Jump to content

ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை”


Recommended Posts

ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.

25 ஆண்டுகளாக சொல்லவில்லை

அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், "எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. நான் முதல் முதலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது டிசம்பர் 31, 2017ஆம் தேதிதான்," என்றார்.

"மீன் குழம்பும், பொங்கலும்"

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை"

"நான் அப்போது பேசிய போது சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும்" என்றேன். மீன் குழம்பு "பாத்திரத்தில் சக்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடப்பது இருக்கும் " என்று தெரிவித்தார்.

கட்சி பதவிகள்

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

"திமுக அதிமுகவில் 50 ஆயிரத்துக்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. ஏன் இத்தனை பதவிகள் ? கல்யாணம் நடக்கும் போதுதான் சமையற்கலைஞர்களும், வேலை ஆட்களும் தேவை. மற்ற நேரங்களில் தேவை இல்லை. அதுபோலத்தான் அரசியலும். தேர்தல் நேரத்தில்தான் கட்சிப் பதவிகள் தேவை. நான் அதற்காக உங்களை வேலை ஆட்கள் என சொல்லவில்லை" என்றார்.

அதிகளவில் கட்சி பதவிகள் இருந்தால் ஊழல்தான் நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

"முதல்வர் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை"

"என்னால் முதல்வர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் கட்சி தலைவர்தான். ஆட்சி தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவர், நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்" என்று மாவட்ட செயலாளர்களை சந்தித்தப் போது விவாதித்தேன். ஆட்சியில் நான் தலையிட மாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்." என்றார்.

"அது போல 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன் என்று கூறினேன். இவர்களிடம் மட்டுமல்லாமல், இது குறித்து நான் பலரிடம் விவாதித்தேன் " என்றார்.

"ஆனால், பெரும்பாலானவர்கள் நான் சொன்னதை ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றதைக் கூட ஒப்புக் கொள்கிறோம். ஆனால் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று கோரினார்கள். நான் மற்றவர்களிடம் இது குறித்து பேசுங்கள், இதனை புரியவையுங்கள் என்றேன் " என்று கூறிய அவர், "தலைவன் சொல்வதை தொண்டன் கேட்கவேண்டும். தொண்டன் சொல்வதை எல்லாம் தலைவன் கேட்க வேண்டிய தேவையில்லை," என்றும் தெரிவித்தார்.

50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து, 60லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஒய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்பம் இருந்தால் இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter

தமிழ்மண் புரட்சிக்கு பெயர்பெற்ற நிலம்

"காந்தி மாறியது இங்குதான். விவேகானந்தர் கர்ஜனை செய்த பூமி இதுதான். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சி செய்த பூமி இது. அது போல ஒரு புரட்சி மீண்டும் வர வேண்டும்." என்றார்

வாக்கை பிரிக்க நான் வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், "எனக்கு 71 வயது. பிழைத்து வந்திருக்கிறேன். இப்போது ஆட்சியை பிடித்தால்தான் உண்டு, அடுத்த தேர்தலில் எல்லாம் பார்த்து கொள்ள முடியாது," என்றார்.

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை” - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
Presentational grey line

காலத்தைக் கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?

70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.

https://www.bbc.com/tamil/india-51847855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

வைரலாகும் ரஜினியின் கேலி மீம்ஸ் - "எழுச்சி வரட்டும், அப்புறம் நான் வரேன்"

 
ரஜினியின் கேலி மீம்ஸ்படத்தின் காப்புரிமை YouTube

தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி பேசிய நிலையில், சமூக ஊடகங்களில் ரஜினியின் பேச்சை விமர்சித்து கேலி செய்து பல மீம்களும், கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

 

இன்று (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என்ற தகவல் கிடைத்த போது, பல ஊகங்கள் வெளியாகின.

அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார், மாநாடு நடத்தப் போகும் இடம் குறித்து தெரிவிப்பார், முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவரத்தை அவிழ்ப்பார் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் சிலாகித்து வந்தார்கள்.

