Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – இலங்கையில் 24 மணித்தியாலங்களில் எவருக்கும் இல்லை – 300 பேர் வெளியேறினர் – 2பேர் பூரண சுகம்…

March 28, 2020

 

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும்,  குணமடைந்த இருவரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 9 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ,  நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள  106 கொரோனா நோயாளர்களில்  9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதில் 87 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர்.

மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 300 பேர் வெளியேறியேறியதாக அறிவிப்பு….

வெளிநாடுகளிலிருந்து  இலங்கை திரும்பி  கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி சென்றதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2020/139455/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, வைத்தியசாலையில் 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றால் முதல் இறப்பு சம்பவம் IDH மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. 

மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதானவரே உயிரிழந்துள்ளார்.  சிறுநீரகம் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனளிக்காது  உயிரிழந்துள்ளார்.

நன்றி வட்சப்

Link to comment
Share on other sites

இலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் !

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78838

Link to comment
Share on other sites

இலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் இதுவரை (இன்று 23/03/2020 மலை 6.00 மணி) 110 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது, அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில்  இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் அந்தந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டது.

இன்று சனிக்கிழமை மட்டும் புதிதாக நான்கு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய , கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தோரில் இன்று மட்டும் இருவர் குணமடைந்து வெளியேறினர்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்ற இருவரே இவ்வாறு குணமடைந்து வெளியேறினர்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில், அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. இதில் 25 பேர் வரையிலானோர் கொழும்பு மாவட்டத்துக்குள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில ;5 வெளிநாட்டவர்கள்  உட்பட 199 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் 96 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 22 பேரும், ஹோமாகம மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் தலா 12 பேரும் சந்தேகத்தில் சிகிச்சை பெறும் 199 பேரில் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் அடுத்து வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள் அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்கு காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைபப்ட்டிருக்க அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலைமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இந்த பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கையினை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இதன் நோக்கில் இப்பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0760 390 981 , 0760 390 437 , 0766 527 589 , 0760 390 732 , 0760 390 752 அகிய  தொலைபேசி இலக்கங்களுடாக பொது மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு  கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 1358 வாகனங்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

https://www.virakesari.lk/article/78837

Link to comment
Share on other sites

எதிர்வரும் ஏப்ரல் 23 வரையிலான இருவார காலம் மிக முக்கியமானது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள்ளானவர்களின் கால தரவுகளின் பிரகாரம், இலங்கையில் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகி நோயரும்பு காலம் பூர்த்தியாகி அந்த நோய்த்தொற்றலுக்கு உள்ளான பலர் அதை வெளிக்க்காட்ட கூடும், அல்லது அவர்களில் இருந்து தொற்று பரவ கூடும்.

எனவே, கூடுமானவரை வீட்டிற்குள் இருக்கவும்.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரையான காலப்பகுதி இலங்கையை பொறுத்தவரை மிக முக்கியமானது. இந்த காலப்பகுதியில் வெளியில் செல்வதையோ யாருடையதாவது வீடுகளுக்கு செல்வதையோ தயவு செய்து தவிருங்கள்.

பேராசிரியர் ரோகினி செனிவிரத்ன
(ஓய்வு பெற்ற சிரேஷ்ட வைத்திய நிபுணர் ரகுநாதன் அவர்களின் முகநூலில் இருந்து பிரதிபண்ணப்பட்டது )

 

Link to comment
Share on other sites

யாழிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற டக்ளஸின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் |

கொரோனா தொற்று இலங்கையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்திவரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முகமாக அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளையும் தற்பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா  நோயின் தாக்கம் யாழ் மாவட்டத்திலும் உணரப்பட்டுள்ளமையால் அப்பரிசோதனையை துரிதகதியில் மேற்கொள்வதற்கு ஏதுவாக அதன் மருத்துவ பரிசோதனையை யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமைக்கு அமைய அமைச்சரவை அந் நடைமுறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வரும் புதன்கிழமையில் இருந்து யாழ்ப்பாணத்தில் குறித்த பரிசோதனையை ஆரம்பிக்க முடியும் என தான் நம்புவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் கொரொனா வைரசுக்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78808

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 199 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

co.JPG


இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதுவரை உலகளாவிய ரீதியில் 663,740 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 30,879 பேர் உயிரிழந்துள்ளனர்.

