Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு  நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு.

நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து £550 தான் இருவருக்கும் முடிகிறது. போனால் போகட்டும். ஒரு ஆறு மாதம் பார்த்துவிட்டுப் போகலாம் என்றால், நீங்கள் பயப்பிடுறியளா??? எனக்குப் பயமில்லை. நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்கிறாள் மகள்.

நாம் மாஸ்க் போட்டுக்கொள்வோம். எலுமிச்சங்காயில் ஒரு இருபதைக் கொண்டு போவோம். தங்குமிடங்களில் சுடுநீரில் எலுமிச்சை சேர்த்துக் குடிப்போம். இரசப் பவுடர் கொண்டு சென்று அதையும் பயன்படுத்துவோம். மெல்லிய டிஸ்போசல் கையுறை அணிவோம். கொரோனா கிட்டவும் வராது என்கிறாள்.

இளங்கன்று பயமறியாது என்பது சரிதான். ஆனால் எங்காவது எமது நிறத்தைப் பார்த்து 15 நாட்கள் உள்ளே வைத்திருந்துதான் விடுவோம் என்றால் என்ன செய்வது??? ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள். உங்களுக்குத் புண்ணியமாய்ப்போகும். 😀

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்லி, என்னத்தை போயி.... அட போங்க அக்கோய்....

காலைல வேலைக்கு போகேக்க டியூப்பில்... தொண்டையை செரும, நாலு பேர் கிளம்பி அந்த பக்கமா ஓடிப் போய் நிண்டு நாறல் மீனை பூனை பார்த்த மாதிரி பாக்கினம்.

பின்னேரம் வரேக்க, ஒருத்தர், தொண்டையை கிலீயர் பண்ணப் போறன்... வேற வருத்தம் இல்லை எண்டு போட்டு, சாகவாசமாய்... சங்கீத வித்துவான் மாதிரி பீடிகை போட்டு  இருமினார் பாருங்கோ.

உலகமே வெறுத்துப் போச்சுது...

சரி... உங்கண்ட பிளேன் அந்த தேதில பறக்குதாமே..... விசாரித்தியலோ? 

போனாலும் திரும்பி வருகிறமாதிரி நிலைமை இருக்குமோ?

சுகாதார மந்திரிக்கே வருத்தம்.... பேசாமல் பசுமதி சோத்தை வடிச்சு, பருப்பை ஊத்தி சாப்பிட்டு வீட்டுக்குள்ள இருக்கிறது உத்தமம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரின் மகனுக்கு சென்னையில்  இம்மாதம் 28 ௮ம் திகதி திருமணம் , எம்மிருவருக்கும் டிக்கெட் முன்னரே புக் பண்ணி , நேற்று e-விசாவும் எடுத்து முடிய , இப்ப காலையில வருகுது இந்த நியூஸ் ...


https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/all-tourist-visas-suspends-till-april-15th-to-prevent-coronavirus-spread-govt/articleshow/74582547.cms

எல்லா விசிட்டர்ஸ் விசாவும் நாளை 13  இலிருந்து ஏப்ரல் 15  வரை சஸ்பெண்டட்  …


ஏர் லைனுக்கு கேட்டிருக்கிறன், காசைத் திருப்பித் தருவானோ எண்டு... ...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

... ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள். உங்களுக்குத் புண்ணியமாய்ப்போகும். 😀

images?q=tbn:ANd9GcStoj6wOtG5w7mRQsglBIp

"தாயி, எந்தெந்த ஊருக்கு நீங்க போகணும்னு விருப்பபட்டீர்களென சொல்லுங்க.. வெத்திலையில மை தடவி அந்த ஊர்களை காட்டுறேன்..!" spec3.gif

 

"கொரானா தாயி, வூட்டுலேயே உட்கார்ந்து யூடூபில பாருங்க..!"   take-care.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2020/03/11/politics/donald-trump-coronavirus-statement/index.html

சுகமாக இருந்தால் எப்போதும் போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிருக்கும் கடைகளுக்கே போவதில்லை ...

அச்ச படும் சங்கதிக்கு அச்சபட வேண்டும் என்று 
சொல்லி இருக்கார் நம்ம வள்ளுவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார் பிள்ளை இவளவுபெயரும் இப்டிச் சொல்லினம் இதுக்குப் பிறகும் போகனுமா என்டு பிள்ளைக்கு காட்ட அக்காத்தை பிளான் பண்ணுறா.மக்காளை புரிந்து கொண்டு பதில்களைப் போடுங்கோ.😆😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய பயணம், நாலுபேரிடம் நல்லா விசாரித்து செய்யவும்.நாங்கள் முகமூடி போட்டுகொண்டு போனாலும் கொரோனா முகமூடி போடாமல்தான் திரியுதாம்....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை. ஏன் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை.

