Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 05:54, nilmini said:

மிகவும் பிந்திய பதிலுக்கு  மன்னிக்கவும் ஈழப்பிரியன்  அண்ணா 

தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை  கூட்டும்  Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை   தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil,  HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும்  என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat  உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும்.

முட்டையில் மிகக்குறைந்த saturated fat  தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin  போன்ற நோயெதிர்ப்பு  காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை)

கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல்  உடலில் எரிந்து விடும்  என்று  ஆய்வுகள் கூறுகின்றன.  இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Pacific islanders,  60விகிதத்துக்கும்  அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது.

முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை  பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற  பிரச்சனைகள்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான  நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் )

தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil  மற்ற எண்ணெய்களிலும்  ஒரு வித்தியாசமான fattyacid  ஆல்  ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது.

இந்த ஆதாரங்களை  human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம்  போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு  நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது.

எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய்  மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால்  உண்மை விளங்கி விடும்)

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

 

என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல  தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு  உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல  தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு  உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல  தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு  உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்

 

 

பதிவுக்கு நன்றி ரதி. தேங்காய் எண்ணெயும் மற்ற எல்லா எண்ணெய்கள் போல saturated fat உள்ளதுதான். ஆனால் அந்த saturated fat இல் கணிசமான அளவு medium-chain triglycerides fatty acids (Lauric acid ) இந்த  காரணத்தால்  தேங்காய் எண்ணெயை உணவுடன் சேர்க்கும்போது எமது உடல் அதனை உடனடியாக பாவித்து எரித்துவிடும் (Energy requirement ). எனவே  தேங்காய் எண்ணெய் கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் சேகரிக்கப்படுவது குறைவு. அதனால்தான் எடை கூடாது. ஆனால் அத்துடன் சேர்த்து நிறைய மாச்சத்து சாப்பிட்டால் பலன் அவ்வளவு கிடைக்காது. மீன், முட்டை, இறைச்சி, சோயா, பால் உணவுகளுடன் சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும். அத்துடன் தேங்காய் எண்ணெய்   நல்ல கொலஸ்டரோலை (HDL) கூட்டி  கூடாத கொலஸ்டரோலை (LDL) குறைகின்றது. நான் நினைக்கிறன் இன்னும் ஒரு 10 வருடங்களில் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் எல்லாம் Clinical trials மூலம் நிரூபித்து விடுவார்கள். 
அத்துடன் இந்த வீடியோவில் அடிக்கடி உடற்பயிற்சி இல்லாமல் மெலியலாம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். அது பிழை. ஒன்றி சாப்பாடு மிகக்குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது மிகுந்த உடல் உழைப்பு இருக்க வேண்டும். அல்லது உடல் நிறை குறையாது 

6 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? 

On 11/6/2020 at 00:25, குமாரசாமி said:

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

அக்குபஞ்சர் கேள்விக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:
7 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? 

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

அய்யய்யோ அது நீங்களா அண்ணா? சிரிப்பு தாங்க முடியவில்லை . நான் யாரோ தெரியாத ஒரு கள உறுப்பினர் என்று நினைத்தேன் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

பொங்கல் பரிசுக்கு நீண்ட கியூ ...

அந்த வரிசையில்.... 13´வது ஆளாக, 
சிவப்பு சீலை  கட்டிய பெண்மணிக்கு முன் நின்று  போட்டு,
ஒரு அவசர  அலுவலாக... வெளியிலை போட்டு, 
திரும்ப வந்து... என்ரை இடத்திலை  நிக்கலாம் என்றால்...  
அந்த மனிசி....  என்னைப்  போய்.. பின்னுக்கு  நிக்கட்டாம் என்று,  கண்டபடி திட்டுது....  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

அய்யய்யோ அது நீங்களா அண்ணா? சிரிப்பு தாங்க முடியவில்லை . நான் யாரோ தெரியாத ஒரு கள உறுப்பினர் என்று நினைத்தேன் 

எனக்கும் தான் 🤣

நன்றி நில்மினி, நல்ல விரிவான விளக்கம், பலருக்கு உபயோகமாக இருக்கும், நானும் இனி தேங்காய் எண்ணை தான் கூட பாவிக்கனும், இதுவரை canola தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

விரைவில் பதில் தருகிறேன் சிறி 

11 hours ago, ஈழப்பிரியன் said:

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

தம்பிக்கு மூன்றாம் நம்பர். நித்திரை  பிரச்சனைக்கும் அக்குபஞ்சர் பிரச்சனைக்கும் பிறகுதான். ஊர் மட்டுமில்ல உறவும் தான். எண்டாலும் விதிமுறையின் படி போய்ட்டா பிரச்னை இல்லைதானே .😬

10 hours ago, தமிழ் சிறி said:

பொங்கல் பரிசுக்கு நீண்ட கியூ ...

