Jump to content

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி

மே 21, 2007

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்காமல் உள்ளது தேசத்திற்கே அவமானமாகும்.

மாறாக, பிரபாகரனுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பிரபாகரனை கொண்டு வர முயற்சிக்காமல், பல ஆண்டுகளாக மெளனம் சாதிப்பது ஏன் என்பதற்கு சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பது நினைவிருக்கலாம்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/21/swamy.html

முதலில் இந்த சாமியாரை விசாரிக்க தமிழீழத்துக்கு கொண்டு வரனும்

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

சாமி என்னவோ ஒரு போலீஸ் குழுவை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்யுங்கள் என்ற ரீதியில் அறிக்கை விட்டுள்ளார்.

அந்த எண்ணத்தில் யாராவது வன்னிக்குள் காலடி வைக்க நினைத்தால் உங்க படை போதாதுங்க சாமியோவ்.

Link to comment
Share on other sites

ஒரு சாதாரண முகவர் குவத்ரோச்சியை கொண்டுவரவே முடியலை. இதுல ஒரு நாட்டின் அதிபரை கைது செய்யின்னு சொல்றது எப்படின்னு புரியல.

சாமி பொழுது போகலன்னா குவாட்டர் அடிச்சிட்டு படுக்க வேண்டியதுதானே? ஆமாம் நீங்க எங்க இருக்கிங்க? தமிழ்நாட்டுல இல்லையா? வேற நாட்டுல இருந்திங்கன இப்படி வாங்க விசால்லாம் வேண்டாம்! டாஸ்மாக் ல நாங்களே வாங்கி தரோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தான் இருப்பதைச் சுப்பிரமணிய சாமியார் இப்படி இடையிடையே அறிக்கை விடுவதன் மூலம் மக்களுக்குக் காட்டிக் கொள்ள முனைகின்றார்.

Link to comment
Share on other sites

சுப்பிரமணிய சாமி.

ஒரு மதி கெட்ட ஆசாமி. :huh:)

இவருக்கு நாக்கில் சனி.

Link to comment
Share on other sites

இந்திய அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலில் இருக்கும் மிகப்பெரும் கோமாளி இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அமைச்சர் குடும்பத்தால் 'தீட்டு':

குருவாயூர் கோவிலில் தண்ணீர் தெளித்து பூஜை!

மே 21, 2007 RSS

சென்னை: மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் மற்றும் அவரது கிறிஸ்தவ மனைவி வந்து சென்றதால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. இது கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி. இவரது மருமகள் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

ரவி, அவரது மகன் ரவிகிருஷ்ணா, மனைவி மற்றும் அவரது பேரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ரவியின் பேரனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரவியின் மருமகள் இந்து சமயத்தவர் அல்லாத காரணத்தால், அவர்கள் சென்ற பின்னர் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டு, கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தூய்மைப்படுத்தும் பூஜை நடந்ததை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து வயலார் ரவி பெரும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தேவையில்லாத ஒன்று. பக்தர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. என்னையும், எனது குடும்பத்தையும், எனது பரம்பரையையும் கோவில் நிர்வாகம் அவமானப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் எனது ஒட்டுமொத்த பரம்பரையே கோவிலுக்கு வரக் கூடாது என்று கூறுவது போல உள்ளது என்றார்.

ரவிகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், இந்த சம்பவம் அவசியமற்றது. இதுகுறித்து பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார்.

-thatstamil.com

சுப்பிரமணிய சுவாமிகள் ஏன் இப்படியான விடையங்களுக்குக் கருத்துக் கூறுவதில்லை?

- சுப்பிரமணிய சுவாமி தும்மியதைக்கூட பதிவு செய்வதேன்?

இருபத்தொராம் நூற்றாணடிலும் தொடரப்படும் இவ்வகை மானுடக் கொடுமை, கேவலம்.... செய்தியாக வரும்போதே வெட்கப்படவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்குள்ள இருந்த வீரப்பனையே பிடிக்க வக்கில்லாமல் இருந்தவை.. எங்கடை தலைவரை கைது செய்யப்போகினமாம்..! கோமாளிகள்!

Link to comment
Share on other sites

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்,

காட்டிற்குப் போய் போரிட்டு வீரப்பனைச் சுடவில்லை. நோயாளியான அவனை மனிதாபிமானமின்றி நரித்தனமாக சுற்றிவர நின்று சுட்டார்கள்.

வீரப்பனை சுட்டதாக மார்தட்டிக்கொள்ளும் நீங்கள், அவனை ஏன் உயிரோடு பிடிக்க முடிந்தும் பிடிக்கவில்லை என்பதற்குப் பதிலளியுங்கள்.

Link to comment
Share on other sites

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.

ஒரு விசாரணை என வந்தால் அதை முறைப்படி நடத்துவதாயின் முதலில் சம்பவங்கள் நடைபெற்ற ஒழுங்கில் விசாரசணை நடைபெறவேண்டும். அதாவது chronological order இல்.

எனவே, chronological order இன் படி பார்த்தால் முதலில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் கொல்லப்பட்டதற்கும், காயப்படுத்தப்பட்டு, அங்கவீனமாக்கப்பட்டதற்கும், அப்பாவி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கும், கோடிக்கணக்கான பெறுமதியுடைய அப்பாவி தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதற்கும், எமது நிம்ம்மதியான வாழ்வு குலைக்கப்பட்டதற்கும் காரணமான இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் அவரது சகாக்களும் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இதற்காக ஒரு வழக்கு நடாத்தப்பட்டால் இதற்கு என்னால் கூட நேரடி சாட்சியம் ஆதாரங்களுடன் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்,

சுட்டார்களா!!! :lol:

ஒரு தலைமுறைக்குமேல் காட்டில பதுங்கி வாழ்ந்த வீரப்பன், சர்க்கரை வியாதியில் இருந்து அத்தனை வியாதிகளும் அவனை கொண்றபின். செத்த பாம்பை அடித்திருக்கிறார்கள்.