 

ஆனால், இன்று ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த நிலையில், மீண்டும் ஒரு குழப்பமான சந்திப்பையே நடத்திவிட்டு சென்றிருப்பதாக அதில் பங்கேற்ற செய்தியாளர்கள் நினைக்கின்றனர்.

ரஜினிபடத்தின் காப்புரிமை Twitter

அப்படி செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது என்ன என்பதை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம் -

தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று பேசியவர், திடீரென இந்தியா முழுவதும் அந்த எழுச்சி இருக்க வேண்டும் என்றார்.

அந்த எழுச்சி வரும் நேரம் தான் அரசியலில் இறங்குவேன் என்று மேஜையைத் தட்டி கர்ஜித்த ரஜினி, இறுதியாக ஜெய் ஹிந்த் சொல்லி உரையை முடித்து கொண்டார்.

இன்று காலையிலிருந்தே ட்விட்டரில் #RajinikanthPressMeet #Rajinikanthpoliticalentry போன்ற ஹாஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்ட் பட்டியலில் இருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் #பயந்துட்டியா_கொமாரு #இலவுகாத்தகிளி_ரஜினி போன்று ரஜினியை கேலி செய்யும் ஹாஷ்டேகுகள் தமிழக அளவில் டிரெண்டிங் அடித்து வருகின்றன.

சில கேலி மீம்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Vineethmano
Quote

அரசியலில் எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

அப்பரம் என்ன?
பஞ்சாயத்து முடிஞ்சுது எந்திரிச்சு போங்கயா#இலவுகாத்தகிளி_ரஜினி pic.twitter.com/Lpg2gz35g4

 

— Vineeth (@Vineethmano) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Vineethmano

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @venkstesa

 

Quote

 

இந்த ராக்கெட் கிளம்பும்
நினைச்சேன் ...
கிளம்பவில்லையாம்
இன்னும் நாட்டில் புரட்சி வரனுமாம்...
Ayio..எப்பா முடியல அந்த சோடாவை தட்டுங்க
குடிச்சிட்டு சோலிய பார்ப்போம் ..🙄#Rajinikanthpoliticalentry #RajinikanthPressMeet pic.twitter.com/frTkaNoo4K

— தேனு வெங்கட் 🌺 (@venkstesa) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @venkstesa

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @AshvanthNeeraj

 

Quote

 

#Rajinikanthpoliticalentry
Current situation😇pic.twitter.com/Ego8ZFxuw8

— Neeraj Maara😍 (@AshvanthNeeraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @AshvanthNeeraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MdIbrahimSiraj

 

Quote

 

இப்போதும் சொல்கிறேன்... நீங்கள் இந்த மலையை தூக்கி வையுங்கள்.. நான் தூக்குறேன்... - ரஜினி#Rajinikanthpoliticalentry pic.twitter.com/C5jSpH5Ubb

— மளிகை கடைக்காரன் (@MdIbrahimSiraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MdIbrahimSiraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @deltatamilian
Quote

 

இதற்குதான் அப்போதே அருனாச்சலம் படத்தில் ஜனகராஜ்ஜை வைத்து குறியீடு காட்டியிருக்கிறார் ரஜினி. #Rajinikanthpoliticalentry #பயந்துட்டியா_கொமாரு

— Delta Tamilian (@deltatamilian) 12 மார்ச், 2020

 

 

Quote

 

மக்கள் கிட்ட எழுச்சிய உருவாக்குறவன் தான்டா தலைவன்
எழுச்சி உருவாகட்டும்னு காத்துட்டு இருக்குறவன் இல்ல. #Rajinikanthpoliticalentry pic.twitter.com/2j9KJ6EDN5

— வின்சென்ட் விஜே (@vinsent1010) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @vinsent1010

பெரிய அறிவிப்பு ஒன்று வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான் என்றாலும், ரஜினியின் இந்த எதார்த்தமான பேச்சை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @karthiksubbaraj

 

Quote

 

Clear Visionary, New Ideology ,Selfless, Practical,Genuine & Straight from the heart..That's Thalaivar in Politics!!

