். அக்குபஞ்சர் நல்ல இண்ட்ரஸ்டிங் தலைப்பு நிச்சயம் அலுப்புக்கேள்வி இல்லை 😂 . நல்ல  பதிவு ஒன்று போடுகிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 13:51, உடையார் said:

குமாரசாமி, நான் வளர்ந்தது ஒரு அழகிய சிறிய கிராமம் அந்த கிரமத்தை சுற்றி வயலும் காடுதான், எங்கள் ஊரில் ஒரு 20 குடும்பங்கள் இருக்கும், எல்லாரும் சொந்தம் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி சாப்பிடுவோம், பெடியள வாசிக சாலையில்தான் முழு நேரமும் இரவு படுப்பது முதல், அப்படியொரு சந்தோஷமான கவலையற்ற வாழ்க்கை, இரவு பன்னிரண்டு மணிக்கு சுட சுட பாண் வாங்கி வந்து சம்பலுடன் சப்பிடுவோம், பனையேறி களவாக கள் இறக்கி குடிப்போம், நான் நன்றாக ஏறுவேன் பனை, ஏறி இருந்து குடித்துவிட்டு, மிகுதியை இறக்கி கொண்டுவருவேன், தேவாமிர்தம். இரவு ........குளத்து விசி கிணற்றில் நில வெளிச்சத்தில் நீச்சல் அடிப்போம், யாரும் எங்களை கேள்வி கேட்கமாட்டார்கள், அப்படி வளர்ந்தோம் ஒற்றுமையாக. அந்த நினைவுகள் இறக்கும்வரை பசுமையாக இருக்கும். கவலையற்ற வாழ்க்கை ஊரோடு.

இப்ப எங்கள் கிராமில்லை, ஒரே காடுதான்.  தனால் எனக்கு அங்கு போக விருப்பமில்லை, இங்கேயே இருக்கப்போகின்றேன், ஆனா, என் மக்களுக்கு ஏதவாது நல்லது செய்துவிட்டுதான் இறப்பேன், அதுதான் என் கடைசி ஆசை. பல திட்டங்களிருக்கு, செயல் வடிவத்திற்க்கு இன்னும் நாட்கள் தேவை. பிள்ளைகளை கரையேற்றிவிட்டால் என் உழைப்பு முழுக்க மக்களின் முன்னேற்றத்திற்குதான் 

 

உடையார்! நானும் அதே. சேம் பிளட்.
 என்ன ஒன்று.என்னை கூடாத கூட்டங்களுடன் கூடியவன் என்று என்னை பலர் ஒதுக்கினார்கள். அதில் என் உறவினர்களும் அடக்கம்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நில்மினியைக் காணவில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 06:08, ரதி said:

எங்கே நில்மினியைக் காணவில்லை 

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

On 25/5/2020 at 00:44, nilmini said:

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:
On 5/6/2020 at 15:08, ரதி said:

எங்கே நில்மினியைக் காணவில்லை 

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

கடந்த புதன் நல்ல பதிவுடன் வருவதாக சொல்லியிருந்தா இன்னும் காணவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளை இங்கு வந்த உடனே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இனிமேல் தினமும் இங்கு வந்து ஒப்பமிடுவேன் என்று சொன்னது.நானும் தமிழ்சிறியும் அவரைப் பாராட்டினம்.அதன்பின் அவ வைத்தியர் என்றவுடனே எல்லாரும் வரிசையாய் வந்து வடம் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தேரைத் தெருவில விட்டாச்சுது. இப்ப தேர் அங்குமில்லை இங்குமில்லை எங்கு நிக்குதோ தெரியவில்லை....!   😷 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

நில்மினி இப்ப நேரமில்லாமல் இருக்கின்றா போலிருக்கு, நேரமிருக்கும் போது உங்கள் பதிவுகளை இடுங்கள்

 

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

6 hours ago, suvy said:

அந்தப் பிள்ளை இங்கு வந்த உடனே வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இனிமேல் தினமும் இங்கு வந்து ஒப்பமிடுவேன் என்று சொன்னது.நானும் தமிழ்சிறியும் அவரைப் பாராட்டினம்.அதன்பின் அவ வைத்தியர் என்றவுடனே எல்லாரும் வரிசையாய் வந்து வடம் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தேரைத் தெருவில விட்டாச்சுது. இப்ப தேர் அங்குமில்லை இங்குமில்லை எங்கு நிக்குதோ தெரியவில்லை....!   😷 

தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு 

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

Edited by nilmini
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

தேர் கொஞ்சம் தடுமாறி விட்டது... அம்மாவின் சுகயீனம் காரணமாக. இப்ப மீண்டும் தெருவுக்கு வந்துவிட்டது. பதிவுகள் , பதில்கள் விரைவில் தொடரும் . என்னைப்பற்றிய உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கு 

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

 

2 hours ago, ரதி said:

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

 

நானும் கேட்க வேண்டும் என்று வர ரதியும் கேட்டிருக்கிறார்.
எதுவோ
உங்கள் அம்மா நலமடைய எல்லோரும் இறைவனை வேண்டுகிறோம்.

