Jump to content

வைத்தியரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்களை கோரோனாவின்  நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் வகையில் யேர்மனிய மருத்துவக் காப்புறுதி புதிய நடவடிக்கை ஒன்றை  யேர்மனியில் நடைமுறைப் படுத்தியிருக்கிறது.

இந்த நடைமுறையின் பிரகாரம் நோயாளர், காய்ச்சல், இருமல் போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவரிடம் நேரடியாகச் செல்ல வேண்டிய தேவையில்லை. வைத்தியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலைமையைத் தெரியப்படுத்தினால் போதும். நோயாளரின் நிலைக்கு ஏற்ப அவருக்கு ஏழு நாட்கள் மருத்துவ விடுப்புக்கு வைத்தியர் பரிந்துரைத்து உறுதிப்படுத்தித் தருவார். நோய்க்கான சான்றிதழ் வாடிக்கையாளரின் விலாசத்திற்கு மருத்துவரால் அனுப்பி வைக்கப்படும். அந்தச் சான்றிதழை நோயாளர் தனது வேலை இடத்துக்கு அஞ்சலில் அனுப்பித் தனது மருத்துவ விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடைமுறை முதற்கட்டமாக எதிர்வரும் நான்கு வாரங்கள் நடைமுறையில் இருக்கும் என மருத்துவக் காப்புறுதி அறிவித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

நல்ல திட்டம். 

ஒரு வைத்தியரை இல்லை தாதியரை இழப்பது என்பது மிகப் பெரிய இழப்பு. ஆகவே, அவ்வாறான இழப்புகள் தவிர்க்கப்படல் வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வேலை செய்யிற ஆக்களுக்கு ஏதாவது விமோசனம் இருக்கா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கள்ள வேலை செய்யிற ஆக்களுக்கு ஏதாவது விமோசனம் இருக்கா சார்? 😎

கும்ஸ்,கள்ள வேலைகளுக்கு சமூக நல காப்புறுதிகளைப் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் ஒரு கள்ள வேலை செய்யலாம். உடம்புக்கு சரியில்லை என்று வைத்தியரிடம் சான்றிதழைப் பெற்று அதை வேலையிடத்துக்கு அனுப்பிவிட்டு நாலு கிழமைக்கு கள்ள வேலை செய்து சம்பாதிக்கலாம். வரவு இரட்டிப்பாக இருக்கும்.

என்ன நான் சொல்லுறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.