Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக அதிகரிப்பு – நேற்றும் 11 பேருக்கு தொற்று உறுதி

 
1-121.jpg
 30 Views

மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 11 பேருக்கு கொவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய 11பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வு கூடத்தில் நேற்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 104 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் முல்லேரியா ஆய்வுகூடத்தில் சோதனைக்கு உட்படுத்தியோரில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 433 பேருக்கு கொவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவாலையில் ஒருவருக்கும், மல்லாகத்தில் ஒருவருக்கும், அளவெட்டியில் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

https://www.ilakku.org/?p=37588

 

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

‘விடுதலை’க்குத் தயாரான விரிவுரையாளருக்கு கொரோனா – கந்தக்காட்டுக்கு மாற்றம்

 
kana-696x348.png
 25 Views

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கண்ணதாஸை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சை நடைமுறைகளுக்கு அமைய அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதும் அவர் வீடு திரும்புவார். கண்ணதாஸனுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்று வருகின்றன” என்றார்.

 

https://www.ilakku.org/?p=37738

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – ஐ.நா.வுக்கு கஜேந்திரகுமார் அவசர அறிவிப்பு

 
welikade-corona-696x349.png
 36 Views

மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லைஎனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிடடார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகத்துக்கு முறையீடு செய்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீண்டகாலமாகச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்குத் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதிகளுக்கு உரிய உணவு வசதிகளோ மருத்துவ வசதிகளோ எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறும் ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்தைக் கோரியுள்ளேன்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=37733

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா!

1-142-696x377.jpg
 28 Views

கிழக்கு மாகாணத்தில் இன்று வரை 846 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

வைத்தியர் அ.லதாகரன் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.

இது வரையில் இலங்கையில் கொரோனாவால் 38,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கோவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=37792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்வு

 
1-149-696x391.jpg
 30 Views

இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 388 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 18 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 293பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் மேலும் 686 பேர் இன்று(வியாழக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=37858

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் கொரோனா- கிழக்கில் பதிவான நான்காவது மரணம்!

கிழக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட் தொற்று மரணம் பதிவாதியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

நேற்று 54 வயதுடைய அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பொது மகன் நெஞ்சுவலி காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஈ.சி.ஜி.பரிசோதனையைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு, அன்டிஜென்ட் பரிசோதனை செய்தபொழுது குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .

மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார். இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனடிப்படையில் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை நான்காவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/156775

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

புதுக்குடியிருப்பு தொற்றாளர் ஆலயத்தில் வழிபட்டார் – அவருடனிருந்த 40 பேர் தனிமைப்படுத்தல்

BharatiDecember 27, 2020

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர் ஆலய வழிபாடு ஒன்றில் பங்குகொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஐயப்பன் விரதத்தில் ஈடுபடுகின்ற புதுக்குடியிருப்பு தொற்றாளர் ஆலயத்தில் நேற்று வழிபட்டார். அவர் நேற்றுறு ஐயப்பன் விரத இறுதிநாள் வழிபாட்டிற்காக குறித்த ஆலயத்திற்கு சென்றிருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

புதுக்குடியிருப்புக்கும் – கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படுகின்ற குறித்த ஆலயத்தில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40இற்கும் மேற்பட்டவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் தொடராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தொற்றாளர் தனக்கு நெருக்கமானவர்கள் என்று 24 வரையான நபர்களை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தின.

https://thinakkural.lk/article/101125

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஆயிரத்தைதாண்டி 1017 கொரோனாதொற்றுக்கள் – கல்முனையில் 717 மட்டக்களப்பில் 131 திருமலையில் 122 அம்பாறையில் 24

BharatiDecember 28, 2020

வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டியுள்ளது. அங்கு நேற்றுவரை 1017 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

02-1-4-1024x516.jpgதிருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 131 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது. காததான்குடியிலும் திடீரென 15பேராக தொற்று அதிகரித்துள்ளது.

இறுதியாக காத்தான்குடியைச்சேர்ந்த 54வயதுடைய ஒருவர் கொரோனாவுக்கு பலியாகிள்ளார். இது மட்டு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம். கிழக்கில் 5ஆவது மரணம்.

