Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருவர் இன்று கொரோனாவுக்குப் பலி – ஒரே நாளில் 878 கொரோனா தொற்றாளர்கள்

 
corona-09-05-696x405.jpg
 23 Views

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளனர்.

சிலாபத்தை சேர்ந்த, 66 அகவைக்கொண்ட பெண், கொழும்பு 13ஐ சேர்ந்த 67 அகவைக்கொண்ட ஆண் ஆகியோரே மரணமானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளையில் இலங்கையில் இன்று மாத்திரம் 878 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும் தொற்றாளிகளுக்கு ஊடாக தொற்றுக்கு ஆட்பட்டவர்கள் என்று இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இந்தளவுக்கு அதிக கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

 

https://www.ilakku.org/இருவர்-இன்று-கொரோனாவுக்க/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Colombo in Sri Lanka: Sehenswürdigkeiten & Highlights

கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 10 ஆயிரத்து 140 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேநேரம், நேற்று கம்பஹா மாவட்டத்தில் 188 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 98 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கண்டியில் 27 தொற்றாளர்களும் குருநாகலையில் 24 தொற்றாளர்களும் இரத்தினபுரியில் 24 தொற்றாளர்களும் மற்றும் புத்தளத்தில் 29 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொழும்பில்-மாத்திரம்-10-ஆய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக அதிகரிப்பு

 

இலங்கையில் இன்று மாத்திரம் 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது.

6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19ஆயிரத்து 32பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/95050

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா- நேற்றைய தினம் ஒருவர் மரணம்; 517 பேருக்கு கொரோனா தொற்றியது

 

corona-latest-update.jpgஇலங்கையில் நேற்றைய தினம் 517 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளையில், ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இவர் பிலியந்தலையை சேர்ந்த 72 வயதான ஆண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நேற்று மாத்திரம் 517 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.

 

https://thinakkural.lk/article/95334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணி யாற்றிய 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

coronavirus.COVID19.4.000.jpg

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தல் நிலை யங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/95413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா இறப்பு 137 ஆக அதிகரிப்பு – இன்று ஏழு பேர் மரணம்

covid-update-05-1024x529.jpgஇலங்கைக்குள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுடன் தொடர்புடைய 7 பேர் மரணமானதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியதை அடுத்தே இந்த எண்ணிக்கை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படுகின்றன-அதிகாரிகள் அறிவிப்பு

 

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

quarantinenews1-300x200.jpg

ஸ்வேல் ஐலன்ட் பகுதியில் உள்ள ஹ_னுப்பிட்டடிய கிராமசேவையாளர் பிரிவினை இன்று மாலை ஐநது மணி முதல் முடக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கருவாத்தோட்டத்தின் 60வத்தை வெள்ளவத்தையின் கோகிலா வீதி ஆகியவற்றையும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

https://thinakkural.lk/article/95699

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுஇதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 648 – இராணுவதளபதி

இலங்கையில் இன்றுஇதுவரை 648 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 451 பேர் பேலியகொடை மீன்சந்தையில் பாதிக்கப்பட்டவர்ளுடன் தொடர்பிலிருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
197 பேர் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் மகாவித்தியாலயம் மூடல்!

நுவரெலியா – ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை (07) முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/நோர்வூட்-மகாவித்தியாலயம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 28ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 
1-41.jpg
 46 Views

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தொற்றாளர்களின் எண்ணிக்கை தினசரி 700 முதல் 800 வரை அதிகரிக்கும் பட்சத்தில் சுகாதாரப் பொறிமுறைக்கு அது ஒரு சவாலாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 300-400 கோவிட்-19 தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் குணமடைந்து வெளியேறும் நிலையில் 300-400 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ மனைகளுக்கு வருவது நெரிசல் பிரச்சினையோ திறன் பிரச்சினையோ அல்ல என்றும்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  குறிப்பிட்டுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-28ஆயிரத்தைக்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா  எண்ணிக்கை

 
1-11.jpg
 55 Views

கிழக்கு மாகாணத்தில் கொரோனா  தொற்றின் எண்ணிக்கை 400தாண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வரையில் கிடைக்கப் பெற்ற பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12பேரும் ஆலையடிவேம்பில் 03பேரும் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரையில், 256பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையினை உணராமல் சிலர் செயற்படுவதாகவும் இதன் காரணமாக ஏனையவர்களும் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-400க்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

 
1-52.jpg
 48 Views

கொரோனா அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் குடா நாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு பணிக்குத் திரும்பும் சமயம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர்.

