Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை மறைத்த கொரோனா தொற்றாளி மீது வழக்கு பதிவு!

இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதையும் கொரோனா அறிகுறிகளையும் மறைத்து நெஞ்சுவலி என கூறி ராகமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளிக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜா-எல பகுதியிலிருந்து நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற வந்த குறித்த நோயாளியிடம் கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளனவா, அல்லது வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுடன் தொடர்புகள் காணப்பட்டதா என அடிக்கடி வினவிய போதும், அவற்றை அவர் மறுத்துள்ளார்.

இதனால் இருதய நோய்க்கு தேவையான சிகிச்சையை வழங்குவதற்காக அவரை சாதாரண விடுதியில் வைத்தியர் அனுமதித்துள்ளார்.

எனினும், வைத்தியர்கள் அந்நபர் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்த விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களை பார்வையிட வந்தவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது.

https://newuthayan.com/உண்மையை-மறைத்த1/

  • Sad 1
Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

thumb_covid1.gif

சுய தனிமைப்படுத்தலை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு எதிராக நடவடிக்கை

சுய தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு, தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்குமாறு இரு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

self-isolation.jpg


ஹட்டன் மற்றும் மாரவில நீதிவான் நீதிமன்றங்கள் இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பொலிஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்குட்படாத அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 76 பேருக்கும் மாரவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 66 பேருக்கும் எதிராக முறையாக தனிமைப்படுத்தலில் ஈடுபடவில்லை என பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பித்தனர். அதனை ஆராய்ந்தே நீதிமன்றங்கள் குறித்த 142 பேருக்கும் முறையாக சுய தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78291

Link to comment
Share on other sites

18 ஆம் திகதி தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்றோரை தேடும் சுகாதாரத் துறை!

 

எம்.எப்.எம்.பஸீர்

தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 18 ஆம் திகதி முற்பகல் வேளையில் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு சென்றோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஹப்புத்தலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பண்டாரவளையில் வைத்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து பெற்ற தகவலுக்கு அமைய குறித்த தொற்றாளர் கடந்த 18 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தியதலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் அன்றைய தினம் அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலைக்கு சென்றவர்கள், 0715125854/ 0711170007 எனும் இலக்கங்கள் ஊடாக தமக்கு அறியத் தருமாரும், அது குறித்த ஆலோசனைகளையும், சுய தனிமைபப்டுத்தல் தொடர்பிலான ஆலோசனைகளையும் தாம் வழங்க தயாராக உள்ளதாகவும் ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/78304

 

Link to comment
Share on other sites

கொரோனா தொற்று: ‘தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்’

வி.சுகிர்தகுமார்   / 2020 மார்ச் 19 , பி.ப. 06:13

கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்டத் தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள் என்றும் அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையை முன்னெடுங்கள் என்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வுக் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா தொடர்பில் உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வு அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி அகிலன், உதவிப் பிரதேச செயலாளர் சுவாகர் இராணுவ உயர் அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/கரன-தறற-தணடத-தகதவரகள-பல-நடதத-மயலதரகள/74-247286

Link to comment
Share on other sites

உயிா்கொல்லி கொரோனா | விளக்கும் இலங்கை வைத்தியர்

 

Link to comment
Share on other sites

இலங்கையில் ஒரே நாளில் 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

  இலங்கையில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் - 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 738 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் வெளிநாட்டவர்களாவர்.  