அந்த வரிசையில்.... 13´வது ஆளாக, 
சிவப்பு சீலை  கட்டிய பெண்மணிக்கு முன் நின்று  போட்டு,
ஒரு அவசர  அலுவலாக... வெளியிலை போட்டு, 
திரும்ப வந்து... என்ரை இடத்திலை  நிக்கலாம் என்றால்...  
அந்த மனிசி....  என்னைப்  போய்.. பின்னுக்கு  நிக்கட்டாம் என்று,  கண்டபடி திட்டுது....  :grin: 🤣

😂 சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. எதுக்கும் லைன விட்டுட்டு போகேக்க சொல்லிட்டு போயிருந்தால் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும் 

Edited by nilmini
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

 

😂 சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. 

இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?

சீ சிறியிண்ட நிறம் பருவாயில்லை . நான் சொன்னது லைனில நடுவில நிக்கிற ஆளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 

அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான  ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: 

 

https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது இந்த ஆண்டின் ஜனவரியில் அமெரிக்காவின் நம்பிக்கையான AHA அமைப்பின் Circulation என்ற விஞ்ஞான சஞ்சிகையின் 16 ஆய்வுகளை செய்த meta-analysis முடிவு: 

https://www.ahajournals.org/doi/10.1161/CIRCULATIONAHA.119.043052

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

எனக்கும் தான் 🤣

நன்றி நில்மினி, நல்ல விரிவான விளக்கம், பலருக்கு உபயோகமாக இருக்கும், நானும் இனி தேங்காய் எண்ணை தான் கூட பாவிக்கனும், இதுவரை canola தான் 

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

 

 

spacer.png

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 

7 hours ago, Justin said:

அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான  ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: 

 

https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.

 

அப்பாடா......இப்பதான் அளவான சிங்கம் வந்திருக்கு....🎩

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்😋

உங்களைப்போன்றவர்களின் ஆராய்ச்சியாளர்கள் வியாபார ரீதியாக ஆய்வுகளை செய்யும் போது சுத்தமான காற்றும் நஞ்சாகத்தான் தெரியும்.

குளம் குட்டையிலை நிக்கிற தண்ணியை குடிச்சு வராத வருத்தங்கள் எல்லாம் போத்தில்லை அடைச்சு வாற சுத்திகரிக்கப்பட்ட தண்ணியாலை வருது கண்டியளோ! அதுக்குள்ளை விற்றமீன் நிரம்பியிருக்கெண்டு வேறை அடிச்சு விடுறாங்கள்.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

 

 

spacer.png

இந்த brand தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த கடையில் பார்க்கனும். நேற்று தேங்கய் எண்ணை வாங்கி மீன் பெரித்து சாப்பிட்டோம், மணமும் சுவையும் ஊரில் சாப்பிட்ட மாதிரி,  இதுவரை பயத்தில் பாவிப்பதில்லை, இனி இதுதான்

தேங்காய் எண்ணை விலை அதிகமிங்கு 2L - AUD16/-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இந்த brand தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த கடையில் பார்க்கனும். நேற்று தேங்கய் எண்ணை வாங்கி மீன் பெரித்து சாப்பிட்டோம், மணமும் சுவையும் ஊரில் சாப்பிட்ட மாதிரி,  இதுவரை பயத்தில் பாவிப்பதில்லை, இனி இதுதான்

தேங்காய் எண்ணை விலை அதிகமிங்கு 2L - AUD16/-

உடையார் இது கொஸ்கோ பிரான்ட்.கொஸ்கோவில் முயற்சி பண்ணுங்கள்.

5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

          இங்கு மலையாளிகள் கிழமைக்கு கிழமை அள்ளிக் கொண்டு போவார்கள்.சிலருடன் கதைத்த போது ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தேங்காய் பாவிப்பார்களாம்.
          இங்கு ஜஸ்ரின் இணைப்பிலும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி தரவுகளைக் கொடுத்து உலகை நம்ப வைத்து நன்மை என்ற பெயரில் தீமையே செய்கிறார்கள்.
          இயற்கை விவசாயத்தையே அழித்தவர்கள் அல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

அப்பாடா......இப்பதான் அளவான சிங்கம் வந்திருக்கு....🎩

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்😋

உங்களைப்போன்றவர்களின் ஆராய்ச்சியாளர்கள் வியாபார ரீதியாக ஆய்வுகளை செய்யும் போது சுத்தமான காற்றும் நஞ்சாகத்தான் தெரியும்.