திடீர் திடீர் என்று விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை நிறுத்துகின்றன. நாடுகள் நுழைவாயில்களை மூடுகின்றன..  நாடுகள் பிரயாணத் தடை போடுகின்றன.. நாடுகள்.. 14 நாடுகளுக்கு உள்ளிருப்பு நடைமுறை போடுகின்றன.

இந்த நிலையில்.. பிரயாணங்கள் செளகரியமாக அமையாது. இந்தச் சவால்களை சந்திக்க முடியும்.. கொரானாவை எதிர்கொள்ள முடியும் என்றால்.. நீங்கள் திட்டமிட்டப்படி.. தொடரலாம். இல்லை என்றால் தவிர்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

என்னத்தை சொல்லி, என்னத்தை போயி.... அட போங்க அக்கோய்....

காலைல வேலைக்கு போகேக்க டியூப்பில்... தொண்டையை செரும, நாலு பேர் கிளம்பி அந்த பக்கமா ஓடிப் போய் நிண்டு நாறல் மீனை பூனை பார்த்த மாதிரி பாக்கினம்.

பின்னேரம் வரேக்க, ஒருத்தர், தொண்டையை கிலீயர் பண்ணப் போறன்... வேற வருத்தம் இல்லை எண்டு போட்டு, சாகவாசமாய்... சங்கீத வித்துவான் மாதிரி பீடிகை போட்டு  இருமினார் பாருங்கோ.

உலகமே வெறுத்துப் போச்சுது...

சரி... உங்கண்ட பிளேன் அந்த தேதில பறக்குதாமே..... விசாரித்தியலோ? 

போனாலும் திரும்பி வருகிறமாதிரி நிலைமை இருக்குமோ?

சுகாதார மந்திரிக்கே வருத்தம்.... பேசாமல் பசுமதி சோத்தை வடிச்சு, பருப்பை ஊத்தி சாப்பிட்டு வீட்டுக்குள்ள இருக்கிறது உத்தமம்...

என் விமானம் பறக்குது. விமானத்தை அல்லது விமானநிலையத்தை மூடினால் நான் தப்பலாம்.

6 hours ago, சாமானியன் said:

நண்பரின் மகனுக்கு சென்னையில்  இம்மாதம் 28 ௮ம் திகதி திருமணம் , எம்மிருவருக்கும் டிக்கெட் முன்னரே புக் பண்ணி , நேற்று e-விசாவும் எடுத்து முடிய , இப்ப காலையில வருகுது இந்த நியூஸ் ...


https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/all-tourist-visas-suspends-till-april-15th-to-prevent-coronavirus-spread-govt/articleshow/74582547.cms

எல்லா விசிட்டர்ஸ் விசாவும் நாளை 13  இலிருந்து ஏப்ரல் 15  வரை சஸ்பெண்டட்  …


ஏர் லைனுக்கு கேட்டிருக்கிறன், காசைத் திருப்பித் தருவானோ எண்டு... ...  

இது ஐரோப்பா பயணம் என்றதால் விசா பிரச்சனையும் இல்லை.

கட்டாயம் உங்களுக்குக் காசைத் திருப்பித் தருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

நான் இங்கிருக்கும் கடைகளுக்கே போவதில்லை ...

அச்ச படும் சங்கதிக்கு அச்சபட வேண்டும் என்று 
சொல்லி இருக்கார் நம்ம வள்ளுவர் 

அப்ப பொருட்களை எல்லாம் ஏற்கனவே வாங்கி அடுக்கிவிடீர்களா ???

3 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்ச பார் பிள்ளை இவளவுபெயரும் இப்டிச் சொல்லினம் இதுக்குப் பிறகும் போகனுமா என்டு பிள்ளைக்கு காட்ட அக்காத்தை பிளான் பண்ணுறா.மக்காளை புரிந்து கொண்டு பதில்களைப் போடுங்கோ.😆😂

கற்பூ........ரம் 😃

 

1 hour ago, suvy said:

ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய பயணம், நாலுபேரிடம் நல்லா விசாரித்து செய்யவும்.நாங்கள் முகமூடி போட்டுகொண்டு போனாலும் கொரோனா முகமூடி போடாமல்தான் திரியுதாம்....!   🤔

நாலுபேரிட்டைக்  கேட்கிறதுக்குத்தான் இந்தப் பதிவு அண்ணா.

 

33 minutes ago, nedukkalapoovan said:

இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை. ஏன் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை.