 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளிலும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.  பொது சுகாதார பரிசோதகர்களும், பிரதேச சுகாதார அதிகாரிகளும் இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

முந்தல் காவற்துறையினரால் கடந்த 8 ஆம் தி;கதி வாகன விபத்து தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முந்தல் காவற்துறை மற்றும் நீதிமன்ற கட்டடங்கள் என்பன பிரதேச பொதுசுகாதார பிரிவினால் கிருமி தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போதும் அதனை வெளி;ப்படுத்தாமல் ராகமை மருத்துவமனையில் மாரடைப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண, குறித்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர,; தங்குமிட விடுதி பணியாளர்கள், அருகில் இருந்த நோயாளர்கள் என அணைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். அந்த தங்குமிட விடுதியில் இருந்த நோயாளர்களுக்கு கூட வைரஸ் தொற்று தொடர்பான அவதான மிக்க நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய தினம் குறித்த நபருக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் அத்துடன் ஏனையவர்களுக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டுள்ள 24 மருத்துவமனை பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனையின் பேரில் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நோய்த்தொற்றானது எல்லா இடத்திலும் பரவி உள்ளது என்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், நோய் பரவும் அபாயம் நாட்டில் உள்ளது என்பதை கூறிகொள்வதுடன் குறித்த தரப்பினருடன் தொடர்புகளை கொண்டிராமல் சமூகத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.    

http://www.hirunews.lk/tamil/236904/இலங்கையில்-ஒரே-நாளில்-13-புதிய-தொற்றாளர்கள்-அடையாளம்

Link to comment
Share on other sites

பிரதேசம்               தொற்று     சுகமடைந்தவர்        மரணம்                                  
பொலநறுவை        17                   0                                    0
கொழும்பு                16                   3                                    0
கம்பஹா                 12                   0                                    0
புத்தளம்                   06                   0                                    0
மட்டக்களப்பு          03                   0                                    0
களுத்துறை            03                   0                                    0
இரத்தினபுரி            03                   0                                    0
காலி                         02                   0                                    0
பதுளை                    01                   0                                    0
கண்டி                       01                   0                                    0
கேகாலை               01                   0                                    0
குருநாகல்               01                   0                                    0
வவுனியா               01                   0                                    0
ஏனைய                   05                   0                                    0

மொத்தம்                72                   3                                    0

 

  • Like 1
Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குங்கள்": சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரஸ் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எவ்வித அறிவித்தலுமன்றி ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை குறுகிய நேரத்தில் அமுல்படுத்தியதால் பொருளாதர மற்றும் சமூக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண அடிப்படையில் 10000 ரூபா வழங்கவும்புதிய நாணயத்தாள்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல உறுமய அமைப்பின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

 

யுத்தத்தை வெற்றிகொண்டதை போன்று பரவி வரும் வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மனநிலையில் இருந்து அரசாங்கம் செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்த வெற்றியை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுவது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்கம் ஊடரடங்கு சட்டத்தை அறிவித்தால் பொது மக்கள் பொருளாதார மற்றும் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பகல் நேரத்திலேயே ஊரடங்கு சட்டத்தை அறிவித்து அதனை அமுல்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறுஅறிவித்திருந்தால் மக்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் நேற்று(வெள்ளிக்கிழமை) மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னரே ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டு அது குறுகிய நேரத்தில் அமுல்படுத்தப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் சொந்த இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளவும் அவசர பொருட்க் கொள்வனவிற்காக நகைகளை அடகு வைக்க வங்கிகள், மற்றும் அடகு நிலையங்களில்நெடுநேரம் வரிசையில் காத்துக் கொண்டிருந்தமை காணக் முடிந்தது. இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

30வரு ட கால சிவில் யுத்தத்தை  நிறைவுக்கு கொண்டு வந்த எம்மால் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும். என்ற மனோநிலையில் அரசாங்கம் செயற்படுவதால் பொது மக்களே இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

>நடுத்தர வருமானம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவினை பெறும் பயனாளிகளுக்கு அரசாங்கம் 10,000ம் ரூபாயை நிவாரண அடிப்படையில் வழங்குவதுடன் தற்போது புலக்கத்தில் உள்ள நாணயத்தாளுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்கள் மற்றும் நாணய குற்றிகளை மக்கள் மத்தியில் அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். நாணயத்தாள் பாவனை ஊடாக இந்த வைரஸ் தீவிரமாக பரவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பரவி வரும் கொரோனா வைரஸ் பூகோள ரீதியில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதுவரையில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். எமது நாடும் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சியினை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றமடைய  செய்ய வேண்டுமாயின் முறையாக பொருளாதார திட்டங்களை வகுக்க வேண்டும்.

