Jump to content

தனித்திருந்து பார்……


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனித்திருந்து பார்……

 

alone.jpg

ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா?
என்பது தெரிய வேண்டுமா?
எவருமில்லாத உலகில்  நீ மட்டும்
வலம் வர வேண்டுமா?
பூமியின் எல்லைகளுக்கப்பால்
பூகோள விதிகளைத் தாண்டி வானவீதியில்
இறக்கை விரித்துப் பறக்க வேண்டுமா?
தனித்திருந்து பார்.

கொட்ட முடியாத சோகங்களை கண்ணீரில்
கொட்டி கவலைகளை மறக்க வேண்டுமா?
எட்ட முடியாத சிகரங்களை கற்பனையில் ஏறி
கலகலப்பாய் கரமசைக்க வேண்டுமா?
தழுவவும் தலை தடவவும் ஆளில்லாமல்
உனக்குள் நீயே உடைய வேண்டுமா?
தனித்திருந்து பார்

கடந்து போன காலங்களின் களிப்பான நிகழ்வுகளை
அசைபோட்டு மனம்  ஆர்ப்பரிக்க வேண்டுமா?  
உறவுகளின் உரசலும் பிரிவுகளின் விரிசலும்
தொலைந்து விட்ட காலமும் தோளில் பாரமாகிட
விட்டு விடுதலையாகிய சிட்டுக் குருவியைப் போல்
வட்டமிட்ட நினைவுகளின் வனப்பினை சுவைத்திட
தனித்திருந்து பார்


உன் வீட்டில் வசதிகள் பலவும்
உன் வங்கிக் கணக்கில் டொலர்கள் பலவும்
வங்கி லொக்கரில் நகைகள் பலவும்
உன்னைச் சுற்றி உறவுகள் பலவும் இருந்தும்
ஏனோ ஏகாந்தம் மட்டும் உன் எழிலான தோழியாய்
கரம் குலுக்கும் காலம் வரும் அதன் வலிமையைச் சுவைத்திட
தனித்திருந்து பார்

அடுத்தவர் முன் அகமெங்கும் சிரிப்பாய்
முகமெங்கும் மலர்வாய்
வண்ணப் பட்டாடையில் வடிவான மயிலாய்
தோகை விரித்தாடும் உன் வெளித் தோற்றம்
வீட்டிற்குள் மனக்கூட்டிற்குள் நொந்து ரணமாகி
வேதனையில் வெந்திடும் அழுது
அது தனித்திருக்கும் அப் பொழுது

அழைப்பு மணியோசை காதில் கேட்கிறதா என
தினமும் எதிர்பார்த்து விழியில் ஏக்கமுடன்
உணவுத்தட்டை வெறித்தபடி உண்ண மனமின்றி
முதுமை உணர்வு முகத்தில் மோதிட
நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது

பெற்றெடுத்த பிள்ளைகள் பெரியவராய் ஆகியும்
உற்ற உறவுகளும் ஒதுங்கியே போனபின்
நினைவுகளின் நிசப்தமும் நெஞ்சமதின் சுமைகளும்
கனவுகளின் இனிமையும் காலமதின் வேகமும்
கடந்து வந்த பாதைகளின்  சுவடுகளும் ஓய்ந்தபின்
நான் மட்டும் தனியே என் கவிதைகளே என் துணையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பு மணியோசை காதில் கேட்கிறதா என
தினமும் எதிர்பார்த்து விழியில் ஏக்கமுடன்
உணவுத்தட்டை வெறித்தபடி உண்ண மனமின்றி
முதுமை உணர்வு முகத்தில் மோதிட
நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது....!

 

நிதர்சனமான மனசைப் பாதிக்கும் வரிகள் சகோதரி........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை

கொடிதிலும் கொடிது முதுமையில் தனிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதியோரைப் பராமதிக்க செல்லும் பொழுதுகளில் அவர்கள் அனுபவிக்கும் வலி மிகுந்த தருணங்களை பல தடவைகள் கனத்த மனத்துடன் சந்தித்திருக்கிறேன். இது நாளை நமக்கு வந்தால் என்ற எண்ணம்கூட பல தடவை வருவதுண்டு. இது ஒரு கொடிய பொழுதுதான். படித்து கருத்திட்ட சுவி ஈழப்பிரியன் இருவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையின் தரிசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் சிலசமயம் கசப்பாக இருந்தாலும் தரிசிக்க வேண்டிய தருணத்தில் எவராலும் ஓடி ஒளிய முடியாது. கருத்துக்கு நன்றி சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பெற்றெடுத்த பிள்ளைகள் பெரியவராய் ஆகியும்
உற்ற உறவுகளும் ஒதுங்கியே போனபின்
நினைவுகளின் நிசப்தமும் நெஞ்சமதின் சுமைகளும்
கனவுகளின் இனிமையும் காலமதின் வேகமும்
கடந்து வந்த பாதைகளின்  சுவடுகளும் ஓய்ந்தபின்

தனிமையைப் பழகவேண்டும். பல வருடம் தயார்படுத்தினால்தான் சமாளிக்கலாம். இல்லாவிட்டால் சுவருடன் உரையாடும் நிலை வந்துவிடும்.

