Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும்; அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தாெடர்பில் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களும் எப்போது திறக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (12) அறிவித்துள்ளது.

இதன்படி,

  • ஊழியர்களுக்காக மே 4ம் திகதி முதலும் திறக்கப்படும்.
  • இறுதியாண்டு மாணவர்களுக்காக மே 11ம் திகதி முதலும் திறக்கப்படும்.
  • அனைத்து மாணவர்களுக்குமாக மே 18ம் திகதி முதலும் திறக்கப்படும்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/பல்கலைக்-கழகங்கள்-மீள/

 

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

203ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203ஆக உயர்வடைந்துள்ளது.

 

http://thinakkural.lk/article/38558

Link to comment
Share on other sites

சற்று முன்னர் வெளியான அறிக்கை! மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 56 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/141090
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிப்பு

Apr 13, 20200

 

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரணமான நிலை காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கு முன்னரும் இதுபோன்ற காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/எதிர்வரும்-20ஆம்-திகதி-வரை/

Link to comment
Share on other sites

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 05:03 - 

இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.''

அதனையடுத்து, கொரோனா  வைரஸ் தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-நலவரகக-கரன-தறற/150-248487

Link to comment
Share on other sites

“அடுத்த  இரு வாரத்திற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும்”

(ஆர்.யசி)
 

இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதுமானதாக இருக்கும், ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

நாட்டில் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறான நிலைமைகள் முன்னெடுக்கப்படும் என்பதற்கு பதில் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறுகையில்,

மிகவும் கடினமான கால கட்டத்தில் நாம் இன்று முகங்கொடுத்து வருகின்றோம். நாளாந்தம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படாத வண்ணமே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களை பாதுகாக்க எடுத்த வேலைத்திட்டத்தின் பிரதிபலன் என்றே கூற வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாம் முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் வெகு சீக்கிரமாக இந்த நிலைமைகளில் இருந்து விடுபட முடியும். எவ்வாறு இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் வெளி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற நிலைப்பாடும் உள்ளது. 

ஆகவே அடுத்த இரண்டு வார காலம் மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலானது குறைந்ததாக கருத முடியாது. ஆனால் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் மூலமாக நிலைமைகளை இன்றுவரை கட்டுபாட்டில் வைத்திருகின்றோம்.

ஆகவே இதே நிலைமை மேலும் இருவார காலமேனும் தொடர வேண்டும். அவ்வாறு கடுமையான சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் நாட்டின் நிலைமைகளை சரிசெய்ய முடியும்.

ஆகவே அடுத்த இரண்டு வாரகாலம் சுகாதார வேலைத்திட்டங்களை மிகச் சரியாக முன்னெடுத்தால் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/79881

Link to comment
Share on other sites

இடர் காலப்பகுதியில் பல உத்தியோகத்தர்கள் இரவு பகலாக கடமையாற்றி கொண்டிருக்கிறார்கள். 

புது வருடத்தில் அவர்களின் சேவைகள் தொடர்கின்றது.

இந்த ஆபத்தான நேரத்தில் நிறைய அதிகாரிகள் இரவும் பகலும் பணியில் உள்ளனர். புத்தாண்டிலும் அவர்களின் சேவை தொடரும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், தொப்பி மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கார் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 45 பேர் கைது; 13 வாகனங்கள் கைப்பற்றல்

திருக்கோவில் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 45 பேரை இன்று திங்கட்கிழமை காலை (13) 6 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதுடன் 13 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பழரிவில் 13 பேரும், மட்க்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் 9 பேரும், வாழைச்சேளை பொலிஸ் பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 8 பேரும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் 4 பேரும், வவுணதீவு பொலஜஸ் பிரிவில் 5 பேரும், காத்தான்குடி பொலஸ் பிரிவில் 1 உட்பட 45 பேரை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் இவர்கள் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள். லொறி ஒன்று உட்பட 13 வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.

 

இதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article/38658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா பரிசோதனையில் எந்த நபருக்கும் தொற்று இல்லை

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதிக்கப்பட்ட 17 பேரில் எந்தவொரு நபருக்கும் கொரோனோ தொற்று இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மற்றும் தனிமைப்படுத்தலில் வைத்துள்ளவர்களுக்கும் நடாத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரையில் 7 பேருக்கு மாத்திரமே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/யாழ்-போதனா-பரிசோதனையில்/

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு வரை 217ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 218ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/141169

Link to comment
Share on other sites

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்
Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 07:31 -


கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக்க பகுதிகளாக பேருவளை பன்னில மற்றும் சீனகொரோட்டுவ பகுதிகள் அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-இரண்டு-பகுதிகள்-முடக்கம்/175-248503

Link to comment
Share on other sites

கொரோனா அச்சம் : வடக்கில் தனியான தீவு

 

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14.04.2020) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் குணமடைந்தவர்களின் தொகை 61 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 152 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்தோடு, ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/79950

Link to comment
Share on other sites

பேருவளையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

பேருவளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார். 
 
பேருவளை பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட, பன்னில மற்றும் சீன கொட்டுவ கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 219 பேர,; கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (14) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பன்னில, சீன கொட்டுவ, கரந்தகொட, அம்பேபிட்டிய ஆகிய  பகுதிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில்; பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 140 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-கொரோனா-தொற்று-அதிகரிப்பு/175-248542

Link to comment
Share on other sites

‘வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 12 பேருக்கு COVID-19 தொற்று’

இன்றைய பரிசோதனையின்போது வடக்கில் இரண்டு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் எட்டுப் பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரில் நான்கு பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான COVID-19 தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். எட்டுப் பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.

அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக இம்மாதம் முதலாம், மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆறு பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடககல-தனமபபடததபபடடரநத-12-பரகக-COVID-19-தறற/71-248550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் இன்று கண்டறிந்த 8 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!

யாழ்ப்பாணம் – பலாலி தனிமை மையத்தித்தில் இன்று கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் (7 மற்றும் 11 – வயது) மகள்கள் இருவரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் 8 பேரில் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள் எனறும் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/யாழில்-இன்று-கண்டறிந்த-8/

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தொடரும் அச்சுறுத்தல்! புதிதாக சில பகுதிகள் முடக்கப்படலாம்!!

977-7.jpgயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக சில பகுதிகளை முடக்குவது தொடர்பில் இன்று ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தினார்.

இதன்போதே அவர், கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், பொது மக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளையில், யாழ்ப்பாணத்தில் மேலும் 8 கொரோனா நோயாளர்கள் நேற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் அப்பகுதியில் உள்ள பலரிடம் அடுத்துவரும் நாள்களில் விரைந்து கொரோனாத் தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாள்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றமை காரணமாக அது பரவுவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் இனங்காணப்பட்டுள்ள பகுதிகளை பாதுகாப்புக் கருதி மீண்டும் முடக்குவது குறித்து உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://thinakkural.lk/article/38755

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-Worldwide-Update.jpg

வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரில் நால்வரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

( குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)

http://athavannews.com/வடக்கில்-இன்று-மட்டும்-12-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் குணமடைவோர் தொகை உயர்கிறது

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (15) மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

தொற்று நோய் பிரிவு வெளியிட்ட இன்று காலை 10 மணி வரையிலான நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 163 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 233 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர் 233
இப்போது சிகிச்சை பெறுவோர் 163
குணமடைந்தோர் 63
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)

15

 

https://newuthayan.com/இலங்கையில்-குணமடைவோர்/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.