Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம் அறிவிப்பு

 
Bus-and-Train-696x261.jpg
 41 Views

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஐப்பசி 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

பின்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும் இதே கடற்படை முகாமைச் சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர், புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தின் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார். இவர் கடந்த ஐப்பசி 06 ம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட புகையிரத வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.

பயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/கொரோனா-தொற்றுக்குள்ளான-க/

 
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் – வவுனியா பொது வைத்தியசாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா நோயாளிகளை வவுனியா பொது வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் காரணமாக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எந்தவொரு வெளி நேயாளியையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் வைத்தியசாலை வைத்தியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மாத்திரமே சுகாதாரப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இன்றையதினம் வவுனியா பொது வைத்தியசாலை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால் இன்று முதல் வெளிநோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-அச்சம்-வவுனியா-பொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் நேற்று நால்வருக்கு கொரோனா

Oct
coronavirus.600.png
 86 Views

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் ஒருவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்றும், மற்றையவர்கள் கம்பஹாவை சேர்ந்த வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வடக்கில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-போதனா-வைத்த-2/

 

Link to comment
Share on other sites

நோயாளி என அறிவிக்கப்பட்டவர் ஒரிரு நாட்களில் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள்- பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.
முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

PELIYAGODA-PCR-TEST-CORONA-300x150.png
முதல் தடவை நோயாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் 14 நாட்களின் பின்னரே நோயாளியில்லை என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் நோயாளி என ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு அடுத்த ஓரிருநாட்களில் வெளியாகின்றது என்றால் அதன் அர்த்தம் ஆய்வு கூடசோதனைகளி;ல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளி என அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒரிருநாட்களில் நோயாளிகள் இல்லை என அறிவிப்பு வெளியாவது குறித்து கரிசனை வெளியாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் ஹரிதே அலுத்கே தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/81206

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

புங்குடுதீவில் கடந்த 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுள்ளார்.

அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.
 

 

https://www.virakesari.lk/article/92515

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத் பதியுதீன்

 
ysYwitx.png
 41 Views

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார் என சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்

https://www.ilakku.org/தனிமைப்-படுத்தல்-நிலையத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியில் 21 கொரோனா நோயாளிகள் அனுமதி!

FB_IMG_1603185376127.jpg?189db0&189db0

 

மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (19) காலை, மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை, உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள்.

https://newuthayan.com/மருதங்கேணியில்-21-கொரோனா-ந/

 

மினுவாங்கொடை தொற்று 2222 ஆனது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (20) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,222 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,685 ஆகும்.

https://newuthayan.com/மினுவாங்கொடை-தொற்று-2222-ஆனத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு கிடையாது-சுகாதார அமைச்சர்

 
1-67-696x392.jpg
 32 Views

இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்திற்குள் செலுப்படியாகாது என இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,கோரிக்கை விடுத்தார்.

அதே நேரம் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்களை பின்பற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் கோரிக்கைக்கு, பதில் அளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற அமர்வுகளுக்குள், குறித்த வர்த்தமானி செலுப்படியற்றது என கூறினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன், நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்றம் பொது இடம் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கோருவது தவறானது என்றார்.

அத்துடன் கோவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளமை குறித்து, தான் கவலை அடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கோவிட்-19-கட்டுப்பாடுகள்-ந/

Link to comment
Share on other sites

நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா; மினுவாங்கொடை தொற்றாளர்கள் 2,342 ஆக அதிகரிப்பு

corona-test.jpgநாட்டில் நேற்று மட்டும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 120 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந் தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

https://thinakkural.lk/article/81613

களுபோவில வைத்தியாசாலை ஊழியருக்கு கொரோனா-மினுவாங்கொடை பரவலுடன் தொடர்பில்லாதவர்

கொழும்பு களுபோவில வைத்தியாசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பணியாளர் 15ம் திகதி பணியிலிருந்தவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையி;ன் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

corona-update-300x168.jpg
பாதிக்கப்பட்டவர் தெகிவளையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளி கொஸ்கம கொவிட்19 கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் மினுவாங்கொட பரவலிற்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 16 ஊழியர்களுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/81674

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு பரவாதிருக்க நடவடிக்கைத் தேவை-சி.யமுனாநந்தா

 
image0-6-696x522.jpeg
 33 Views

கொரோனா தொற்றினை தடுக்க முக கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர், சுழிபுரம், சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியது அவசியமாகும். குப்பைகள்,பிளாஸ்டிக் போன்றவற்றினை இல்லாமல் செய்வதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதனை கட்டுப்படுத்தலாம்.

