Jump to content

மரண பீதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரண பீதி

வா. மணிகண்டன்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது. யாருக்கும் ஃபோன் கூட செய்ய முடிவதில்லை. காதுக்குள்ளேயே இருமுகிறார்கள். திரைப்படம் பார்க்கும் போது ‘புற்றுநோய் விளம்பரம்’ வந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வேன். ஏதேனும் மருத்துவமனை அந்நோய்க்கு விளம்பர பதாகை வைத்திருந்தால் முடிந்தவரை கவனத்தை திசை மாற்றிக் கொள்வேன். அந்தச் சொல்லே ஒருவிதமான அச்ச உணர்வை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே எந்த நோய் குறித்தும் விழிப்புணர்வு இருந்தால் போதும்; பயம் அவசியமில்லை என்ற எண்ணம்  உண்டு. ஆனால் நாம் வாழ்கிற கால, இடச் சூழல்கள் பயத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. கொரானோவும் அதை இம்மிபிசகாமல் செய்து கொண்டிருக்கிறது.

 

கூட்டத்தைத் தவிருங்கள் என்கிறார்கள். சரியான அறிவுரை. ஆனால் பேருந்து நடத்துநர் போன்ற பணிகளைச் செய்கிறவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழகும் பணியைச் செய்யக் கூடிய வேலை மட்டுமே இங்கு தோராயமாக முப்பது சதவீதத்தைத் தாண்டும். வெளியூரில் உண்டு, வெளியூரில் தங்கி, வெளியூரில் சுற்றிக் கொண்டிருக்கும் தொழிலைச் செய்கிறவர்கள் கணிசமாக இருப்பார்கள். அலுவலகக் கேண்டீன்களில் உண்ணுகிறவர்கள் கூட பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. பள்ளிக் கூடங்கள் மாதிரியான தவிர்க்கவே இயலாத தொற்றுக்கூடங்களை வரிசையாகச் சுட்டிக்காட்டலாம். என்ன செய்ய முடியும்?

 

பொதுவாகவே தனிமனித சுத்தம், சமூக சுத்தம் என்பதெல்லாம் தொடர்ச்சியான செயல்பாடு. திடீரென ஒரு பீதி கிளம்பும் போது மட்டும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்று நம்புவதே அபத்தம்தான். நல்வாய்ப்பாக, நோயின் வீரியம் அதுவாகவே குறையத் தொடங்கி, பரவல் வேகம் கட்டுக்குள் இருந்தால் தப்பிவிடலாம். கட்டுக்கடங்காமல் பரவினால் இத்தகைய அவசரகதி ஒழுங்குகள் எல்லாவற்றையும் சரி செய்து நம்புவதெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

 

சமீபமாக மட்டும் எத்தனை புதுப்புது வைரஸ்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்? சார்ஸ் வைரஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா என்று ஒவ்வொன்றாக, புதுப் புது நோய்களாக வந்து கொண்டேயிருக்கின்றன. திடீரென்று பயமூட்டுகின்றன. பதறச் செய்கின்றன. பிறகு அப்படியே அமுங்கிவிடுகின்றன.  ‘பயோ வார்’ ‘மருத்துவ உலகின் சதி’ ‘மருந்துக் கம்பெனிகளின் கதை’ என்று விதவிதமான தியரிகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்நோயும் அப்படியே போய்விட்டால் சந்தோஷம். இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற விரும்பினால் கூட இத்தாலிக்கும் பிரான்ஸூக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கும் உருவாகியிருக்கிறது. படிக்க வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வது, வேலைக்கு என பல தேசங்களுக்கும் செல்வது என உலகம் மிகச் சுருங்கிவிட்டது. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு எந்த நோயும் மிகச் சாதாரணமாக பரவிவிடவே வாய்ப்புகளும் அதிகம். 

 

நோய் பரவுகிறதோ இல்லையோ பயம் பரவுகிறது. ஊடகங்கள் ‘லைவ் அப்டேட்’ செய்கின்றன. அங்கே அப்படியாம்; இங்கே அப்படியாம் என ரத்த நாளங்களைச் சூடேற்றுகின்றன. உலகை அழிக்க ஒரு பெரும் கல் நெருங்கி வருவது போன்றதான திக் திக் மனநிலை நமக்கு மிகச் சாதாரணமாக உருவாகிவிடுகிறது. கேள்விப்பட்டவுடன் பதறுவது மனித இயல்பு. ‘தடுப்பூசி கூட இல்லையாமா’ என்பதில் தொடங்கி தாம் பயப்படுவதற்கான எவ்வளவோ காரணங்களை அடுக்குகிறார்கள். 

