Jump to content

என் கதை (கவிதை?)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம்.

அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன்.

கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன.

இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன்.

ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள்

உயர, உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 😂.

நன்றி,

கோஷான் சே

என் கதை

I

இது என் கதை

வடக்கே வங்கமும்

தெற்கே சிங்கமும் இருக்க

இடையே இருந்தவர் -தம் கதை.

 

இது - நான் சொல்ல மறந்த கதை அல்ல

நீங்கள் கேட்க மறந்த கதை

இன்றும் கேட்க மறுக்கும் கதை.

 

ஆண்டுகள் ஆயிரமாய் ஆண்டவர்

மாண்ட கதை

மாண்டவர் மீண்ட கதை

மண் மீட்ட கதை

மீட்டவர் மீண்டும் தோற்ற கதை.

 

என் மனத்தின் கதை அல்ல -இது என் இனத்தின் கதை

ஏதிலிகளாய் ஆகிவிட்ட ஓர் சனத்தின் கதை

அவர் நெஞ்சத்து வாழும் சினத்தின் கதை.

 

மேகம் கனத்து வரும் மழை

என் மனம் கனத்து வருகிறது இக்கதை.

கேளுங்கள் மக்காள் என் கதையை

என் இனத்திற்கு நடந்த வதையை.

II

ஈழம் - எம்மை சூழ இருந்தது நீலம்

கல் தோன்றி, பின் மண் தோன்றி தாந்தோன்றியது தமிழர்கள் காலம்.

நீரிணையின் இரு கரையிலும்

நீட்டிப் படுத்தாள் தமிழன்னை

ஊட்டி வளர்த்தாள் ஊர் பிள்ளைகள் ஒன்பதை

தானே வளர்ந்தது தமிழ்ப் பிள்ளை.

 

முலை ஒன்றை தமிழ் அகத்திலும்

மற்றொன்றை என் நிலத்திலும் தந்தாள் தாய்

எம் புறத்தில் அரணாய் அமைந்தது தமிழகம்

நீர் பிரித்ததை மொழி-வேர் சேர்த்தது.

 

இராவணக் குடிகள் என்றும் நாகர் என்றும்

இயக்கர் என்றும் வேடர் என்றும்

இங்கே இருந்தவர்கள் - நம்மவர்கள்

எம் முன்னவர்கள் - இத்தேசத்தின் மன்னவர்கள்.

 

இமயம் முதல் கடாரம் வரை பரந்து பட்ட தமிழ்

ஈழத்திலும் சிறந்துபட்டிருந்தது

அதன் ஆளுமை நிறைந்து பட்டிருந்தது.

 

இவ்வாறு தமிழ் தழைக்க

இனம் பிழைக்க

காட்டாறு போல கரைபுரண்டு ஓடியது

எங்கள் கற்கால வரலாறு.

 

பூமிப்பந்து சுழன்றது

புதுமைகள் பல விழைந்தது

மன்னவராயிரம் வந்தனர் -தமிழ்

மக்கள் பல்லாயிரம் ஆயினர்.

 

தொன்மையும் புதுமையும் சேர

செம்மையாய் வளர்ந்ததது

ஈழத்தில் செந்தமிழ்.

 

சோழர் எமக்குச்சொந்தமென்றாகினர்

பாண்டியர் எமக்கு பந்தமென்றாகினர்

சேரர் எமக்குச்சேர்குடியாகினர்

பல்லவர் எமக்கு வல்லமை சேர்த்தனர்.

 

தெய்வேந்திர முனையில் தமிழ் ஆர்பரித்தது

பருத்தித்துறையில் அதே தமிழ் அரவணைத்தது.

தெற்கே காலி முதல்

வடக்கே விரிந்த ஆழி வரை

தமிழ் இங்கே ஆட்சி செய்தது

ஆனால், காலம் ஒரு சூழ்சி செய்தது.

 

III

தொடரும்.....🔜

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம்.

