Jump to content

உருளைக்கிழங்கு/மாலு பணிஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு/மாலு பணிஸ்

அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக   மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒரு துண்டு. முதலில் கொத்தமல்லியை 5 நிமிடம் வறுக்கவும், பிறகு மிச்சம் எல்லாத்தயும் சேர்த்து நல்லா கறுக வறுத்து தூளாகவும் (கடும் மண் நிறமாக இருக்க வேண்டும்)

பாரமான தாச்சியில் தேங்காய் எண்ணை ( அல்லது விரும்பியது) விட்டு கடுகு வெடித்து, வெங்காயம், இஞ்சி உள்ளி , ரம்பை, கருவேப்பில்லை,முதலி வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும், பிறகு உருளை கிழங்கை போடவும். தனி மிளகாய் தூள், மிளகு தூள், சிங்கள தூள் போடவும் நன்றாக பிரட்டி விட்டு ( குறைந்த நெருப்பில்) பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கவும், ருசிக்கும் சிறிது தண்ணீரை அடிபாகத்தில் விட்டு கிளறவும். கடைசியில் தேசிக்காய் புளி  விடவும். மச்சம்  சேர்ப்பதாக இருந்தால் அதனை தனியாக மஞ்சள், உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கி சேர்க்கவும்.

500 கிராம் மா ( வெள்ளை), 1 1/2 கப் இளஞ்சூட்டு தண்ணி, (7 கிராம் dry yeast , 1 தேக்கரண்டி சீனி , 5 மேசைக்கரண்டி இளஞ்சூட்டு தண்ணீர் இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு கலந்து 10 நிமிடம் விட்டால் நுரை வரும். வராவிட்டால் பழைய ஈஸ்ட் என்று அர்த்தம்), 1 தேக்கரண்டி உப்பு ( பார்த்து போடவும்), 1 மேசைக்கரண்டி பால் , 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது பட்டர் . முதலில் மா, பால் மா, உப்பு, தேங்காய் எண்ணெய் நன்றாக கலந்து , பிறகு இளஞ்சூட்டு தண்ணீரை விட்டு , ஈஸ்ட் கலவையும் விட்டு நன்றாக குழைக்கவும் ( food  processor அல்லது doug mixer மெஷின் பாவிக்கலாம்.  (Slow speed 10 minutes). கையால் குழைத்தால் நிறைய வேலை. 

இப்ப ஒரு ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் வைக்கவும். பணிஸ் செய்வதற்கு இந்த முறையை பின் பற்றவும். அல்லது நீளமாகவும் மடிக்கலாம் . எல்லாவற்றயும் மடித்த பின் திரும்ப 10 நிமிடம் துணியால் மூடி வைக்கவும்  . முட்டையை நன்றாக அடித்து ஒரு brush ஆள் மேல் பக்கம் பூசவும். இப்பத்து 220 பாகையில் 20 நிமிடம் bake பண்ணவும் ( இது வேறுபடும். என்றபடியால் பாத்து செய்யவும்)

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

 

Maalupaan.jpgMaalupaan1.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

மாலுபணிசைப் பார்க்க வாயூறுது.
இணைப்புக்கு நன்றி.

நில்மினி நீங்கள் சமையல் குறிப்பை கீழுழ்ழ இணைப்பில் இணைத்தால் நல்லது.

அல்லது மட்டுறுத்தினர்கள் தாங்களாகவே நகர்த்திவிடுவார்கள்.

 

https://yarl.com/forum3/forum/46-நாவூற-வாயூற/

48 minutes ago, nilmini said:

முட்டையை நன்றாக அடித்து ஒரு brush ஆள் மேல் பக்கம் பூசவும். இப்பத்து 220 பாகையில் 20 நிமிடம் bake பண்ணவும் ( இது வேறுபடும். என்றபடியால் பாத்து செய்யவும்)

இறக்கிய பின் முட்டையை பூசுகிறீர்களா?அல்லது முதலே பூசுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இனிமேல் இணைப்பை  அதில் பதிவிடுகிறேன் . பணிஸ் நன்றாக இருந்தது. மூன்று பங்கு முட்டைக்கு ஒரு பங்கு பால் அல்லது தண்ணீர் விட்டு நன்றாக அடித்து bake பண்ணாமல் பூசவும் (egg wash ), முட்டையும் பாலும் சேர்த்தால் கரகரப்பாக,மினுமினுப்பாக பிரவுண் நிறத்தில் வரும். தண்ணி சேர்த்தால் soft ஆக வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலுபணீஸ்  பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் ஒரு சந்தேகம். நீங்கள் அதற்கு மீன் சேர்க்க வில்லையா.....!  🐋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நில்மினி ...மீன்  சேர்க்காமல் அது எப்படி மாலு பணிஸ் ஆகும்😊 ...உருளைக்கிழங்கு பணிஸ் என்று சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் சேர்ப்பர்களுக்கு அது மாலு பணிஸ் ரதி 

இந்தமுறை சேர்க்கவில்லை சுவி. சேர்ப்பதாக இருந்தால் டின் மீனை மசித்து சேர்த்து செய்யலாம். மிளகு தூள் , தேசிக்காய் புளி கொஞ்சம் கூட போட வேண்டும் 

Link to comment
Share on other sites

4 hours ago, nilmini said:

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

பல ஈழத்தமிழரும், ஏன் தாய்த்தமிழக திரைப்படங்களில் கூட 'மாலு' என சிங்கள மீன் சொல்லு பதிந்து விட்டது. அதற்கு பாட்டும் ( சுறாங்கனியும் ) ஒரு முக்கிய காரணம். 

