Jump to content

கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய அரிசி ஆலை


Recommended Posts

fea04.png?itok=KTkGPT94

மீண்டும் அங்கு அரிசி ஆலையொன்றை அமைத்தால் ஆயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பு

அடையாளமே தெரியாமல் அழிந்து போய்க் கிடக்கும் சவளக்கடை அரிசி ஆலை

 

 

அதிகமான வளங்களைக் கொண்ட பிரதேசம் கிழக்கு மாகாணமாகும். ஒரு காலத்தில் பல தொழிற்சாலைகள் கிழக்கில் இயங்கின.

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, மிகப் பெரிய அரிசி ஆலைகள், மீன் பதனிடும் நிலையங்கள் என்பவை இவற்றுள் சிலவாகும்.

இவையெல்லாம் கடந்த கால போர்ச் சூழலின்போது கைவிடப்பட்டன. பல அழிக்கப்பட்டன. இன்று அவை பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. வளமோடு வாழ்ந்த இம்மக்கள் இன்னும் மீண்டெழவில்லை.

 

கிழக்கில் அழிந்து போன ஆலைகளில் சவளக்கடை அரிசி ஆலையும் ஒன்றாகும். அதன் கதை இது...

முன்னொரு காலத்தில் வளம்மிக்க சிறப்பான பிரதேசமாக சவளக்கடை கிராமம் திகழ்ந்தது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சவளக்கடை அமைந்துள்ளது. இப்பிரதேசம் விவசாயச் செய்கைக்குப் பேர் போன பிரதேசமாகும். அத்துடன் கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய அரிசி ஆலை அமைந்திருந்த இடமாகவும் சவளக்கடை உள்ளது. இங்கு அமைந்திருந்த அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக பணி புரிந்துள்ளனர். கண்டி, காலி, கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வந்து நின்று தங்கி வேலை செய்துள்ளனர்.

62 ஏக்கர் நிலப் பரப்பளவில் சவளக்கடை அரிசி ஆலை அமைந்திருந்தது. 24 மணி நேரமும் ஓயாது அங்கு வேலை நடைபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பழைமையான தொழிற்சாலையாக சவளக்கட அரிசி ஆலை இருந்துள்ளது. இக்காலத்தில் இலங்கையின் முதலாவதும், கிழக்கு ஆசியாவில் இரண்டாவதுமான அரிசி ஆலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்துள்ளது. அது எமது நாட்டுக்குப் பெருமையான விடயமாக இருந்துள்ளது.

1988 இற்குப் பின்னர் நாட்டில் ஆரம்பமான அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சவளக்கடை அரிசி ஆலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. 1990 இற்குப் பின்னர் இந்த அரிசி ஆலை இருந்த இடம் தெரியாதளவிற்கு அழிக்கப்பட்டது. இந்த இடத்திலா ஆசியாவின் இரண்டாவது அரிசி ஆலை அமைந்திருந்தது என்று சந்தேகப்படும் அளவிற்கு அவ்விடம் அடையாளத்தை இழந்து காட்சியளிக்கின்றது.

சவளக்கடை அரிசி ஆலையில் அக்காலத்தில் பணியாற்றிய குமார் என்பவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் கவலையுடன் பேசினார்.

அரிசி ஆலை இருந்த இடத்தில் முன்னைய அடையாளங்களைக் காண முடிந்தது. நீர் சேகரித்து வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த நீர்த்தொட்டிகள் மற்றும் கட்டடங்களின் இடிபாடுகள்,லோஞ்ஜர் எனப்படும் பாதைகள் (சிறு கப்பல்கள்) வந்து போனதற்கான தடங்கள், இரும்புக் கேடர்கள் என பல அங்கு காட்சியளித்தன. ஒரு பரந்த நிலப்பரப்பில் வளமோடு இருந்த அரிசி ஆலை இருந்த இடம் தெரியாமல் அழிந்து கிடப்பது மனதிற்கு வேதனையளித்தது.

இங்கிருந்த அரிசி ஆலை மீண்டும் புனரமைக்கப்படுமாக இருந்தால் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும். தொழில்நுட்பம் வளராத காலத்திலே சிறந்ததொரு அரிசி ஆலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்துள்ளது. தற்போது விவசாயத்துறையில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு நவீன அரிசி ஆலையை அங்கு அமைத்தால் பிரதேசம் மட்டுமல்ல நாடும் பயன் பெறும்.

சவளக்கடையைச் சேர்ந்த எஸ்.நடேசன்(69வயது) இவ்வாறு கூறினார்.