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

மிகுதிக் கவிதைக்கும் ஆவலாக உள்ளோம்.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசமுள்ள கோசான்-சே 

பகருகின்றதோர்  வரலாறிது 

நேசமுடன் வாசித்து தேச 

நிலவரத்தை கண்டு கொள்வீர்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துரைத்த ஈழப்பிரியன், சுவி அண்ணாக்களுக்கும், பச்சை தந்த சுவைப்பிரியனுக்கும் நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

III

ஈழத்தின் மேற்குக்கரையில்

தாமிரபரணி ஆற்றுக்கரையில்

இருந்தது ஒரு துறைமுகம்

கல்யாணி என்று அதன் பெயர் வரும்.

 

அந்தத் துறையில்

தமிழர்கள் - இறையில்

ஓர் அந்தி நேரம் வந்துகுதித்தனர்

மந்திச் சாயலில் ஒரு மக்கட் கூட்டம்.

 

அவர்கள் லாடா நாட்டில் இருந்து விரட்டப்பட்டவர்கள்

கூடாத செய்கையால் நாடோடிகளாக துரத்தப்பட்டவர்கள்.

அவர்கள் ஏழுபது பத்துப்பேர் மொத்தமாய் இருந்தார்கள், பெரும் சத்தமாய் கதைத்தர்கள்.

அவர்களின் தலைவன் விசயன்

உண்மையில் அவன் ஒரு விசமன்.

லாடாவில் - அவன் முடிக்குரியவன்

பிறப்பால் பெரும் குடிக்குரியவன்.

ஆனாலும் பெயரில் ஜெயத்தையும்

செயலில் விசத்தையும் காட்டினான் விசயன்.

 

சிங்கத்தின் பேரன் - அவன் சரித்திரம்

ஆனாலும் அவனில் நிலைத்தது தரித்திரம்.

 

கூடாச் செயலால் குமைந்து போய்

லாடா அவனை போடா எனத் துரத்தியது

காலம் அவனை ஈழத்தின்பால் திருப்பியது.

 

படகை காற்று திருப்பிப்போட்டது

வரலாற்றை காலம் புரட்டிப்போட்டது.

IV

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

மேல கிடந்தது
இப்ப கீழ கிடக்குது.

ஓமையா - ஐபோன் நோட்ல எழுதி வெட்டி ஒட்டினா, அங்கையிம் இங்கையுமா தொங்குது. formatting ல திக்குமுக்காடி போனேன். பின் கணனி போய் வெட்டி திருத்தினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 8:28 PM, goshan_che said:

மன்னவராயிரம் வந்தனர் -தமிழ்

மக்கள் பல்லாயிரம் ஆயினர்.

தமிழர்கள் பல்லாயிரமாக பெருக சிங்களவர்கள் பல இலட்சமாக பெருகியிருப்பார்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மேல கிடந்தது
இப்ப கீழ கிடக்குது.

நம்ம வரலாறும் அப்படித்தானே ஆகி விட்டது பிரியன் .......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எமக்குப் போட்டியாக இன்னொரு கவிஞரா யாழில்.."?????

நன்றாகவே இருக்கு.தொடருங்கள் கோசான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்...உங்களிடமிருந்து, இப்பிடி அழகான கவிதை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மிக  நன்றாக உள்ளது... தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 8:39 PM, கிருபன் said:

தமிழர்கள் பல்லாயிரமாக பெருக சிங்களவர்கள் பல இலட்சமாக பெருகியிருப்பார்களோ!

இந்த கணக்கு, சிங்களவர் என்றொரு இனம் உருவாக முன்னம், ஈழத்தில் இருந்த தமிழர்களின் எண்ணிகை. 

மன்னவராயிரம் வந்தனர். தமிழ் மக்கள் பல்நூறாயிரம் ஆயினர் 

என வந்திருந்தால் நல்லாய் இருந்திருக்குமோ?

ஆனாலும் ஆயிரம் மன்னவர் என்பது மிகைபடுத்தல்தான். Poetic license 😂

On 3/9/2020 at 9:10 PM, பகலவன் said:

நன்றாக இருக்கிறது. தொடருங்கள் கோசான்.