அரசாங்கம் தற்போது தேர்தல் செயற்பாடுகளுக்காக அரசியலமைப்பிற்கு எதிராக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை விடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டிய உரிய முறையில் செயற்பட வேண்டும். யுத்த வெற்றி மனோ நிலையினை விடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/78338

Link to comment
Share on other sites

புகைப்பிடிப்போரை மிக எளிதாக தாக்குகிறதாம் கொரோனா..!: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகைப்பிடிக்கும் பழக்கமுடையோரை நேரடியாக மிக எளிதில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதால் அவ்வாறானவர்கள் அப்பழக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

விற்பனையாளர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சமூக பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித தெரிவித்ததாவது :

கொரோனா வைரஸ் பரவலினால் இலங்கையும் அவதான நிலைக்குட்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்பன பற்றி மக்கள் பல சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு அரசாங்கத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சிகரெட் உள்ளிட்ட புகைத்தல் பொருட்கள் பற்றி எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. புகைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு மிக எளிதில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். எனினும் இன்றும் சிகரெட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

புகைப்பிடிப்பவர்கள் நேரடியாக மிக எளிதில் தொற்றுக்குள்ளாவார்கள். எனவே விற்பனையாளர்கள் சுயநலமாக இன்றி பொது நலத்துடன் செயற்பட வேண்டும். அது மாத்திரமின்றி புகைத்தல் பழக்கம் உள்ள ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கை மீதும் உயிர் மீதும் நேசம் கொண்டவராக இருந்தால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/78345

Link to comment
Share on other sites

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் நான்கு பேருக்கு கொரோன தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 76 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78354

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரிப்பு!

coronavirus-blood-vial-getty-720x450.jpg

கொரோனா வைரஸால் மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், மேலும் நால்வருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-2/

Link to comment
Share on other sites

நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் – மட்டக்களப்பு வைத்தியர் எச்சரிக்கை!

89722621_2772989526309442_6211684902396493824_o.jpg

நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவ நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளது.

தனது முகப்புத்தகத்தின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினைக குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று இலங்கையிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

ஆனால் பொதுமக்களாகிய நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் பொது இடங்களில் கூடும் மக்களின் செயற்பாடுகள் இதை காட்டி நிற்கின்றன.

அதைவிடவும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களினதும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்களினதும் நடவடிக்கைகள் எம்மை சற்று சிந்திக்க வைத்துள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அவர்களின் இந்த நடவடிக்கையின் செயல்திறன் குறையலாம் என்பது தவிர்க்க முடியாததாகும்.

இன்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

1. இத்தாலியின் சனத்தொகையில் 27.8 சத வீதமானோர் 60 வயதை தாண்டியவர்கள் (சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9.5சத வீதம் மட்டுமே)

2. அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் அதிகரித்த வேலைப்பளுவுடன் உள்ளமை.

இலங்கையை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த நோய் தீவிர தன்மையை காட்டும் பொழுது வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஏனென்றால் ஒரு வைத்திய விடுதியில் உள்ள உத்தியோகத்தருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்படும் பொழுது அவருடன் வேலை செய்த அனைவருமே குறைந்தது 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுவார்கள். அதாவது அந்த வைத்திய விடுதி செயலிழக்கின்றது.

இன்று இலங்கையில் இரண்டு வைத்தியர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பிழையான தகவல்களை வழங்கும் நோயாளர்களே.

இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.3 சதவீதமாக இருந்தாலும், கொரோனா நோய் அபரிமிதமாக பரவும் பொழுது அதனால் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் மிக நீண்ட காலத்திற்கு எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கலாம்.

அதைவிட இந்த வைரஸினால் எமது பெற்றோர்கள் இறக்கும்பொழுது அவர்களின் இறுதிச் சடங்குகளை நாம் தன்னந்தனியே செய்ய நேரிடலாம்.