திடீர் திடீர் என்று விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை நிறுத்துகின்றன. நாடுகள் நுழைவாயில்களை மூடுகின்றன..  நாடுகள் பிரயாணத் தடை போடுகின்றன.. நாடுகள்.. 14 நாடுகளுக்கு உள்ளிருப்பு நடைமுறை போடுகின்றன.

இந்த நிலையில்.. பிரயாணங்கள் செளகரியமாக அமையாது. இந்தச் சவால்களை சந்திக்க முடியும்.. கொரானாவை எதிர்கொள்ள முடியும் என்றால்.. நீங்கள் திட்டமிட்டப்படி.. தொடரலாம். இல்லை என்றால் தவிர்க்கலாம். 

எங்காவது பிரயாணத்  தடை போட்டால் அங்கேயே நிற்கவேண்டிவரும் என்பதுதான் அதிக பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தங்களுக்கு கண்டபடி பயப்பிடுற ஆக்கள் வீட்டைவிட்டு வெளியிலை போறதை யோசிக்கப்படாது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசமா

உயிரா

தெரிவு  உங்கள்  கையில்..??

(ஆனால்  நாங்க  என்ன  செய்யப்போகின்றோம்  நீங்க  இல்லாமல்  யாழில்  என்று  தான்  யோசனையாகக்கிடக்கு😃)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி நாடான சுவிஸ்சில் கொரோனா 867 பேருக்கு வந்துள்ளது 6 பேர் இறந்துள்ளனர். நிலமை நல்லது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

 

அதிலிருந்து மீண்டு வந்தால்த் தானே எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

 

30 ம் திகதிக்குள் போய் வந்தால்  யாழ் 22 அகவையிலேயே எழுதலாம்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்படுவது நீங்கள் மாத்திரமல்ல , அப்படிப்பாதிக்கப்பட்டால் உங்களை அறியாமலேயே பலர் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாகிவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்த‌ ம‌ட்டில் இந்த‌ ப‌ய‌ண‌ம் இந்த‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌தாய் ப‌ட‌ல‌ , ப‌ல‌ நாட்டு அர‌சாங்க‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌ன் க‌ருதி வீட்டுக்குள் இருக்க‌ சொல்லின‌ம் , பாட‌சாலை வேலை இட‌ங்க‌ள் எல்லாம் ப‌ல‌ நாட்டில் பூட்டியாச்சு , இந்த‌ நேர‌ம் நீங்க‌ள் அய‌ல் நாடுக‌ளுக்கு போவ‌து ச‌ரி இல்லை சுமெ அக்கா , 

பொல்லை குடுத்து அடி வேண்டின‌ க‌தையாய் போய் விடும் கொரோனா உங்க‌ளுக்கும் வ‌ந்தா , 

முடிந்த‌ அள‌வு இந்த‌ ப‌ய‌ண‌த்தை த‌ள்ளி போடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வருத்தங்களுக்கு கண்டபடி பயப்பிடுற ஆக்கள் வீட்டைவிட்டு வெளியிலை போறதை யோசிக்கப்படாது.😎

நாங்கள் பயப்பிடுறது எண்டு உங்களுக்கு யார் சொன்னது ???😀

10 hours ago, விசுகு said:

பாசமா

உயிரா

தெரிவு  உங்கள்  கையில்..??

(ஆனால்  நாங்க  என்ன  செய்யப்போகின்றோம்  நீங்க  இல்லாமல்  யாழில்  என்று  தான்  யோசனையாகக்கிடக்கு😃)

நல்ல ஆசைதான். ஆனால் அது மட்டும் இப்போதைக்கு நடக்காது அண்ணா 🤣

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு குட்டி நாடான சுவிஸ்சில் கொரோனா 867 பேருக்கு வந்துள்ளது 6 பேர் இறந்துள்ளனர். நிலமை நல்லது இல்லை.

ஆனால் அங்கிருப்பவர்களைக் கேட்டால் அங்கே எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் என்கிறார்கள்.

2 hours ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

 

 

மகளும் அதைத்தான் சொல்கிறாள். அதுவும் நல்ல ஒரு அனுபவம் தானே அம்மா என்று.

யாழ்கள ஆண் சிங்கங்களே ரதி போன்ற பெண்களுக்கு இருக்கும் துணிவு உங்களுக்கு இல்லை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதிலிருந்து மீண்டு வந்தால்த் தானே எழுதலாம்.

லேசில் யாழ்களத்தைவிட்டு போக மாட்டம் அண்ணா . 😂

1 hour ago, vasee said:

பாதிக்கப்படுவது நீங்கள் மாத்திரமல்ல , அப்படிப்பாதிக்கப்பட்டால் உங்களை அறியாமலேயே பலர் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாகிவிடுவீர்கள்.