'மாலு' பாண் சுவையாக இருக்கும், இருந்தாலும் 'மாலு பணிஸ்' சொல்லும்போது தனி சுவை அதில்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nilmini said:

நான் செய்த மாலு பாண் முட்டை பிரஷ்ஷினால் பூசாதனால் மினுங்கவில்லை. ஆனால் ருசியாக இருந்தது

Maalupaan.jpg

நில்மினி, இவ்வளவு மினக்கெட்டு...செய்துவிட்டு, முட்டை பிரஷ்ஷினால்.... பூச, பஞ்சிப் படலாமா?
நல்ல... பளபளப்பாக மினுங்க வேண்டிய பணிஸ்..... 
மேக்கப் போடாத... நடிகையின் முகம்   மாதிரி  இருக்கே... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

மீன் சேர்ப்பர்களுக்கு அது மாலு பணிஸ் ரதி 

இந்தமுறை சேர்க்கவில்லை சுவி. சேர்ப்பதாக இருந்தால் டின் மீனை மசித்து சேர்த்து செய்யலாம். மிளகு தூள் , தேசிக்காய் புளி கொஞ்சம் கூட போட வேண்டும் 

Résultat de recherche d'images pour "hitting with belt gif"

பரவாயில்லை மகளே...!  இது எனக்காக செய்தது.மாமிசபட்சினிகள் யாரும் கிட்ட  வந்தால் இருக்குது.....!   😄

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி,
நேற்று நான் செய்தது. இது இடைக்கிடை partyகளுக்கு  செய்வது, உருளைக்கிழங்கு நிறைய இருந்ததாலும் நிறைய டின் பிஷ் இருந்ததாலும், பழுதாக முதல் ஏதாவது செய்து விடுவோம் என்று மாலு பாண் செய்தேன். பாண் mix கிட்டத்தட்ட நீங்கள் செய்வது மாதிரிதான் நானும் செய்வது, அளவுகளுக்கு  கீழ்கண்ட தளத்தில் இருக்கும் முறை எப்பொழுதுமே பிழைப்பதில்லை. இவர்கள் பால் சிறிது கூட விடுகிறார்கள், முட்டையும் போடுகிறார்கள்.

கறிக்கு நான் கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலையுடன், வெங்காயம், லீக்ஸ் போட்டு வதக்கி, டின் பிஷ் போட்டு மஞ்சளுடன் வதக்கி பிறகு அவித்த மசித்த உருளைக்கிழங்கு போடுவேன், உறைப்புக்கு எமது தூளும், மிளகும் சேர்த்து குறைந்த சூட்டில் கிளறுவேன். நன்றாக இருப்பதாக இங்கு சொல்லுவார்கள். 

spacer.png

spacer.png

https://www.dailyfoodrecipes.com/fish-bun-maalu-paan-malu-pan/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீன் போட்டுச் செய்வதுதான் மாலு பணிஸ் நில்மினி. இது உருளைக்கிழங்கு பணிஸ். சிங்களத்தில் மீனுக்கு  மாலு என்று பொருள். அதனால்த்தான் மாலு பண் என்று கூறுவது என்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள் .

Link to comment
Share on other sites

உண்மை  மாலு  என்றால் மீன் , எல்லோரும் நன்றாக  செய்து  இருப்பதாக  தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2020 at 23:15, தமிழ் சிறி said:

நில்மினி, இவ்வளவு மினக்கெட்டு...செய்துவிட்டு, முட்டை பிரஷ்ஷினால்.... பூச, பஞ்சிப் படலாமா?
நல்ல... பளபளப்பாக மினுங்க வேண்டிய பணிஸ்..... 
மேக்கப் போடாத... நடிகையின் முகம்   மாதிரி  இருக்கே... :grin:

சிறி உமக்கு ஏன் இப்படி ஒரு பகிடி? Bake பண்ணமுதல் Egg wash உம் , பண்ணியபிறகு butter wash உம் கொடுக்கவில்லை என்று போட்டனான் தானே ? 😂

On 18/4/2020 at 22:34, நீர்வேலியான் said:

நில்மினி,
நேற்று நான் செய்தது. இது இடைக்கிடை partyகளுக்கு  செய்வது, உருளைக்கிழங்கு நிறைய இருந்ததாலும் நிறைய டின் பிஷ் இருந்ததாலும், பழுதாக முதல் ஏதாவது செய்து விடுவோம் என்று மாலு பாண் செய்தேன். பாண் mix கிட்டத்தட்ட நீங்கள் செய்வது மாதிரிதான் நானும் செய்வது, அளவுகளுக்கு  கீழ்கண்ட தளத்தில் இருக்கும் முறை எப்பொழுதுமே பிழைப்பதில்லை. இவர்கள் பால் சிறிது கூட விடுகிறார்கள், முட்டையும் போடுகிறார்கள்.

