Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாளை-இரவு-முதல்-செவ்வாய்/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு, திங்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு; கொழும்பு, கம்பஹாவில் காலவரையறையற்ற ஊரடங்கு

curfewimposed-300x166.jpgஎதிர்வரும் ஞாயிறு திங்கட்கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42857

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு :

இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு !

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : அடையாளம் காணப்பட்ட 12 பேரும் குவைத்திலிருந்து வந்தவர்களாம் !

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 1,140ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,140ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இனங்காணப்பட்ட 51 பேரில் 49 பேர் குவைட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களெனவும் ஒருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பவரெனவும் ஒருவர் கடற்படை வீரரெனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1-140ஆக-அதகரபப/150-250796

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையே ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இடம்பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஊரடங்கு சட்ட தளர்வு பற்றி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில்;

PRE.jpg

Link to comment
Share on other sites

தொற்றாளர் எண்ணிக்கை 1,206ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,206ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தறறளர-எணணகக-1-206ஆக-அதகரபப/175-250910

Link to comment
Share on other sites

மேலும் 39 பேருக்கு கொரோனா – ஒரேநாளில் அதிகளவானவர்கள் அடையாளம்

In இலங்கை     May 26, 2020 4:33 pm GMT     0 Comments     1011     by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://athavannews.com/மேலும்-39-பேருக்கு-கொரோனா-ஒ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் இலங்கையில் 137 பேருக்கு கொரோனா ; குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் நேற்றைய தினத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒரே நாளில் மிக அதிகளவானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் 137 நோயாளிகளில் 129 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும், 08 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி வந்தவர்களில் இதுவரை 219 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

http://thinakkural.lk/article/43644

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-53-பேருக்கு-கொரோனா/175-250988

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் கஃபூர் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ளகஃபூர் கட்டிடம்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் குறிப்பிட்ட கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் கடற்படையை சேர்ந்த வாகனச்சாரதியொருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்gafoor1-588x250-300x128.jpg
குறிப்பிட் கட்டிடத்தை பாதிக்கப்பட்டுள் கடற்படை சாரதி உட்பட பலர் பயன்படுத்திவந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரி இதன்காரணமாக குறிப்பிட்ட கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..

http://thinakkural.lk/article/43887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று ; மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,530 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் குணமடைந்த 13 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 745 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/43961

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் இன்று (29) இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் தொற்றிலிருந்து 754 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 794 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-1558ஆக-உயரவ/150-251076

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

781 பேர் குணமடைந்தனர்; 767 பேர் தொடர் சிகிச்சையில்

Reco.jpg?189db0&189db0

 

இலங்கையில் நேற்று (29) மொத்தமாக 28 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,558 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 17 பேரும், வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 11 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று புதிதாக 36 ரே் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இதன்படி இதுவரை 781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 767 ஆக காணப்படுகிறது.

https://newuthayan.com/781-பேர்-குணமடைந்தனர்-767-பேர்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களில் 505 பேருக்கு கொரோனா ; டாக்டர் அனில் ஜாசிங்க

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

http://thinakkural.lk/article/44301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா

மாலைதீவு கட்டாரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் மத்தியில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது

.kuwait-3-300x139.jpg

நேற்று 62 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்

rreturness1-300x200.jpg
இவர்களில் 25 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் 37 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளர்களில் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்ட மூவரும் கட்டார் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் உள்ளனர் என தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://thinakkural.lk/article/44365

Link to comment
Share on other sites

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இன்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையைச்  சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மலம-இரவரகக-கரன-தறற/175-251133

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பத்தினர்களும் பதி விரதர்களும், தனிமனித ஒழுக்க சீலர்களும் எம்மிடையே இருந்திருந்தால் இந்த கவிதைக்கான தேவையே இருக்காது.   கவிதையை பார்ககும் போது இந்த கவிதை எழுதியவர் அதை வலியுறுத்த மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்தவருக்கு மட்டும் உபதேசிக்கும் அரத்தமற்ற கவிதை இது. 
    • அண்ணை, போன் வயரை நேற்றே ஏராளனும், நெடுக்கும் அறுத்துப்போட்டினம்🤣
    • Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM   800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
    • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
    • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.