அய்யய்யோ இப்பிடி அபாண்டமாகப் பழிசுமத்துகிறீர்களே  🤣

44 minutes ago, பையன்26 said:

என்னை பொருத்த‌ ம‌ட்டில் இந்த‌ ப‌ய‌ண‌ம் இந்த‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌தாய் ப‌ட‌ல‌ , ப‌ல‌ நாட்டு அர‌சாங்க‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌ன் க‌ருதி வீட்டுக்குள் இருக்க‌ சொல்லின‌ம் , பாட‌சாலை வேலை இட‌ங்க‌ள் எல்லாம் ப‌ல‌ நாட்டில் பூட்டியாச்சு , இந்த‌ நேர‌ம் நீங்க‌ள் அய‌ல் நாடுக‌ளுக்கு போவ‌து ச‌ரி இல்லை சுமெ அக்கா , 

பொல்லை குடுத்து அடி வேண்டின‌ க‌தையாய் போய் விடும் கொரோனா உங்க‌ளுக்கும் வ‌ந்தா , 

முடிந்த‌ அள‌வு இந்த‌ ப‌ய‌ண‌த்தை த‌ள்ளி போடுங்கோ

வருவது என்று விதி இருந்தால் வீட்டில் இருந்தாலும் வந்துதானே தீரும்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் பயப்பிடுறது எண்டு உங்களுக்கு யார் சொன்னது ???😀

நல்ல ஆசைதான். ஆனால் அது மட்டும் இப்போதைக்கு நடக்காது அண்ணா 🤣

ஆனால் அங்கிருப்பவர்களைக் கேட்டால் அங்கே எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் என்கிறார்கள்.

 

மகளும் அதைத்தான் சொல்கிறாள். அதுவும் நல்ல ஒரு அனுபவம் தானே அம்மா என்று.

யாழ்கள ஆண் சிங்கங்களே ரதி போன்ற பெண்களுக்கு இருக்கும் துணிவு உங்களுக்கு இல்லை😎

இந்த‌ திரியில் எழுதின‌ ஆண்க‌ள் எல்லாரும் வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ப்புத‌ல்வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது / விட்டால் ர‌தி அக்காவுக்கு க‌வுர‌ பெய‌ரும் குடுப்பிங்க‌ள் போல‌ வீர‌ம‌ங்கை என்று 😁,

யாழ் தாத்தா மார் அண்ணா மார் உங்க‌ள் மேல் உள்ள‌ அக்க‌றையால் தான் இப்ப‌டி எழுதின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ய‌ம் என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ராசவன்னியன் said:

images?q=tbn:ANd9GcStoj6wOtG5w7mRQsglBIp

"தாயி, எந்தெந்த ஊருக்கு நீங்க போகணும்னு விருப்பபட்டீர்களென சொல்லுங்க.. வெத்திலையில மை தடவி அந்த ஊர்களை காட்டுறேன்..!" spec3.gif

 

"கொரானா தாயி, வூட்டுலேயே உட்கார்ந்து யூடூபில பாருங்க..!"   take-care.gif

ஒரு இடத்தில இருந்தே வெத்திலையில பாக்கலாமுன்னா லோகத்தையே சுத்திக் காட்டிடுங்களேன்  அண்ணா.

1 minute ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதின‌ ஆண்க‌ள் எல்லாரும் வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ப்புத‌ல்வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது / விட்டால் ர‌தி அக்காவுக்கு க‌வுர‌ பெய‌ரும் குடுப்பிங்க‌ள் போல‌ வீர‌ம‌ங்கை என்று 😁,

யாழ் தாத்தா மார் அண்ணா மார் உங்க‌ள் மேல் உள்ள‌ அக்க‌றையால் தான் இப்ப‌டி எழுதின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ய‌ம் என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை 😁

ரதிக்கு வீரமங்கை என்று கொடுப்பதும் பொருத்தமானது தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பது நல்லது. 

நிலைமை நாளுக்கு நாள் வேகமாக மாற்றம் காண்கின்றது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கடினம் ஆகலாம். போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடையலாம். பொருளாதார முடக்கங்கள் நாளாந்த வாழ்வை நிலை குலைய செய்யலாம். 

வியாதியின் நேரடி பாதிப்பு என்பதை விட இதனால் வரக்கூடிய வெளி நெருக்கடிகள், அலைச்சல்கள் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யய்யோ இப்பிடி அபாண்டமாகப் பழிசுமத்துகிறீர்களே  🤣

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.