வாழ்க உமது வீரம். :angry:

Link to comment
Share on other sites

Rajiv1987hit.jpg

முற்றிலும் இலங்கை மக்களால் அடிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு கடைசியில் சிதைக்கப்பட்ட ஒரு மாபெறும் மனிதர் ராஜிவ் காந்தி. ராஜிவ் தன் ரத்தத்தின் மூலம் தமிழக மக்களுக்கு செய்துவிட்டு போன ஒரு எச்சரிக்கைதான்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு ராஜிவிற்கு அடித்தவர்கள் சிங்களப் படையினர். முக்கியமாகச் சிங்களக்கடற்படை வீரன் தான் இவ்வாறு ராஜிவ் தலையில் அடித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

ஙரழவந யெஅநஸ்ரீ'சஅளயஉhiவாய' னயவநஸ்ரீ'ஆயல 22 2007இ 09:24 யுஆ' pழளவஸ்ரீ'305647'ஸ

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்இ

ஜஃஙரழவநஸ

வீரப்பனை எப்படிச்சடடார்கள் ஏன் சுட்டார்கள் என்ற கதை தெரிந்தும் நீங்கள் இப்படி வீறாப்பு கதைக்கக் கூடாது

இந்தியனாக இருப்பதில் மகிழுங்கள் தப்பில்லை

நீதி நியாயம் உண்மையை உணருங்கள் கதையுங்கள்

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் அடி கொடுத்தார்கள் ஆனால் அவர் சிதைத்தது தமிழர்களைத்தான் அதனால் அவர் தன்னைதானே சிதைத்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்டைக்கு வரல.

ஆட்டை என்ற சொல்லை வடிவேலும் பாவிக்கின்றதைப் பார்த்துள்ளோம். ஆட்டை என்றால் என்ன? :lol:

Link to comment
Share on other sites

ஆட்டை=விளையாட்டு

சில சமயம் வில்லங்கத்தில் இருந்து தப்ப இப்படி பாவிப்பது வழக்கு

வரலாறு தெரியுமா.

ராசிவ் காந்தியை முதலில் கொல்ல முயன்றது சிங்கள ராணுவமே. அதுவும் ராணுவ அணிவகுப்பில். இந்த தக்குதலில் காயங்களுடன் தப்பினார்.

Link to comment
Share on other sites

வீரப்பனை எப்படிச்சடடார்கள் ஏன் சுட்டார்கள் என்ற கதை தெரிந்தும் நீங்கள் இப்படி வீறாப்பு கதைக்கக் கூடாது

இந்தியனாக இருப்பதில் மகிழுங்கள் தப்பில்லை

நீதி நியாயம் உண்மையை உணருங்கள் கதையுங்கள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

Link to comment
Share on other sites

முற்றிலும் இலங்கை மக்களால் அடிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு கடைசியில் சிதைக்கப்பட்ட ஒரு மாபெறும் மனிதர் ராஜிவ் காந்தி. ராஜிவ் தன் ரத்தத்தின் மூலம் தமிழக மக்களுக்கு செய்துவிட்டு போன ஒரு எச்சரிக்கைதான்,

மாபெரும் இந்திய தலைவி இந்திரா காந்தி இறந்தபோது, இத்தாலியிலிருந்து ராஜீவ் காந்தியைக் கொண்டு வந்து பிரதமராக்கினார்கள். இந்திரா காந்தியின் மகன் என்பதைத் தவிர 'மாபெரும் மனிதர்' என்பதற்கு தகுதியுடையவருமல்ல, சாதனையாளருமல்ல.

(எத்தனை தடவைதான் இந்தப் படத்தைப் பிரசுரிப்பீர்கள். அடிக்கடி பார்க்க வேண்டுமானால் வீட்டில் பிரேம் போட்டு வைத்துப் பார்க்க வேண்டியதுதானே.)

...ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான்....

ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணமானவர் ராஜீவ் காந்தி.

Link to comment
Share on other sites

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது.

ஆகா தத்துவம் என் 00000 :lol::lol::huh:

ஆமா நீங்க எப்பதான் தமிழ் கத்துக்கபோறீங்க. சொல்கிற கருத்தை பிழையில்லாமல் சொல்லலாமே. :angry:

Link to comment
Share on other sites

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாகாமலும் போகலாம்..! உதாரணம் ஜெ. ஆர். ஜெயவர்த்தன

கத்தி எடுக்காதவரும் கத்தியால் சாகலாம்.. உதாரணம் மகாத்மா காந்தி..

இதிலிருந்து தெரிவது, இந்தப் பழமொழியில் அர்த்தமில்லை.. :lol:

Link to comment
Share on other sites

கத்தி எடுத்தவன் கத்தியால் சாகாமலும் போகலாம்..! உதாரணம் ஜெ. ஆர். ஜெயவர்த்தன

கத்தி எடுக்காதவரும் கத்தியால் சாகலாம்.. உதாரணம் மகாத்மா காந்தி..

இதிலிருந்து தெரிவது, இந்தப் பழமொழியில் அர்த்தமில்லை.. :huh:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.