Jump to content

Recommended Posts

மருத்துவர் சத்தியமூர்த்தி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நடமுறைகளை மக்கள் கைவிடாது தொடர்ந்து பின்பற்றுமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போதும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள். வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான இடங்களில் இருந்தவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு கொண்டுவரப்படுகின்றார்கள்.

அவர்களிடம் சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஊடரங்கு தளர்த்தப்பட்டதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை. எனவே மிக கவனமாக இருக்க வேண்டும். வைத்தியசாலை உழியர்களும், பொதுமக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

கொரோனா நோய் தொற்று தொடர்பான அடிப்படையான வேண்டுகைகள், நடவடிக்கைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும்.

தற்போது ஊடரங்கு சட்டம் அமுலில் இல்லை. இதனால் ஓர் இடத்தில் இருப்பவர்கள் இன்னுமொரு இடத்திற்கு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளது.

ஆகவே தொற்றுக்குள்ளானவர் இப்பகுதிக்கு வந்தால் அவரையும், அவருடன் தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டுபிடிப்பதற்காகவே பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையின் அன்றாட அனைத்து சேவைகளும் தற்போது நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக சத்திரசிகிச்சைகளும் நடாத்தப்படுகின்றன. இதுதவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் பல்வேறு மருத்துவ கிளினிக் போன்றவையும் நடக்கின்றன.

வைத்தியசாலைக்கு வருபவர்களின் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும், தொற்றாளர்கள் மற்றும் தொற்று அபாய பகுதியுடன் தொடர்புள்ளதா என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இத்தகவல்களைக் கொண்டு இங்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வைத்தியசாலை பணியாளர்களுக்கு கொரோனாவில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டு, நோயாளர்களை அணுகுவது என்பது தொடர்பாக பயிற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகின்றோம் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/142976

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

வட மாகாணத்தில் போக்குவரத்து சேவை தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பொதுமக்களுக்கான அரச, தனியார் பேருந்து சேவைகள் வடமாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பான அவதானிப்பை அடுத்தே தீர்மானிக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன் வட மாகாணத்தில் ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துகளை இரண்டு வாரங்களுக்கு பின்னரே மீள இயக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பணிப்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் திணைக்களங்களின் தற்போதைய நிலைமைகளை வெளிப்படுத்தியதோடு, தமது திணைக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பத்தில் உள்ள சவால்களையும் முன்வைத்தனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு அமுலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தொழிலதிபர் நோயல் செல்வநாயகம் வழங்கிய 2 மில்லியன் ரூபா காசோலையை கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதம செயலாளரிடத்தில் ஆளுநர் கையளித்தார்.

அதனையடுத்து, வடமாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தின் வளர்ச்சி தொடர்பான தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார். மாகாணத்தின் திணைக்களங்களில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பில் அந்தந்த திணைக்களத்தின் பணிப்பாளர்கள் அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மாகாணத்தின் அனைத்து திணைக்களங்களிலும் சீரான தன்மையை பின்பற்றுமாறு பரிந்துரைப்பதோடு வளங்கள் மற்றும் வசதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு பதிலாக, தற்போது காணப்படுகின்ற வளங்களையும், வசதிகளையும் வினைதிறனான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் நிறைவுக்கு வந்ததையடுத்த இரண்டு மாதங்களில் ஏற்படவுள்ள உண்மையான சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலான முகாமைத்துவ திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முகாமைத்துவ திட்டங்களை தயாரிப்பதற்கும் தீர்வுகளை காணப்பதற்குமான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். திணைக்களங்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான குழப்பங்களுமின்றி செயற்படுவதற்குரிய பதிவுகளையும், முறைப்படியான பூரணப்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வடமாகாணத்தின் வளர்ச்சியானது அதிகளவில் கல்வியிலேயே தங்கியுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆகவே சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அமைவாக கல்வித்தரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் மாகாணத்தின் கல்வி வளங்களுக்கான தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

மாகாணத்தில் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களை முழுமையாக அளவீட்டுக்கு உட்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு உரிய அலகுகள் ஊடாக விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் மாகாணத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் அமைச்சுக்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகளை முறையாக அதிகாரிகள் பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143193

Link to comment
Share on other sites

On 12/5/2020 at 01:53, Rajesh said:

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழில் மீண்டும் கொரோனா என யாரும் பீதியடையத் தேவையில்லை- பணிப்பாளர் சத்தியமூர்த்தி

In இலங்கை     May 15, 2020 8:11 am GMT     0 Comments     1968     by : Litharsan

