Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 17 இங்கு பின்னர் கொரோனாவின் வீரியம் அதிகரிக்கும்;எச்சரிக்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு பின்னர் கொரோனா வைரஸ் மிக வீரியமாக பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே அதுவரைக்கும் தற்போது கடைப்பிடிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் உரியவகையில் பின்பற்றுவதே சிறப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளா

http://thinakkural.lk/article/37921

Link to comment
Share on other sites

புத்தளத்தில் மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

2020 ஏப்ரல் 06 , மு.ப. 06:36

 

புத்தளம்-சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்த மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஸா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையத்தில் இணைக்கப்பட்ட 11,9,5 வயதுகளையுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இச்சிறுவர்களை முல்லேரியாவ வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பததளததல-மனற-சறவரகளகக-கரன-தறற-உறத/175-248018

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

லங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 176 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 33 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79365

Link to comment
Share on other sites

நீர்கொழும்பில் நான்கரை வயது சிறுவனுக்கு கொரோனா

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  நான்கரை வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

நீர்கொழும்பு அக்கரபனா பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த 3 ஆம்  திகதி இருமல், சுவாசப் பிரச்சினை  காரணமாக  கொரோன வைரஸ் பரிசோதனை செய்யும் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில,; குறித்த சிறுவனுக்கு  கொவிட்-19 நோய் இருப்பது தெரியவந்ததாகவும் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக,  நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அக்கரப்பனா கந்த சுரித்து கம  எனும் இடத்தில் வசிக்கும் குறித்த சிறுவனுக்கே    கொவிட்-19 தொற்று  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இச் சிறுவன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு முன் நீர்கொழும்பு முன்னக்கரை  பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும், அக்கரப்பனா பிரதேசத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிகிச்சைபெற்றுள்ளார்.

அத்துடன், இச்சிறுவரின் குடும்பத்தார் நீர்கொழும்பில் பல இடங்களுக்கும் சென்றுள்ளதால், குடும்பத்தார் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் வீடு அமைந்துள்ள வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக,  கட்டான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்  யசந்த ரத்னாயக்க  தெரிவித்தார். 
  
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள  சிறுவனின் தாயார் கர்ப்பிணி என்றும் பாட்டி நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள சிறுவனுடன் வைத்தியசாலையில் இருந்தவரென்றும் வீட்டில் மொத்தமாக ஆறு பேர் வசிப்பதாகவும்  கட்டான பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் முன் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு காய்ச்சல்  இருப்பதாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பெண்மணி விசேட அம்புலன்ஸ் மூலமாக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/நீர்கொழும்பில்-நான்கரை-வயது-சிறுவனுக்கு-கொரோனா/175-248019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dr.Anil_.Jasinghe.jpg

தமிழ், சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை? – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா வைரஸிற்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் சிங்கள புத்தாண்டு வரையான இலங்கையின் நிலைமை தொடர்பான நிலையை சரியாக அறிவிக்க முடியாமல் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் அசாதாரண நிலை எந்தளவிற்கு கூடும் என கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அடுத்துவரும் ஒருவார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புத்தாண்டு காலப்பகுதிவரை கடுமையான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனவே கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி மக்களை கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே நிலை தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், வீடுகளில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று தொடர்பான அறிகுறி இருந்தால் 1390 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

http://athavannews.com/தமிழ்-சிங்கள-புத்தாண்டு/

Link to comment
Share on other sites

பன்முகத்திறமையும் சமூக உணர்வும் கூடிய யாழ். பல்கலையின் கிளிநொச்சி மாவட்ட இறுதியாண்டு மருத்துவ மாணவர்களின் எண்ணத்தில் உதித்து, கிளிநொச்சி வைத்தியசாலையின் சுகாதார மேம்பாட்டுப்பிரிவின் அனுசரணையுடன் முழுமைபெற்ற “Corona வை வெல்வோம்” விழிப்புணர்வு கீதம்!!!

 

 

Link to comment
Share on other sites

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி பெருந்தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் அறிவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் திணைக்களம் , சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட உற்பத்திகளை பாதிக்கும் வகையில் யாரேனும் செயற்படுவார்களாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.


071-4415160 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக செயலாளர் அருணி ரனசிங்கவை தொடர்பு கொண்டு தகவல்களை தெரியப்படுத்த முடியும். அவர் அவை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவார். மேலும் வாட்ஸ் எப்(WhatsApp), வைபர்(Viber) மூலம் தொடர்பு கொள்வதற்கு 071-1692692 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அதே போன்று mpliandea@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும்.

