Jump to content

ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை”


Recommended Posts

ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

இன்று லீலா பேலஸில் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.

25 ஆண்டுகளாக சொல்லவில்லை

அரசியல் குறித்த என் நிலைப்பாட்டை விளக்கினால் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தெளிவு வரும் என்று கூறிய அவர், "எல்லாரும் கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதாக எழுதுகிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. நான் முதல் முதலாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது டிசம்பர் 31, 2017ஆம் தேதிதான்," என்றார்.

"மீன் குழம்பும், பொங்கலும்"

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை"

"நான் அப்போது பேசிய போது சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும்" என்றேன். மீன் குழம்பு "பாத்திரத்தில் சக்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடப்பது இருக்கும் " என்று தெரிவித்தார்.

கட்சி பதவிகள்

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

"திமுக அதிமுகவில் 50 ஆயிரத்துக்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. ஏன் இத்தனை பதவிகள் ? கல்யாணம் நடக்கும் போதுதான் சமையற்கலைஞர்களும், வேலை ஆட்களும் தேவை. மற்ற நேரங்களில் தேவை இல்லை. அதுபோலத்தான் அரசியலும். தேர்தல் நேரத்தில்தான் கட்சிப் பதவிகள் தேவை. நான் அதற்காக உங்களை வேலை ஆட்கள் என சொல்லவில்லை" என்றார்.

அதிகளவில் கட்சி பதவிகள் இருந்தால் ஊழல்தான் நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு: இன்னும் சில நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு

"முதல்வர் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை"

"என்னால் முதல்வர் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நான் கட்சி தலைவர்தான். ஆட்சி தலைவர் இல்லை. அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவர், நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்" என்று மாவட்ட செயலாளர்களை சந்தித்தப் போது விவாதித்தேன். ஆட்சியில் நான் தலையிட மாட்டேன் என்றும் அவர்களிடம் கூறினேன்." என்றார்.

"அது போல 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவேன் என்று கூறினேன். இவர்களிடம் மட்டுமல்லாமல், இது குறித்து நான் பலரிடம் விவாதித்தேன் " என்றார்.

"ஆனால், பெரும்பாலானவர்கள் நான் சொன்னதை ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றதைக் கூட ஒப்புக் கொள்கிறோம். ஆனால் நீங்கள்தான் முதல்வராக வேண்டும் என்று கோரினார்கள். நான் மற்றவர்களிடம் இது குறித்து பேசுங்கள், இதனை புரியவையுங்கள் என்றேன் " என்று கூறிய அவர், "தலைவன் சொல்வதை தொண்டன் கேட்கவேண்டும். தொண்டன் சொல்வதை எல்லாம் தலைவன் கேட்க வேண்டிய தேவையில்லை," என்றும் தெரிவித்தார்.

50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஓரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து, 60லிருந்து 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஒய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்பம் இருந்தால் இயக்கத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter

தமிழ்மண் புரட்சிக்கு பெயர்பெற்ற நிலம்

"காந்தி மாறியது இங்குதான். விவேகானந்தர் கர்ஜனை செய்த பூமி இதுதான். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சி செய்த பூமி இது. அது போல ஒரு புரட்சி மீண்டும் வர வேண்டும்." என்றார்

வாக்கை பிரிக்க நான் வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், "எனக்கு 71 வயது. பிழைத்து வந்திருக்கிறேன். இப்போது ஆட்சியை பிடித்தால்தான் உண்டு, அடுத்த தேர்தலில் எல்லாம் பார்த்து கொள்ள முடியாது," என்றார்.

ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: “நான் முதல்வர் ஆக விரும்பவில்லை” - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
ரஜினிகாந்த்: "நான் முதல்வர் ஆக விரும்பவில்லை" - Rajini Full Speechபடத்தின் காப்புரிமை Twitter
Presentational grey line

காலத்தைக் கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?

70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.

https://www.bbc.com/tamil/india-51847855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

வைரலாகும் ரஜினியின் கேலி மீம்ஸ் - "எழுச்சி வரட்டும், அப்புறம் நான் வரேன்"

 
ரஜினியின் கேலி மீம்ஸ்படத்தின் காப்புரிமை YouTube

தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி பேசிய நிலையில், சமூக ஊடகங்களில் ரஜினியின் பேச்சை விமர்சித்து கேலி செய்து பல மீம்களும், கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

 

இன்று (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என்ற தகவல் கிடைத்த போது, பல ஊகங்கள் வெளியாகின.

அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார், மாநாடு நடத்தப் போகும் இடம் குறித்து தெரிவிப்பார், முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவரத்தை அவிழ்ப்பார் என்றெல்லாம் ரஜினி ரசிகர்கள் சிலாகித்து வந்தார்கள்.

 

ஆனால், இன்று ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு முடிந்த நிலையில், மீண்டும் ஒரு குழப்பமான சந்திப்பையே நடத்திவிட்டு சென்றிருப்பதாக அதில் பங்கேற்ற செய்தியாளர்கள் நினைக்கின்றனர்.

ரஜினிபடத்தின் காப்புரிமை Twitter

அப்படி செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது என்ன என்பதை இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம் -

தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று பேசியவர், திடீரென இந்தியா முழுவதும் அந்த எழுச்சி இருக்க வேண்டும் என்றார்.

அந்த எழுச்சி வரும் நேரம் தான் அரசியலில் இறங்குவேன் என்று மேஜையைத் தட்டி கர்ஜித்த ரஜினி, இறுதியாக ஜெய் ஹிந்த் சொல்லி உரையை முடித்து கொண்டார்.

இன்று காலையிலிருந்தே ட்விட்டரில் #RajinikanthPressMeet #Rajinikanthpoliticalentry போன்ற ஹாஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்ட் பட்டியலில் இருந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் #பயந்துட்டியா_கொமாரு #இலவுகாத்தகிளி_ரஜினி போன்று ரஜினியை கேலி செய்யும் ஹாஷ்டேகுகள் தமிழக அளவில் டிரெண்டிங் அடித்து வருகின்றன.

சில கேலி மீம்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Vineethmano
Quote

அரசியலில் எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

அப்பரம் என்ன?
பஞ்சாயத்து முடிஞ்சுது எந்திரிச்சு போங்கயா#இலவுகாத்தகிளி_ரஜினி pic.twitter.com/Lpg2gz35g4

 

— Vineeth (@Vineethmano) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Vineethmano

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @venkstesa

 

Quote

 

இந்த ராக்கெட் கிளம்பும்
நினைச்சேன் ...
கிளம்பவில்லையாம்
இன்னும் நாட்டில் புரட்சி வரனுமாம்...
Ayio..எப்பா முடியல அந்த சோடாவை தட்டுங்க
குடிச்சிட்டு சோலிய பார்ப்போம் ..🙄#Rajinikanthpoliticalentry #RajinikanthPressMeet pic.twitter.com/frTkaNoo4K

— தேனு வெங்கட் 🌺 (@venkstesa) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @venkstesa

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @AshvanthNeeraj

 

Quote

 

#Rajinikanthpoliticalentry
Current situation😇pic.twitter.com/Ego8ZFxuw8

— Neeraj Maara😍 (@AshvanthNeeraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @AshvanthNeeraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MdIbrahimSiraj

 

Quote

 

இப்போதும் சொல்கிறேன்... நீங்கள் இந்த மலையை தூக்கி வையுங்கள்.. நான் தூக்குறேன்... - ரஜினி#Rajinikanthpoliticalentry pic.twitter.com/C5jSpH5Ubb

— மளிகை கடைக்காரன் (@MdIbrahimSiraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MdIbrahimSiraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @deltatamilian
Quote

 

இதற்குதான் அப்போதே அருனாச்சலம் படத்தில் ஜனகராஜ்ஜை வைத்து குறியீடு காட்டியிருக்கிறார் ரஜினி. #Rajinikanthpoliticalentry #பயந்துட்டியா_கொமாரு

— Delta Tamilian (@deltatamilian) 12 மார்ச், 2020

 

 

Quote

 

மக்கள் கிட்ட எழுச்சிய உருவாக்குறவன் தான்டா தலைவன்
எழுச்சி உருவாகட்டும்னு காத்துட்டு இருக்குறவன் இல்ல. #Rajinikanthpoliticalentry pic.twitter.com/2j9KJ6EDN5

— வின்சென்ட் விஜே (@vinsent1010) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @vinsent1010

பெரிய அறிவிப்பு ஒன்று வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான் என்றாலும், ரஜினியின் இந்த எதார்த்தமான பேச்சை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @karthiksubbaraj

 

Quote

 

Clear Visionary, New Ideology ,Selfless, Practical,Genuine & Straight from the heart..That's Thalaivar in Politics!!