முதிய வயதில் தனிமை பொல்லாதது. இன்றைய கொரோனாக் காலத்தில் இன்னும் மோசமாக பலர் தனிமையில் இருக்கப்போகின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

On 3/16/2020 at 11:53 PM, Kavallur Kanmani said:

தனித்திருந்து பார்……

 

alone.jpg

இன்றைய கொறோனா வைரஸ் சூழலில் பெரியோர் மட்டுமல்ல இளையோரும் தனித்திருக்க வேண்டிய நிலையில் உங்கள் கவிதையின் அர்த்தம் இன்னும் ஆழமாகப் புலப்படும். அருமை கண்மணி அக்கா! 👍😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

நீயும் மெழுகுவர்த்தியும் நேருக்கு நேர்
நோக்கியபடி உருகிடும் பொழுது
அது தனித்திருக்கும் வலிமிகு பொழுது

தனிமை குறித்துச் சுட்டும் வைரவரிகள். வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமையில் தனிமை  கொடுமை.
முதுமையில் தனிமை கொடூர  கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நொச்சி.

உண்மைதான் குமாரசாமி. முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமைதான். இயலாமை. ஏக்கம். பிள்ளைகளின் உதாசீனம். உடல் நோய்கள். என்று தனிமை வாட்டும் சமயங்களில்  அவர்களின் பெருமூச்சுக்களையும் கண்ணில் துளிர்க்கும் நீரினையும் பலதடவை சந்தித்திருக்கிறேன். கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாரதிவாஜாவின் மீண்டும் முதல் மரியாதை படம் பார்த்தேன். ஒரு முதியவரின் உணர்வுகளை படம் பிடித்திருந்தார். படம் எடுத்திருந்தது  ஸ்கொட்லாண்டில் . காட்சிகள் மிக எழிலாக இருக்கிறது. கதையும் காட்சிகளும் அருமையாக உள்ளன.
தனித்திருந்து பார் கவிதையை படித்து பச்சைப் புள்ளியிட்ட  இணையவன். நுணாவிலான். ரதி. நில்மினி. பிரமா. சசி. தமிழினி. கவி. அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

தனித்திருந்து பார்

தன் வீட்டையே தன் தோளில் காவித்திரிந்தவர்கள் பின் பார்க்கும் என்ற உறவுகள் எல்லாம் பறந்து போன பின் அலை கடலில் தனிமையில் பயணிக்கும் படகு போன்றது தனிமை.தனிமையின் வலிகளை  கூறிய உங்கள் கவிதை அழகு.நான் கூடி தனிமையின் கொடுமை பற்றி எழுதியிருக்கிறேன்.

 

https://youtu.be/jIrCb4j9FyM

Link to comment
Share on other sites

On 3/16/2020 at 1:53 PM, Kavallur Kanmani said:

ஏகாந்தம் என்பது இனிமையா? கொடுமையா?

கவிதை அழகு காவலூர் கண்மணி அவர்களே! ஆனாலும் தனிமையின் கொடுமைபற்றி கவி வடித்த நீங்கள் அதன் இனிமைபற்றி வடிக்கவில்லையே.?

12.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் இனிமை பற்றியும் கவி எழுத முயற்சி செய்கிறேன். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் பாஞ்ச்.

Link to comment
Share on other sites

கண்மணியக்கா ,
காலம் ஒவ்வொருவருக்கும் தனிமையைப் பழகென்று தருகின்ற தண்டனை கொடியது. ஆனால் தனிமையையும் சமாளித்து வெளியேறி வருதலே வெற்றி. முயற்சிப்போம் வெற்றி காண்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் உதயகுமார். இப்போதைய பெற்றோர்கள் தம் எதிர்காலம் பற்றிய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். தனிமையைச் சந்திக்க நம்மை நாமே பழக்கிக் கொள்வது மிக அவசியம். 
பல தடவைகளில் தனிமைகூட ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். எனது கணவர் உயிருடன் இருக்கும் பொழுது பல வருடங்கள் நான் தனிமையில் கழித்தேன். (அவர் வெளிநாட்டிலும் நான் இலங்கையிலுமாக) கனடா வந்த சில வருடங்களில் அவர் உயிருடன் இல்லை.  பிள்ளைகளின் நலனிற்காக தனிமையை துணையாக்கி இப்போது பேரப் பிள்ளைகளுடன் ஆனந்தமாய் பொழுது போகிறது. இதுவும் கடந்து போகும் .கருத்துக்கு நன்றி சாந்தி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ் ரஜனி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.