அடுத்ததாக டெங்கு நுளம்பு கடிக்கும் நேரமான காலை 9 மணி வரை அதேபோல் மாலை 4 தொடக்கம் 6 மணி வரை இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காமல் இருப்பதற்காக ஆடைகளை உடம்பு முழுவதுமாக போட வேண்டும்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு தொற்றும் ஏற்படுமாயின் இரட்டை நோய் தொற்று ஏற்பட்டு விடும். மேலும் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்க வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகும். எனவே பொது மக்கள் உரிய காப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் டெங்கு பெருகும் சூழலை எமது பிரதேசத்தில் இல்லாமல் செய்வதன் மூலமும் டெங்கு தொற்று ஏற்படுவதனை தடுக்க முடியும்.

குறிப்பாக வீடுகளுக்கு வெளியே உள்ள புற்கள் புதர்களை சுத்தப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளிற்கு வெளியில் வீதிகளில் குப்பைகளை பொறுப்பற்ற விதத்தில் போடுகின்றார்கள். இது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக அமையலாம்.

எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையும் இல்லாது செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு ஏற்படக்கூடிய அனாவசியமான இழப்புக்கள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்” என்றார்.

 

https://www.ilakku.org/கொரோனாவுக்கு-மத்தியில்-ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் விளக்கம்

 
image0-7-696x522.jpeg
 36 Views

கொரோனா பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில், இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்,  வடமாகாணத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்து  தெரிவிக்கையில்,

1. சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

2. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள், பொது நிறுவனங்களில் முக கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல், உடல் வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விபரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.

3. பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

4. தவிர்க்க முடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.

5. வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்

6. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.

7. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை நோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

8. இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.

9. பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

10. எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.ilakku.org/33077-2/

Link to comment
Share on other sites

வவுனியாவுக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; 3 பேருக்கு தொற்று உறுதி

coronavirus_home_page-2.jpgவவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/81892

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு தொற்று!
October 21, 202002
SHARE0

கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

https://newuthayan.com/பேலியேகொடை-மீன்-சந்தையில/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையே அழித்த எங்களுக்கு கொரானா எம்மாத்திரம் ...
இப்போ என்ன பேதி புடுங்குது போல ...? திடீரென  செத்து விழுந்தவர்கள் எல்லாம் எதனால்  செத்தார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லிவிட்டு பாடியை எரிக்கும் போதே எங்களுக்கு தெரியும் ,
தேர்தல் முடியும்வரை கொரோனவை கட்டுப்படுத்தியதாக இலங்கை மந்தைகளை மேய்ந்துவிட்டு 
மெதுவாக Brendix இலிருந்து  ஆரம்பித்திருக்கிறார் ங்கோத்தா   (அதுவும் முஸ்லிம்களின் நிறுவனமாமே )
நாளைக்கே இலங்கை பெரும்பாண்மை சிங்கள இனவெறியர்கள்  கொரோனாவில் கடுப்பாகி Brendix  நிறுவனத்தை போய்  எரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம்- வைத்தியர் சுடத்சமரவீர

Sudath-Samaraweera-768x384-696x348.jpg
 39 Views

இலங்கையில் தற்போது 13 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர, ஏனைய மாவட்டங்களுக்கும் பரவினால் அது ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்“

பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும்” என்றார்.

https://www.ilakku.org/இலங்கையில்-அனைத்து-மாவட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்குள்ளும் ஊடுருவியது கொரோனா; பல பகுதிகளில் திடீர் ஊடரங்கு அமுலானது

 
curfew.600.png
 44 Views

கொரோனா பரவல் தீவிரமடைந்து கொழும்புக்குள்ளும் ஊடுருவியிருக்கும் நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இதனை அறிவித்தார். மறுஅறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றிரவு முதல் திங்கட்கிழமை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

https://www.ilakku.org/கொழும்புக்குள்ளும்-ஊடுர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கும் –BOI அறிவிப்பு

1-72-696x405.jpg
 33 Views

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை(BOI) தொழிற்சாலைகள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல, மல்வத்த மற்றும் மீரிகம ஆகிய ஏற்றுமதி வலயங்களிலுள்ள நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடரும் என்பதுடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேற்குறிப்பிட்ட வலயங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் அமைந்துள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கவுள்ளன.

இதேவேளை ஊரடங்கு குறித்த முதலீட்டு சபையின் நடைமுறைகள் அதன் www.investsrilanka.com. இணையத்தளத்தில் உள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச்சபை அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/ஊரடங்கு-காலத்திலும்-தொழி/

Link to comment
Share on other sites

தெஹிவளை சந்தை தொகுதி மூடல்!

dehiwela-junction.jpg?189db0&189db0

 

கொழும்பு – தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தை வளாகத்தில் இருந்து தெஹிவளை மத்திய சந்தைப் பகுதிக்கு மீன்களை ஏற்றிவந்த லொறியின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான குறித்த நபர் தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதியில் மீன் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

https://newuthayan.com/தெஹிவளை-சந்தை-தொகுதி-மூட/

சற்றுமுன் 259 பேருக்கு தொற்று உறுதி!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (22) இதுவரை 309 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 182 பேருக்கும் மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 75 பேர், தனிமைப்படுத்தல் மையத்தில் இருவர் என 77 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதியானது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது.

https://newuthayan.com/சற்றுமுன்-259-பேருக்கு-தொற்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 309 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 6,287 ஆக உயர்வு

 
corona-sl.600.png
 8 Views

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று மாத்திரம் 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்த 02 பேருக்கும், கட்டுநாயக்கவில் 22 பேருக்கும், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 97 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 287ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். 2,712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.ilakku.org/நேற்று-மட்டும்-309-கொரோனா-தொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோசமடையும் இலங்கை நிலை; ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

 
coronavirus.600.png
 4 Views

இலங்கையில் ஒரே நாளில் 865 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 256 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 256 பேரில் 39 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள்.

