Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎07‎-‎2020 at 15:45, nilmini said:

ரதி உங்களுக்கு நிச்சயமாக காது , தொண்டை, மூக்குப்பகுதியில் எதோ ஒரு பிரச்சனை இருக்கு. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பது என்றபடியால் உரிய நேரத்தில் கவனம் எடுக்காவிட்டால் ஒரு இடத்தில் இருந்து துடங்கி மற்ற இடங்களுக்கும் பரவும். அத்துடன் மூக்கு, நடுக்காதில் இருந்தெல்லாம் மூளைக்கும் சிலவேளை தாக்கம் வரும் ( இது அரிதென்றாலும் தெரிந்திருப்பது நல்லது) காதுக்குப்பின்னால் நோ இருக்குதா?   வெக்கை காலத்தில் வருவது போவது எல்லாம் வேறு ஏதாவது காரணிகளால் இருக்கலாம். அத்துடன் காதுக்குள் அடிக்கடி கிர் என்று கேப்பது பிற்காலத்தில் காது கேக்கும் தன்மையை குறைக்கும். எனவே நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் Referral வாங்கி specialist மருத்துவரை உடனடியாக பார்க்கவும். இது ஏன் உங்களுக்கு வந்தது என்று யோசிக்கவேண்டாம். மரபு வழியாக, குளிர் exposure ஆள் மற்றும் பொதுவான உங்கள் உடல் அமைப்பு இவை தான் காரணமாக இருக்கும். இப்பதான் எல்லாவற்றுக்கும் வைத்தியம் இருக்கு. இந்த மாதிரி  பிரச்சனைகள் ஆங்கில மருத்துமுறையால் தான் நிரந்தர அல்லது நீண்ட கால தீர்வு காணலாம். 

 

spacer.pngspacer.png

ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி அண்ணாவின் பதிவுகளுக்கு விளக்கமாக உரிய நேரத்தில் respond  பண்ண முடியவில்லை. இன்றுதான் முழுவதும் வாசிக்க போகிறேன். 

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

உண்மை தான் அண்ணா .கொண்டு போய் காட்ட தான் வேணும் . நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 05:37, nilmini said:

 

வணக்கம் நில்மினி! மீண்டும் ஒரு கேள்வியுடன்......

எனக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மூட்டுவலிகள் ஓரளவு குறைந்தமாதிரி தெரிகின்றது.இருந்தாலும் நான் வழமையாக எடுத்த வலி மாத்திரையை(Tilidin ) இப்போது விட முடியவில்லை.ஒரு நாளைக்கு எடுக்கா விட்டால் கை காலெல்லாம் பதறுகின்றது. ஏதோ போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் இருக்கின்றது.இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கின்றதா? எனது வீட்டு வைத்தியரும் 3வாரம் விடுமுறையில் சென்று விட்டார். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன்
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி! மீண்டும் ஒரு கேள்வியுடன்......

எனக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மூட்டுவலிகள் ஓரளவு குறைந்தமாதிரி தெரிகின்றது.இருந்தாலும் நான் வழமையாக எடுத்த வலி மாத்திரையை(Tilidin ) இப்போது விட முடியவில்லை.ஒரு நாளைக்கு எடுக்கா விட்டால் கை காலெல்லாம் பதறுகின்றது. ஏதோ போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் இருக்கின்றது.இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கின்றதா? எனது வீட்டு வைத்தியரும் 3வாரம் விடுமுறையில் சென்று விட்டார். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன்
நன்றி

வணக்கம் குமாரசாமி அண்ணா. Tilidin செயற்கை முறையில் செய்த போதை மருந்துதானே? திடீரெண்டு Tilidin  மருந்தை விடக்கூடாது. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைச்சு எடுத்துப்பாருங்கள். அக்குபஞ்சர்  சிகிச்சையும் ஓரிரு முறைகள் செய்தவுடன் வேலை செய்யாது ( உங்கள் அக்குபஞ்சர் வைத்தியர் சொல்லியிருப்பா) என்றபடியால் எவ்வளவுக்கு குறைத்து Tilidin எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்கவும். அக்குபஞ்சரையும் செய்துகொண்டு  Tildin ஐயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து க்கொண்டு வந்தால் நல்லது. ஒரேயடியாக நிப்பாட்டுவது கூடாது . 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

வணக்கம் குமாரசாமி அண்ணா. Tilidin செயற்கை முறையில் செய்த போதை மருந்துதானே? திடீரெண்டு Tilidin  மருந்தை விடக்கூடாது. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைச்சு எடுத்துப்பாருங்கள். அக்குபஞ்சர்  சிகிச்சையும் ஓரிரு முறைகள் செய்தவுடன் வேலை செய்யாது ( உங்கள் அக்குபஞ்சர் வைத்தியர் சொல்லியிருப்பா) என்றபடியால் எவ்வளவுக்கு குறைத்து Tilidin எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்கவும். அக்குபஞ்சரையும் செய்துகொண்டு  Tildin ஐயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து க்கொண்டு வந்தால் நல்லது. ஒரேயடியாக நிப்பாட்டுவது கூடாது . 

