Jump to content

Recommended Posts

அம்பிகா அக்கா வேலையை ராஜினாமா செய்திட்டு அவுசுக்கு யாரையோ பாக்க போறாவாம். அவவுக்கு தேர்தல்ல போட்டி போடுற எண்ணம் இல்லையாம். நம்பிட்டா போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Vankalayan said:

பெரிய விளக்கங்கள், பெரிய கட்டுரைகள் எல்லாம் எழுதுகிறார்கள்। எனக்கு வாசிக்க நேரமில்லை। யாராவது சுருக்கமாய் எழுதினால் வாசிக்கலாம்।

வெளி நாடுகளில் பிச்சை எடுக்கிறவர்களைப்பற்றி எழுதினால் இலங்கை சீனாவில் பிச்சை எடுக்குதாம்। அதுக்கும் இதுக்கும் என்ன சம்மபந்தமோ?

எதோ இவர்கள்தான் இப்போது இலங்கை தமிழனுக்கு ஈழத்தை பெற்றுக்கொடுப்பவர்கள் போல எழுதுகிறார்கள்। நீங்கள் உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை இலங்கையில் உள்ள தமிழனுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்। *****

இன்னும் வளரனும் தம்பி! இதைவிட சுருக்கமாக எழுதுவதென்றால் ****

Link to comment
Share on other sites

On 3/16/2020 at 11:53 PM, vanangaamudi said:

தேர்தலில் தமிழர் வாக்குப் பலத்தை சிதறடித்து நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநித்துவத்தை குறைப்பதற்கு ஏற்ற  வழியில் சிங்கள அதிகாரவர்க்கம் மற்றும்  சிங்கள இனவாதிகளின் திட்டமிடலின் படி தான் நிகழ்ச்சி நிரல்கள் அண்மைகாலங்களில் மேடை ஏறுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் கூட்டமைப்பின் உயர்மட்ட அரசியல்வாதிகளை கொண்டே இதை சாதிக்கிறார்கள்.

மிக அருமையான கருத்து!

சுமந்திரன் பின்கதவால உள்ள புகுந்த காலத்தில இருந்து தமிழரை அழிக்கும் வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவுது.

இதுக்கு கடுமையான ஒரு மருந்து கண்டுபிடிக்க வேணும்.

எங்கள் கல்விமான்கள் ஏதாவது செய்யணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பட்டியலில் அம்பிகா முதலிடம்! சுமந்திரனின் பின் கதவு விளையாட்டு.!

sumandra-ambika.jpg

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் தேசியப் பட்டியலில் அவரது பெயரை முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின், எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் – திருகோணமலையில் போட்டியிடும் ச.குகதாசனுக்கு தேசியப்பட்டியல் இடம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ள சூழ்நிலையில் சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆசனங்களைப் பங்கிடுவதென ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்திருந்தோம். அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் நியமனக் குழுவொன்றை நியமித்திருந்தது. அந்தக் குழுவின் கூட்டம் 3 தடவைகள் கூடியது. அதில் கூடிய 15 பேரின் முடிவாகவே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

சாதாரணமாக எல்லா ஜனநாயகக் கட்சிகளுக்குள் இருப்பதை போல பலவித கருத்துக்கள் இருந்தாலும் இறுதியில் அனைவரின் சம்மதத்துடன் ஏகோபித்த முடிவாக எடுக்கப்பட்டது. தனிநபர்களின் முடிவாக அதைக் காண்பிப்பது தவறு. அந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெண் வேட்பாளர் சம்பந்தமாகவும் சர்ச்சை ஏற்பட்டது. பெண்கள் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கருத்து. நிறுத்தப்படும் பெண்கள் வெற்றி பெறக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் யாழ். மாவட்டத்திலும், மட்டக்களப்பில் நளினி ரட்ணராஜாவின் பெயரையும் நியமனக்குழு ஏற்றுக்கொண்டிருந்தது.

மட்டக்களப்பில் நாங்கள் ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, போட்டி போடுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. முடிவுகள் எடுக்கப்படாது உத்தியோகபூர்வமாக வெளியாக முன்னர் செய்திகள் கசிந்தமை துரதிஷ்டமான விடயம். நியமனக் குழுவில் இருந்தவர்கள் அதைச் சொல்லியிருக்கக்கூடாது.