நன்றி

உண்மையில் நீங்கள் பகலவன் தான்.

கண்டதில் ஒரு இனம்புரியாத சந்தோசம்.

 

On 3/9/2020 at 9:39 PM, suvy said:

நம்ம வரலாறும் அப்படித்தானே ஆகி விட்டது பிரியன் .......!  🤔

ச்சா.. டைமிங் அருமை அண்ணா

 

On 3/9/2020 at 10:06 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா எமக்குப் போட்டியாக இன்னொரு கவிஞரா யாழில்.."?????

நன்றாகவே இருக்கு.தொடருங்கள் கோசான்.

 

 

நன்றி. உங்கள் மொழி வளத்துக்கு கிட்டவும் இல்லை. 

 

On 3/9/2020 at 10:36 PM, தமிழ் சிறி said:

கோசான்...உங்களிடமிருந்து, இப்பிடி அழகான கவிதை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மிக  நன்றாக உள்ளது... தொடருங்கள். :)

நானே எதிர்பார்க்கவில்லை 😂

காதல் தண்டபாணிக்கு சந்தியா மகளாக வந்த மாதிரி 😂

நன்றி அண்ணா

11 hours ago, Kavallur Kanmani said:

நன்றாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.

நன்றி

பச்சை குத்திய, தமிழினி அக்கா, ரதி அக்காச்சி, நாதமுனி, நுணா மற்றும் ஏனையோருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IV

அது ஏசு பிறப்பதற்கு அரை நூற்றாண்டு முன்பு

தமிழன் நாகரீகத்தில் கரை கண்டு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு.

 

கிரேக்க நாகரீகத்துக்கு அப்போதுதான் பல் முளைத்திருந்தது

ரோம ராஜ்ஜியம் வரப்போகும் இடத்தில் வெறும் புல் முளைத்திருந்தது.

 

சிந்து வெளியில் முந்து சிவனை கொண்டு ஆடிய மூத்த குடி

வந்தேறி வடக்கர்களால் வஞ்சிக்கப்பட்டு விந்தியத்துக்கு கீழே ஏற்றியது தன் கொடி. 

ஒட்டகம் கூடாரத்தை நிறைத்தது உரிமைகாரப் புலி ஊரை விட்டகன்றது. 

 

வீரத்தால் வீழ்த்த முடியாத வேங்கைகளை, வேதம் வீழ்தியது, வர்ண பேதம் புகட்டியது. 

 

ஒரு கண்டத்தை ஆள வேண்டிய புலி ஒரு முக்கோணத்துக்குள் முடக்கப்பட்டது. ஆனாலும் நெஞ்சில் வெஞ்சினம் வேக இருந்தது.

 

ஈழம் அப்போ ஒரு தீவாய் இருந்தது ஆனால் முன்பொரு யுகம் அது தமிழகத்துடன் இணைந்து வெகு தோதாய் இருந்தது.

 

பனிக்காலத்தின் முடிவில்  பனி உருகி ஓடியது. கடல், தமிழன் மண்ணை மூடியது.

ஈழம் தன் நிலத்தொடர்பிழந்தது ஆனாலும் அறுந்த தொப்புள் கொடியை பாக்கு-நீரிணைத்தது.

 

நீரிணையின் இருபுறமும் தாமிரபரணி ஓடியது அதன் அலைகள் தமிழ் சந்தங்கள் பாடியது.

 

ஈழத்து தாமிரபரணியின் பெயரில் தாமிரமிருந்து ஆனால் அது பாய்ந்த வயல்களிலோ பொன் விளைந்தது.

 

உலகத்துக்கு கட்டுமரத்தை கற்றுக் கொடுத்தவன் கல்யாணியில் இருந்து கரை நீங்கினான். திரை கடெலுங்கும் தன் கை ஓங்கினான். 

 

தாமிரபரணியின் கரையில் ரத்தினங்களுக்கு மத்தியில் கூழாங்கற்களும் கிடந்தன. 

