Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்!

கொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/79568

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம்! தற்போது வெளியான தகவல்

கொரோனா வைரஸ் உடலில் நுழைந்த பின்னர் சிலருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 20 நாட்கள் எடுப்பதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் தற்போது மாற்றமடைந்துள்ளது.

சிலருக்கு 20 நாட்களின் பின்னரே குறித்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல்

https://www.ibctamil.com/srilanka/80/140854?ref=home-imp-parsely

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/38347

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 47 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றுக்குள்ளான-மேலும்-மூவர்-குணமடைந்தனர்/175-248266

Link to comment
Share on other sites

’நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்’

எம்.ஏ.றமீஸ்

வீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை ஊடக இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  “வீட்டுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வசம்பு, பெருங்காயம் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றை நாம் பயன்படுத்தும் நுழைவாயில்களில் கட்டித் தொங்க வைப்பதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“அதுமாத்திரமல்லாமல், பெருங்காயம், வசம்பு போன்றவற்றை பட்டி ஒன்றில் தயார் செய்து அதனை தனது கைகளில் கட்டிக் கொள்ள முடியும். இவற்றை நாம் உடல்களில் கட்டியிருக்கும் காலப்பகுதிகளில் நோய்த் தொற்றிலிருந்து எம்மை நாம் பெரிதும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலை நிறைவடையும் வரையிலாவது எமது வீடுகளில் காலை மாலை வேளைகளில் வேப்பிலை, வேப்பம் பட்டை, மர மஞ்சள் போன்றவற்றை புகையாக்கி அதனை வீடுகளில் பிடித்து நோய்க் கிருமிகளை அழித்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

“இதுதவிர, எம்மால் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, மஞ்சள், வசம்பு, மரமஞ்சள், துளசி இலை போன்றவற்றை நன்கு அவித்து அவற்றை சாறாக்கி காலை, மாலை வேளைகளில் பருகிக் கொள்ள முடியும்.

“அதேவேளை, நாம் ஒவ்வொரு தினமும் அதிமான தடவைகள் வெந்நீரை பருகிக் கொள்ள வேண்டும். வெந்நீர் பருவதை நாம் வழக்கமாகிக் கொண்டால், பல்வேறான நோய்களில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். வெந்நீருடன் தேசிக்காய் இலை, துளசி இலை போன்றவற்றை ஆவியாக பிடிக்க முடியும்.

“கருஞ்சீரகத்துடன் போதியளவு தேனைக் கலந்து அவற்றையும் நாம் உண்ண முடியும். பல்வேறான நோய்களுக்கான நிவாரணியாக இவற்றை நாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக உள்ளது.

“தேசிக்காய் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் கொண்டுள்ளதால் அப்பானத்தை நாம் தினமும் பருகிக் கொள்ள முடியும். இதுபோன்று எமது வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு நாம் எமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

“நோய்த் தொற்றுகளில் இருந்தும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், இப்பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய வைத்தியவர்களுடன் இணைந்து, நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராச்சி வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியத்துறை பணிப்பாளருக்கு முன்மொழிவொன்றைத் தயார் செய்து அனுப்பி வைத்துள்ளது” என்றார். 

http://www.tamilmirror.lk/அம்பாறை/நோய்-எதிர்ப்பு-சக்தியை-பெருக்கி-கொரோனாவிலிருந்து-பாதுகாப்போம்/74-248256

Link to comment
Share on other sites

மருந்தகங்களை திறக்க அனுமதி
Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 07:01 - 0      - 2


நாட்டிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருந்தகங்களை-திறக்க-அனுமதி/175-248279

Link to comment
Share on other sites

மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்

ஊரடங்கு நேரத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் நபர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தவதற்காக, தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு கட்;டாயமாக அனுப்பப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நாளையிலிருந்து செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மாவட்டங்களுக்கிடையில்-பயணிப்பவர்கள்-14-நாள்கள்-தனிமைப்படுத்தப்படுவர்/175-248287

 

Link to comment
Share on other sites

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பூட்டு

கொரோனா தொற்று அச்சம் காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதால், அவருக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுவதாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று மாலை 5 மணியிலிருந்து குறித்த சிகிச்சைப் பிரிவு முற்றாக மூடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் இரண்டாவது தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்ட நபர் வசித்த கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந் 44 வயதுடைய நபரே, இன்று பகல் மாரடைப்பு எனக் கூறி வைத்தியசாலையில் உள்நுழைந்ததாகவும் இதன்போது இவர்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கடுமையான காய்ச்சல் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கொரோனா தொற்றாளரா என உறுதிப்படுத்துவதற்காக இவரை குறித்த வைத்தியசாiயின் கொரோனா வார்டில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குருநாகல்-போதனா-வைத்தியசாலையின்-அவசர-சிகிச்சைப்-பிரிவுக்குப்-பூட்டு/175-248304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தகங்களுக்கு இனி விடுமுறையல்ல;சகல தினங்களிலும் திறந்திருக்கும்

மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள ஒசுசல உள்ளிட்ட தனியார் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன

 

http://thinakkural.lk/article/38393

 

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140909?ref=imp-news

Link to comment
Share on other sites

24 மணித்தியாலத்தில் எவரும் பதிவாகவில்லை
Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 07:07 - 0      - 15

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுடைய எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸால்  நாட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 54 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணித்தியாலத்தில்-எவரும்-பதிவாகவில்லை/175-248361

Link to comment
Share on other sites

திருகோணமலையில் 1,452 பேர் சுய தனிமையில்

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1452 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன நேற்று (09) தெரிவித்தார். 

கொவிட் -19 தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். 

அதன்படி இதுவரை வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1,452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676 பேரினதும் உள்நாட்டுலிருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

அத்துடன் 10 சந்தேகத்துக்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் குறித்த தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் தொடராக இதனைப்பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருகோணமலையில்-1-452-பேர்-சுய-தனிமையில்/75-248336

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஏழு பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வு

மேலும் ஏழு கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஜாஎலையில் ஆறு பேரும் தெஹிவளையில் ஒருவரும் அடையாளங்காணப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

 

http://thinakkural.lk/article/38486

 

Link to comment
Share on other sites

திருக்கோவில் பிரதேசத்திற்குள் உட்செல்வதற்கோ, வெளிச் செல்வதற்கோ தடை

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளி பிரதேசத்தில் இருந்து உடசெல்லவோ அங்கிருந்து இருந்து வெளி பிரதேசத்திற்கு பொது மக்கள் செல்லவோ இன்று (11.04.2020) முதல் இருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர். ஆர் டபிள்யூ .கமல்ராஜ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டார். இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர் பிரதேச சுகாதார பணிப்பாளர் பொதுசுகாதார உத்தியோகத்தர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளிளை பேணுவதற்காக பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு விநாயகபுரம் பொதுசந்தையிலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திலும், தம்பிலுவில் பொது சந்தை பகுதியில் நிரந்தரமாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என மூன்று பிரதேசங்களில் சந்தை வியாபார நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களான பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், போன்றவை தவிர ஏனைய கடைகள் மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் அந்த பிரதேச மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் எனைய பிரதேச சந்தைகளுக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்ய தடை விதிப்பு,திருக்கோவில் பிரதேசத்திற்கு உள்நுளையும் வீதிகளான தாண்டியடி சாகாமம், மற்றும் அக்கரைப்பற்று பிரதேச எல்லை பகுதிகளில் இராணுவ, பொலிஸ் வீதி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திருக்கோவில் பிரதேசத்திற்குள் ஏனைய பிரதேச மக்கள் உட்செல்லவே அங்கிருந்து வெளி பிரதேசத்துக்கு செல்லவே முடியாதவாறு சோதனை நடவடிக்கை இடம்பெறும் அதேவேளை சேபாதனைச் சாவடியில் வைத்து அங்கு வருவபர்களுக்கு மேல் தொற்று நீக்கி வீசப்படும் .

இதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்கா பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் விளையாட்டு கழகங்களுடைய இளைஞர்கள் ஈடுபட்வுள்ளதுடன் இந்த நோய் தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி தொடர்ச்சியாக தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொற்று நோயை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபை தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/79744

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

Coronavirus-Testing.jpg

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-16/

Link to comment
Share on other sites

யாழில் 332 போ் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறவுள்ளனர்

(தி.சோபிதன்)

யாழ்.அாியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போில் 14 போ் தவிா்ந்த மிகுதி 332 போ் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றாா்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன் போது மேலும் அவா் கூறுகையில்,

சுவிஸ் போதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இவா்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 போ் பலாலியில் தனிமை படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். குறித்த 20 பேருக்கும் நடத்தப்பட்ட பாிசோதனையில் கொரோனா தொற்றுள்ள 6 போ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி 14 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

அவா்களுக்கு அடுத்தகட்ட பாிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது. குறித்த 14 போ் தவிா்ந்த 332 பேருக்கும் இறுதி பாிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவாா்கள் என பணிப்பாளா் மேலும் கூறியுள்ளாா்.

https://www.virakesari.lk/article/79775

Link to comment
Share on other sites

’கொரோனா தடுப்பூசிக்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்’
Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 09:08 - 0      - 4

கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் தயாரிக்க முடியுமென, பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட்,  இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
குறித்த தடுப்பூசியை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தடபபசகக-5-மதஙகள-கததரகக-வணடம/175-248426

https://www.bloomberg.com/news/articles/2020-04-11/coronavirus-vaccine-could-be-ready-in-six-months-times

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.