Great speech Thalaiva..
Our HOPE for a Political Change 🙏

Let the Movement begin..

இப்ப இல்லைனா எப்பவும் இல்ல!!#RajiniPoliticalRevolution #ThalaivarPressMeet pic.twitter.com/fcWoQ39cdQ

— karthik subbaraj (@karthiksubbaraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @karthiksubbaraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PradhaShree

 

Quote

 

#Rajinikanthpoliticalentry
சினிமாவில் நடப்பது போல நிஜ வாழ்வில் நடக்காதா என ஏங்குகிறோம்.‌ அப்படி நடத்த எவரேனும் வந்தால் இதென்ன சினிமா வா என கேட்கிறோம்.
அரிது இது போன்ற மனிதர் அரிது 🔥

— Sripradha (@PradhaShree) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PradhaShree

 

 

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Dhirajman1108

 

Quote

 

This is the need of the hour #Rajinikanthpoliticalentry

Have had enough of DMK and AIADMK nonsense for years now

Tamil Nadu needs a change and that too desperately, Rajnikanth can provide the same

— Dhiraj (@Dhirajman1108) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Dhirajman1108

 

 

 

Quote

 

70 வயசான பிறகும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தராம ஒருவாட்டியாவது சிஎம் ஆகிடணும்னு நினைக்கிற ஸ்டாலின் எங்க...

கட்சி ஆரம்பிச்சா எனக்கு முதல்வர் பதவி வேணாம்.இளைஞர்கள் தான் நாட்டை ஆளணும்னு சொல்ற 71 வயசு ரஜினி எங்க...#Rajinikanthpoliticalentry#Master

— MΛŞƬΣⱤ νιиσ (@VinoTamizhanda) 12 மார்ச், 2020

 

https://www.bbc.com/tamil/india-51850870

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @VinoTamizhanda

 
 
Link to comment
Share on other sites

அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியலில் இருந்து விடை பெற்றார்.

அவர் யாரு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும்... நீங்கள் முதல்வராவதை விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

'கியரை' இடது பக்கமாக போட்டார் 
பின்னர் 
'கியரை' வலது பக்கமாக போட்டார்

கடைசியில் ....
நேராகவே போய்விட்டார் 🙃

சொதப்பிட்டார் 'ப்னிசிங்கை' 🙂  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

ஆட்சிக்கு... சீமான்.
கட்சிக்கு... ரஜினி
இது ,எப்படி இருக்கு...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கனவோடு முதல் வண்டி (லொல் பார்க் எக்ஸ்பிரஸ்) ஏறி வந்த இந்த கர்நாடக காந்தம் காய்ந்து கண்டமானதால் சிறகொடிந்து மீண்டும் சினிமாவிற்கே செல்கிறது..😢

screenshot-2020-03-13-16-47-17.png

======  வணக்கம் ======

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவெடுக்கவே தயங்குபவன்  எல்லாம்  தலைவன்???

போய்யா  போய் சிகரெட்டடை  தூக்கிப்போடு.....

காசு  பாரு.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

வழமையா வடிவேலுவை வச்சுதான் மீம்ஸ் போடுவம்.. இப்ப வடிவேலுக்கே மீம்ஸ் போடணுமா..!

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9jb25

என்ர .! கடவுளே..😊..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people

ஆட்சிக்கு... சீமான்.
கட்சிக்கு... ரஜினி
இது ,எப்படி இருக்கு...??

ஒரு வேளை ரஜினி சொல்லுற மாதிரி செய்தால் இங்கை பலருக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்... எடப்பாடி- ஸ்டாலினின் கனவை பஸ்பமாக்க ரஜினி போடும் திட்டம்..!