கல்யாணித் துறையில் நிறைக் கற்கள் தங்கத்தில் ஜொலித்தன.

 

ஈழம் வெகு செழிப்பாய் இருந்தது ஆனால் விழிப்பை மறந்தது.

 

ஒற்றைத் தீவில் மூன்று குடிகளே இருந்தன ஆனாலும் ஒன்றை ஒன்று இடித்தன.

மேற்கே இயக்கர்கள் இறையாண்மை கொண்டார்கள்.

வடக்கே நாகர்கள் நாட்டாண்மை ஆனார்கள்.

விந்தினை நாட்டில் வேடர்கள் வேந்தர்கள் ஆனார்கள்.

 

இயக்க நாடு எழில் மிக உற்றது இறைவன் உறையும் பொழில் அது நிகர்த்தது.

சிரசு -வத்தை - இயக்கதேசத்து தலைநகர். ஈழத்தில் ஒப்பீடே இல்லா முதல் நகர்.

இயக்க நாடு ஒரு தாயாதி சமூகமாக இருந்தது. ஒரு தயவுயாசியால் வரப்போகும் ஆபத்தை அறியாத சுகவாசிக் கூட்டமாய் இருந்ததது.

அன்று - போதி மரத்து ஞானகுருவன் ஞாலம் நீங்கிய நாள். ஆசியஜோதி அடங்கிய நாள்.

அந்தத் துர்நாளில், பின்னாளில் எழப்போகும் பிரளயங்களுக்கெல்லாம் முன்நாண் இழுத்த படி, கல்யாணிக் கரையில் கால் பதித்தான் விசயன்.

 

V

தொடரும் 🔜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்ச வரலாறு புனைகதை என்பதால் மாற்று வரலாற்றை கோஷான் சே புனையவேண்டும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 8:55 PM, கிருபன் said:

மகாவம்ச வரலாறு புனைகதை என்பதால் மாற்று வரலாற்றை கோஷான் சே புனையவேண்டும்!!

உத நாங்கள் ஒரு 300 வருடத்துக்கு முன்பாவது செஞ்சிருக்கோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

V

விசயனின் மரக்கலம் தரை தொட்டது கல்யாணியின் நிறை வளம் அவன் மனம் சுட்டது.

கடற்பயணத்தின் கோரம் அவர்களின் கலத்தில் மட்டுமல்ல, முகத்திலும் தெரிந்தது.

ஓட்டை விழுந்திருந்தது அவர்கள் வள்ளத்தில். முகத்தில் புதைந்திருந்தன கண்கள் - தோல் பள்ளத்தில்.

பாய்மரக் கயிறு இழுத்து, இழுத்து -இற்றுப் போயிருந்தது. 

அவர்கள் கைகளோ பழுத்து -ரேகை அற்றுப் போயிருந்தது.

அவர்களுக்கு பசி பழகிப்போயிருந்தது. 

அதானால் பத்தும் விலகிப் போயிருந்தது.

 

கல்யாணியின் மாந்தர்கள் அவர்களை விசித்திரமாய் பார்த்தார்கள். ஆனாலும் பசித்திருக்க ஒண்ணாமல் பாத்திரம் இட்டார்கள்.

இரப்புணிகளின் இலையில், சோற்றுடன் வெண்ணை விட்டார்கள்.

வரப்போகும் ஆபத்தை அறியாமல், தம் தலையில் மண்ணை இட்டார்கள்.

ஈகை மிகுந்த இயக்கர்கள் பாவம் பார்த்தார்கள்.

பாம்புக்கு பாலை வார்த்தார்கள்.

 

அறு சுவை பந்தி, நிறைந்தது எழுநூறு தொந்தி.

விசயனின் உண்டிச் சுருக்கம் தளர்ந்தது. அவன் நெஞ்சில் கருக்கல் வளர்ந்தது.

இறங்கிய இரவே, தான் இரந்த நாட்டுக்கு இரெண்டகம் செய்யத்துணிந்தான்.