நீண்ட நாட்களுக்கு விடுமுறை போவதானால் காணாமல் போகிறோம் (நாற் சந்தி)திரியில் ஒரு கிழமை ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்களுக்கு காணாமல் போகிறேன் என்று ஒரு வரி எழுதிவிட்டால் யாரும் தேடாமல் இருப்பார்கள்.
மீண்டும் கண்டது சந்தோசம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அம்மா உப்ப சுகமாய் இருக்கிறாரா?

 

எங்களை கண்டவுடன் நல்ல உசாராக இருந்தா ரதி. நாங்கள் வெளிக்கிட  திரும்ப சோர்ந்து போய்விட்டா. ஆனாலும் உடல் நிலை இப்ப நல்லா இருக்குது. விசாரித்ததுக்கு நன்றி. 

42 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நானும் கேட்க வேண்டும் என்று வர ரதியும் கேட்டிருக்கிறார்.
எதுவோ
உங்கள் அம்மா நலமடைய எல்லோரும் இறைவனை வேண்டுகிறோம்.

நீண்ட நாட்களுக்கு விடுமுறை போவதானால் காணாமல் போகிறோம் (நாற் சந்தி)திரியில் ஒரு கிழமை ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்களுக்கு காணாமல் போகிறேன் என்று ஒரு வரி எழுதிவிட்டால் யாரும் தேடாமல் இருப்பார்கள்.
மீண்டும் கண்டது சந்தோசம்.

இப்ப பரவாயில்லை அண்ணா. அதுவும் நல்ல ஐடியா தான். ஓரிரு கிழமை இருக்கமாட்டோம் என்று போட்டுவிட்டால் எல்லாருக்கும் தெரியும். கவலை படவோ , தேடவோ மாட்டார்கள். நன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

       எனக்கு சிறு வயதிலிருந்தே சம்பல் பைத்தியம்.3 பிள்ளைகளும் அதே மாதிரி.இப்போது சம்பலுக்கு தடை.அந்த தடையை உடைக்க ஏதாவது வழி இருக்கா என்று தேடுகிறேன்.
      குழல்புட்டு என்றால் தேங்காய் பூவுக்கு பதிலாக கரட்டை சுரண்டி போடுப்படும்.
சிறு வயதில் முட்டுக்காய் தின்னாத நாளே இருக்காது.
        அதே மாதிரி வீட்டு குசினி விறாந்தையில் எந்தக் காலமும் வாழைக்குலை தூங்கும்.
இப்ப வாழைப்பழம் சீனி என்று தடை.
       தடை போடுவதாலோ என்னவோ எனக்கோ கெடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

மிகவும் நன்றி குமாரசாமி அண்ணா. எனக்கும் எல்லோரையும் மீண்டும் சந்தித்ததில் நல்ல சந்தோசம். ஈழப்பிரியன் அண்ணா நல்ல சம்பல், சொதி , தேங்காய் எண்ணெயில் பொறித்த பொரியலுகள் விரைவில் சாப்பிட தொடங்கலாம். 

1 hour ago, ஈழப்பிரியன் said:

       எனக்கு சிறு வயதிலிருந்தே சம்பல் பைத்தியம்.3 பிள்ளைகளும் அதே மாதிரி.இப்போது சம்பலுக்கு தடை.அந்த தடையை உடைக்க ஏதாவது வழி இருக்கா என்று தேடுகிறேன்.
      குழல்புட்டு என்றால் தேங்காய் பூவுக்கு பதிலாக கரட்டை சுரண்டி போடுப்படும்.
சிறு வயதில் முட்டுக்காய் தின்னாத நாளே இருக்காது.
        அதே மாதிரி வீட்டு குசினி விறாந்தையில் எந்தக் காலமும் வாழைக்குலை தூங்கும்.
இப்ப வாழைப்பழம் சீனி என்று தடை.
       தடை போடுவதாலோ என்னவோ எனக்கோ கெடு.