3az6notk-jpg_1200x630xt.jpg

தங்களது சுயநலத்துக்காக மட்டுமே பலரும் அரசியல்களத்திற்கு வரும் நிலையில், ரஜினி கணிக்க முடியாத சில புதுமைகளை புகுத்தி அரசியல் களத்தை அதிர வைக்க முடிவெடுத்துள்ளார்.  

 மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதே நேரத்தில் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் என சபதமேற்றுள்ள அவர், முதல்வர் படித்த, அறிவாளியான, சுயநலமில்லாத, மக்கள் மீது பாசம் கொண்ட, தூய சிந்தனை கொண்ட 45 வயதுக்குட்பட்ட நிர்வாக திறமையுடைய இளைஞரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என ரஜினிகாந்த் வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார்.

ஆனால், அவர் தான் முதல்வர் வேட்பாளர் அல்ல என்பதில் உறுதியாக உள்ள அதேவேளை முதல்வராகக் கூடிய அந்த இளைஞரை கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார். அவர் ரஜினிக்கு ராசியாய் இருக்கக்கூடிய பெயரை தாங்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இந்த அண்ணாமலை. சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்தவர். 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தவர். கர்நாடகாவில் கர்கலா பகுதியில் ஏ.எஸ்.பி.,யாக காவல்துறையில் பணியைத் தொடங்கி கடந்த 2013-ம் ஆண்டு உடுப்பி எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றவர். 

உடுப்பி எஸ்.பி.,யாக இருந்தபோது இவரை அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.  அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் இந்த அண்ணாமலை. தான் பணிபுரிந்த இடங்களில் அராஜாகங்களை ஒழிப்பதில் அதிரடி கட்டிய அண்ணாமலை மக்களோடு மக்களாக வலம் வந்தவர். கர்நாடக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரியாக அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். ’கர்நாடக சிங்கம்’ என்று தான் அப்பகுதி மக்கள் இவரை அழைத்தனர்.

 தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பெங்களூரு தெற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்தபோது தனது பதவியில் இருந்து விலகினார். இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் அவர் அரசியலில் களமிறங்க முடிவு எடுத்ததாகக் கூறப்பட்டது.  கரூரைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால், அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரவிருக்கும் 2011 சட்டமன்ற தேர்தலில் 65 சதவிகிதம் வேட்பாளர்கள் 48 வயது குறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும், மீதமுள்ள வேட்பாளர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் -ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது அவர்களும் ரஜினிகாந்த் முடிவிற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சியும், ஆட்சியும் ஒரே ஆள் தலைமை ஏற்று நடத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது என தெரிவித்த ரஜினிகாந்த் தேசிய கட்சிகள் போலகட்சியை வழிநடத்த வேண்டும்.  ஆட்சியை வழிநடத்த அனுபவமுள்ள நேர்மையான ஒருவர் நியமிக்கப்படுவார் எனக்கூறியுள்ளார் ரஜினி. இந்த நிலையில் ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்த இருக்கும் முதல்வர் வேட்பாளர் கர்நாடகவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த அண்ணாமலை என்றும் இது ஒராண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அதன் பின்தான் அண்ணாமலை தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் குறித்தும் அரசியல் குறித்தும் ரஜினிகாந்த்  அவ்வப்போது அண்ணாமலையிடம் அடிக்கடி ஆலோசனை நடத்தியும் வந்துள்ளார். 

சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் இரு திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் அதிரடி காட்டப்போகிறது என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். இப்படி ஒரு முடிவெடுத்தால் நிச்சயம் ரஜினிக்கு தமிழக மக்கள் பேராதரவு தருவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

https://tamil.asianetnews.com/politics/edapadi-rajini-s-plan-to-push-stalin-s-dream-q72xbu

டிஸ்கி

 அப்போ கமலின்ர கதி..? ஆளாளுக்கு ஆய்வின்ர போர்வையில் அள்ளி விட்டு கொண்டு திரியினம்.. பார்ப்போம் என்ன நடக்குது என்று..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.