ஆலோசனைக்கு நன்றி நில்மினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

நீங்களும் புரட்சியும்  இப்ப ஈழத்தமிழர் இல்லையா , நாங்கள் உங்களை ஈழத்தமிழாராய் ஏற்று கனகாலமாச்சுது ......!   😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

ஈழப்பிரியன்... சொல்வது, சரி... வன்னியன். 
நில்மினி... எப்பவும், எல்லோருக்கும் உதவக் கூடிய மனப் பான்மை, உள்ளவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

என்ன சிறி, பாதி மல்லுவாக சொல்கிறீர்களே..? அப்போ புட்டுக்குள் அப்பளம், வாழைப்பழத்தை பிசைந்து அடிக்க சொல்வீர்களோ..?

லங்கனாக 'லங்கோடு கட்டுங்கள்' என சொல்லாதவரை சரிதான்..! 😜

2 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

 

 

ஆனி போய், ஆவடி போய் அமாவாசையும் வந்தாச்சுது, அம்மணியிடமிருந்து பதில் வர இல்லை.. நானும் மதியமானால் தூங்கித் தூங்கி, அதுவே பழகி பிடித்தும் போச்சு.😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

..இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?...

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஓரிரு மாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

Edited by nilmini
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

 

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

 

 

இப்பிடித்தான் சாப்பிடுகிறது. நானும் அக்காவும் செய்த இடியப்பம், புட்டு, சம்பல், சொதி , முருகைக்காய் கறி , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ,வெங்காயப்பொரியல் 

DSC-2994.jpg

 

spacer.png

spacer.png

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

🤣இந்த சொல்லுகளை அடிக்கடி பாவித்தால் தான் தமிழ் கதைச்ச மாதிரி இருக்கும். ஞாபபகப்படுத்தியத்துக்கு நன்றி. இப்பிடி நான் வீட்டில் கதைப்பதால் மகன்மாருக்கு இந்தமாதிரி சொல்லுகள்தான் தமிழில் கூடுதலாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஒருமாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, அம்மணி. இதற்கு ஏன் மன்னிப்பு அம்மணி..?  நான் எழுதியது பகடிக்குத்தான்..:)

வேலைப் பளுவால் சில மாதங்கள் களத்திற்கு வர இயலவில்லை.

தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருக்கும்போது இரவு 10 மணிக்குதான் தூங்க செல்வது. ஏனெனில் அங்கு அலுவலக வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை. அந்த வழக்கத்திற்கு உடல் பழகிக்கொண்டது. மேலும் வேலையில் அதிக அழுத்தம் இருப்பதில்லை. நிதியாண்டு வருட இறுதியான மார்ச் மாதத்தில் மட்டும் அதிக வேலைப் பளு, மன அழுத்தம் இருக்கும்.

அதற்கு நேர் மாறானது மத்தியக் கிழக்கு நாட்டு பகுதியில் என்னுடைய வாழ்க்கையும், அலுவலக நடைமுறைகளும்.

காலை 7 மணிக்கு வேலை ஆரம்பித்து மதியம் 3 மணிக்கு முடிந்துவிடும் அலுவலகம்.

ஏனெனில் இங்கு பிற்பகலில் வெப்பம் மிக அதிகம். ஜூலை மாதத்தில் சர்வசாதரணமாக 50 பாகை வெப்பம் இருக்கும்.ஆகவே அரசும் கோடை காலைத்தில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் பிற்பகல் 12:30 லிருந்து 3 மணி வரை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் வேலைகள் நகருக்கு வெளியே பாலைவனத்திற்குள்ளேயே இருக்கும்.

வேலையும் பெண்டு கழன்றுவிடும். இங்கு சொகுசான வேலைகளை உள்நாட்டு அரபிகளும், மாங்கு மாங்கென உழைக்கும் மண்டை காயும் வேலைகளை வெளிநாட்டினரும் செய்ய வேண்டும். அதற்குத்தானே வெளிநாட்டினர் இங்கே..!