சரி இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

அரசாங்கத்தினாலும் சுகாதார அமைசாலும் வழங்கப்படும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதாவது எந்த காரணத்தைக் கொண்டும் சன நெரிசலை ஏற்படுத்தக்கூடாது.
எப்பொழுதுமே மக்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் வேண்டும். வெறுமனவே முகக் கவசங்கள் அணிவதால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று நம்ப வேண்டாம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வைத்தியர்களிடம் கொரோனா தொற்று பற்றிய உங்களது உண்மையை மறைக்க வேண்டாம். (அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும்).

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்டிப்பாக தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும். இதுதான் நீங்கள் இப்பொழுது உங்கள் தாய் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இவை நடைபெறுகின்றதா என்பதை அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் சற்று கண்காணிப்பது சிறந்தது.

கொரோனா நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் செய்யவேண்டியவை

1. தங்களை தொடர்பு ஏற்படுத்திய நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதற்கு உங்கள் வீட்டில் நன்கு காற்றோட்டம் உள்ள ஒரு அறையை பயன்படுத்தலாம்.

2. வீட்டிலுள்ள மற்றவர்களுடன் எந்த ஒரு தொடர்பையும் வைக்க வேண்டாம். முடியும் என்றால் தனியான மலசல கூடத்தை பயன்படுத்தவும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்திய பின்னர் மலசல கூடத்தை நன்கு சுத்தப்படுத்தவும்.

3. குளித்தபின் தனியான துவாயை பயன்படுத்தவும்.

4. உங்களது ஆடைகளை பயன்படுத்திய பின்னர் நன்றாக கழுவி வெயிலில் காயவிடவும்.

உங்களுக்கு கொரோனா நோய்க்குரிய அறிகுறிகள் தோன்றும் பொழுது (வறண்ட இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல்) ஒரு முகக் கவசத்தை அணிந்துகொண்டு தனியான ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அறிவித்த பின்னர் கொண்டு செல்லவும். வைத்தியசாலையில் உங்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வைத்தியரை அணுகவும்.

மூடநம்பிக்கையில் மூழ்கி (பெருங்காயம் அணிவது) எமது எதிரியை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால் கொரோனா தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாப்பது சற்று சிக்கலாகிவிடும்.

எம்மை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோருக்கு நாங்கள் செய்ய வேண்டியதை கற்பனை செய்து வைத்திருப்போம் அல்லவா? ஆனால் இந்த கொரோனா வைரஸ் எமது அந்த கடமையை இலகுவாக்கி உள்ளது என்றால் நம்புவீர்களா?

ஆம், நாம் எமது முதியோருக்கு இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் வீட்டில் ‘சும்மா’ இருப்பதுதான். ஒன்றிணைந்து கொறோனாவை எதிர்ப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாம்-நினைப்பதை-விட-எமது-எ/

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி? இலங்கைக்கு சொல்லிகொடுத்தது சீனா

தமது நாட்டில் ஊழித்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான தமது அனுபவ பகிர்வுகளை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கொரோனா தொடர்பான தமது அனுபவங்களையும், நுட்பங்களையும் வீடியோ கலந்துரையாடல் மூலம் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளிட்ட 18 தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் பங்குபற்றிய அதேவேளை இலங்கை சார்பில் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கலந்துகொண்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/139501

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவருக்கு அந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் சேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர் எனவும் இத்தாலியில் இருந்து வந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

55 வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் பாணந்துறையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று தனிப்மைப்படுத்தல் முகாமில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139515

Link to comment
Share on other sites

மலேரியாவுக்குப் பயன்படுத்திய மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க

எம்.மனோசித்ரா

மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் க்லொரோக்வீன் (Chloroquine) என்ற மருந்தினை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்குள் மாத்திரம் இந்த மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனில் ஜாசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருந்தானது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழங்கப்படுவதல்ல. எவ்வாறிருப்பினும் மக்கள் அனைவரும் உரிய சுகாதார ஆலோசனைகளைப் பெற்று வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78407

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.