"அந்தக் காலத்தில் பஞ்சம் என்றதே கிடையாது. எங்கட பிரதேசம் நெல் விளையிற தங்கமான பூமி. அந்தளவிற்கு செழிப்பாக இருக்கும். டட்லி சேனநாயக்காவின் காலத்தில் உருவாக்கப்பட்ட சவளக்கடை அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆட்கள் வேலை செய்தனர். பதின்மூன்று வயதில் அங்கு வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆசியாவில் இரண்டாவது பெரிய அரிசி ஆலையாயிருந்தது. இங்கு ஏழு நெல் சேகரிப்பு இடங்கள் இருந்தன. அப்போது ஒரு அறையில் பத்தாயிரம் நெல் மூடைகளை அடுக்கி வைத்திருந்தோம். எந்த நாளும் லோஞ்சர் (கப்பல்) வாறதும் போறதுமாகத்தானிருக்கும். அரிசி ஆலையில இருந்து அந்தப் பக்கமும்இந்தப் பக்கமும் மூணு கிலோமீற்றர் தூரத்துக்கு லொறிகளும், மெசின்களும்,வண்டில்மாடுகளும் என வாகனங்கள் நிறைய நிற்கும். இருபத்தி நாலு மணித்தியாலமும் மாறி மாறி வேலை நடக்கும்.

எனக்கு அப்போது தினமும் ஒரு ரூபா ஐம்பது சதம் சம்பளம் கிடைக்கும். அது தாராளம். அரிசி என்ஜின் இருந்த இடத்திலதான் இப்ப பிரதேச செயலகம் கட்டியிருக்காங்க. இங்க பக்கத்துல நாற்பது அடி அகலத்தில் வாய்க்கால் இருக்கிறது. அந்த இடத்திலதான் கப்பல்கள் வந்து(லோஞ்ஜர்) தரித்து நிற்கும். அதில நெல் ஏற்றி மட்டக்களப்புக்கு கொண்டு போவாங்க. இந்த அரிசி ஆலையால நிறைய ஏழைக் குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. இங்கு கொட்டப்படுற உமியை புடைத்து அதிலிருந்து குருநெல் எடுத்து சோறாக்கி வாழ்ந்த குடும்பங்கள் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்களை வாழ வைத்த ராசியான ஒரு தொழிற்சாலையாக சவளக்கடை அரிசி ஆலை இருந்தது. அந்தக் காலத்தை இப்ப நினைத்தாலும் சந்தோசமாக இருக்குது. முழு நாட்டுக்கும் சோறு போட்ட அரிசி ஆலை. இதை மறுபடியும் அமைத்துக் கொடுத்தால் நிறையப் பேருக்கு வேலை கொடுக்கலாம்" என்றார் நடேசன்.

க. துரையப்பா என்பவர் இப்படிக் கூறுகிறார்;

"இந்த அரிசி ஆலையில் நான் நாட்டாமை வேலையை ஒப்பந்தம் எடுத்து வேலைக்கு ஆள்போட்டுச் செய்தன். அந்த நேரம் ஒரு நெல் மூடைக்கு இருபத்தைந்து சதம் தருவாங்க. ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு நெல் மூடையை தாங்கியில போட்டு அவிப்பார்கள். ஒரு பக்கம் நெல் போடுறது, மற்றப் பக்கம் நெல் அவிக்கிறது. அடுத்த பக்கம் நெல் குத்துறது, அடுக்கிறது என இருபத்து நாலு மணி நேரமும் ஓயாம வேலை நடக்கும். சவளக்கடை கிராமத்தில் ஒரே சனமாகத்தானிருக்கும். அரிசிக்கும், சாப்பாட்டுக்கும் குறைவேயில்ல. இப்ப இந்த ஊர்ச் சனங்களில் பலர் பட்டினி கிடக்குதுகள். அரிசி ஆலையில இருந்த அனைத்தையும் கழற்றிக் கொண்டு போயிற்றாங்க. இப்ப இங்கு எதுவுமே இல்லை" என்று வேதனையுடன் கூறினார் அவர்.

செ.கணபதிப்பிள்ளை (69வயது) என்பவர் தனது மனக்கவலையை இவ்வாறு எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"இங்கு வேலை இல்லை என்ற குறையே இருக்காது. ஒரு இருபத்தைந்து, முப்பது குவாட்டஸ் இங்கிருந்தது. அவற்றில் வெளியூரில் இருந்து வந்து வேல செய்யிறவங்க தங்கியிருந்தாங்க. இந்த மில்லில் இருந்து கொட்டுற உமி கூட நிறைய மக்களுக்கு பயன்பட்டிருக்குது. இங்கு எரிந்த சாம்பலைக் கூட மாட்டு வண்டியில் அள்ளிப் போய் கொட்டி வருமானம் பெற்றனர். எந்த நேரமும் வாகனங்களாகத்தான் இருக்கும். பசி பட்டினி என்பது கிடையாது. இப்போது எல்லாம் நாசமாப் போயிற்றுது" என்றார் கணபதிப்பிள்ளை.

ஆசியாவின் இரண்டாவது சவளக்கடை அரிசி ஆலை மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள்.

 

https://www.thinakaran.lk/2020/03/14/கட்டுரைகள்/49541/கிழக்காசியாவின்-இரண்டாவது-பெரிய-அரிசி-ஆலை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.