இருக்கும் வேலைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாமென தள்ளிப்போட இயலாது. வேலையில் சிறு சிறு தவறுகளுக்கும் தண்டனை அதிகம். அந்த நிமிடமே வேலை போய்விடும், நம் கவனக்குறைவால், தாமதத்தால் பாதிப்பு அதிகமெனில் சிறைக்கும், தண்டைனை முடிந்தவுடன் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தலும் உண்டு.வேலையில் கவனம் மிக மிக முக்கியம்.

(சில மாதங்களுக்கு முன்னர் கூட அலுவலகத்தில் உயர் பதவியிலுள்ள ஒரு இந்தியர், 'என்ன தவறு செய்தார்..?' என சரியான விபரங்கள் யாருக்கும் தெரியாது, போலீஸ் வந்து கூட்டிச் சென்றது, இதுவரை அவர் எங்கிருக்கார் என தெரியவில்லை. அனேகமாக அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டிருப்பார்.)

ஆகவே காலை முதல் மண்டை காயும் வேலைகளை, அழுத்தங்களை சமாளித்து வீட்டுக்கு மதியம் 3 மணிக்கு திரும்பினால் உடலும், மனமும் ஓய்விற்கு ஏங்கும். புறத்தில் வெப்பமும் மிக அதிகமாக இருப்பதால் கண்கள் தூக்கத்திற்கு காத்திருக்கும். மதிய உணவிற்குப் பின் தூங்கிவிடுவேன். இதே பழக்கத்தை விடுமுறைக்கு தமிழகம் சென்றாலும் உடல் தொடருகிறது.

இப்படியே வாழ்க்கை 21 வருடமாக ஓடுகிறது. இப்பதிவை எழுதும்ப்போதுகூட மதியம் பக்ரீத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு முன்னிரவு 8:30 மணிக்குத்தான் எழுந்தேன்.

இனி உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு..

எனக்கு லேசான சுகர் உண்டு. அதற்கு சென்னை மருத்துவர் சொன்னபடி தினமும் குளிசைகளை காலை மட்டும் எடுத்து வருகிறேன். எப்பொழுதாவது நடைப்பயிற்சி உண்டு.

நீங்கள் கூறும் 10 mg Melatonin பற்றி இங்கு கடைகளில் கேட்டுப் பார்க்கிறேன். சில மருந்துகளை, மருத்துவர்களின் சிபாரிசு கடிதம் இல்லாமல் கடைகளில் கொடுக்க மாட்டார்கள்.

இம்மருந்து, எளிதாக கிடைக்கும் மருந்தா..?

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

spacer.png

இந்தப் படத்தில் சிவப்பா இருக்கும் உணவுக்கு பெயர்தான் சாம்பலா..?

இந்த இடியாப்பத்துக்கு நாங்கள் சீனி போட்ட தேங்காய்ப் பாலை தான் தொட்டுக்கொள்ள பாவிப்பது.

இங்கேயிருக்கும் மல்லுகள்தான், வேக வைத்த கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு பயறு, துவரம்பருப்பு பயறு போன்றவற்றை மசாலாவாக செய்து சேர்த்து உண்பார்கள்.

 

3 hours ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

நான் இணைத்த படம், யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்கு அண்மித்த வலம்புரி ஓட்டலில் கிடைக்கிறது, கு.சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

வணக்கம். மெலடோனின் மருந்துக்கடைகளில் Prescription இல்லாமல் கிடைக்கும். இது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத, எமது உடலில் சுரக்கப்படும் மெலடோனினுக்கு இணையான ஒரு ஹோர்மோன். ஆனால் எந்த மருந்தை எடுத்தாலும் மனசு அமைதியடையாமல் படபடத்தால் நித்திரை குளம்பும் .

ஓம் மத்தியகிழக்கு நாடுகளில் எம்மவரின் வேலை சட்ட திட்டங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். 

மலையாளிகள் கடலைக்கறியுடன் சாப்பிடுவார்கள். அவர்கள்  புட்டு இடியப்பம் செய்யும் முறையும் வித்தியாசம். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 13:51, nilmini said:

 

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

உடம்பு நிறை கூடும்  , டயபிட்டீஸ் வரும் என்று நினைக்கிறேன் ...நில்மினி வந்து மேலதிக விளக்கம் தருவா 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.