Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 10:59, goshan_che said:

ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nilmini said:

 

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

4 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

என்னத்த நினைத்து சிரிச்சனீங்கள் என்று தான் கேட்டேன் 😂அப்ப பேசாம கொழுப்பு கூடின மீன் வகைகளை எல்லாரும் சாப்பிட்டு வெள்ளயாகவே இருங்கோ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

 

1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. 

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

நானும் சாடை மாடையா அப்படிதான் யோசிச்சன் சிறி 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

3 hours ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

நல்ல தகவல் உடையார் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

 

11 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

10 hours ago, உடையார் said:

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

 

9 hours ago, nilmini said:

நல்ல தகவல் உடையார் 

நல்ல தகவலுக்கு நன்றி உடையார்.

உள்ளங்கையை விரித்தபடி நான் பார்க்கில் போய் நிற்க யாரும் 50 பென்ஸ் குத்தியை வைத்து விட்டுபோனாலும் லாபம்தானே😂

டொக்டர் எனக்கு இன்னுமொரு டவுட்,

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  ஒழுங்கை வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்பாவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

Edited by nilmini
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்படவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஆனால் ஹாமர்ஸ் அவனியுவில் விளையாடுவது இல்லை. அது ஒடுக்கமான ஒழுங்கைதானே. 

நெல்சன் பிளேஸ்- பொஸ்வெல் பிளேஸ் இடையான பின் வீதி, கொலிங்வூட் பிளேஸ், லில்லி அவனியியு இடையான பின் வீதி இவற்றில் விளையாட்டு நடக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

🤣 என்னுடைய எழுத்தை பார்த்தே என்னை இளமையாக நினைத்தீர்களா? நல்லவேளையாக என் முகத்தை பார்க்கவில்லை, 22 வயதுக்கு மேல் மதிச்சிருக்க மாட்டியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

மிகவும் நன்றி ஐயா . நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களுக்கும் எம்மால் இயன்றதை செய்ய வேணும் என்றுதான் முயற்சிக்கிறேன் :295_rose:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 13:55, goshan_che said:

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஓமோம். அப்போதே மாலைதீவு போய்விட்டேன். ஆனால் வருடத்துக்கு 3 தரம் வீட்டுக்கு வருவேன். அப்போது கடற்கரை பக்கம் வந்தால்  பெடியள் விளையாடுவதை பார்த்தமாதிரிதான் இருக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 07:24, ஈழப்பிரியன் said:

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

இந்த மயிலிறகு விளையாட்டு இலங்கை முழுவதும் நடந்திருக்கு போல. நான் மாத்தளை பள்ளிக்கூடத்தில் இதைத்தான் நண்பிகளுடன் செய்தேன். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 16:05, nilmini said:

 

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

 

நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன்  உண்மையாக உழைப்பவர்கள்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு கு.சா.......நன்றி.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.