Jump to content

கனடாவில் மார்பில் சுடப்பட்டு ஈழத்தமிழ்ப் பெண் படுகொலை


Recommended Posts

கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.

பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

deepa.jpeg

 

கொலைச் சந்தேக நபர் ஆறடிக்குள் உயரமான கறுப்பு நிற ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

The investigation remains ongoing and officers are urging anyone who was in the area at the time, or has any information about the shooting, to immediately contact police at 416-808-7400, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com

https://www.tamiltwin.com/police-identify-38-year-old-woman-killed-in-scarborough-shooting/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமையப்பா...... 
அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம்... கனடாவிலும் ஆரம்பித்து விட்டதா?
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் கோரோனோ கிருமி தாக்குதல். இது வேற; எந்த மண்டை பிழையின் செயலோ. மகிழ்ச்சியாய் வாழ்க்கையை வாழவேண்டிய வயது. கனடாவில் இவ்விளம் பிள்ளைக்கு இப்படி ஒரு முடிவு. ஆழ்ந்த அனுதாபங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு நிற ஆண்

On 3/15/2020 at 7:53 AM, தமிழ் சிறி said:

என்ன கொடுமையப்பா...... 
அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம்... கனடாவிலும் ஆரம்பித்து விட்டதா?
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.   

எங்கட ஆக்களிலேயே இருக்கினம்.... கறுவல் மாதிரியே.... 

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி டொரோண்டோவில்.

முன்னணி யாழ்ப்பாண பெண்கள் பாடசாலை அதிபராக இருந்தவர். அவரது மகன் ஒரு மாற்றுத் திறனாளி. ஆனால், நல்ல வேலையில் இருந்தார்.

அவர் ஸ்பொன்சார் பண்ணி  ஒரு பெண்ணை ஊரில் இருந்து அழைப்பித்தார். இவரும், தாயாரும் விமான நிலையத்தில் காத்திருந்து, வரவில்லையே என்று வீடு திரும்பினர்.

தவறான நேரத்தினை கொடுத்து, வேறு நேரத்தில் வந்த பெண்,  விமான நிலையத்திலேயே, தனது ஆண் நணபர் உடன் கிளம்பி போய் விட்டார்.... ஆண் நண்பருக்கு ஸ்பொன்சார் செய்யக்கூடிய வகையில் வேலையோ, நடத்தையோ இல்லாததால், இந்த குறுக்கு வழியினை நாடி உள்ளனர்.

ஊரில் கேட்டால், அவவுக்கு கனடா வர விருப்பமில்லை எண்டு அங்கேயே கலியாணம் செய்து விட்டார் என்று குழம்பினர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர், வேறு பெண்ணை ஸ்பொன்சார் பண்ண முனைந்த போது, உண்மை தெரிந்து துவண்டு போயினர். அந்த பெண்ணை நேரடியாக எதிர்கொண்ட போது, அவரது உடல் வலது குறைவு குறித்து சொல்லி, நான் ஏன் உன்னை கட்டிக்கொண்டு வாழவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

தாயாரும் இந்த கவலையில் மறைய, அவர் வேறு பெண்ணை மணந்து நனறாகவே உள்ளார்.

அந்த பெண்ணின் வேலை வெட்டி இல்லாத  ஆண் நண்பர் வேறு பெண் தொடர்புகளால் குடும்ப வாழ்வு சீரழிந்தது.

இந்த மாற்றுத் திறனாளி நபர் போல் எல்லோரும் இருக்க முடியாது. சிலர் கொலைக்கும் போவார்கள். ஆகவே இந்த பெண்ணின் மறுபக்கம் தெரியாத வரையில்.... நாம் பெரிதாக ஒன்றும் சொல்ல முடியாது.

காரணம் இல்லாமல் கொலை வெறி வந்து இருக்க முடியாது. கொள்ளை நடந்த மாதிரி தெரியவில்லை.

எதுவாகினும் RIP

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?...கனடாக்காரருக்கு தெரியாதோ?...காயப்பட்ட மற்ற பெண் ,இறந்த பெண்ணினுடைய தாய் என்று சொல்லினம் ....ஆத்மா சாந்தியடையட்டும் 

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2020 at 16:57, ரதி said:

உண்மையில் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?...கனடாக்காரருக்கு தெரியாதோ?...காயப்பட்ட மற்ற பெண் ,இறந்த பெண்ணினுடைய தாய் என்று சொல்லினம் ....ஆத்மா சாந்தியடையட்டும் 

 

https://www.thestar.com/news/gta/2020/07/08/three-men-charged-with-first-degree-murder-in-death-of-38-year-old-woman-in-march.html

 

இவரின் கணவர் உட்பட மூவரை கைது செய்து 1st  டிகிரி கொலைக் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கனடாவில் சுட்டுக் கொலை -மேலும் இருவர் கைது

On Jul 9, 2020

625.300.560.350.160.300.053.800.500.160.

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த ஹரி சாமுவேல்ஸ்(27) ரொறன்ரோவைச் சேர்ந்த விஜேந்திரன் பாலசுப்பிரமணியம்(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

https://www.thaarakam.com/news/141206

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.