மேலும், பிரதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தொழிலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79397

Link to comment
Share on other sites

வைத்தியசாலைக்கு Face mask நன்கொடை செய்தவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் - Dr Thangamuthu Sathiyamoorthy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

எவ்வாறு இலகுவாக முகக்கவசம் செய்யலாம்  :  அமெரிக்காவின் முதன்மை வைத்தியர் 

 

 

Link to comment
Share on other sites

கிவுல பிரதேசத்தில் 15 குடும்பங்களுக்கு சுயதனிமை

ஆணமடுவ - கிவுல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டதால், அவர் சிகிச்சை பெற்ற ஆனமடுவ ஆரம்ப வைத்தியசாலையின் அலுவலக சபை உள்ளிட்ட பவும கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, ஆணமடுவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.எம். பத்மினி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான 28 வயதுடையவர் என்றும் இவர் தற்போது ஐ.டி.எச் இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கிவுல-பிரதேசத்தில்-15-குடும்பங்களுக்கு-சுயதனிமை/175-248050

Link to comment
Share on other sites

பேருவளையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று

பேருவளை- மாலிகாஹேன வெத்திமராஜபுர பிரதேசத்தில், 14 தினங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 6 நாள்கள் கடந்த நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த ஒருவர் இன்று (06) இனங்காணப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர், கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தோனேசியா சென்று கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றுடைய குறித்த நபர் இனங்காணப்பட்டதையடுத்து, பேருவளையில் இதுவரை 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-மற்றுமொருவருக்கு-கொரோனா-தொற்று/175-248057

Link to comment
Share on other sites

யாழ். மக்கள் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்புவதற்கு வைத்தியர் ஏகாம்பரநாதன் தேவநேசன் விடுக்கும் கோரிக்கை !

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.
 

dewanesan.jpg

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது.

எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்தி முதலாவது கோரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகள் வரும் போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும்  என்றார்.

https://www.virakesari.lk/article/79433

Link to comment
Share on other sites

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Coronavirus5-2.jpg

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை மேலும் இருவர் இலக்கானமை அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து 34 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் 139 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் 257 பேர் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கையில்-மேலும்-இருவரு/

Link to comment
Share on other sites

அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ! பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் - வைத்தியர் வாசன்

அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் களநிலை அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 6 ஆம் திகதி 12 மணிக்கு இந்த களநிலை அறிக்கை வெளியிடப்பட்ருந்தது.

இதன்படி உலகில் கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றானது வீரியமாக பரவிவருகின்றது. அதன் நிமித்தம் இன்றைக்கு 12 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே தற்போது இலங்கையில் 12 மணி வரைக்கும் 176 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே, பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல எதிர்வுகூறல்களையும் பல பிரேரணைகளையும் நாம் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வருகின்றோம். அந்தவகையில் இன்றையதினம் இந்த கொரோனா தொற்றை இலங்கையில் தடுப்பதற்கு நாம் என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டுமென்று நாம் கூறியுள்ளோம்.

அண்மையில் சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்ததன் படி இலங்கையில் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான வசதிகளே காணப்படுகின்றன. இந்த எல்லை மீறப்படுமிடத்து எமது சுகாதாரத்துறை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டிராது. வசதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆகவே நாங்கள் இந்த நிலையை 2 ஆயிரத்திற்குட்பட்டவாறே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தற்போதுள்ள சமூக இடைவெளியை 80வீதம் மட்டில் அகில இலங்கை ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு இனங்காணப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை தகுந்த முறையில் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

அத்தோடு சுகாதார செயற்பதடுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தவகையில் தற்போதுள்ள நிலையை மிகவும் தீவிரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில்,

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அவர்களுடன் பழகி அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனையானது 70 வீதம் தான் சரியான முடிவைக் காட்டும். எனவே இந்த நோய் குணம் குறியைக் கொண்டவர்கள் 30 வீதமானவர்கள் சில வேளைகளில் தவறிவிடப்படலாம். ஆகவே இந்த பரிசோதனையை திரும்பத்திரும்ப 3 முறை செய்வதன் மூலம் நோயால் இனங்காணப்பட்டவர்களை நாம் மேலும் இனங்காண முடியும்.

ஆகவே இந்த நடவடிக்கையை விஸ்தரிக்கும் படி நாங்கள் அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கூறியிருந்தோம். ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அதைப் பணித்த போதும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய தொழில்நுட்பக்குழு அந்த நடவடிக்கையை சற்று தாமதிப்பதாக நாங்கள் அறிகின்றோம். இதுவொறு நல்லவிடயம் அல்ல.

அதனை நடைமுறைப்படுத்தும் படி சகல அதிகாரிகளுக்கும் நாம் எமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமூக இடைவெளியை நாங்கள் கூடியவரை பேணுவது, ஆனால் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இடையிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் அந்த சமூக இடைவெளியானது மேலும் குறைக்கப்படுகின்றது.

அத்துடன் தம்புள்ளை பொருளாதார மையங்களுக்கான மற்றும் தங்காலை, நீர்கொழும்பு மீன் சந்தைக்கான வரையறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

அதாவது அரசாங்கம் மாவட்ட மட்டத்திலான போக்குவரத்தை தடைப்படுத்தியபோதிலும் அதனை மீறும் படி சிலசில விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒரு நல்ல விடயமல்ல.

