Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: எச்சரிக்கும் மருத்துவர் கேதீஸ்வரன்

இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் இறப்புக்களும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

இவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.

எனவே இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும்.

அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறியத்தரவும் என கூறினார்.

https://newuthayan.com/மீண்டும்-கொரோனா-பரவும்-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 25 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 446 ஆக காணப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 756 கடற்படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து 47 ஆக காணப்படுகின்றது.

https://newuthayan.com/கொரோனா-தொற்றுக்குள்ளான-25/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-18-கரன-தறறளரகள-அடயளம/150-252119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கியது!

இலங்கையில் இதுவரை 1,472 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 467 ஆக குறைந்துள்ளது.

இன்று (20) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 26 பேர் குணமடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/குணமடைந்தோர்-எண்ணிக்கை-1500/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

48 மணிநேரத்தில் தொற்றாளர் எவருமில்லை

கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை.

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 1950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனதுடன், அவர்களில் 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/48-மணநரததல-தறறளர-எவரமலல/150-252190

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (23) இதுவரை 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவிலிருந்தும், 11 பேர் அமெரிக்காவிலிருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 422 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,559 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/சற்றுமுன்-அறிவிப்பு-புத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2020 at 13:46, உடையார் said:

இதனை, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கொடுமைடா சரவணா ....
எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் 
இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?

😀இராணுவ மயமாக்கல்

ஸ்ரீலங்காவில் சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட கொரோனா - சுகாதார அமைச்சர்

தற்போது கொவிட் 19 வைரஸ் இந்நாட்டு சமூகத்திலிருந்து முற்றாக அகற்றக்கூடியதாக உள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் இதுவரை ஒரு லட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு ஆயத்தமாதல் மற்றும் பிரதிபலிப்பு நடவடிக்கைகளின் கீழ் தேசிய சுகாதார தொகுதியில் நோய் பரிசோதனை அளவை அதிகரிக்கும் நோக்கில் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கமையவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளின்படி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அதி தொழில்நுட்ப மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உபகரணங்களுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

corona-ws.png

விசேட நோய்களை கண்டறியும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் நேற்று(24) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

எம்மிடமுள்ள ஆய்வுகூடங்கள் மூலம் நாளொன்றுக்கு 300 பரிசோதனைகள் மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. தேவையேற்படின் இந்த ஆய்வுகூடத்தில் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளையும் செய்ய முடியும்.

இச் சந்தர்ப்பத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டமைக்காக முல்லேரியா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது ஒரு இலட்சம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். PCR பரிசோதனையை மேற்கொள்ள பல உபகரணங்களும், திரவங்களும் தேவையாகும்.

இந்த ஒரு உபகரணங்கள் கூட இல்லாமல் இப்பரிசோதனையை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தட்டுப்பாடின்றி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் நோயாளிகளை அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து வேறுபடுத்தி இன்று கொவிட்-19 நோயை சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கக் கூடியதாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/145802

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2001 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (24) 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறளர-எணணகக-2001-ஆக-உயரவ/150-252363

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தறறளரகளன-எணணகக-மலம-உயரவ/150-252398

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (27) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,033 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட 19 பேரும் பங்களாதேஷில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 383 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,639 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இலங்கையில்-மேலும்-19-பேருக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிந்துப்பிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தல்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முடக்கப்பட்டு, 29 குடும்பங்களை சேர்நத 143 பேர் சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மீண்டும் கொரோனா! மூடப்பட்டது ஜிந்துபிட்டி வீதி..!

625.300.560.350.160.300.053.800.450.160.90-2.jpg?189db0&189db0

 

கொழும்பு − ஜிந்துபிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், வீட்டில் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இங்கு 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

https://newuthayan.com/கொழும்பில்-மீண்டும்-கொரோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறை கைதியுடன் பழகிய 174 பேருக்கு பிசிஆர் சோதனை!

pcr-exame.jpg?189db0&189db0

 

வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளியான கைதியுடன் பழகிய 174 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி இன்று (07) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இவர்களது முடிவுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://newuthayan.com/சிறை-கைதியுடன்-பழகிய-174-பேர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

PicsArt_06-27-04.30.13.jpg?189db0&189db0

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் இன்று (08)அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 1967 பேர் குணமடைந்துள்ள நிலையில், 106 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2020-07-08_1.png?189db0&189db0
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மேலும் 56பேருக்கு கொரோனா

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில்  56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-மலம-56பரகக-கரன/150-252980

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளி பஸ்களில் பயணித்தார்!

1587360172-CTB-Bus-2.jpg?189db0&189db0

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் பஸ்களில் பயணித்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/கொரோனா-தொற்றாளி-பஸ்களில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா!

breakingcorona2-960x540.jpg?189db0&189db0

 

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இதுவரை 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

https://newuthayan.com/கந்தக்காடு-புனர்வாழ்வு-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

காற்றிலும் பரவுதாமே?

ஆமா கவனமாக இருங்கள்

 

கந்தக்காடு மையத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தல்

kandhakadu.jpg?189db0&189db0

பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் உறவினர்கள் 119 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மையத்தில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த உறவினர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

 

https://newuthayan.com/கந்தக்காடு-மையத்தில்-உள்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தக்காட்டில் சற்றுமுன் மேலும் 87 பேருக்கு கொரோன உறுதி!

பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) மாலை சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை மாெத்தமாக 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/கந்தக்காட்டில்-சற்றுமுன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மேலும் 7 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் பழகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

முன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/யாழில்-மேலும்-7-பேர்-தனிமை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்; இராணுவத் தளபதி

July 11, 2020

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/53655

 

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM   800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
    • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
    • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.