Jump to content

கதிரை மீதான பற்றே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது - சார்ள்ஸ் நிர்மலநாதன்


Recommended Posts

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 


DSC_0349_7.JPG

இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்.

இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன். யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும். யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப்பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன்.

அவர்களைப்பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது.

இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும். அதன் மூலம்தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும். வடக்கு கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது.


ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.


DSC_0313_5.JPG


இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது.

தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம். மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன்.

கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/77432

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை

DF0-C7-CB6-85-DC-4-D32-A192-AD4220-ACC8-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும்.

இதுவரை நடந்த சிங்கள குடியேற்றங்களுக்கு யார் பொறுப்பு?

 

6 hours ago, ampanai said:

அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்

கதிரை மீது பற்றில்லாத தாங்கள் பற்றுள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகலாமே? கதிரையின் சொகுசு உங்களை விட யாரே அனுபவித்திருக்க முடியும்? உங்களால் மட்டுமே அதன் சுகத்தை விளக்கவும்முடியும்.

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

இதுவரை நடந்த சிங்கள குடியேற்றங்களுக்கு யார் பொறுப்பு?

 

கதிரை மீது பற்றில்லாத தாங்கள் பற்றுள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகலாமே? கதிரையின் சொகுசு உங்களை விட யாரே அனுபவித்திருக்க முடியும்? உங்களால் மட்டுமே அதன் சுகத்தை விளக்கவும்முடியும்.

போராடியவர்கள், தமிழர் உரிமைக்காக உடமைகளை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் இந்த கதிரைக்காக போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது। ஒரு கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரியார் உரிமை கோரினால் அதில் ஒரு நியாயாதிக்கம் இருக்கிறது।

ஆனால் இப்போது என்னடாவெண்டால் அப்பாவி  மக்களின் மண்டையில் போடடவன், காட்டிக்கொடுத்தவன், சுகபோகம் அனுபவித்தவன், போராட்டம் எண்டால் என்ன எண்டே தெரியாதவன் எல்லாம் இப்போது கதிரைக்கு நாயாய், பேயாய் அலையுறான்।

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொண்டு வருகிற தேர்தலில் வாக்களித்தால் சரி। இல்லாவிட்ட்தால் அவன் விடட வழி எண்டு இருக்க வேண்டியதுதான்।

Link to comment
Share on other sites

On 3/9/2020 at 11:54 PM, ampanai said:

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள்.

தேர்தல் காலம் ஆரம்பிச்சிட்டு. உங்கட கண்டுபிடிப்புகளுக்கும் கதை அளப்புகளுக்கும் இனி கணக்கே இருக்காது.

அமைச்சர் கனவுல மிதக்கிற உங்கட சுமந்திரன் பற்றி ஒன்றுமே கண்டுபிடிக்கேலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Vankalayan said:

போராடியவர்கள், தமிழர் உரிமைக்காக உடமைகளை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் இந்த கதிரைக்காக போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது। ஒரு கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரியார் உரிமை கோரினால் அதில் ஒரு நியாயாதிக்கம் இருக்கிறது।

ஆனால் இப்போது என்னடாவெண்டால் அப்பாவி  மக்களின் மண்டையில் போடடவன், காட்டிக்கொடுத்தவன், சுகபோகம் அனுபவித்தவன், போராட்டம் எண்டால் என்ன எண்டே தெரியாதவன் எல்லாம் இப்போது கதிரைக்கு நாயாய், பேயாய் அலையுறான்।

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொண்டு வருகிற தேர்தலில் வாக்களித்தால் சரி। இல்லாவிட்ட்தால் அவன் விடட வழி எண்டு இருக்க வேண்டியதுதான்।

எப்படி????

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

எப்படி????

போராளிகளுக்கு புகலிடம் கொடுத்தார்கள்।அகதிகளான மக்களுக்கு தஞ்சமளித்தார்கள்। ஏன் சில பாதிரிமார்களின் உயிர்களும் பறிக்கப்படடன। தமிழ் மக்களுக்கு (இந்துவோ, கிறிஸ்தவர்களோ) அவர்களுக்காக யுத்த காலத்தில் தோள் கொடுத்தவர்கள் இந்த கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரிமார்கள்தான்। உலகுக்கு தமிழர்களின் பிரச்சினையை கொண்டு சென்றவர்களும், இன்றும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான்। இதை யாரும் மறுக்கவும் முடியாயாது।  சவாலுக்குட்படுத்தவும் முடியாது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

போராளிகளுக்கு புகலிடம் கொடுத்தார்கள்।அகதிகளான மக்களுக்கு தஞ்சமளித்தார்கள்। ஏன் சில பாதிரிமார்களின் உயிர்களும் பறிக்கப்படடன। தமிழ் மக்களுக்கு (இந்துவோ, கிறிஸ்தவர்களோ) அவர்களுக்காக யுத்த காலத்தில் தோள் கொடுத்தவர்கள் இந்த கத்தோலிக்க / கிறிஸ்தவ பாதிரிமார்கள்தான்। உலகுக்கு தமிழர்களின் பிரச்சினையை கொண்டு சென்றவர்களும், இன்றும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான்। இதை யாரும் மறுக்கவும் முடியாயாது।  சவாலுக்குட்படுத்தவும் முடியாது।

இவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?