 

விழிப்புணர்வு அவசியம்தான். அரசாங்கம் செய்வதும் சரியான செயல்தான். ஆனால் சட்டென இப்படியொரு சூழல் உருவாகும் போது நம் மக்கள் பதறத் தொடங்குகிறார்கள். பொதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகத் தொடர்பற்றவர்கள் இவ்வளவு பதறுவதில்லை. மிக இயல்பான மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இவற்றோடெல்லாம் ஏதோவொருவகையில் தொடர்பிருந்தால் அவ்வளவுதான். சோலி சுத்தம். பம்ம வேண்டியதாகிவிடுகிறது. 

 

முன்பொரு சமயத்தில் ஒரு மூத்த மருத்துவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது. ‘பொதுவாகவே இந்தியர்கள்- குறிப்பாக தென்னிந்தியர்களின் நோய் குறித்தான மனநிலை மேம்போக்கானது. பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்பதுதான்’. அது நிதர்சனமான கவனிப்பு. அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை உலகம் முழுக்கவே அப்படியான மனநிலை இருந்திருக்க கூடும். மருத்துவ வசதிகளும், வாய்ப்புகளும், தகவல் தொடர்புகளும் பெருகப் பெருக பல்வேறு நோய்களைப் பற்றி நமக்கு அரையும்குறையுமாகத் தெரியத் தொடங்குகிறது. சுற்றியிருக்கும் ‘கால் மருத்துவர்கள்’ ‘அரை மருத்துவர்கள்’ இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்கள். இப்படித்தான்  ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அந்தப் பொது மனநிலை கடந்த கால் நூற்றாண்டாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. 

 

முன்பெல்லாம் வயதான ஒருவர் இறந்து போனால் ‘வயசாகிடுச்சு...இறந்துட்டாரு’ என்பதைத் தாண்டி எதுவும் இருக்காது. ஆனால் இப்பொழுதெல்லாம் துல்லியமாகக் காரணத்தைச் சொல்லிவிடுவோம். துக்க வீடுகளில் ‘வால்வ் டேமேஜ் ஆகிடுச்சு’ ‘ப்ரஷர் பத்தாம கிட்னி வேலை செய்யறதில்லை’ என்பது மாதிரி ஏதோவொரு டெக்னிக்கல் காரணத்தைச் சொல்கிறார்கள். அதைக் கேட்டவர் ‘ஆமா எனக்குத் தெரிஞ்சவரும் அப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு இவர் சொன்ன காரணத்தை இன்னொரு இழவு வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மருத்துவ விவகாரங்களில் அறியாமை ஒரு வரம். கூகிளை எல்லாம் விட்டுவிட்டு மருத்துவர் சொல்வதை பின்பற்றினால் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நமக்குள் இருக்கும் கால், அரை வைத்தியர்கள் விழித்துக் கொள்ளும் போது நம் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. பிரச்சினை என்னவென்றால் தனிமனிதர்களில் மட்டுமில்லாமல் சமூகத்திலும் கால், அரை வைத்தியர்கள் பெருகிவிட்டார்கள். சமூகம் என்பது ஊடகம், அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் என சகலரும் அடக்கம். 

 

பெருநகரங்களை விட்டுவிடலாம்- தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்த மருந்துக் கடையிலும் கைகளைச் சுத்தமாக்கிக் கொள்ளும் ‘சானிட்டைஸர்களை’ இன்று வாங்க முடியாது. தீர்ந்துவிட்டது என்கிறார்கள். முகமூடிகள் கிடைப்பதில்லை. பெரும் கொள்ளை நோய் ஒன்று நம்மைத் தாக்கப் போவதான பாவனையில் அவசர அவசரமாக வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்கிறார்கள். கொரோனா பரவினாலும் கூட அப்படியெல்லாம் கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்து போய்விட மாட்டார்கள். விழிப்புணர்வு அவசியம்தான். தயாராக இருந்து கொள்வோம். ஆனால் அதற்காக இவ்வளவு பதற வேண்டியதில்லை. இப்படி ஒவ்வொரு நோய்க்காக பதறி அடங்கினால் இன்னமும் சில பத்தாண்டுகளில் எல்லாவற்றுக்கும் பதறிக் கொண்டேயிருக்கும் பெரும் சமூகமாக மாறிவிடுவோம். 

 

http://www.nisaptham.com/2020/03/blog-post.html

Link to comment
Share on other sites



ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

படித்ததில் பிடித்தது..!

dinakaran daily newspaper

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.