Jump to content

கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
-----------------------------------------------------------------------------
கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
COVID-19 தோற்றை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் 3 முதல் 6 அடி இடைவெளியில் “பாதுகாப்பான தூரம்” இருக்குமாறு பரிந்துரைத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சீன அரசாங்க தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆராய்ச்சி சவாலுக்கு உட்படுத்துகின்றது என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
"ஏர் கண்டிஷனிங் கொண்ட ஒரு மூடிய சூழலில், புதிய கொரோனா வைரஸின் தொற்றக்கூடிய தூரம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான தூரத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்," என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுற்றுச்சூழலைப் பொறுத்து வைரஸ் ஒரு மேற்பரப்பில் பல நாட்கள் நீடிக்கும் என்று ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, 37 C வெப்பநிலையில் , கண்ணாடி, துணி, உலோகம், பிளாஸ்டிக் அல்லது காகிதத்தில் இது இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.
இது மனித மலம் அல்லது உடல் திரவங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 22 அன்று நீண்ட தூர பயணம் மேற்கொண்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒரு பஸ் பிரயாணியை வைத்து விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை செய்து முடிவுகளை வெளியிட்டனர். இதில் மொத்தம் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது என்று கண்ணுபிடித்துள்ளனர்.
நான்கு மணிநேர சவாரி முழுவதும் நோயாளி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை CCTV காட்சிகள் காண்பித்தன - ஆனால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் ஆறு வரிசைகள் அல்லது 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வைரஸ் தொற்றை பெற்ற ஒரு நபர் பாதிக்கப்பட்டவர் இறங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு பஸ்ஸில் ஏறினார் என்றும் - முதல் குழுவால் சுவாசிக்கப்பட்ட காற்றை சுவாசித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதே பயணி பின்னர் மற்றொரு பேருந்தில் ஏறி, அங்கும் 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்த இரு பயணிகளுக்கு தனது வைரஸை தொற்றவைத்துள்ளார்.
"சாத்தியமான காரணம் என்னவென்றால், முற்றிலும் மூடப்பட்ட இடத்தில், காற்று ஓட்டம் முக்கியமாக எயர் கொண்டிஷன் (ஹீட்டர்) மூலம் உருவாக்கப்படும் சூடான காற்றால் உருவாக்கப்படுகின்றது. சூடான காற்றின் உயர்வு வைரஸ் நிறைந்த நீர்த்துளிகளை அதிக தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும், ”என்று அந்த ஆய்வறிக்கை கூறியது.
விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முகமூடி அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறினர் - ஏனெனில் இரு பேருந்துகளிலும் இருந்த முகமூடிகளை அணிந்த பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.
“சுரங்கப்பாதைகள், கார்கள், விமானங்கள் போன்ற மூடிய பொது போக்குவரத்தில் சவாரி செய்யும்போது, நீங்கள் எப்போதும் முகமூடியை அணிய வேண்டும், அதே நேரத்தில், உங்கள் கைகளுக்கும் பொதுப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கவும், சுத்தம் செய்வதற்கு முன் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் , ” என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
பொது போக்குவரத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் - ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்புறங்களை சுத்தம் செய்வது உட்பட - மற்றும் முடிந்தவரை புதிய காற்று வருவதை உறுதிசெய்ய ஏர் கண்டிஷனிங் சரிசெய்யவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், நோய்காவிக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் - அதிக வைரஸ் தொற்றை பெற்றிருக்கவேண்டியவர்கள் - ஏன் பாதிக்கப்படவில்லை என்று அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
"இந்த வைரஸ் பரவுவதைப் பற்றிய எங்கள் அறிவு இன்னும் குறைவாகவே உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினார்.
 
Thanks: -Kumaravelu Ganesan- (FB)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.