Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்க மாவத்தையில் 24 பேருக்கு கொரோனா

banda.jpg

பண்டாரநாயக்க மாவத்தையில் 24 கொரொனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

http://thinakkural.lk/article/39108

 

Link to comment
Share on other sites

யாழில் ஊடரங்கு தளர்வையடுத்து சமூக இடைவெளியை பேணுமாறு பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டத்தை அடுத்து வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. 

அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.

இவ்வாறு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை சமூக இடைவெளி பேணவேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவம் அறிவுறுத்தி வருகின்றன.

குறிப்பாக பஸ்களில் பயணம் செய்பவர்களும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொது மக்களும் சமூக இடைவெளி பேணுமாறு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.

https://www.virakesari.lk/article/80349

Link to comment
Share on other sites

மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ்!

Coronavirus-Blood-Test.jpg

மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 08 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மட்டும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மேலும்-08-பேருக்கு-கொரோனா-வ/

Link to comment
Share on other sites

’அடுத்த 2 வாரங்கள் மிகுந்த அவதானம் தேவை’

கொவிட் 19 வைரஸ் குறித்து அடுத்த இரண்டு வாரங்கள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்நாயகம் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காவிட்டால், நோய் தொற்று ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவருக்கு, நோய் அறிகுறிகள் தென்படாத நேரங்களில், அது ஏனையவருக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.     

https://www.virakesari.lk/article/80383

Link to comment
Share on other sites

மீன் வியாபாரியே 304ஆவது கொரோனா தொற்றாளராகப் பதிவு

இலங்கையில் இன்று  304ஆவதாக உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மீன் வியாபாரி என பிலியந்தல சுகாதார சேவை வைத்திய அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.

பிலியந்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் இவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குரிய அடையாளம் காணப்பட்டதையடுத்து, இன்று மாலை கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் இன்று பகல் சென்ற குறித்த பிரதேசத்திலுள்ள சட்டத்தரணி, கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் வீடுகளிலுள்ள 11 பேரை சுயதனிமைக்குட்படுத்தியுள்ளதாகவும் இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீன்-வியாபாரியே-304ஆவது-கொரோனா-தொற்றாளராகப்-பதிவு/175-248996

Link to comment
Share on other sites

கிராமப் புறங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு
Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:14 - 0      - 6
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், கொரோனா வைரஸ் தொற்று; தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

இந்த விழிப்பூட்டல் நடவடிக்கை, நேற்று (19) ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற கிராமங்களில் இடம்பெற்றது.

இதன் ஓர் அங்கமாக, கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் சமுக சேவையாளர்களுக்கும், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மரண வீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும்  மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸாரினதும் சுகாதாரப் பிரிவினரதும் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள் செயற்படவேண்டியது அவசியம் எனவும் அறிவுரை வழங்கப்படுகின்றது.

விழிப்பூட்டலில்  பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிராமப்-புறங்களில்-கொரோனா-வைரஸ்-தொற்று-தொடர்பான-விழிப்புணர்வு/73-248972

Link to comment
Share on other sites

குணமடைந்தவர் எண்ணிக்கை நூறானது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, தற்போது வரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை நூறானது.

இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 202 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குணமடைந்தவர்-எண்ணிக்கை-நூறானது/175-249013

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று இதுவரையில் 100 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-24/

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றால் பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்குப் பூட்டு

பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்துள்ளார். 

பொரலஸ்கமுவ  பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ள காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறல-பனனபபடடய-தனயர-வததயசலககப-படட/175-249036

Link to comment
Share on other sites

கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணிடமிருந்து ஒருவருக்கு தொற்று

வரக்காபொல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய  கொரோனா தொற்றுக்குள்ளான பெண் தங்கியிருந்த வீட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, வரக்காபொல பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளர் நேற்று (21) இரவு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய  குறித்த பண் தங்கியிருந்து வீட்டார் தனிமைப்படுதத்லுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் பீ.சீ.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கட்டுநாயக்கவில்-பணியாற்றிய-பெண்ணிடமிருந்து-ஒருவருக்கு-தொற்று/175-249038