இது என்ன இப்பிடி முட்டுக்கட்டையா கிடக்கு ? பொறுங்க வாறன். கெதியா இது எல்லாம் சாப்பிடுகிறமாதிரி  ஆதாரத்துடன் பதிவை போடுகிறேன். இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் கொஞ்சம் வெள்ளன போட்டிருப்பன் . நியூயோர்க் போய்விட்டர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

நில்மினியை காணவில்லை என்று தேடிய ரதி, ஈழப்பிரியன் ,உடையார் மற்றும் யாழ் கள  நண்பர்களுக்கு நன்றி. அம்மாவுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று தங்கை, தம்பி குடும்பத்தினருடன் அம்மாவை பார்க்க Tennessee சென்று இருந்தேன். யாழ் களத்தை எட்டிப்பார்த்ததுடன் சரி ஒன்றும் எழுத முடியவில்லை. மீண்டும் களம் இறங்கி விட்டேன் இன்றில் இருந்து 

நில்மினியை... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. 
உங்களுக்கு வேறு வேலைப் பளுக்கள் வந்ததால்... இங்கு வரவில்லை என நினைத்தேன்.
அம்மாவுக்கு சுகமில்லாமல் வந்தது, என்று எதிர் பார்க்க வில்லை.
அவர், குணம் அடைந்தது சந்தோசம். அவரை விசாரித்ததாக... சொல்லுங்கள். :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

அம்மாவின் சுகவீனம் தான் காரணம். நேற்று வீடு திரும்பி விட்டேன். கடந்த புதன் சொன்னபடி பதிவிடுவதாக இருந்தேன். முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் போடுகிறேன் அண்ணா 

மீண்டும் கண்டதில் சந்தோசம்; உங்கள் அம்மா நலமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏

5 hours ago, குமாரசாமி said:

நில்மினியை மீண்டும் கண்டதில் சந்தோசம் Willkommen

எதுக்கும் அந்த அந்தாளின்ரை தேங்காயெண்ணை மேட்டரை கெதியாய் முடிச்சு விட்டியளெண்டால்  பொரிக்கிறதை பொரிச்சு வதக்கிறதை வதக்கி நிம்மதியாய் சாப்பிடட்டும்.ஆளை பாக்கவே பாவமாய் கிடக்குTatsch

அந்தளவுக்கு நொந்து போய்விட்டாரா?  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிகவும் நன்றி குமாரசாமி அண்ணா. எனக்கும் எல்லோரையும் மீண்டும் சந்தித்ததில் நல்ல சந்தோசம். ஈழப்பிரியன் அண்ணா நல்ல சம்பல், சொதி , தேங்காய் எண்ணெயில் பொறித்த பொரியலுகள் விரைவில் சாப்பிட தொடங்கலாம். 

ஆகா நல்லசேதி வரப்போகுது நல்லசேதி வரப்போகுது.
ஈழப்பிரியனுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக் கொடுங்கம்மா.நில்மினி அம்மா.

1 hour ago, nilmini said:

நியூயோர்க் போய்விட்டர்களா ?

இல்லையே இன்னும் கலிபோர்ணியா தான்.இரண்டு தடவை போய்வர போட்ட ரிக்கற் மாற்றிமாற்றி இப்ப அடுத்த மாதம் 3திகதி போய் 18 வாற மாதிரி ஒரு ரிக்கற் போட்டிருக்கு.
ஆர்ப்பாட்டங்களால கொரோனா கூடப் போகுது என்கிறார்கள்.நிலமையைப் பார்த்தே போவேன்.

32 minutes ago, உடையார் said:

 

அந்தளவுக்கு நொந்து போய்விட்டாரா?  😀

நொந்து நுhடுல்சா போனன் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகா நல்லசேதி வரப்போகுது நல்லசேதி வரப்போகுது.
ஈழப்பிரியனுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக் கொடுங்கம்மா.நில்மினி அம்மா.

இல்லையே இன்னும் கலிபோர்ணியா தான்.இரண்டு தடவை போய்வர போட்ட ரிக்கற் மாற்றிமாற்றி இப்ப அடுத்த மாதம் 3திகதி போய் 18 வாற மாதிரி ஒரு ரிக்கற் போட்டிருக்கு.
ஆர்ப்பாட்டங்களால கொரோனா கூடப் போகுது என்கிறார்கள்.நிலமையைப் பார்த்தே போவேன்.

நொந்து நுhடுல்சா போனன் உடையார்.

அன்பு காட்டுப்பாடுகளை மீறுவது கடினம். கவலை வேண்டாம் ஈழப்பிரியன், நில்மினி நல்லதொரு தீர்வுடன் வருவார், ஆதாரங்களுடன்.

இவ்வளவு நாளும் தடை செய்ததிற்கு நட்ட ஈடா சுவை சுவையாக  விதம் விதமாக நீங்கள் கேட்பது எல்லாம் சமைக்க சொல்லுங்கள்😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

       எனக்கு சிறு வயதிலிருந்தே சம்பல் பைத்தியம்.3 பிள்ளைகளும் அதே மாதிரி.இப்போது சம்பலுக்கு தடை.அந்த தடையை உடைக்க ஏதாவது வழி இருக்கா என்று தேடுகிறேன்.
      குழல்புட்டு என்றால் தேங்காய் பூவுக்கு பதிலாக கரட்டை சுரண்டி போடுப்படும்.
சிறு வயதில் முட்டுக்காய் தின்னாத நாளே இருக்காது.
        அதே மாதிரி வீட்டு குசினி விறாந்தையில் எந்தக் காலமும் வாழைக்குலை தூங்கும்.
இப்ப வாழைப்பழம் சீனி என்று தடை.
       தடை போடுவதாலோ என்னவோ எனக்கோ கெடு.