 

https://www.ilakku.org/மோசமடையும்-இலங்கை-நிலை-ஒ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் உடனடியாக ஊடரங்கு; மறு அறிவித்தல் வரை தொடரும்

Ocurfew.600.png
 15 Views

கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் இன்றிரவு முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

https://www.ilakku.org/மருதானை-தெமட்டக்கொடை-பக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!

October 24, 2020

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/82779

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் 27பேர் கொரோனா தொற்று உறுதி

 
IMG_0112-696x522.jpg
 18 Views

கிழக்கு மாகாணத்தில் 27பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையினை தொடர்ந்து பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மினுவான்கொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனை பிராந்தியத்தில் 08பேரும் வேறு வழிமுறையில் தொற்றுக்குள்ளான ஒருவரும் கொரோனா தொற்றியுள்ளதாக இன்று உறுதிப்படுத்திய அதேவேளை, நேற்று அம்பாறை சுகாதார பணிமனைக்குட்பட்ட தெவிலிப்பிட்டிய பகுதியில் பொது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் 25பேர் நேற்று அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆறு பேர் உறுதிப்படுத்தப்பட்டனர். இப்பகுதியில் மேலும் பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களையும் தேடி கண்டுபிடித்து பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 150க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு அந்ததந்த காலத்திற்கு ஏற்ற வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்திருக்கின்றோம்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் இந்த மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் 65 பேர் அடையாளம் காணப்பட்டார்கள். இந்த 65 பேரில் 25பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 11பேருக்கு கொரோனா உள்ளதாக அடையாளம் காணப்பட்டது.

ஏனைய 40பேருக்கும் இன்றும் நாளையும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இருந்தபோதிலும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கல்முனையில் 34பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் 17பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் எட்டுப்பேருக்கு கொரோனா உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வைரஸின் தாக்கம் ஒரு குறித்த பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரையில் இதன் தாக்கம் காணப்படுகின்றது.

கண்ணுக்கு தெரிந்த, அறிந்தவர்களையே நாங்கள் நாடிச்சென்று சோதனை முன்னெடுத்துள்ளோம். எங்களுக்கு தெரியாமல் பலர் தொற்றுடன் காணப்படலாம். நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாராவது நபர்கள் பேலியகொட மீன்சந்தையில் நேரடியாக தொடர்புபட்டவர்களாக இருந்தால், அல்லது அவர்களை நீங்கள் யாராவது அடையாளம் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகருக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்கவும்.

ஆரம்பத்திலேயே நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரியான வகையிலும் அனைவரையும் அடையாளப்படுத்தி மேற்கொள்ளும்போது இந்த தொற்றும் வீரியத்தினையும் பரவும் அளவினையும் கட்டுப்படுத்தமுடியும். இனிவரும் காலங்கள் மிகவும் சவாலான காலங்கள். கிழக்கு மாகாணத்திலும் தொற்று பரவ ஆரம்பித்திருக்கின்றது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இதனை சுகாதார திணைக்களத்தினாலோ பொலிஸாரினாலோ பாதுகாப்பு தரப்பினராலோ மட்டும் கட்டுப்படுத்தமுடியாது. ஊடகத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து சுமுகமான முறையில் மிக அவதானமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இந்த  தொற்றின் அளவினை நாங்கள் நிச்சயமாக கட்டுப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ளமுடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-27பேர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெடுங்கேணி பகுதியில், வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கு முதல் தடவையாக கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

நெடுங்கேணி வரைபடம்

இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்  தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது.  இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது  நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/92888

Link to comment
Share on other sites

தொடங்கொடவில் 50 வீடுகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு

களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரி விற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வேதவத்த /மகாலந்தாவ தெற்கு / மகுருமஸ்வில / குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட  தெற்கு ஆகிய 5 கிராமங் களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CURFEW-1.jpeg

இதற்கிடையில், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குப் போக் குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கை களைக் கருத்தில் கொண்டு குறித்த கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

https://thinakkural.lk/article/82929

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்பட்டது வவுனியாவின் மரக்கறி மொத்த வியாபர நிவையம்

வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று மூடப்பட்டுள்ளது. 

spacer.png

வவுனியா மாவட்ட செயலாளர் சமன் மந்துலசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

spacer.png

குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12 பேர் வரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

spacer.png

இதனையடுத்து அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

https://www.virakesari.lk/article/92920

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.