கிழக்கி;ல் கடந்த 24மணித்தியாலங்களில் 30பேர் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கூடிய 08 பேர் காத்தான்குடியிலும் அடுத்ததாக மூதூர் மற்றும் பொத்துவில் தலா 06பேரும் அட்டாளைச்சேனையில் 5பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை காத்தான்குடியில் 5 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

திருமலையில்…

திருமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இரட்டை இலக்கங்களுள் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3இலக்கங்களாகஅதாவது 122ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 66பேரும் மூதூரில் 33பேரும் கிண்ணியாவில் 9பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மாநகரில்..

அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 175 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கி;ல் 131பேரும் சாய்ந்தமருதில் 33பேரும் கல்முனை வடக்கில் 11பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 131 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 131பேரும் கல்முனை பிராந்தியத்தில் 717பேரும் திருமலை மாவட்டத்தில் 122பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 24பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

தனிப் பிரிவுகள் ரீதியாக….

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 24பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 717பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 676பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

தனியாகப்பார்க்குமிடத்து அக்கரைப்பற்றில் மட்டும் 304பேரும் அடுத்ததாக கல்முனை தெற்கில் 131 பேரும் அட்டாளைச்சேனையில் 65பேரும் கோறளைப்பற்று மத்திபிரிவில் தொற்றுக்கள் 70பேரும் பொத்துவிலில் 65பேரும் திருமலையி;ல் 66பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

அடுத்தபடியாக சாய்ந்தமருதில் 33பேரும் மூதூரில் 33பேரும் ஆலையடிவேம்பில் 27பேரும் இறக்காமத்தில் 23பேரும்; களுவாஞ்சிகுடியில் 20பேரும் காத்ததான்குடியில் 15பேரும் திருக்கோவிலில் 14 பேரும் சம்மாந்துறையில் 14பேரும் கல்முனை வடக்கில் 11பேரும்; நிந்தவுரில் 12பேரும் ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

சிகிச்சை நிலையங்களில் 2265 அனுமதி

கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 489கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை வரை 2265பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1763பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 75கட்டில்கள் எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 768பேர் அனுமதிக்கப்பட்டு 618பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 146பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 26 கட்டில் தேவையாகவுள்ளன.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 76 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 74 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 37பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 86 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 72 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

31158பேருக்கு பிசிஆர் பரிசோதனை

இதுவரை கிழக்கில் 31158பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 15509 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.

கல்முனைப்பிராந்தியத்தில் 17328 சோதனைகளும் மட்டக்களப்பில் 7822 சோதனைகளும் அம்பாறையில் 2543 சோதனைகளும் திருகோணமலையில் 3465சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

https://thinakkural.lk/article/101256

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை

 
Coronavirus-vaccine-Reuters-696x464.jpg
 29 Views

நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது.

இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர்,

“எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடையலாம். இந்தத் திரிபுக்கு வரம்புகள் எதுவும் இல்லை. இது எங்கும் புதிதாக திரிபடையக்கூடும். எனவே, மற்ற நாடுகளில் உருவானமை போன்று நம் நாட்டிலும் வைரஸ்கள் திரிபடைய வாய்ப்ப உண்டு.

உலகில் 20இற்கும் மேற்பட்ட திரிபடைந்த வைரஸ்கள் பரவி வருகின்றன. எந்தவொரு வைரஸும் திரிபடையலாம். நாம் அதைப் பொருட்படுத்தாமல் அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.

 

https://www.ilakku.org/?p=38058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இன்று மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

 
battinews%2B%252812%2529.jpg


மட்டக்களப்பில் இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தின் கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34 ஆம் விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்திற்கு பின் மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிகின்றன.

குறித்த மரணத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://www.battinews.com/2020/12/one-more-covid-death-batticaloa.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.