யாழில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவரும் பீதியடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டதாக (Positive) பொசிற்றிவ் என அறிக்கை வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், “இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தவர்கள் ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் கண்டறியப்பட்டது (Positive) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புறோம்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். அவர்கள் ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளோம். ஐந்து பேருக்கும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எனவே, இதுதொடர்பாக யாழ்ப்பாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என அறிக்கை வந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும். எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/யாழில்-மீண்டும்-கொரோனோ-எ/

Link to comment
Share on other sites

சிகிச்சை முடிந்து வந்த அரியாலைவாசிகளுக்கு கொரோனா தொற்று -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்

சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலை வாசிகளிடம் கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,

இன்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 6 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள். இன்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர். ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143253?ref=rightsidebar

Link to comment
Share on other sites

யாழ் மக்களால் வரவிருக்கும் பெரும் ஆபத்து! மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கும் போது, பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்து கொள்வது தான் இதற்கான தீர்வாக அமையும் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வுகானில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து அந்நாடு முழுமையாக மீண்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறது.

கொரோனாவை இலகுவாக வெற்றி கொண்டதன் பின்னணியில், சமூக இடைவெளியை தொடர்ச்சியாக பொது மக்கள் பேணி வந்ததாலேயே மிக இலகுவாக தாம் அதிலிருந்து மீண்டதாக சீனா அறிவித்திருக்கிறது.

இதனைப் பின்பற்றி இலங்கையில் தொடர்ச்சியாக போடப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஏதுவான காரணிகள் ஏற்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதனை மையமாக வைத்தும், நாட்டின் பொருளாதார நெருக்கடியினை காரணமாகக் கொண்டும், அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தியது.

ஆனால், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசாங்கமும் பொலிஸாரும் விதித்திருந்தனர். எனினும், தற்போது பொது மக்கள் கொரோனாவின் பேராபத்தை உணராது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களின் செயல்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட பொலிஸார் பொது மக்கள் தொடர்ச்சியா இவ்வாறு நடந்து கொண்டால் மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதுடன், பொது மக்களுக்காக பொதுப் போக்குவரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் மக்களும், சந்தைகளுக்குச் செல்பவர்களும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் கொரோனாவை மறந்து செயல்படுகின்றார்கள் என்று கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடருமாயின் கடுமையான சட்டங்களை மீண்டும் இங்கு அமுல்படுத்த நேரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவதான் மூலம் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையினை வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆகவே பொது மக்கள் அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143329
Link to comment
Share on other sites

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்

In இலங்கை     May 18, 2020 10:59 am GMT     0 Comments     1336     by : Jeyachandran Vithushan

யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெடர்ந்து த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக உந்துருளியில் பயணம் செய்யும் இளைஞர்கள் கடுமையான வீதி விபத்துக்கு உள்ளாகி அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் ஒரு சிலரை காப்பாற்றவும் முடியாது. அவர்கள் கடுமையான தலை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே குறிப்பாக உந்துருளியினை பாவிக்கும் இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வண்டியை மெதுவாக செலுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேகமாகச் செலுத்துவதில் தவிர்த்துக் கொள்ளுமாறு இளைஞர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

வீதி விபத்து ஏற்பட்டால் சில சமயங்களில் உயிரை காப்பாற்ற கூட முடியாமல் வைத்தியர்களுக்கு போகின்றது. ஆகவே இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. எங்கள் பகுதியில் கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் வீதி விபத்துக்களினால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்கள்.

எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாத்திரமல்ல மோட்டார்சைக்கிளினை வாங்கி வழங்கும் பெற்றோர்களும் இளைஞர்களை அல்லது அவர்களுடைய பிள்ளைகளை மிக மிக அவதானமாக செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள். குறிப்பாக அவர்கள் அளவுக்கு அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செலுத்துவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது.

ஆகவே அவர்கள் வேகத்தினை தனித்து மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தற்பொழுது பாவனையில் இருக்கின்ற மோட்டார்சைக்கிள்கள் மிக வேகத்தில் இலக்கினை அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாவனைக்கு வருகின்ற மோட்டார் சைக்கிள் ஒவ்வொன்றும் அதன் வேகத்தின் அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. தற்பொழுது பாவனையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் 100 கிலோமீட்டர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வாறுஅமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இதன் ஆபத்து என்று தெரியாமல் அதிக வேகத்தில் ஓடி தங்களுடைய உயிர்களை தாங்களாகவே மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு குடும்பப் பொறுப்பு உள்ளது இவர்களுடைய எதிர்காலம் எங்கே செல்கின்றது.