142,183 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78852

Link to comment
Share on other sites

மக்களே அவதானம் ! கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம் கட்ட  அவதான  நிலையில் இலங்கை !

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலகுமே சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா , இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாது தவிக்கின்றது. மறுப்பறம் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை சர்வதேச சமூகத்தை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதே போன்று சீனா அந்த அபாய நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் நிலை அபாயவலயத்தில் இலங்கை தற்போதுள்ளது. இந்த இரண்டாம் நிலை அவதானம் அல்லது அபாய வலயமென அரசாங்கம் எதனை குறிப்பிடுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி கடந்த 11 ஆம் திகதி (மார்ச்) அடையாளம் காணப்பட்டார்.  இந்த திகதியிலிருந்து 14 நாட்களாக கருத கூடிய மார்ச் 25 ஆம் திகதி வரையான கால எல்லையை கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கிய முதலாவது காலக்கட்டமாக அல்லது ஆரம்ப நிலையாக கருதப்பட்டது.

கடந்த புதன்கிழமையுடன் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கொரோனா வைரஸ் பரவலுக்கான முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கையானதும் அபாயகரமானதுமான காலப்பகுதியில் இலங்கை உள்ளது. ஏனெனில் முதலாவது வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் ஊடாக எத்தனை  பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பது வெளிப்படுகின்ற காலப்பகுதியிலேயே இலங்கை தற்போதுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது.

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் தொடக்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி வரைக்கும் பதிவாகியிருந்த 106 பேரிடிருந்து பரவி எண்ணிக்கையின் அளவு இந்த இரு வாரத்திற்குள் வெளிப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் இரண்டாது கட்ட அபாய நிலையாக அரசாங்கம் தற்போது கருதுகின்றது.

வைரஸ் தொற்று பரவாமளிருக்க அரசாங்கம் கடந்த நாட்களில் அமுல்படுத்தியிருந்த ஊரடங்கு சட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைளின் ஊடாக இரண்டாம் கட்ட அபாய நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கிலேயே செயற்பட்டது. ஆனால் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தமை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்தமை போன்ற சம்பவங்கள் வைரஸ் தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

எனவே தான் அரசாங்கம் மக்களின் நடமாட்டத்தை முழு அளவில் முடக்கும் வகையில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. இந்த நிலை பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 10 திகதி வரை தொடரும் . ஏனெனில் இரண்டாம் கட்ட அவதானத்திற்காக அரசாங்கம் மேலும் 14 நாட்களை கணித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனவே இந்த இருவார காலம் என்பது இலங்கைக்கு கொரோனா வைரஸ் குறித்த முக்கியமான காலப்பகுதியாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78856

Link to comment
Share on other sites

வைத்தியசாலைகளுக்கு கிளினிக் வரவேண்டாமென வலியுறுத்தல்
Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 08:56 - 0      - 3
கே.கண்ணன் 

எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய்,  உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாமென, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மேற்படி நோயாளிகளுக்குக் காணப்படும் அதிக ஆபத்துக் காரணமாக நோயாளர்கள், பிணி நிலையத்துக்கு (கிளினிக்) வரவேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதற்குப் பதிலாக அவர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கியமான பொறுப்புடைய ஒருவரை, பிணி நிலையத்துக்கு கிளினிக் புத்தகத்துடன் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது குறித்த தேவையான சேவைகள் வழங்குவதற்காக அரச வைத்தியசாலைகள் பிணி நிலைய நேர அட்டவணையின்படி செயல்பட்டு வருவதுடன், இரு மாதங்களுக்குத் தேவையான மருந்தும் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், பிணி நிலையத்துக்கு அவர்களால் வரமுடியாவிட்டால் ஏதேனுமொரு வார நாள்களில் அம்மருந்துகளை வெளிநோயாளர்கள் பிரிவில் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிணி நிலைய புத்தகப் பதிவுகள் அல்லது நோயறிதல் அட்டைகள், ஊரடங்கு அமுலின் போது அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/வைத்தியசாலைகளுக்கு-கிளினிக்-வரவேண்டாமென-வலியுறுத்தல்/175-247581

Link to comment
Share on other sites

அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின்

வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும்.

  • தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600
  • நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204
  • பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882
  • மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk

https://www.ibctamil.com/srilanka/80/140035

Link to comment
Share on other sites

ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 12:55 - 0      - 14


கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவோரில் ஐவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவர்-தீவிர-சிகிச்சைப்-பிரிவில்/175-247597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் பாராட்டினார் பிரிட்டன் பிரஜை

 

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு, பிரட்டனை விட இலங்கை நன்றாகத் திட்டமிட்டுள்ளது என, இலங்கைக்கு சுற்றுலா வந்த பின்னர் பிரிட்டனுக்குத் திரும்பிய சுற்றுலாப் பயணியொருவர், அங்குள்ள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரட்டனுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் ஏற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலாப்பயணி, மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

அவர் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரும்போதே, விமானத்துக்குள் வைத்து, தங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புமாறு ஒரு படிவம் வழங்கப்பட்டது என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும்போது, அங்கிருந்த விமானநிலைய அதிகாரிகள், தங்களைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் அறிந்து வைத்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்னர், பல இயந்திரங்கள் பல பரிசோதனைகள் தனக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையைப்-பாராட்டினார்-பிரிட்டன்-பிரஜை/175-247601

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

(எம்.எப்.எம்.பஸீர்)


கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் 117 பேர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி இன்று  இரவு 7.45 மணியாகும் போது மொத்தமாக இரு வெளிநாட்டவர்கள் உட்பட 106 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இரு வெளிநாட்டவர்கள் உட்பட 96 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.


இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ள நிலையில், அவர்கள் அவ்வந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சிலாபம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இருவரும் நேற்று 9 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டிருந்தனர்.

இதனிடையே தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுகின்றது. அவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. எனினும் கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பதிவான முதல் மரணம் நேற்று சம்பவித்திருந்தது.  60 வயதான மாரவில பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட 4 ஆவது தொற்றாளராக அடையாளம் கணப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

அவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டிருந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலதிகமாக நீரிழிவு மற்றும் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் நியமங்கள் மற்றும் தொற்று நோய் சட்ட விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது.

சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள், முல்லேரியா பொலிசாரின் கட்டுப்பாட்டில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இதன்போது, உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவர் மட்டும் பங்கேற்றிருந்தனர். அவரது மனைவி பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பங்கேற்கவில்லை. குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக முதல், ஜேர்மனியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழிகாட்டியாக செயற்பட்டிருந்தார்.

இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டோர் 29 பேராவர். களுத்துறையில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கம்பஹாவில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டுள்ளோர் நால்வராவர்

இதனிடையே மேலும் 117 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78916

Link to comment
Share on other sites

Corona Virus 🦠: கொரோனா எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நாட்கள் உயிர் வாழும்? கொரோனாவை ஒரு நிமிடத்தில் உங்கள் வீட்டில் இருந்து துரத்துவது எப்படி?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

இவருடைய பெயர் மதனழகன் 🙂

காத்தான்குடியை முற்றாக முடக்கப் போறார்களாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் போது என்ன செய்ய வேண்டும்? அரச அதிபர் விளக்கம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மக்களுக்கு விடுக்கும் பணிவான அறிவித்தல் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடக்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. அவ்வேளைகளில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் பல செயல்த்திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் இது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பிரிவுக்கு தெவித்தார்.

மாவட்டத்தில் சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்றுவந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது எனவும் இதற்கான மாற்று நடவடிக்கையாக மரக்கறி வகைகளை நடமாடும் சேவையாக சகல வீதிகளுக்கும் வாகனங்கள் ஊடாக எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி கட்டுப்பாட்டு விலைகளில் வழங்க அரசாங்க அதிபரும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர் ஆர். எப். அன்வர் சதாத்தும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர். இதில் பொருட்களை பதுக்கிவைத்தல் அதிக விலைக்கு பொருட்களை விற்பணை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பல்பொரு விற்பணை நிலைங்களும் மருந்தகங்களும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான பொருட்களை வழங்கவுள்ளனர் பொது மக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கன்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் அதில் முக்கியமாக ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்து கொன்டு அங்கும் இங்கும் அலைவதை தவிர்த்து தங்களின் வீடுகளுக்கு சென்று விடுமாறு வேண்டப்படுகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துளைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துளைப்பை வழங்குவது அவசியமாகும்.

http://thinakkural.lk/article/37434

ஓய்வூதியம் மற்றும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு வீடுகளுக்கே அனுப்பிவைக்கப்படும்

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும் .

http://thinakkural.lk/article/37431

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.