Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

’மருந்தகங்கள் 3 நாள்களுக்குத் திறக்கப்படும்’
Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:00 - 0      - 13

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள், நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திறக்கப்படவுள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்கள்-3-நாள்களுக்குத்-திறக்கப்படும்/175-247789

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளா மூவரும் மருதானை,யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் 146 பேர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 18 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தற்போது 126 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு, மருத்துவ கண்காணிப்பில் 231 பேர் உள்ளனர்.

அத்தோடு, இருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79093

Link to comment
Share on other sites

கொரோனா நோயாளி தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கு நோய் அறிகுறி
 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:29

தங்காலை பிரதேசத்தில் சுற்றுலா  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய இருவர் நோய் அறிகுறிகளுடன் இன்று (01) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென,  தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்குச் சென்றிருந்த குறித்த நபர், கடந்த 15,16,17  ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-நயள-தஙகயரநத-ஹடடலல-இரவரகக-நய-அறகற/175-247775

Link to comment
Share on other sites

இலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி!

இவர் கொரொனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார்.

மருதானைப்பகுதியில் இன்று மாலை அடையாளம் காணப்பட்ட 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/79110

Link to comment
Share on other sites

பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்: டொக்டர் சத்தியமூர்த்தி

2020 ஏப்ரல் 02 , மு.ப. 01:05

கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பது பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

தனது பேஸ்புக்கில் இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு:

பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில், மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆகவே, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள். ஆகவே, கொரோனா தொற்றானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி, சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பதமககள-அவதனமக-இரககவம-டகடர-சததயமரதத/71-247803

Link to comment
Share on other sites

யாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கையில் கிடைத்துள்ள நிலையில் மூவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மத போதகர் மேலதிக சிசிக்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிதாக இனங்காணப்பட்ட இருவரும் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அறியமுடிகிறது.

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களே பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

https://www.virakesari.lk/article/79111

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய பொருட் பிரச்சினை குறித்து அறிவிக்க எண்கள்

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு விசேட ஜனாதிபதி செயலணி ஊடக ஒருங்கிணைப்புத் தலைமை அலுவலர், பேராசிரியர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.

எண்கள்,

  • 0113456200
  • 0113456201
  • 0113456202
  • 0113456203
  • 0113456204
  •  

https://newuthayan.com/அத்தியாவசிய-பொருட்-பிரச்/

Link to comment
Share on other sites

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-247814

Link to comment
Share on other sites

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது

In இலங்கை     April 2, 2020 11:25 am GMT     0 Comments     1032     by : Litharsan

Vavuniya-Hospital.jpg

வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/

Link to comment
Share on other sites

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு! |

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 21 பேர் குணமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79148

Link to comment
Share on other sites

உயிரிழந்தவரின் மருமகன், பேரனுக்கு கொரோனா பாதிப்பு
 2020 ஏப்ரல் 02 , பி.ப. 07:08

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உயிரிழந்தவரின்-மருமகன்-பேரனுக்கு-கொரோனா-பாதிப்பு/175-247859

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபரும் இன்று உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறககளளன-மறறமரவரம-உயரழநதர/175-247870

Link to comment
Share on other sites

வீட்டிலேயே இருப்பது உயிர்களைக் காக்கும்

நீங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவலாம்.

•இடைவெளியைப் பராமரிப்பது COVID-19 பரவலைக் குறைக்கிறது

•வைரஸ் பெரும்பாலும் இருமல்கள் தும்மல்கள் வழியாகவே பரவுகிறது

•நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளைப் பராமரிக்க நீங்கள் உதவலாம்

மூலம்: www.who.int

 
Link to comment
Share on other sites

கொரோனா சந்தேகநபர்களுக்காக ’Mankiwwa’ செயலி அறிமுகம்

'Mankiwwa' என்ற செயலியைப் பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்கள் எனச் சந்தேகிப்பவர்கள் குறித்து அறிவிக்க முடியுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.;

தற்போது கம்பஹா, குளியாப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளுடன் இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய கால இடைவெளியில் நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகளுடனும் இந்த செயலி இணைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சமூகத்தில் மறைந்து வாழ்வார்களாயின், இவ்வாறான நபர்கள் குறித்து சுகாதாரப் பிரிவினரை தெளிவுப்படுத்தவும் அவர்கள் குறித்து சுகாதார பிரிவினருக்கு அறிவிப்பதற்காகவும் பல தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இதற்காக புதிய செயலி ஒன்றையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-சநதகநபரகளககக-Mankiwwa-சயல-அறமகம/175-247902

 

Link to comment
Share on other sites

யாழ். அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று (03.04.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள பூம்புகார் கிராமத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்கேற்ற 18 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/79187

Link to comment
Share on other sites

கொரோனா சோதனை இன்று முதல் தீவிரம்

கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை, இன்று (03) முதல் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-சோதனை-இன்று-முதல்-தீவிரம்/175-247914

Link to comment
Share on other sites

இலங்கையில் இன்று இரு கொவிட் 19 தொற்றாளர்கள் குணம்பெற்றனர் : ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

இலங்கையில் இன்று (03.04.2020) மாலை 7 மணிவரை மேலும் இரு கொவிட்-19 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் ஒரு கொவிட் 19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தற்போது கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொவிட்-19 தொற்றாளர்கள் 152 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/79225

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேவைகள்:

வைத்தியசாலையின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாத்தொற்று என சந்தேகப்படக்கூடிய நோய்அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கவும், பரிசோதிக்கவும் கொரோன்த்தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும்,செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலை தடுத்தல், சுயபாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது.

யாழ் மருத்துவபீட மாணவர்களின உதவியுடன் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் தமக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் நேரடியாக வீட்டில் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வனர்த்த நிலைமையில் வைத்தியசாலை ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து வசதிகள், உணவுப்பொருட்கள் வழங்கல், தங்குமிட வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறாக இந்த கடினமான சூழ்நிலையிலும்
அனைவரும் முழு வினைத்திறனுடன் செயற்படுவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தகவல்:
வைத்தியர் த.சத்தியமூர்த்தி,
யாழ் போதான வைத்தியசாலை

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.