Jump to content

இடக்கரடக்கல்


Recommended Posts

இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது.
 
இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு
                                    அடக்கல் என்பது “அடக்கி”
 
அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ கூறுவது.
 
எ.கா.
(*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’ என்று கூறுவது வழக்கம்.
(*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, வெளியே போனான்” அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது
(*)  அமங்கலத்தை மங்கலமாகக் கூறுதல் – இறந்துவிட்டார் என்பதை “இறைவனடி சேர்ந்தார் அல்லது “உயிர் நீத்தார்”
(*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர்
(*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான்
 
ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்(euphemism) என்பர்.
 
E.g.
(*) kick the bucket – the death of a person
(*) downsizing - firing employees
(*) special child- disabled/ learning challenged
 
இடக்கரடக்கல் தொடர்பான சுவாரசியமான எடுத்துக்காட்டுகள்/உதாரணங்களை யாழ்தள நண்பர்கள் இங்கு குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் !!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு வர்மன்.

மங்கல வழக்கு, இடக்கரடக்கலின் ஒரு உப பிரிவா?

சில சொற்களை நாம் பொதுவாக பயன்படுத்தினாலும் அவை இடக்கரடக்கல்களே என நான் நினைக்கிறேன்.

காடாத்தல் ( காடு ஆற்றுதல்) - சாம்பல் அள்ளல்

கொல்லைக்கு போதல் (மலம் கழித்தல்)

வெளிக்கு இருத்தல் (மலம் கழித்தல்)

வீட்டுக்கு தூரம் (மாதவிடாய்)

காற்று கறுப்பு (அனுமாஸ்ய சக்தி/பேய்)

அம்மாள் வந்திருக்கா (அம்மை நோய் )

இறுதி யாத்திரை (சவ ஊர்வலம்)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலம் என்ற சொல்லையே பகரவி, பவ்வீ என சொல்வதாக படித்த நியாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி மூன்றும் வெவ்வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி மூன்றும் வெவ்வேறு

நன்றி.

குழுஉக்குறி ஏன் வேறு படுகிறது எனப் புரிகிறது.

ஆனால் இடக்கரடக்கலுக்கும் மங்கல வழக்குக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Link to comment
Share on other sites

நண்பர் வாதவூரான் குறிப்பிட்டது சரி.

இடக்கரடக்கல் (1), மங்கலம், குழூஉக்குறி மூன்றும் தகுதி வழக்கின் பிரிவுகள்.

(2) மங்கலம் - மங்கலம் அல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல்

எ.கா. தாலி பெருக்கிற்று - கணவனை இழந்த பெண்ணைக் குறிப்பிடுவது

(3) குழூஉக்குறி - ஒரு குழு அல்லது ஒரு கூட்டத்தாருக்குள் பயன்படுத்தப்படும் வழக்கு, அவர்களுக்குள் மட்டும் பொருள் விளங்கிக் கொள்ளப் பயன்படுத்துவது.

எ.கா. ஆடை - காரை (யானைப்பாகர் பயன்படுத்துவது)

இளைஞர்கள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வார்த்தைகள் இதற்குள் அடங்கும் என நினைக்கிறேன் :)

 

இடக்கரடக்கல், மங்கலம் - இவையிரண்டும் மிக நெருக்கமானவை. மங்கலம்/அமங்கலம் அற்று குறிப்படப்படும் சொற்கள் இடக்கரடக்கலுக்குள் அடங்கும்.

இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார்) என்பது இடக்கரடக்கல் அல்ல, அது 'மங்கலம்' என்ற பிரிவுக்குள் அடங்கும். மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

நல்ல பதிவு வர்மன்.

மங்கல வழக்கு, இடக்கரடக்கலின் ஒரு உப பிரிவா?

சில சொற்களை நாம் பொதுவாக பயன்படுத்தினாலும் அவை இடக்கரடக்கல்களே என நான் நினைக்கிறேன்.

காடாத்தல் ( காடு ஆற்றுதல்) - சாம்பல் அள்ளல்

கொல்லைக்கு போதல் (மலம் கழித்தல்)

வெளிக்கு இருத்தல் (மலம் கழித்தல்)

வீட்டுக்கு தூரம் (மாதவிடாய்)

காற்று கறுப்பு (அனுமாஸ்ய சக்தி/பேய்)

அம்மாள் வந்திருக்கா (அம்மை நோய் )

இறுதி யாத்திரை (சவ ஊர்வலம்)

 

 

 

நண்பருக்கு வணக்கம், எனது விளக்கத்தை கீழுள்ள மறுமொழிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் அளித்துள்ள எடுத்துக்காட்டுகள் அருமை, மிக்க நன்றி.

இறுதி யாத்திரை - மங்கலம் என்ற பிரிவிற்க்குள் இருக்குமென்று நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அருள்மொழிவர்மன் said:

மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

தவறை உணர்வதற்கும் கூட சான்றாண்மை வேண்டும். அது உங்களிடம் நிரம்ப உள்ளது, அருள்மொழிவர்மன் ! வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் இடக்கரடக்கல் சாதாரணமாக உண்டு. Gone to the rest room, to powder his nose போல. மங்கல வழக்கு அருகியே வரும்; இல்லை எனவே சொல்லலாம். உதாரணம் கூட Indian English ல் தான் தெரிகிறது. இருப்பினும் இடக்கரடக்கல், மங்கல வழக்கு இரண்டும் ஆங்கிலத்தில்  euphemism என்ற ஒரே வகைப்பாட்டிலேயே அமையும் என்று கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 11:33 AM, அருள்மொழிவர்மன் said:

இடக்கரடக்கல்

அருமையான பதிவு வர்மன் பலவற்றை தெரிந்து கொண்டோம்.உங்கள் தமிழ் அறிவு அபாரம் தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க ஆவல்.நன்றியுடன் உதயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 1:13 PM, சுப.சோமசுந்தரம் said:

தவறை உணர்வதற்கும் கூட சான்றாண்மை வேண்டும். அது உங்களிடம் நிரம்ப உள்ளது, அருள்மொழிவர்மன் ! வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் இடக்கரடக்கல் சாதாரணமாக உண்டு. Gone to the rest room, to powder his nose போல. மங்கல வழக்கு அருகியே வரும்; இல்லை எனவே சொல்லலாம். உதாரணம் கூட Indian English ல் தான் தெரிகிறது. இருப்பினும் இடக்கரடக்கல், மங்கல வழக்கு இரண்டும் ஆங்கிலத்தில்  euphemism என்ற ஒரே வகைப்பாட்டிலேயே அமையும் என்று கேள்வி.

மேலே சொன்ன kicked the bucket, passed away, met his maker, put to sleep  (சாவு) மற்றும் last rites (சாவுக் கிரியை) இப்படி சில உள்ளனவே ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மேலே சொன்ன kicked the bucket, passed away, met his maker, put to sleep  (சாவு) மற்றும் last rites (சாவுக் கிரியை) இப்படி சில உள்ளனவே ஐயா?

உண்மை. இவற்றில் சில Indian English என்றே நினைத்துக் கொண்டேன். நன்றி திரு. கோஷன் சே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சுவாரசியமான கருத்து பதிவுகள்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.