எனவே பெற்றோர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கொண்டு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதில் கொஞ்சம் கண்டிப்பான தன்மையினை மேற்கொள்ள மேன்டும்” என வைத்திய பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-ஊரடங்கு-தளர்த்தப-2/

Link to comment
Share on other sites

பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாகாணத்தில் நாளையதினம் தொடங்கும் சேவை

வடக்கு மாகாணத்தில் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த நிலையில் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக குறித்த பயண சேவைகள் யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143671

Link to comment
Share on other sites

வடக்கில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவை

யாழில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக குறித்த பயண சேவைகள்யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதாகவும் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து குறித்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-நாளை-முதல்-மட்ட/

Link to comment
Share on other sites

வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் யாழிலிருந்து ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர் சாலையிலிருந்து புறப்படும் பேருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்று அதிகாலை 5.45 மணிக்கு நீர்கொழும்பு வரையான சேவையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நீர்கொழும்பு வரை அனுமதிக்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

அத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு - அக்கரைப்பற்று மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாளை பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144010

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் என்றால் என்ன? யாழ்.மக்களின் பதில்

சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதையும் புரட்டிப்போட்டுள்ளது.

இந்த வைரஸ் எங்கிருந்தது வந்தது? கொரோனா வைரஸ் என்றால் என்ன? என்ற கேள்விக்கு யாழ். மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவற்றை கீழே காணொளியில் காணலாம்...

https://www.ibctamil.com/srilanka/80/143999

Link to comment
Share on other sites

65 நாட்களின் பின்னர் குணமடைந்த யாழின் முதலாவது கொரோனா நோயாளியின் நேரடி ரிப்போா்ட்

யாழில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்றைய தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவருடன், எமது ஊடகம் நேர்காணல் செய்திருந்தது.

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

https://www.ibctamil.com/srilanka/80/144138?ref=imp-news

Link to comment
Share on other sites

13 minutes ago, Rajesh said:

இது தொடர்பில் அவர் பேசியதாவது,

ஒரு நேர்காணலை எவ்வளவு மோசமாக செய்ய முடியும், எவ்வளவு மோசமாக கேள்விகளை கேட்க முடியும் என்டதுக்கு இந்த IBC ஊடகவியலாளர் நல்ல உதாரணம்.

ஒரு நேர்காணலில நல்ல பயனுள்ள விஷயங்களை எடுக்க முடியாத ஊடகவியாளராகவும் இவர் தன்னை வெளிப்படுத்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

கொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு

jaffna-1-3.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக, யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனால் எமது சபையின் எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்படடன. இதன் காரணமாக எமக்கு இரண்டு மாதங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வருமானம் இல்லாத நிலையிலும் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா தொற்றின் போது கிருமி தொற்று நீக்கல் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுக்க 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எமக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருந்த இருமாத முடக்கநிலையில் மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நிதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எமது வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் எதிர்பாக்கப்படாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உரிமம் மாற்றத்தினால் கிடைக்கும் 130 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வரையான வருமானம் இழக்கப்படலாம். ஏனெனில் இம்முறை நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.இவ்வாறு வேறு வருமானங்களான வரிகள், சந்தை குத்தகை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், வர்த்தகர்களுக்கு சில வரி விலக்குகளை சில நாட்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் தற்போது கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தனியாரின் உழவு இயந்திரங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். கழிவகற்றல் செயற்பாட்டிற்கு மாநகர சபையின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் நாம் திண்ம கழிவகற்றலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மலையின் காரணமாக டெங்கின் தாக்கம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர எல்லைக்குள் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

எனவே நாம் அது தொடர்பிலும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். சில பகுதிகளுக்கு இப்போதே புகையூட்டிடல்கள் இடம்பெறுகின்றன” என  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-எதிரொலி-யாழ்-மாநக/

Link to comment
Share on other sites

On 18/3/2020 at 05:20, Vankalayan said:

மற்றைய நாடுகளைவிட இலங்கை அரசு சிறப்பாக இதை கையல்கின்றது

தற்பொழுதும் இலங்கை சிறப்பாக கையாள்கின்றது என எண்ணுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

இந்திய வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி- யாழில்13 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

In இலங்கை     June 9, 2020 11:22 am GMT     0 Comments     1211     by : Yuganthini

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த இந்திய வியாபாரிக்கு,  கொரோனா தொற்று இருப்பதாக நேற்று வெளியான தகவல், இன்றே உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இந்திய-வியாபாரிக்கு-கொரோ/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.