Great speech Thalaiva..
Our HOPE for a Political Change 🙏

Let the Movement begin..

இப்ப இல்லைனா எப்பவும் இல்ல!!#RajiniPoliticalRevolution #ThalaivarPressMeet pic.twitter.com/fcWoQ39cdQ

— karthik subbaraj (@karthiksubbaraj) 12 மார்ச், 2020

 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @karthiksubbaraj

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PradhaShree

 

Quote

 

#Rajinikanthpoliticalentry
சினிமாவில் நடப்பது போல நிஜ வாழ்வில் நடக்காதா என ஏங்குகிறோம்.‌ அப்படி நடத்த எவரேனும் வந்தால் இதென்ன சினிமா வா என கேட்கிறோம்.
அரிது இது போன்ற மனிதர் அரிது 🔥

— Sripradha (@PradhaShree) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PradhaShree

 

 

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @Dhirajman1108

 

Quote

 

This is the need of the hour #Rajinikanthpoliticalentry

Have had enough of DMK and AIADMK nonsense for years now

Tamil Nadu needs a change and that too desperately, Rajnikanth can provide the same

— Dhiraj (@Dhirajman1108) 12 மார்ச், 2020

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @Dhirajman1108

 

 

 

Quote

 

70 வயசான பிறகும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தராம ஒருவாட்டியாவது சிஎம் ஆகிடணும்னு நினைக்கிற ஸ்டாலின் எங்க...

கட்சி ஆரம்பிச்சா எனக்கு முதல்வர் பதவி வேணாம்.இளைஞர்கள் தான் நாட்டை ஆளணும்னு சொல்ற 71 வயசு ரஜினி எங்க...#Rajinikanthpoliticalentry#Master

— MΛŞƬΣⱤ νιиσ (@VinoTamizhanda) 12 மார்ச், 2020

 

https://www.bbc.com/tamil/india-51850870

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @VinoTamizhanda

 
 
Link to comment
Share on other sites

அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியலில் இருந்து விடை பெற்றார்.

அவர் யாரு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும்... நீங்கள் முதல்வராவதை விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

'கியரை' இடது பக்கமாக போட்டார் 
பின்னர் 
'கியரை' வலது பக்கமாக போட்டார்

கடைசியில் ....
நேராகவே போய்விட்டார் 🙃

சொதப்பிட்டார் 'ப்னிசிங்கை' 🙂  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

ஆட்சிக்கு... சீமான்.
கட்சிக்கு... ரஜினி
இது ,எப்படி இருக்கு...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கனவோடு முதல் வண்டி (லொல் பார்க் எக்ஸ்பிரஸ்) ஏறி வந்த இந்த கர்நாடக காந்தம் காய்ந்து கண்டமானதால் சிறகொடிந்து மீண்டும் சினிமாவிற்கே செல்கிறது..😢

screenshot-2020-03-13-16-47-17.png

======  வணக்கம் ======

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவெடுக்கவே தயங்குபவன்  எல்லாம்  தலைவன்???

போய்யா  போய் சிகரெட்டடை  தூக்கிப்போடு.....

காசு  பாரு.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

வழமையா வடிவேலுவை வச்சுதான் மீம்ஸ் போடுவம்.. இப்ப வடிவேலுக்கே மீம்ஸ் போடணுமா..!

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9jb25

என்ர .! கடவுளே..😊..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people

ஆட்சிக்கு... சீமான்.
கட்சிக்கு... ரஜினி
இது ,எப்படி இருக்கு...??

ஒரு வேளை ரஜினி சொல்லுற மாதிரி செய்தால் இங்கை பலருக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்தான் முதல்வர் வேட்பாளர்... எடப்பாடி- ஸ்டாலினின் கனவை பஸ்பமாக்க ரஜினி போடும் திட்டம்..!