ஆகவே சமூகத்திலுள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை பேண முன்வரவேண்டும். அரசாங்க அதிகாரிகளுக்கும் நாங்கள் இது தொடர்பான அறிவித்தலை வழங்கியுள்ளோம்.

சரியான முறையில் பிழையற்ற முறையில் கைகளை கழுவுவதையும் முகக்கவசம் அணிவதையும் பின்பற்றுதல் . அதாவது சரியான முறையில் உலக சுகாதார அமையத்தால் குறிப்பிடப்பட்ட விதிக்குட்பட்ட வகையில் கைகளை கழுவும் பொதுதான் உண்மையில் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் சாதாரணமாக கைகளை கழுவும் போது அந்தக் கிருமிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படுவதில்லை . ஆகவே கைகழுவும் பொறிமுறையை சரியாக உணர்ந்து அதனை செயற்படுத்த வேண்டும். அத்தோடு முகக்கவசம் அணிவது ஒரு நல்ல விடயம். முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களால் சமுதாயத்தில் கொரோனா தொற்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. அதாவது இலங்கையில் கொரோனா தொற்றின் நிலையானது 3 ஆவது நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு முகக்கவசம் சரியான முறையில் அணியும் போது இந்த கொரோனா தொற்றானது 3 B ற்குள்ளேயே மட்டுப்படுத்தப்படுகின்றது. 4 ஆவது நிலைக்கு செல்வது தடுக்கப்படுகின்றது.

அத்தோடு சுகாதாரத் துறையில் காணப்படும் மனித வளத்தையும் பௌதீக வளத்தையும் விஸ்தரிக்க வேண்டும். இது தொடர்பில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதாவது நோயாளர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நோயாளர்கள் தேவையற்ற ரீதியில் வைத்தியசாலைக்குள் வந்து அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளை மறைத்து வருவதனால் அவர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுவதனால் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட சுகாதார பணியாளர்களை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நிலை நீடிக்குமானால் வெகுவிரைவில் சுகாதார துறையினருக்கான பற்றாக்குறை நிலவும். ஆகவே இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் நாங்கள் குறிப்பட்டுள்ள 1390 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த இலக்கத்தின் ஊடாக அவர்களுக்கான தகவல்கள் வழங்கப்படும். தேவையேற்படின் மாத்திரம் அவர்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டும். அல்லது வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அத்துடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கான மேம்படுத்தல் நிலை தொடர்பில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை பயன்படுத்துமாறு பணித்திருந்தோம். ஆகவே அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு நாங்கள் மேலே குறிப்பிட்ட பொறிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்துமிடத்து. நாங்கள் இந்த கொரோனா நோய்த் தொற்றை வீரியமாக வெற்றிகொள்ள முடியும். அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 )48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். இதை தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79434

Edited by ampanai
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம்: 14 இடங்கள் தொடர்ந்தும் சீல் பண்ணப்பட்ட நிலையில்

lockdown.jpgகொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை போரத்தொட்டை பகுதியும், ஜா – எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும் களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளைப் பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணைப் பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும், கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை , அர்ஜனமாவத்தை ஆகிய பகுதிகளும், குருநாகல் மாவட்டத்தில் கட்டுபொத்தை, கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹூகொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன

http://thinakkural.lk/article/38073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2500 ஐ தாண்டினால் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டினால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரீத அளுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸின் தாக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் தொடரும் சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் கிராம மட்டத்தில் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

தற்போது நோய் பரவலின் வேகம் குறைந்தளவில் காணப்படுவதாகவும் அடுத்த கட்டமாக அதன் வீரியம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://thinakkural.lk/article/38108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் நால்வர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (07) மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 42 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை மேலும் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 132 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 180 ஆகும்.

https://newuthayan.com/சற்றுமுன்-நால்வர்-குணம-2/

 

Link to comment
Share on other sites

போதனா வைத்தியசாலை யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா COVID-19 ற்கான RT-PCR பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

இந்த பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன்பு இக்குழு பல கூட்டங்களையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.

தற்போது, COVID - 19 தொற்று சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்றுளளவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள் பரிசோதித்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு பங்களிப்புக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

Teaching hospital Jaffna with Faculty of Medicine Jaffna has started RT-PCR testing for COVID-19 in Jaffna.
The team had several meetings and arrangement before starting this test.

Currently, all suspected cases and contact screening cases can be tested on the same day.

I thank all dedicated people to start this programm in Jaffna.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று

2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:08

இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, 183ஆக அதிகரித்துள்ளது என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று மட்டும் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 183 பேரில் 135 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்குக்-கொரோனா-தொற்று/175-248130

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.