CORONA-COVID-DEATH.jpg

01. இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒரு வர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக் கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு, கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக 2020 ஜனவரி 02 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒரு வர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் வலிப்புக் காரணமாக 2020 ஜனவரி முதலாம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

 

https://thinakkural.lk/article/102757

யாழில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவர் உட்பட அறுவருக்கு கொவிட்-19: மருத்துவர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Dr.-Sathiyamoorthy-300x170.jpg

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் (வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது), வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் (தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்), அளவெட்டியில் 3 பேருக்கும் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்), மானிப்பாயில் ஒருவருக்கும்,நவாலியில் ஒருவருக்குமே கொரோனாத்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

https://thinakkural.lk/article/102794

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டது எருக்கலம்பிட்டி!

IMG_20210106_160105.jpg?fit=700%2C332&ssl=1

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமம் இன்று (6) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

தொற்றாலிகள் கடந்த 27ம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டமையால் குறித்த திருமண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/முடக்கப்பட்டது-எருக்கலம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் 23 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!! – வர்த்தக நிலையங்களும் முடக்கம்!!

 

பருத்தித்துறை புலோலியில் நேற்றுமுன்தினம் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 23 குடும்பங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற சமயம் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை சரிவரத் தெரியவில்லை.

தொற்றாளர் பலருடன் தொடர்பைப் பேணியிருக்கும் நிலையில், அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

நெல்லியடியில் உள்ள டயலொக் நிறுவன அலுவலகத்துக்குத் தொற்றாளர் சென்று, அங்கு அரை மணி நேரம் செலவிட்டுள்ளார். அதையடுத்து அந்த அலுவலகம் முடக்கப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தச் சமயம் அருகில் உள்ள கடை வர்த்தகர் ஒருவரும் அந்த அலுவலகத்துக்குச் சென்றதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவரது கடையும் முடக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு தொற்றாளர் சென்றிருப்பதால், அந்த உணவகமும் மூடப்பட்டு, அங்கு பணியாற்றுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லியடியில் உள்ள வங்கிகளின் தன்னியக பணப்பரிமாற்ற இயந்திரங்களுக்கும் தொற்றாளர் சென்றிருப்பதால், அங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
 

 

https://newuthayan.com/பருத்தித்துறையில்-23-குடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்தமான பி.சி.ஆரில் 54 பேருக்கு தொற்று உறுதி!! – கைமீறியது வவுனியா நிலைமை!!

 

வவுனியா நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 54 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா, பட்டாணிச்சூரில் 7 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பட்டாணிச்சூர் பிரதேசமும் முடக்கப்பட்டது.

பட்டாணிச்சூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாக மாணவன் ஒருவருக்கும், கர்ப்பிணிப் பெண் ஒருருக்கும் முதலில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

அதன்பின்னர் பட்டாணிச்சூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

IMG-20201215-WA0008-1024x576-1.jpg

அதையடுத்து நேற்றுமுன்தினம் வவுனியா நகர் பகுதியில் எழுந்தமான அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

 

நகர்ப் பகுதில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், அங்கு பணியாற்றுபவர்கள், பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் என 204 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றின் முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், 54 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து வவுனியா நகரை முடக்கி பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் ஆலோசித்து வருகின்றனர்.
 

 

https://newuthayan.com/எழுந்தமான-பி-சி-ஆரில்-54-பேர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரியை திறந்த அம்பானியை வெகுநாட்களாக காணமுடியவில்லை.

இல்லை, எனது அவதானத்தில்  அம்பானியின் பிரசன்னம் அகப்படவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹக்கீம் தனது டுவிட்டர் பதிவில்,

நான் இன்று கொவிட்-19 க்கு நேர்மறையானதை சோதித்தேன், ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குள் நுழைகிளேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

spacer.png

இந்த வாரம் கொவிட்டுக்கு சாதகமாக சோதிக்கும் 2 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஆவார். முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றுக்குளுளான நிலையில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
 

https://www.virakesari.lk/article/98201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்ட 35 அதிரடிப்படையினருக்கு கொரோனா

Report us Steephen 32 minutes ago

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 35 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட அதிரடிப்படையின் சில அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக் கிழமை அதிரடிப்படையை சேர்ந்த 60 பேருக்கு ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் இந்த கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக கந்தகாடு, புணானை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படையை சேர்ந்த மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/community/01/266117?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா

 

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவர்.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா | Virakesari.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் நேற்று 12 கொரோனா நோயாளர்கள் அடையாளம்! 11 பேர் சுகாதார துறையினைச் சேர்ந்தவர்கள்

By Ragavi
battinews%2B%252812%2529.jpg

மட்டக்களப்பில்  நேற்றையதினம் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் சுகாதார துறையினைச் சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 387 பேர் கொரோனா தொற்றாளர்களாக இடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர்களில் 132 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் 255 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

http://www.battinews.com/2021/01/387.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்ட கல்முனை வடக்கில் 1200 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி விநியோகம்.

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாநகரில் முடக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்துக்குட்பட்ட 1200குடும்பங்களுக்கு முதற்கட்ட கொரோனா நிவாரண உலருணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையிலான குழுவினர் இவ்வுலருணவுப் பொதிகளை வீடுவீடாகச் சென்று விநியோகித்தனர்.

முதற்கட்டமாக தலா 5000ருபா பெறுமதியான பொதிகள் கடந்த நான்கு தினங்களாக கொட்டும் மழைக்கு மத்தியில் பிரதேசசெயலக ஊழியர்களால் வழங்கப்பட்டுவந்தது.

 

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் இது பற்றிக் கருத்துரைக்கையில் ..

 

கல்முனை மாநகரில் முடக்கப்பட்ட 11கிராமசேவையாளர் பிரிவுகளில் ஏழு(7)பிரிவுகள் எமது பிரதேசத்துள் வருகின்றன. அப்பிரிவுகளுள் வாழ்கின்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரண உலருணவுப்பொதிகள் விநியோகிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்னன.

முதற்கட்டமாக 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொருட்கள் மழைக்குமத்தியிலும் எமது ஊழியர்கள் வழங்கிவைத்தனர்.

முடக்கப்பட்ட கல்முனையின் 11பிரிவுகளில் வாழும் வருமானம் குறைந்த சுமார் 3500குடும்பங்களுக்கு 10ஆயிரம் ருபா பெறுமதியான நிவாரணஉலருணவுப்பொதிகள் வழங்க மூன்றரைக்கோடி ருபா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட 11பிரிவுகளில் எமது வடக்குபிரதேசத்தில் 1சி 1ஈ 2 2எ 2பி 3 3எ ஆகிய 07பிரிவுகள் உள்ளன. அங்கு 1865 குடும்பங்களைச்சேர்ந்த 6197பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களில் அரசஉத்தியோகத்தர்கள் வங்கிஉள்ளிட்ட வருமானம்கூடிய தொழில் செய்பவர்களை விடுத்து சமுர்த்தி மற்றும் வருமானம் குறைந்த 1200குடும்பங்களுக்கு இந்நிவாரணப்பொதி வழங்கப்படுகிறது.
IMG-20210109-WA0037.jpg?189db0&189db0

IMG-20210109-WA0040.jpg?189db0&189db0

136489740_393589061707036_97003665156611

135479723_393589035040372_15054778023479

IMG-20210109-WA0039.jpg?189db0&189db0

IMG-20210109-WA0038.jpg?189db0&189db0


https://www.meenagam.com/முடக்கப்பட்ட-கல்முனை-வட/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பரவும் புதிய வைரஸிற்கு ஒத்த வைரஸே இலங்கையிலும் பரவுகின்றது - வெளியானது புதிய தகவல்

(ஆர்.யசி)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவென  தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இல்லையென்ற போதிலும் அதற்கு ஒத்த வைரசே பரவிக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர். 

 

நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்று பரவியுள்ள காரணத்தினால் எந்த பகுதியை முடக்குவது, எங்கு பாதுகாப்பாக உள்ளதென அறிவிக்கவோ தீர்மானம் எடுக்கவோ முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் கொரோனா வைரஸ் இன்னமும் சமூக தொற்றாகவில்லை என அரசாங்கமும், சுகாதார அமைச்சும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற போதிலும் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். 