குளம் குட்டையிலை நிக்கிற தண்ணியை குடிச்சு வராத வருத்தங்கள் எல்லாம் போத்தில்லை அடைச்சு வாற சுத்திகரிக்கப்பட்ட தண்ணியாலை வருது கண்டியளோ! அதுக்குள்ளை விற்றமீன் நிரம்பியிருக்கெண்டு வேறை அடிச்சு விடுறாங்கள்.😎

 

அண்ணை,

அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! 

இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க  இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! 

இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

 

 

spacer.png

எங்கட தமிழ்,இந்திய கடைகளில் விற்கும் தே.எண்ணெய் பாவிக்கலாமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

அண்ணை,

அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! 

இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க  இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! 

இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! 

 

இதில ஆத்திரப்படுறத்திற்கோ ,கோபப்படுறத்திற்கோ எதுவும் இல்லை யஸ்டின் ..முந்தி இங்கு தேங்காய் பாலோ ,தேங்காயோ சுப்ப மாக்கெட்டில் காண கிடைக்காது. பாவிக்கவே கூடாது என்று சொல்லிச்சினம்  ...ஆனால் இப்ப சான்விச் ,ஸ்நாக்ஸ் இருக்கும் பக்கம் தேங்காய் சொட்டு பக் பண்ணி விக்கிறான் ...கோப்பி கடைகளுக்கு போனால் தே. பாலில் கோப்பி கேட்க்கினம் ...எதை விற்பது/கூடாது என்று தீர்மானிப்பது காப்பிரேட் கொம்பனிகள் தான் ...அதைத் தான் என்ர அண்ணரும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
பசுப்பால் கூட எல்லோருக்கும் ஒத்துக்க கொள்ளாது...அதுக்காக பொதுவாய் பாலே கூடாது என்ற முடிவுக்கு வர கூடாது அல்லவா

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இதில ஆத்திரப்படுறத்திற்கோ ,கோபப்படுறத்திற்கோ எதுவும் இல்லை யஸ்டின் ..முந்தி இங்கு தேங்காய் பாலோ ,தேங்காயோ சுப்ப மாக்கெட்டில் காண கிடைக்காது. பாவிக்கவே கூடாது என்று சொல்லிச்சினம்  ...ஆனால் இப்ப சான்விச் ,ஸ்நாக்ஸ் இருக்கும் பக்கம் தேங்காய் சொட்டு பக் பண்ணி விக்கிறான் ...கோப்பி கடைகளுக்கு போனால் தே. பாலில் கோப்பி கேட்க்கினம் ...எதை விற்பது/கூடாது என்று தீர்மானிப்பது காப்பிரேட் கொம்பனிகள் தான் ...அதைத் தான் என்ர அண்ணரும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
பசுப்பால் கூட எல்லோருக்கும் ஒத்துக்க கொள்ளாது...அதுக்காக பொதுவாய் பாலே கூடாது என்ற முடிவுக்கு வர கூடாது அல்லவா

தங்கச்சி நீங்கள் நம்புறியளோ இல்லையோ .. எனக்கு ஒரு டாக்குத்தர் சொன்னதை சொல்லுறன். என்ரை மூட்டு வலிகளுக்கு பாலும் அது சம்பந்தப்பட்ட பால் தயாரிப்புகளையும் பாவிக்க வேண்டாம் எண்டு சொன்னவர். நானும் ஒருமாதம் எடுக்காமல் விட்டுப்பாத்தன் அரைப்பங்கு வலிகள் குறைஞ்சிட்டுது. பாலில் கெட்டுப்போகமல் இருக்க பாவிக்கப்படும் இரசாயனப்பொருள் தான் வலிகளுக்கு முக்கிய காரணமாம். அது போலதான் பன்றி இறைச்சியும். தோல் வெடிப்புகளுக்கு வெள்ளையள் இப்ப தேங்காய் எண்னை பூச வெளிக்கிட்டினம்.
இப்ப புதினம் என்னெண்டால் வெள்ளையள் எங்களை விட உறைப்பு சாப்பிட வெளிக்கிட்டினம். உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.😀

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.😀

எதில எங்கே ஐயா எனேர்ஜி?இதுகளை எங்களோடு பகிரக் கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது கொஸ்கோ பிரான்ட்.கொஸ்கோவில் முயற்சி பண்ணுங்கள்.

          இங்கு மலையாளிகள் கிழமைக்கு கிழமை அள்ளிக் கொண்டு போவார்கள்.சிலருடன் கதைத்த போது ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தேங்காய் பாவிப்பார்களாம்.
          இங்கு ஜஸ்ரின் இணைப்பிலும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி தரவுகளைக் கொடுத்து உலகை நம்ப வைத்து நன்மை என்ற பெயரில் தீமையே செய்கிறார்கள்.
          இயற்கை விவசாயத்தையே அழித்தவர்கள் அல்லவா?

நன்றி ஈழப்பிரியன் தரவிற்கு, அங்கு வாங்குகின்றேன் அடுத்த முறை 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.