Jump to content

சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை

முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமைதான்.கத்தோலிக்கர்களாகிய நாம் நாட்டின் நலனையும் எமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாகவோ அல்லது சுயேட்சையாகவோ இந்த தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாடவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/சமய-அடிப்படையில்-தேர்தலி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை இந்து, ஆனால் தமிழர் ( இந்து கிறிஸ்தவர் என்ற பிரிந்தால். அவ்வளவு தான், சிங்களவன் சும்மா இருந்து வேடிக்கை பார்க்க, தமிழரெல்லாம் அடிபட்டு சாகவேண்டியதிதான். 

சிங்Dகளவனின்iற divide and conquer trap இல விழுந்து அழுந்த வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதலால், கூட்டமைப்பிற்கு வாக்களீப்பீர் 😆

Link to comment
Share on other sites

மன்னாரில் உள்ள இந்துக்களுக்கும் தென்மராட்சியில்  உள்ள  விஷ்வா இந்து பரிஷத் அடியாள் சச்சிதானந்துக்கும் விளங்கினாள் சரி। இல்லாவிட்ட்தால் அம்போதான்।

Link to comment
Share on other sites

43 minutes ago, Vankalayan said:

மன்னாரில் உள்ள இந்துக்களுக்கும் தென்மராட்சியில்  உள்ள  விஷ்வா இந்து பரிஷத் அடியாள் சச்சிதானந்துக்கும் விளங்கினாள் சரி। இல்லாவிட்ட்தால் அம்போதான்।

இது புத்த பீடங்களுக்கும் தெரிகின்றது. அண்மையில் அவர்களும் பல தடவைகள் தேரர்கள் அரசியலில் போட்டியிட கூடாது என்கிறார்கள். ஆனால், சிங்கள அரசியல் தலைமைகள் புத்த பீடாதிபதிகளை மீறி அரசியலில் பிரகாசிக்க முடியாது.

இலங்கை அரசியல் சாசனத்தில் புத்த மதம் முதன்மை மதமாக கொண்டாடப்படும்வரை,  சிறுபான்மை மதங்களில் சில 'வன்முறையாளர்கள்' தோன்றத்தான் செய்வார்கள். ஏனெனில், அவர்களின்  பார்வையில் தமது மதத்தின் பாதுகாவர்களாக எண்ணுகிறார்கள்.

இங்கே தோற்றுப்போனது இலங்கை சனநாயகம். இன; மொழி; மத சுதந்திரங்கள் பறிக்கப்படும்பொழுது மக்கள் போராடுவதே இயற்கையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இல்லாவிட்டால் சிங்களவனுக்கு அரசியல்  பிரச்சாரத்துக்கு கருப்பொருள் இல்லை. அரசியலும் இல்லை முடங்கிக் கிடக்க வேண்டியவன். 

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

 

89781910_2708715252581009_68636262689532

இப்போது மாட்டுத்தலைமைகளுக்குள் ஏட்பட்டிருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। அதனாலதான் இந்த கருத்தை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் எண்டு நினைக்கிறேன்।

மாட்டுத்தலைவர் விக்கி அவர்கள் கிறிஸ்தவ , கத்தோலிக்க வேட்ப்பாளர்களை தங்கள் கூட்டணியில் இணைக்கக்கூடாதென்று விடாப்பிடியாக நிக்கிறாராம்। விஷ்வா இந்து பரிசித்தும் , சின்மய மிஷனும் இதில் உறுதியாக இருக்கிறார்களாம்। எனவே மாட்டுதலைமை கட்சி இப்போது உடையும் நிலைமைக்கு வந்து விடடதாம்।

விக்கியும் , மண்டையன் சுரேசும் ஒரு அணியாகவும் , அனந்தியும் சிவாஜியும் ஒரு அணியாகவும் பிரிந்திருப்பதாக அரியக்கக்கிடைக்கிறது।

இவர்களுக்கெல்லாம் போராடவும் , சர்வதேசத்துக்கு பிரச்சினைகளை கொண்டு செல்லவும் கத்தோலிக்க/கிறிஸ்தவ மத குருமாரும் , கிறிஸ்தவ போராளிகளும் தேவை।

சுகபோகம் அனுபவிக்க இந்து குருமாரும் , இந்து வேடமணிந்த அரசியல் வாதிகளுக்கும் முன்னுரிமை। இதுதாண்டா தமிழனுடைய ஒற்றுமை।

சிங்களவனுக்கு தெரியும் தமிழன் இப்படியே அடிபட்டு செத்துப்போயிருவான் எண்டு। இந்த கத்தோலிக்க பிஷப்மாரும், பாதிரியார்களும் இனியும் இந்த ஒற்றுமை , மத நல்லிணக்கம் பற்றி பேசுவதையும் கத்தோலிக்கர்/ கிறிஸ்தவர்களை அடகு வைப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்। நீங்கள் கிறிஸ்தவ மக்களுக்காக குரல் கொடுக்கவிடடாள் , மக்கள் தகுந்த தீர்ர்மானத்தை எடுப்பார்கள்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மதம் சாா்ந்த வேட்பாளரை நியமிக்க சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கமாம்..! கூட்டணி உடையும் என விசம பிரச்சாரம் நடக்கிறதாம்.!

cm-vikkenes-vikkei-_1080.jpg

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் உருவாகவிருந்த பிளவு தவிா்க்கப்பட்டுள்ளதுடன், கிறிஸ்தவ  வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் கணப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற தோ்தலில் கிறிஸ்த்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க முடியாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி எதிா்த்ததாகவும், அதனால் சுரேஸ் அணி மற்றும் சிறிகாந்தா அணி கூட்டணியை உடைத்து வெளியேற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடா்பாக இன்று மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் முக்கியஸ்த்தா்களுக்கிடையிலான அவசர கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிறிஸ்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் சந்திப்பின் நிறைவில் கருத்து கூறிய சிவாஜிலிங்கம், கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கின்றாா்.

https://jaffnazone.com/news/16317

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.