இந்நிலையில் நாட்டின் நிலைமைகள் குறித்து பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகனவிடம் வினவியபோதே அவர் கூறியதானது,

நாட்டில் சகல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ளது, இப்போது நாட்டில் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாலம் காணப்பட்டு வருகின்றனர் என்றால் நாட்டில் வைரஸ் பரவல் அதிகம் என்பதே அதன் அர்த்தமாகும். 

இது சமூக தொற்றா அல்லது கொத்தணிகளா என்பது விவாதமல்ல, வைரஸ் தொற்று வேகமாக பரவிக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் அவசியமான நேரத்தில் நாட்டை முடக்காது சகல பகுதிகளும் திறக்கப்பட்டமையே சகல நெருக்கடிக்கும் காரணமாகும்.

அரசாங்கம் சகல பகுதிகளையும் திறந்தவுடன் மக்கள் பொறுப்பு, கட்டுப்பாடுகள் சுகாதார வழிமுறைகள் என எதனையும்  கருத்தில் கொள்ளாது அனாவசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டதன் விளைவே இப்போது அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணவும் காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ளது, சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளனர், ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக கடந்த செயலணிக் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

எது எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவில் காணப்படும் மாறுபட்ட வைரஸ் பரவல் ஆசியா உள்ளிட்ட 20 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் இப்போது பரவும் வைரஸ் வழமையாக இதுவரை காலமாக இலங்கையில் காணப்பட்ட வைரஸ் அல்லாது பிரித்தானியாவில் காணப்படும் வைரஸுக்கு ஒத்த ஒன்றாகவே காணப்படுகின்றது. 

எனவே அரசாங்கம் இப்போது எடுக்கும் தீர்மானங்களில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. இப்போது நாம் தவறிழைப்பது மீண்டும் நாட்டினை முழுமையாக முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேபோல் இறுதியாக கூடிய கொவிட் செயலணிக் கூட்டத்தில் பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் அரசாங்கத்துடன் கடுமையான கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

அரசாங்கம் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் நிலைமைகள் இவ்வாறே செல்லுமானால், சுகாதார அதிகாரிகளுக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தடுக்கப்பட்டு இராணுவம் சகல விடயங்களிலும் தலையிடும் என்றால் தாம் செயலணிக் கூட்டத்தில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

 

https://www.virakesari.lk/article/98633

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2021 at 19:04, Kadancha said:

திரியை திறந்த அம்பானியை வெகுநாட்களாக காணமுடியவில்லை.

இல்லை, எனது அவதானத்தில்  அம்பானியின் பிரசன்னம் அகப்படவில்லை?

இல்லை.. நீண்டநாட்களாக காணவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி ! மாவட்டத்தில் இதுவரை 6 பேர் பலி

 
Screenshot_20210116-185302_UC%2BMini.jpg

 

(இரா.சயனொளிபவன்) 
மட்டக்களப்பு நகரின் மூர் வீதியினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள தாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் 75 வயதுடைய மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(மட்டக்களப்பு - 2 , வவுணதீவு - 1 , காத்தான்குடி - 3 )
 

http://www.battinews.com/2021/01/one-more-covid-19-death-reported-.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 138 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4105  பேர் குண்மடைந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 388 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள் , 489 ஆண் சிறைக் கைதிகள் , 11 பெண் சிறைக் கைதிகள் , 3ஆயிரத்து 520 ஆண் விளக்கமறியல் கைதிகள்  , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

 

https://www.virakesari.lk/article/99070

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி

(சி.எல்.சிசில்)

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர்  ஒ ரு வ ரு க் கு க் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Dr.-Sathiyamoorthy-300x170.jpg

இ து தொட ர் பி ல் அ வ ர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 21ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்பட்ட நபருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த நபர் சிகிச்சைக்காகக் கடந்த 23ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர், தாதியர்கள் என 07 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர் என்றார்.

 

https://thinakkural.lk/article/107825

Link to comment
Share on other sites

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்

 

 

     by : Yuganthini

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/covid-vaccine.jpg

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.

இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

மேலும் வட.மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சுக் கோரியிருந்தது.

அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.

அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன் | Athavan News

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.