இவ்வாறு சகல இடங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினர் ஆயிரம் பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழில்-கடற்படையினர்-தனிம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 30 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

 
1-64.jpg
 32 Views

இலங்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 613ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 144 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆயுர்வேமருந்தினை சபாநாயகர் உட்பட பல ஆளும்கட்சி உறுப்பினர்கள் பருகிப்பார்த்துள்ளனர். சுகாதார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட மருந்தினை கொள்வனவு செய்வதற்காக பெருமளவான மக்கள் வைத்தியரின் கேகாலை வீட்டிற்கு படையெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-30-ஆயிரத்தைக்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

 

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 304 பேர் , பொரளை பகுதியில் 254 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 28 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், களுத்துறை மாவட்டத்தில் 27 பேர், இரத்தின புரி மாவட்டத்தில் 23 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

PCR-TEST-CORONA-COVID.jpg

அம்பாறை மாவட்டத்தில் 11 பேர், குருணாகல் மாவட்டத் தில் 10 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 03 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

 

https://thinakkural.lk/article/97060

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்- அஜித் ரோஹண  

 
1-70-696x392.jpg
 48 Views

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தரவுகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 825 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதே நேரம் தம்மிக பண்டார அறிமுகப்படுத்திய மருந்தைக் கொண்டு கொவிட்-19க்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியுமானால் அதற்கு தனது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது.

இந்த மருந்து வெற்றிகரமாக இருந்தால் அது நாட்டுக்கு பெருமையையும் கௌரவத்தையும் தரும் என அச்சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

வைரஸுக்கு எதிராக இந்த மருந்து வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் அது ஒரு வெற்றியாகும் எனவும் இவ்வைரஸுக்கு சிகிச்சையளிக்க சுதேச மருந்தைப் பயன்படுத்துவதற்கு மேலைத்தேய மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்.

 

https://www.ilakku.org/இலங்கையில்-ஆயிரக்கணக்கா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலப்பிட்டி கதிரேசன் உயர்தர மாணவனுக்கு கொவிட்-19; பாடசாலை மூடப்படும் சாத்தியம்

 

கம்பளை கல்வி வலயத்திலுள்ள நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் மாணவர் ஒருவர் இன்று கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

coronavirus.COVID19.4.000-300x150.jpg
கதிரேசன் கல்லூரியில் 12ஆம் தரத்தில் கற்கும் குறித்த மாணவ னுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதையடுத்து நான்கு ஆசிரியர்கள், 14 மாணவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புள்ள ஒன்பது பேர் பேராதெனியவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர் என அவர் மேலும் கூறினார்.

மேலும் மாணவனின் இரண்டாவது தொடர்பாளர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை மறு அறிவித்தல் வரும் வரை பாடசாலை மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://thinakkural.lk/article/97204

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் 536 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 536 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதில் 461 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

ஏனைய 75 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியி ல் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 149 ஆக உயர்ந் துள்ளது.

அத்துடன்,  திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது

 

https://thinakkural.lk/article/97238

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379 ஆனது; சுகாதார சேவைப் பணிப்பாளர் சுகுணன்

 

(காரைதீவு நிருபர் சகா)

கல்முனைப் பிராந்திய தொற்றுக்களின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் தெரிவித்தார்.

FB_IMG_1605321492843.jpg
கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு நோயாளிக்கும் இரு வைத்தியர்கள், இரு தாதிய உத்தியோகத் தர்கள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே மரணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 550ஐத் தாண்டியுள்ள அதேவேளை மாகாணத்துள் வருகின்ற கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றுக்கள் 379ஆகும். எனவே ஏனைய 150 தொற்றுக்களும் ஏனைய 3 பிராந்தியத்துள் வருகின்றன.
கல்முனைப் பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 339பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீதி 40பேரும் பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப் பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்தியத்தில் தனியொரு கிராமம் அதிகூடிய தொற்றுக்களைக் கொண்டது என்றால் அது 241தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.

அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 49 தொற்றுக்களாக உயர்ந்துள்ளது. சாய்ந்தமருதில் 17 பேர் ஆலையடிவேம்பில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப் பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72பேரும் அட்டாளைச்சேனையில் 80பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகி வருகிறது.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை ஒரேயொரு கொரோனா இறப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/97475

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’

யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ - சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொவிட்-19 தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முடக்கப்படும்-உடுவில்-பிரதேச-செயலக-பிரிவு/71-260993

மருதனார்மடத்தில் மேலும் அறுவருக்கு கொவிட்-19

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் அறுவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மருதனார்மடத்தில்-மேலும்-அறுவருக்கு-கொவிட்-19/71-260973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹர கைதிகளில் 234 பேருக்கு தொற்று

மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,  234 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மொத்தமாக 437 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென,  மஹர சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோரிடையே, 35 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  மேலும் 75 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும்  சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹர-கைதிகளில்-234-பேருக்கு-தொற்று/175-261038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட பல பகுதிகளில் நாளை முதல் காலவரையறையற்ற ஊரடங்கு

 
Curfew-696x377.jpg
 56 Views

மேல் மாகாணத்தில் பல பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளன.

வெள்ளவத்தை மயூரா பிளேஸ் உட்பட கமபஹா மாவட்டத்தின் ஐந்து கிராமசேவகர் பிரிவுள், களுத்துறை மாவட்டத்தில் 3 பிரிவுகள் நாளை காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/வெள்ளவத்தை-மயூரா-பிளேஸ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வவுனியாவில் தொற்று உறுதியான மாணவி பாடசாலை சென்றுள்ளார்

Coronavirus-COVID19_2.jpg?189db0&189db0

 

வவுனியா – கற்குழி பகுதியில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் 10ல் கல்விபயிலும் மாணவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவி இன்றும் பாடசாலைக்கு சென்று திரும்பியதாகவும் எட்டு பாடவேளையும் அனைத்துப் பாடங்களும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

https://newuthayan.com/இன்று-வவுனியாவில்-தொற்று/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும்-சைவ மகா சபை வேண்டுகோள்

 
1-119-696x367.jpg
 27 Views

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டனர் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அந்தந்த பிரதேச ஆலயங்களும் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை மேலும் தெரிவிக்கையில்,

உலகையே அச்சுறுத்திவரும் கொடிய தொற்று நோயான கொரோனா இன்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியை ஆக்கிரமித்து நிற்கின்றது. இக்கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதேபோன்று தொற்றாளர்களுடன் தொடர்புடைய பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றன.

இவ்வாறான நிலைமைகளின் போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப்பொருட்கள் தாமதமாகவே கிடைக்கின்றன. அன்றாடம் உழைத்து சீவியம் நடத்தும் குடும்பங்கள் உணவுக்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதன்போது பிரதேசத்தில் உள்ள ஆலயங்களும் தன்னார்வலர்களும் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக உதவவேண்டும். இது இறைவனுக்கு செய்யும் தொண்டுக்கு நிகராகும்” என தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/?p=37525

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது கொரோனா மரணம்

December 19, 2020

sugunan.jpg

கொவிட் – 19 தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

63 வயதான ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர், கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். #கிழக்குமாகாணத்தில் #கொரோனா #மரணம் #ஒலுவில்

 

https://globaltamilnews.net/2020/154564/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோனிலை வீட்டிலை ஒராளுக்கு கொரோனா வந்தால் நோட்டீஸ் அடிச்சே ஒட்டிவிடுவார்களாம்.

corona.jpg

இதையும் மீறி ஆள் வெளியிலை வந்தால் காணி பூமி வித்துத்தான் தண்டம் கட்டோணுமாம்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.