நான் விவசாய் குடும்பத்திலை பிறந்து வளர்ந்தவன்.தென்னை,பனை எல்லாம் எனக்கு பரம்பரை சொத்து. அப்பிடியிருக்கேக்கை நானும் எப்பிடியிருந்திருப்பன் எண்டு யோசிச்சு பாருங்கோ.....
நான் முட்டுக்காய் தேங்காய்ப்பூ போட்டு அவிச்ச புட்டை மிஸ் பண்ணுறன்.
நாங்கள் சாப்பிட்டு வளர்ந்தமாதிரி இப்ப அங்கை இருக்கிற இளம் சமுதாயம் ஒண்டையும் அனுபவிக்காது எண்டு நினைக்கிறன். ஏனெண்டால் அங்கையும் கம்பேக்கர்,பிட்சா  மோகம் எல்லாம் கெடுத்துப்போட்டுது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 00:46, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி நீண்டகால குழப்பம் உங்கள் மூலமாகவாவது தெளிவடையலாம் என எதிர்பார்க்கிறேன்.

தேங்காய்
தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டையும் பல டாக்ரர்மாரே குளப்பியடிக்கிறார்கள்.
இதன் நன்மை தீமை பற்றி ஆறுதலாக ஆராந்து ஒரு பதிவை தாருங்கள்
மிகவும் நன்றி.

மிகவும் பிந்திய பதிலுக்கு  மன்னிக்கவும் ஈழப்பிரியன்  அண்ணா 

தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை  கூட்டும்  Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை   தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil,  HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும்  என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat  உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும்.

முட்டையில் மிகக்குறைந்த saturated fat  தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin  போன்ற நோயெதிர்ப்பு  காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை)

கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல்  உடலில் எரிந்து விடும்  என்று  ஆய்வுகள் கூறுகின்றன.  இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Pacific islanders,  60விகிதத்துக்கும்  அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது.

முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை  பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற  பிரச்சனைகள்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான  நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் )

தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil  மற்ற எண்ணெய்களிலும்  ஒரு வித்தியாசமான fattyacid  ஆல்  ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது.

இந்த ஆதாரங்களை  human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம்  போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு  நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது.

எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய்  மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால்  உண்மை விளங்கி விடும்)

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

 

Edited by nilmini
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nilmini said:

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

பெரியதொரு விளக்கம் தந்திருக்கிறீர்கள்.🐹🙏🙏🙏
மிகவும் நன்றி.இரண்டு மூன்று தடவை வாசித்தால்த் தான் கொஞ்சமென்றாலும் விளங்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

அடுத்து லைனில் நிற்பவர் நீங்கள் தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2020 at 22:11, தமிழ் சிறி said:

நில்மினியை... மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. 
உங்களுக்கு வேறு வேலைப் பளுக்கள் வந்ததால்... இங்கு வரவில்லை என நினைத்தேன்.
அம்மாவுக்கு சுகமில்லாமல் வந்தது, என்று எதிர் பார்க்க வில்லை.
அவர், குணம் அடைந்தது சந்தோசம். அவரை விசாரித்ததாக... சொல்லுங்கள். :)

எப்படி சுகம் சிறி. அம்மாவிடம் நீர் சுகம் விசாரித்ததாக சொன்னேன். கேட்டது சந்தோசம் என்று  சொன்னா . உமக்கும் குடும்பத்துக்கும் தனது அன்பை தெரிவிப்பதாகவும் சொன்னா. உமது அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி கதைப்பா . மிகவும் நல்ல மனிதர்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

எப்படி சுகம் சிறி. அம்மாவிடம் நீர் சுகம் விசாரித்ததாக சொன்னேன். கேட்டது சந்தோசம் என்று  சொன்னா . உமக்கும் குடும்பத்துக்கும் தனது அன்பை தெரிவிப்பதாகவும் சொன்னா. உமது அம்மா அப்பாவை பற்றி அடிக்கடி கதைப்பா . மிகவும் நல்ல மனிதர்கள். 

நாங்களும் தானே சுகம் விசாரித்தனாங்கள் சொல்லல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

நாங்களும் தானே சுகம் விசாரித்தனாங்கள் சொல்லல்லையோ?

சொன்னேன் சொன்னேன். குறிப்பிட மறந்துவிட்டேன். வயது போன காலத்தில் இப்படி யாரும் சுகம்  விசாரித்ததாக சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.