Link to comment
Share on other sites

தற்போதைய அசாதாரண நிலைக்கு முன்னர் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் துவிச்சக்கர வண்டி ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்களை சுகதேகியாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சமுத்திரம், மிதிவண்டி மற்றும் வெளிப்புறம்

 

Dr Shanmugarasa ற்கு அப்போது அவரது துணைவியார் சமூக இடைவெளியுடன் கூடிய உந்துதலை வழங்கியதால் விரைவாக ஓடி முடித்தார். அவர் கொரோனா தடுப்பில் தற்போது ஒரு மிக முக்கியமான கடமை செய்து கொண்டிருக்கின்றார்.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

Link to comment
Share on other sites

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் பலாலி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல்

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் இன்று புதன்கிழமை காலை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவர்கள் அனைவரும் பலாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விரைவில் கொரோனா தொற்று பரிசோதனைகளும் நடைபெறவுள்ளது. இந்த பரிசோதனையை யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேவேளை பலாலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இதனால் ஏற்கவனே யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்திய போது அவர்கள் முறையாக கவனிக்க, தங்க வைக்கப்படாததன் காரணமாக கொரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டதாக அரச வைத்திய சங்கத்தின் வடக்கு மாகாண கிளையினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பை சேர்ந்த 99 பேர் திடீரென பலாலியில் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/80504

Link to comment
Share on other sites

கொழும்பு எமக்கு நல்ல படிப்பினை ; யாழில் சமூகத்தொற்று இல்லையென கூற முடியாது - வைத்தியர் காண்டீபன்

6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சமூக மட்டத்தில் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயேயே கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன. கொழும்பில் நேற்று ,நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் இன்றுவரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பரிசோதனையானது மூன்று நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதை கூற முடியாது.

எனவே நாங்கள் வடக்கிலுள்ள சுகாதார திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம்.

யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்பு பட்ட நபர்களுக்கே கொரோனாபரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம். ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டு விட்டு நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது. எனினும் யாழ்ப்பாணத்தை பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள்.

அவர்கள் தொடர்பில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது.எனவே வடக்கில் கொரோனாபரிசோதனையை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவின் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/80519

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 322ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக 11 பேர் இன்று (22) இனங்காணப்பட்டிருந்தனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்-எண்ணிக்கை-322ஆக-அதிகரிப்பு/175-249067

Link to comment
Share on other sites

பேருவளையில் 11 பேருக்கு கொரோனா தொற்று

பேருவளை பகுதியிலிருந்து புணானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 219 பேரில்  மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று (22) உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட  மேலும் 17 பேர், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனரென அவர் தெரிவித்தார்.

பேருவளை பகுதியிலுள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர், இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். 

இதனையடுத்து, களுத்துறை மாவட்டத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேருவளையில்-11-பேருக்கு-கொரோனா-தொற்று/175-249071

Link to comment
Share on other sites

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 32 கொரோனா தொற்றாளர்கள்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொரனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட 32 பேர், நேற்று முன்தினம் (20) கொண்டு வரப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார சேவைகள் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் மாலை கொரோனா உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் 26 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மேலும் 6 பேரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கட்கிழமை மாலை கொண்டுவரப்பட்டவர்களில் 15 பெண்கள் 8 ஆண்கள் 3 சிறுவர்கள் அடங்குவதாவும் இவர்களில் இருவருக்கு இன்னும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது.

இவர்கள், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் ஆகியோரின் பலத்த பாதுகாப்புடன் இவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுள்ளதுடன், இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/காத்தான்குடி-ஆதார-வைத்தியசாலையில்-32-கொரோனா-தொற்றாளர்கள்/73-249046

Link to comment
Share on other sites

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்

பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,  12 கிராமங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஒருவர் குறித்த பகுதியில் இனங்காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த கிராமங்களுக்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொலன்னறுவையில்-12-கிராமங்கள்-முடக்கம்/175-249101

Link to comment
Share on other sites

மேலும் இருவர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 335 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளன

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-இருவர்-பூரண-குணம்/175-249139

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.