மட்டக்களப்பு பெண் வேட்பாளர் நளினி ரட்ணராஜாவை குறிவைத்து மோசமான கீழ்த்தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பெண்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை என்பதற்கு இது உதாரணமாகியது. அம்பிகா, சசிகலா பற்றியும் விமர்சிக்கப்பட்டது.

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை உற்சாகப்படுத்தி, அவர்களை அரசியலுக்கு வரவழைக்க வேண்டிய சூழலில் இப்படி நிகழ்ந்தமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கின்றோம்.

அம்பிகா இறுதிநேரத்தில் சொந்த காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதைக்கூட, அவரைக் கட்சி நீக்கியதாகவும், எதிர்ப்புக்கள் காரணமாக அவரைச் சேர்க்கவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன. அது அவரது தனிப்பட்ட முடிவு. போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் அவர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.

அம்பிகா எமது தேசியப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றைப் பார்க்கின்றபோது, அவரை யாழில் போட்டியிட இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட முடியாததால் அவரைத் தேசியப் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் இருவருக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தியிருந்தனர். அந்தப் போராட்டத்தை மகளிர் அணி நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அது தவறு. மகளிர் அணி, கட்சி நியமிக்கும் வேட்பாளர்களைத் தாங்கள் ஆதரிப்பார்கள் என்றும், போராட்டம் நடத்தியவர்கள் தன்னிச்சையாக நடத்தனர் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மதனி கையொப்பமிட்டுள்ளார்.

வேட்பாளருக்கு விண்ணப்பித்த சிலர்தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் துரதிஷ்டவசமானது” – என்றார்.

http://www.vanakkamlondon.com/sumandra-ambika-20-03-2020/

Link to comment
Share on other sites

9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம்.

யாருக்குமே தெரியாத அம்ம்பிகாட திறமைகளை சுமந்திரன் எப்ப? எங்க? பார்த்தவர்.

கொஞ்சம் விபரமா சொன்னா எல்லாருக்கும் தெரியுமே.

இவ ஐநா மனித உரிமை கவுன்சில் போய் தமிழ் சமூக ஆர்வலரை குழப்ப, அவங்கடை செயற்பாடுகளை தடுக்க முயற்சித்த ஒராள் என்று தானே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்க கலந்துகொண்ட ஆக்களால குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

யாருக்குமே தெரியாத அம்ம்பிகாட திறமைகளை சுமந்திரன் எப்ப? எங்க? பார்த்தவர்.

கொஞ்சம் விபரமா சொன்னா எல்லாருக்கும் தெரியுமே.

இவ ஐநா மனித உரிமை கவுன்சில் போய் தமிழ் சமூக ஆர்வலரை குழப்ப, அவங்கடை செயற்பாடுகளை தடுக்க முயற்சித்த ஒராள் என்று தானே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்க கலந்துகொண்ட ஆக்களால குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் ஜெனிவா போய் என்ன செய்தவர்?
அது இன அழிப்பு இல்லை என்றுதானே சொன்னவர் 

எல்லாம் ஒரே கூட்டம்தான். 
அதே கூட்டம்தான். 

Link to comment
Share on other sites

On 3/20/2020 at 10:39 AM, Gowin said:

சுமந்திரன் பின்கதவால உள்ள புகுந்த காலத்தில இருந்து தமிழரை அழிக்கும் வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவுது.

சம்பந்தன் சுமந்திரனுக்கு காட்டிகுடுத்த வழி. சுமந்திரன் இறுக்கி பிடிச்சிட்டார். விடுபடுறது கஷ்டம் தான். 

Link to comment
Share on other sites

On 3/19/2020 at 10:09 PM, Gowin said:

சுமந்திரன் பின்கதவால உள்ள புகுந்த காலத்தில இருந்து தமிழரை அழிக்கும் வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவுது.

இதுக்கு கடுமையான ஒரு மருந்து கண்டுபிடிக்க வேணும்.

எங்கள் கல்விமான்கள் ஏதாவது செய்யணும்.

அப்படி யாராவது உங்களிடம் இருந்தால் தானே உதவி செய்ய முடியும்?😄

அப்படி எவரும் உங்களிடம் இல்லாத காரணத்தாலேயே கூட்டமைப்பே சுமேந்திரனிடம் சரணடைந்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.