Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு…!

கொரோனா தொற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 265 நபர்களின் PCR பரிசோதனை அறிக்கைகள் இன்று (17) கிடைக்கப் பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) கருத்துரைக்கையில் இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குளான 238 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/இராணுவத்-தளபதியின்-விசேட/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 05:12 -

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 241ஆக அதிகரித்துள்ளது.

புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூவருக்கு-கொரோனா-தொற்று/175-248760

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று (17) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றிலிருந்து-77-பேர்-குணமடைந்தனர்/175-248770

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றில் பலியான சகோதரர்கள்

ro.jpg

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த  திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/38972

Link to comment
Share on other sites

18.04.2020. 7 am
.........................

வவுனியா மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு ( Contact Screening) கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில்மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

Dr. Thangamuthu Sathiyamoorthy

Link to comment
Share on other sites

கொட்டாஞ்சேனையில் அடையாளம் காணப்பட்ட 2ஆவது நபரால் பார்மசி ஒன்றுக்கு சீல் : எரிக்கப்பட்ட முகக்கவசங்கள்

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பெண் ஒருவரும் அவரது மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்கள் குறித்து பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

குறித்த பெண்ணுக்கு எவ்வாறு இந்த நோய் தொற்றியது தொடர்பிலும், குறித்த பெண்ணின் மகனால் பார்மசி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துள்ள.

இது தொடர்பான விரிவான தகவல்கள்..

கொட்டாஞ்சேனை - பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் முத்த மகனுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

எனினும் 2 ஆம் மகனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ள நிலையில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

குறிப்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என ஆராய்ந்துவரும் சுகாதாரத் துறை அவருக்கு இந்தியா யாத்திரை செல்லும் போது விமானத்தில் வைத்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக யாத்திரை செல்லும் போது விமானத்தில் அவருக்கு அருகே இருந்த ஆசனத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருந்ததாகவும், அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தாக்கம் இருந்து அதனூடாக இந்த பெண்ணுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அப்பெண்ணுக்கு கடந்த மார்ச் 27 ஆம் திகதியே இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள போதும் அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதால் அதனை அவ்வளவு பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று அப்பெண்ணின் 2 ஆம் மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இந்த நிலையில், அவரால் கொஹுவலை - சரணங்கர வீதியில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு விற்பனைக்காக கையளிக்கப்பட்ட ஒரு தொகை முகக் கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை பொலிஸார் நேற்று தீயிட்டு அழித்துள்ளதுடன், அந்த பாமசிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி குறித்த நபரால் 550 முகக் கவசங்கள் விற்பனைக்காக அந்த பாமசிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எதுவும் இன்று வரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந் நிலையில் அந்த பாமசியின் உரிமையாளரும் இரு உதவியாளர்களும் நேற்று முதல் வெள்ளவத்தை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/141435?ref=imp-news

மேலும் நால்வருக்கு கொரோனா, 09 பேர் குணமடைந்தனர்..!

Coronavirus-Blood-Test.jpg

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் 09 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மேலும்-நால்வருக்கு-கொரோ-2/

Link to comment
Share on other sites

கொழும்பில் 49 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 45 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவடடத்தில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கல்முனை, காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்தளவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொழும்பில்-49-பேருக்கு-கொரோனா-தொற்று/175-248784

Link to comment
Share on other sites

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

தொடர்ந்தும் அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

‘வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை படிப்படியாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இக்காலப்பகுதியில் நமது சேவை நிலையங்களிற்கு சமூகமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பேஸ்புக் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
  
நாம் பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகளின் மூலமே இந்த முடிவை எடுத்ததோடு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய  மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைக்கு அமைய செயற்படுவதன் மூலமே இந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பதிவிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வெளியில்-நடமாடுவதை-தவிர்த்துக்கொள்ள-வேண்டும்/175-248819

Link to comment
Share on other sites

இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது
Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 12:10 - 0      - 27
 

இலங்கையில் மேலும் ஆறு பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இப்புதிய தொற்றுக்களானவை வெலிசறையிலுள்ள தனிமைப்படுத்தல் மய்யத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 254ஆக உயர்ந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையில்-COVID-19-தொற்றுக்குள்ளானோரின்-எண்ணிக்கை-250ஐத்-தாண்டியுள்ளது/175-248825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்


யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

 
அதே நேரத்தில் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற குறித்த இருவரும் தொடர்ந்தும் 13 நாட்கள் அவர்களது வீடுகளிலேயே இருப்பார்கள்.

http://thinakkural.lk/article/39026

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (18) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 161 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 254 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர் 254
இப்போது சிகிச்சை பெறுவோர் 161
குணமடைந்தோர் 86
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) 17
 
Link to comment
Share on other sites

களுத்துறையில் 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் நேற்று (18) வரை 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 14 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/களுத்துறையில்-50-கொரோனா-தொற்றாளர்கள்-பதிவு/175-248855

Link to comment
Share on other sites

எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயம் : எச்சரிக்கும் நிபுணர்கள்..!

கொரோனா தொற்றினால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறது. 

அதேபோல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் இந்த முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக பாரதூரமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய முகக்கவசங்களை பொதுமக்கள் சாதாரண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபயாம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு, கொரோனா தொற்றினால் பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவைப் பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார். அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்..

அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும்.

அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான். எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/80308

Link to comment
Share on other sites

சிகை_அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள்

நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அறிவுறுத்தல்கள்:

1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் #சமூக_இடைவெளியைப் பேணவும்.

2. முடி திருத்துநர்கள் கட்டாயமாக #முகக்_கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

3. முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் #கைகளை சரியான முறையில் #ஓடும்_நீரில் #சவர்க்காரம் கொண்டு #கழுவ வேண்டும்.

4. மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.

5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் #ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி #தொற்று_நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

6. #போர்வை, #துவாய், #பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (19.04.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை 269 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 166 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 122 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/80315

Link to comment
Share on other sites

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா தொற்றுடைய நபர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் இன்று (19) வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று தீவிரத் தன்மை குறைவடைந்து வந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொதுமக்களுக்கு-எச்சரிக்கை/175-248885

Link to comment
Share on other sites

திரு எஸ் கே நாதன் அவர்கள் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பை வழங்கினார்.

வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்திற்கு தேவையான Video Laryngoscope இரண்டினை அண்மையில் வழங்கினர்.இவற்றின் பெறுமதி 3.5 மில்லியன் ரூபாய்கள்.

இது தவிர கொரேனா தடுப்புக்கான தற்காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கும் இதனோடு தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் அன்பளிப்பை வழங்கினார்.

திரு. நாதன் வடபகுதியில் கடந்த பல வருடங்களாக பல உதவித் திட்டங்களை செய்து வருவது யாவரும் அறிந்ததே.

குறிப்பாக இக்காலப்பகுதியில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருவதை யாவரும் நன்கு அறிவார்கள்.

அவருடைய சேவையை பாராட்டுவதில் யாழ் வைத்தியசாலை சமூகமும் பெருமை படுகின்றது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இருவருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு!

 

இலங்கையில் கொரோனாத் தொற்றுடையோர் மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் மூலம் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மேலும்-இருவருக்கு-கொரோ/

Link to comment
Share on other sites

ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக நேற்று (19) இனங்காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவுக்குச் சென்று மார்ச் மாதம் 12 ஆம் திகதி நாடு திரும்பிய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் குடும்ப உறவினர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒர-கடமபததல-10-பரகக-கரன/175-248908

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.