Link to comment
Share on other sites

16 hours ago, MEERA said:

இவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்?

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இனங்கள்।

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இனங்கள்।

சைவ தமிழ் மக்களுக்கும் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுக்கும் எப்பொழுதும் வேறுபாடுகள் வரப்போவதில்லை;ஆனால் தற்சமயத்தில் சைவர்களுக்கும் கத்தோலிக்கர்க்ளுக்கும் இடையில் பிளவை உண்டாக்க ஒரு சில சக்திகள் முனைகின்றன, ஆனால் நீங்கள் சராசரி சைவ தமிழரிடம் கேட்டு பாருங்கள் எத்தனை பேர் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக உள்ளார்கள் என்று 5 வீதத்தை கூட தொடுமா தெரியவில்லை ....!!!  அவர்கள் கூட வீணை,மொட்டு மற்றும் வடக்கின் அடாவடி அமைச்சரின் பின்னனியில் இயங்குபவர்களாக இருப்பார்கள் .

 

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

பாதிக்கப்படட மக்களுக்காக குரல் கொடுத்த, உதவி செய்த மனிதாபமுள்ள மனித இன

 

Link to comment
Share on other sites

23 hours ago, Dash said:

சைவ தமிழ் மக்களுக்கும் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுக்கும் எப்பொழுதும் வேறுபாடுகள் வரப்போவதில்லை;ஆனால் தற்சமயத்தில் சைவர்களுக்கும் கத்தோலிக்கர்க்ளுக்கும் இடையில் பிளவை உண்டாக்க ஒரு சில சக்திகள் முனைகின்றன, ஆனால் நீங்கள் சராசரி சைவ தமிழரிடம் கேட்டு பாருங்கள் எத்தனை பேர் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக உள்ளார்கள் என்று 5 வீதத்தை கூட தொடுமா தெரியவில்லை ....!!!  அவர்கள் கூட வீணை,மொட்டு மற்றும் வடக்கின் அடாவடி அமைச்சரின் பின்னனியில் இயங்குபவர்களாக இருப்பார்கள் .

 

நீங்கள் சொல்வதில்  உண்மை இருந்தாலும் இங்கு ஒரு முக்கியமான காரணியை தெரிந்திருக்க  வேண்டும்। வீணை, மொட்டு என்று சொல்பவர்கள் எமது உள்ளூர் அரசியலுக்காக இதை செய்யலாம்।

ஆனால் இந்தியக்காரனால் இறக்குமதி செய்யப்படட விஷ்வா இந்து பரிஷத் , சங்பரிவார் போன்றவர்கள் மிகவும் தீவிரமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள்। இவர்கள் இந்தியாவில் ரத்த வெள்ளம் ஓட முக்கியமான பங்கு வகித்தவர்கள்।

இப்போது அங்கு சங்கபரிவாரின் ஆட்சி நடப்பதால் அவர்களை ஒன்றுமே செய்யமாட்ட்டார்கள்। அந்த அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே இந வெறுப்பை பேசுகிறார்கள்। அதை வழக்காக பதியும்படி ஒரு உயர் நீதிமன்ற தமிழ் நீதியரசர் கடடளையிடடதட்காக இரவோடிரவாக அந்த சங்கபரிவார் கூடடம் அவரை வேறிடத்துக்கு மாற்றிவிட்ட்து।

எனவே வடக்கு கிழக்கில் இவர்கள் கால் பாதிப்பதை , இந விரோத செயட்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்த்தே தீருவோம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Vankalayan said:

நீங்கள் சொல்வதில்  உண்மை இருந்தாலும் இங்கு ஒரு முக்கியமான காரணியை தெரிந்திருக்க  வேண்டும்। வீணை, மொட்டு என்று சொல்பவர்கள் எமது உள்ளூர் அரசியலுக்காக இதை செய்யலாம்।

ஆனால் இந்தியக்காரனால் இறக்குமதி செய்யப்படட விஷ்வா இந்து பரிஷத் , சங்பரிவார் போன்றவர்கள் மிகவும் தீவிரமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள்। இவர்கள் இந்தியாவில் ரத்த வெள்ளம் ஓட முக்கியமான பங்கு வகித்தவர்கள்।

இப்போது அங்கு சங்கபரிவாரின் ஆட்சி நடப்பதால் அவர்களை ஒன்றுமே செய்யமாட்ட்டார்கள்। அந்த அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே இந வெறுப்பை பேசுகிறார்கள்। அதை வழக்காக பதியும்படி ஒரு உயர் நீதிமன்ற தமிழ் நீதியரசர் கடடளையிடடதட்காக இரவோடிரவாக அந்த சங்கபரிவார் கூடடம் அவரை வேறிடத்துக்கு மாற்றிவிட்ட்து।

எனவே வடக்கு கிழக்கில் இவர்கள் கால் பாதிப்பதை , இந விரோத செயட்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்த்தே தீருவோம்।

இந்த திரிக்கு மதச்சாயம் பூசியது நீங்கள். இந்த செய்தியில் எங்கேயாவது மதம் தொடர்பாக இருக்கிறதா?