கறிக்கு நான் கடுகு, பெரும்சீரகம், கறிவேப்பிலையுடன், வெங்காயம், லீக்ஸ் போட்டு வதக்கி, டின் பிஷ் போட்டு மஞ்சளுடன் வதக்கி பிறகு அவித்த மசித்த உருளைக்கிழங்கு போடுவேன், உறைப்புக்கு எமது தூளும், மிளகும் சேர்த்து குறைந்த சூட்டில் கிளறுவேன். நன்றாக இருப்பதாக இங்கு சொல்லுவார்கள். 

spacer.png

spacer.png

https://www.dailyfoodrecipes.com/fish-bun-maalu-paan-malu-pan/

பதில் போட பிந்தியமைக்கு மன்னிக்கவும். எனக்கு அறிவுப்பு வரவில்லை. நீங்கள் செய்துள்ள மாலுபணிஸ் மிகவும் professional ஆக இருக்குது. நல்ல Shape உம் கலரும் கறி செய்முறையும் வித்யசமாக இருக்கு. அடுத்தமுறை செய்யும் போது நீங்கள் பதிவிட்ட லிங்கில் இருந்து எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன். செய்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன். 

1 hour ago, Thamarai.k said:

உண்மை  மாலு  என்றால் மீன் , எல்லோரும் நன்றாக  செய்து  இருப்பதாக  தெரிகிறது 

உங்கள் பதிவுகள்,  அசத்தலான மாலு பணிசுகளை  இப்பதான் பாக்கிறேன் . பதில் போட அல்லது  மார்க்ஸ் போட ( ஏனெனில் நான் தான் செஃப் )  பிந்தியத்துக்கு மன்னிக்கவும் :). எனோ தெரியவில்லை எனக்கு அறிவிப்பு மணியில் இது வரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் போட்டுச் செய்வதுதான் மாலு பணிஸ் நில்மினி. இது உருளைக்கிழங்கு பணிஸ். சிங்களத்தில் மீனுக்கு  மாலு என்று பொருள். அதனால்த்தான் மாலு பண் என்று கூறுவது என்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கூறுங்கள் .

ஓம் சுமேரியர் மாலு என்றால் மீன் தான். நான் சிறு வயதில் சிங்கள வகுப்பில் படித்ததாலும் , நிறைய சிங்கள நண்பிகள் இருப்பதாலும், எமது அப்பாவுக்கு சிங்கள சாப்பாடு மிகவும் பிடித்ததாலும்  நாங்கள் வீட்டில் ரெண்டு முறையிலயும் சமைப்பம் . சிங்கள சமையலுக்கு அவர்களது கருகின தூள், பச்சை தூள், கறுவா, ரம்பை, கொரக்கா  புளி , தேங்காய்  பால், தேங்காய் எண்ணெய் தான் பாவிப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நில்மினி பகிர்வுகு, இன்னும் ஈஸ்ட் தட்டுப்பாடு இங்கு, ஆறுதலாக சொய்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2020 at 04:24, suvy said:

Résultat de recherche d'images pour "hitting with belt gif"

பரவாயில்லை மகளே...!  இது எனக்காக செய்தது.மாமிசபட்சினிகள் யாரும் கிட்ட  வந்தால் இருக்குது.....!   😄

நிச்சயமாக இந்த உருளை கிழங்கு பணிஸ்  உங்களுக்குத்தான். யாரும் கிட்டவந்தால் ரெண்டு போடுறதுக்கு எதுக்கும் பொல்லு ரெடியாக இருக்கட்டும் 

2 minutes ago, உடையார் said:

நன்றி நில்மினி பகிர்வுகு, இன்னும் ஈஸ்ட் தட்டுப்பாடு இங்கு, ஆறுதலாக சொய்து பார்ப்போம்

ஒன்லைனில் தேடி பார்த்தீர்களா? செய்வது அவ்வளவு கஸ்டமில்லை. வெற்றிகரமாக செய்துவிட்டு பதிவேற்றுங்கள் நாங்களும் பார்க்கலாம். மார்க்சும் தரலாம்.😁

On 9/3/2020 at 03:51, சுவைப்பிரியன் said:

பதிவுக்கு நன்றி நில்மினி'

சுவைப்பிரியன், எங்கே உங்கள் கைவண்ணத்தை இன்னும் காணவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

சிறி உமக்கு ஏன் இப்படி ஒரு பகிடி? Bake பண்ணமுதல் Egg wash உம் , பண்ணியபிறகு butter wash உம் கொடுக்கவில்லை என்று போட்டனான் தானே ? 😂

நில்மினி.... அப்படி, லைற்ராக  சீண்டி  விட்டால்தான்,  
தலைப்பு... கலகலப்பாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... அப்படி, லைற்ராக  சீண்டி  விட்டால்தான்,  
தலைப்பு... கலகலப்பாக இருக்கும். :)

தலைப்பு அதனால் தான் கல கலப்பா போய்க்கொண்டிருக்கு 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.