தக்க நேரம் வரும் வரை பணிந்தான்.

ஈழத்தில் விசயன் அந்நியன் ஆனாலும் புத்தியில் அவன் வெகு நுண்ணியன்.

தஞ்சமடைந்த நாட்டில் பஞ்சம் பிழைப்பது வழமை.

ஆனால் வஞ்சம் நினைத்தது அவன் நெஞ்சத்து கயமை.

இயக்க நாட்டு வளமை அவன் நெஞ்சில் பொருதியது.

இயக்கச்சிகள் இளமை அவன் கண்ணை உறுத்தியது.

இரெண்டையும் கவரத் திட்டம் போட்டான் ஈற்றில் உறக்கம் வர ஒரு தூக்கம் போட்டான்.

 

அந்த இரவு அரவமின்றிக் கலைந்தது. அடுத்த நாள் ஈழத்தில் இழவு காலம் பிறந்தது.

VI

தொடரும்

பச்சை புள்ளிகள் இட்ட நந்தன், உடையார், காவலூர் கண்மணி அக்கா, மேலும் ஒரு ஒவ்வொரு பாகத்திலும் பச்சை குத்திய அனைவருக்கும் கருத்துரைத்த கிருபன் ஜியுக்கும் நன்றிகள்.

பிகு: வாழ்த்தை மட்டும் இன்றி குறைகளையும் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள் கோசான். தெரிந்த விடயம்தான் என்றாலும் உங்கள் எழுத்து இரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குறை இன்னும் தெரியவில்லை.குறை கண்டு பிடிப்பதானால் நீங்கள் படித்த பாடசாலையில் நான் பேராசிரியராய் இருந்திருக்க வேண்டும் கோசான்-சே.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக எழுதுகிறீர்கள் கோசான். தெரிந்த விடயம்தான் என்றாலும் உங்கள் எழுத்து இரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள்.

நன்றி அன்ரி.

தெரிந்த விசயத்தை எழுதுவதும் படிப்பதும் இலகு. மேலே நான் சொன்ன வாலியின் உதாரணங்களில் பாண்டவர் பூமி, அவதாரபுருசன் (ராமாயணம்) படிக்க இலகுவாக இருந்தது ஆனால் இராமானுஜகாவியம் விடயம் தெரியாததாலும் வைணவ சொல்லாடல்கள் புரியததாலும் கஸ்டமாய் இருந்தது.

2 hours ago, suvy said:

இதில் குறை இன்னும் தெரியவில்லை.குறை கண்டு பிடிப்பதானால் நீங்கள் படித்த பாடசாலையில் நான் பேராசிரியராய் இருந்திருக்க வேண்டும் கோசான்-சே.....!  👍

நன்றி அண்ணா,

உண்மைதான் நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கும் பாடசாலையில் நீங்கள் பேராசிரியர் இல்லை அண்ணா - துணை வேந்தர்!

இந்த பாகம் எழுதும் போது வார்த்தை பஞ்சம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது போல ஒரு உணர்வு. “இட்டார்கள்” என்ற சொல் இரெண்டு முறை வந்தது.

ஆங்கிலத்தில் rhyming dictionary இருக்கிறது. ஒரு சொல்லை எழுதிவிட்டு அதற்கு சந்தம் சேரும் சொல்லை தேடி எழுதலாம். எல்லா புத்தக கடையிலும் கிடைக்கும்.

தமிழில் இப்படி உள்ளதா? தேடியும் கிடைக்கவில்லை எனக்கு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாருக்கு தலை.. ஒரு லைக் பட்டினகூட அமத்த அனுமதி தாறாங்கள் இல்லை.. மிச்சம் எப்ப வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 9:29 PM, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லாருக்கு தலை.. ஒரு லைக் பட்டினகூட அமத்த அனுமதி தாறாங்கள் இல்லை.. மிச்சம் எப்ப வரும்?

நன்றி ஓணாண்டியரே. விரைவில் வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.