Link to comment
Share on other sites

27 minutes ago, MEERA said:

இந்த திரிக்கு மதச்சாயம் பூசியது நீங்கள். இந்த செய்தியில் எங்கேயாவது மதம் தொடர்பாக இருக்கிறதா?

மத சாயம் பூச தேவையில்லை। மதம்தான் இப்போது இந்த கதிரைக்கே அடிப்படை காரணம்। சிறு பிள்ளைக்கும் இது விளங்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

மத சாயம் பூச தேவையில்லை। மதம்தான் இப்போது இந்த கதிரைக்கே அடிப்படை காரணம்। சிறு பிள்ளைக்கும் இது விளங்கும்।

ஒவ்வொரு தேர்தலிலும் காலம் காலமாக கதிரைக்கு சண்டை வருவது வழமை. 

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

ஒவ்வொரு தேர்தலிலும் காலம் காலமாக கதிரைக்கு சண்டை வருவது வழமை. 

ஆனால் இப்போது இந்துக்கள் மன்னாரில் கதிரை வேணுமென்று சண்டைபோடுகிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைக்கு ஆசைப்படுவதில் தப்பேதும் இல்லை. 

உங்கு வைத்தியர், வக்கீல் தொடக்கம், ஊடகவியலாளர்வரை  சேவை மனப்பான்மை, மனிதாபிமானத்துடன் செய்யப்பட வேண்டிய அத்தனை துறைகளும் காசுக்காகவும், புகழுக்காகவும், தனிப்பட்ட நலன்களுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது, பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் உள்ள முதலைகள் தமக்கு உகந்த குடும்பிகள் தாயகத்தில் பதவியை பிடிக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமது கிடுக்கு பிடியினுள்வைத்து குடும்பிகளை ஆட்டுவிப்பதை  இவர்கள் தமது தாயக கடமையாக கருதுகின்றார்கள். வேறு காரணங்களும் இருக்கலாம். இதன் சூத்திரம் முதலைகளுக்கு மட்டும் தெரிந்த உண்மை.   

Link to comment
Share on other sites

On 3/13/2020 at 8:23 AM, Vankalayan said:

நீங்கள் சொல்வதில்  உண்மை இருந்தாலும் இங்கு ஒரு முக்கியமான காரணியை தெரிந்திருக்க  வேண்டும்। வீணை, மொட்டு என்று சொல்பவர்கள் எமது உள்ளூர் அரசியலுக்காக இதை செய்யலாம்।

ஆனால் இந்தியக்காரனால் இறக்குமதி செய்யப்படட விஷ்வா இந்து பரிஷத் , சங்பரிவார் போன்றவர்கள் மிகவும் தீவிரமான ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள்। இவர்கள் இந்தியாவில் ரத்த வெள்ளம் ஓட முக்கியமான பங்கு வகித்தவர்கள்।

இப்போது அங்கு சங்கபரிவாரின் ஆட்சி நடப்பதால் அவர்களை ஒன்றுமே செய்யமாட்ட்டார்கள்। அந்த அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே இந வெறுப்பை பேசுகிறார்கள்। அதை வழக்காக பதியும்படி ஒரு உயர் நீதிமன்ற தமிழ் நீதியரசர் கடடளையிடடதட்காக இரவோடிரவாக அந்த சங்கபரிவார் கூடடம் அவரை வேறிடத்துக்கு மாற்றிவிட்ட்து।

எனவே வடக்கு கிழக்கில் இவர்கள் கால் பாதிப்பதை , இந விரோத செயட்பாடுகளை முன்னெடுப்பதை நாங்கள் நிச்சயம் எதிர்த்தே தீருவோம்।

நீங்கள் கூறுவது மிகவும் உண்மை, இவர்களை கால் ஊன்ற விடாது தடுப்பது மக்களின் கடமை; என்ன தான் இந்த அமைப்புக்கள் இங்கு வந்தாலும் மக்கள் அக்கறை காட்டதவிடத்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

நிச்சயமாக இந்து வாக்கு என்று கேட்டு வருபவர்களுக்கு வாக்களிக்க கூடாது.

ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும் இவர்கள் ஒரு நாளும் சைவம் என்ற சொல்லை பாவிக்க மாட்டார்கள் எப்பொழுதும் “இந்து” என்ற சொல்லையே பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.