3az6notk-jpg_1200x630xt.jpg

தங்களது சுயநலத்துக்காக மட்டுமே பலரும் அரசியல்களத்திற்கு வரும் நிலையில், ரஜினி கணிக்க முடியாத சில புதுமைகளை புகுத்தி அரசியல் களத்தை அதிர வைக்க முடிவெடுத்துள்ளார்.  

 மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதே நேரத்தில் முதல்வர் பதவி வகிக்க மாட்டேன் என சபதமேற்றுள்ள அவர், முதல்வர் படித்த, அறிவாளியான, சுயநலமில்லாத, மக்கள் மீது பாசம் கொண்ட, தூய சிந்தனை கொண்ட 45 வயதுக்குட்பட்ட நிர்வாக திறமையுடைய இளைஞரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என ரஜினிகாந்த் வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார்.

ஆனால், அவர் தான் முதல்வர் வேட்பாளர் அல்ல என்பதில் உறுதியாக உள்ள அதேவேளை முதல்வராகக் கூடிய அந்த இளைஞரை கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார். அவர் ரஜினிக்கு ராசியாய் இருக்கக்கூடிய பெயரை தாங்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இந்த அண்ணாமலை. சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்தவர். 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தவர். கர்நாடகாவில் கர்கலா பகுதியில் ஏ.எஸ்.பி.,யாக காவல்துறையில் பணியைத் தொடங்கி கடந்த 2013-ம் ஆண்டு உடுப்பி எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றவர். 

உடுப்பி எஸ்.பி.,யாக இருந்தபோது இவரை அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.  அந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் இந்த அண்ணாமலை. தான் பணிபுரிந்த இடங்களில் அராஜாகங்களை ஒழிப்பதில் அதிரடி கட்டிய அண்ணாமலை மக்களோடு மக்களாக வலம் வந்தவர். கர்நாடக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரியாக அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். ’கர்நாடக சிங்கம்’ என்று தான் அப்பகுதி மக்கள் இவரை அழைத்தனர்.

 தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பெங்களூரு தெற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்தபோது தனது பதவியில் இருந்து விலகினார். இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் அவர் அரசியலில் களமிறங்க முடிவு எடுத்ததாகக் கூறப்பட்டது.  கரூரைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  ஆனால், அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரவிருக்கும் 2011 சட்டமன்ற தேர்தலில் 65 சதவிகிதம் வேட்பாளர்கள் 48 வயது குறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும், மீதமுள்ள வேட்பாளர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் -ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது அவர்களும் ரஜினிகாந்த் முடிவிற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சியும், ஆட்சியும் ஒரே ஆள் தலைமை ஏற்று நடத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது என தெரிவித்த ரஜினிகாந்த் தேசிய கட்சிகள் போலகட்சியை வழிநடத்த வேண்டும்.  ஆட்சியை வழிநடத்த அனுபவமுள்ள நேர்மையான ஒருவர் நியமிக்கப்படுவார் எனக்கூறியுள்ளார் ரஜினி. இந்த நிலையில் ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்த இருக்கும் முதல்வர் வேட்பாளர் கர்நாடகவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கரூரைச் சேர்ந்த அண்ணாமலை என்றும் இது ஒராண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு அதன் பின்தான் அண்ணாமலை தனது அரசுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் குறித்தும் அரசியல் குறித்தும் ரஜினிகாந்த்  அவ்வப்போது அண்ணாமலையிடம் அடிக்கடி ஆலோசனை நடத்தியும் வந்துள்ளார். 

சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் இரு திராவிட கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் அதிரடி காட்டப்போகிறது என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். இப்படி ஒரு முடிவெடுத்தால் நிச்சயம் ரஜினிக்கு தமிழக மக்கள் பேராதரவு தருவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

https://tamil.asianetnews.com/politics/edapadi-rajini-s-plan-to-push-stalin-s-dream-q72xbu

டிஸ்கி

 அப்போ கமலின்ர கதி..? ஆளாளுக்கு ஆய்வின்ர போர்வையில் அள்ளி விட்டு கொண்டு திரியினம்.. பார்ப்போம் என்ன நடக்குது என்று..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.