Jump to content

Recommended Posts

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

வெளிவந்த முடிவுகளின்படி அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140487?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – அஜித் ரோஹண!

In இலங்கை     April 4, 2020 3:02 am GMT     0 Comments     1137     by : Benitlas

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்.

நீங்கள் உண்மையான தகவல்களை வழங்கும் போது உங்களையும் உங்களை சுற்றி இருப்போரையும் காப்பாற்ற  இலகுவாக இருக்கும். தயவு செய்து  உண்மைகளை மறைக்காதீர்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாருடன்-பழகினோம்-என்பதை/

 

யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரின் தற்போதைய நிலை..

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த மூவரும் யாழில் இலிருந்து மட்டக்களப்பு வெலிக்கந்தை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசேட அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய், மகன், மகள் ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

https://www.ibctamil.com/srilanka/80/140505

Link to comment
Share on other sites

யாழில் கொரோனா பரிசோதனை! வெளியான புதிய தகவல்

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே இந்த பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

எனவே பல்கலைக்கழகத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/140546?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

மக்களுடன் முரண்பாடாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை- யாழ். அரச அதிபர்

Kanapathipillai-Mahesan-1.jpg

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த முறைப்பாட்டை  விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த  உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்தக் காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

http://athavannews.com/மக்களுடன்-முரண்பாடாக-நடந/

Link to comment
Share on other sites

யாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா? உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் 18 பேருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட இரத் மாதிரிகள் அநுராதபுரத்திற்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.

அதன் முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த 18 பேரில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும்.

ஏனைய 15 பேருக்கும் தொற்று இல்லை என்றும், இதில் தொற்று இருப்பதாக கூறப்பட்ட மூவரும் இதற்கான சிகிச்சைப் பிரிவுக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/140566?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

In இலங்கை     April 6, 2020 3:23 am GMT     0 Comments     1199     by : Litharsan

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மந்திகை வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டநிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

http://athavannews.com/கொரோனா-சந்தேகத்தில்-மந்த/

Link to comment
Share on other sites

On 4/4/2020 at 21:57, போல் said:

மக்களுடன் முரண்பாடாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை- யாழ். அரச அதிபர்

 

Kanapathipillai-Mahesan-1.jpg

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த முறைப்பாட்டை  விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த  உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்தக் காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

http://athavannews.com/மக்களுடன்-முரண்பாடாக-நடந/

கொரோனா சிறீலங்காவில் நீதிபரிபாலனம் செய்கிறதா......? வாழ்த்துக்கள்.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

April 5, 2020

sathiyamoorthy.jpg

தாவடியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் தாவடியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தபட்டுள்ளனர்.

அவர்களில் 18 பேரின் மாதிரிகளே கொரோனா தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனைக்கு நேற்றுமுன்தினம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது    #தாவடி  #சுயதனிமை  #கொரோனா   #சத்தியமூர்த்தி

 

http://globaltamilnews.net/2020/140096/

Link to comment
Share on other sites

11 hours ago, Rajesh said:

கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு – கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது!

In இலங்கை     April 6, 2020 2:53 pm GMT     0 Comments     1024     by : Benitlas

மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவர் ஆஸ்துமா நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது” என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/கொரோனா-சந்தேகத்தில்-மந்-2/

Link to comment
Share on other sites

கொரோனா அபாயம்! யாழில் உள்ள அனைத்து முக்கிய வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் அவசியம்!

வடபிரதேசத்துக்கான கொரோனா நோயை அடையாளம் காணக்கூடிய ஒரே ஒரு உபகரணம் மட்டும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கத் தொடங்கியிருக்கின்றது.

அது நல்ல விடயமாக இருந்தாலும் திடீரென ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய அளவுக்கு வடபகுதியில் உள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்திலும் பரி சோதனைக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என வைத்திய கலாநிதி சிவமோகன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பி.சி.ஆர் எனப்படும் உபகரணம் மட்டுமே தற்பொழுது எமது நாட்டில் பாவனையில் உள்ளது இவற்றை அதிகப்படியாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசர நிலையில் இந்த அரசு உள்ளது. எனவே இதை மிக வேகமாக கொள்வனவு செய்யாதவிடத்து பெருந்தொகையான நோயாளிகள் அடையாளம் காணப்படாமல் கிராம ரீதியில் கைவிடப்பட்டு அவர்களிடமிருந்து தொற்றுக்கள் பெருகுவதற்கும் ஒரே நேரத்தில் பாரிய அனர்த்தத்திற்கு எமது மக்கள் தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பரிசோதனை செய்வதன் மூலமே கொரோனா நோயாளர்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் சில சமயங்களில் அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த நபரிலிருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே இந்த பாசோதனை கருவிகள் தான் கொரோனா நோயை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் தனிமைப்படுத்தல் மட்டும் இந்த நோயை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கையாக அமையாது என்று வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140721

Link to comment
Share on other sites

யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் நிலை என்ன? பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலைதொடர்பில் இன்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாள்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 22ஆம் திகதி தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் 15 நாள்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/140764?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பாய் தாராவி சேரிப் பகுதியில் இந் நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இத் தொற்று பரவத் தொடங்கினால் கட்டுப் படுத்துவது கடினம். அதிலும் தாராவி சேரியை Nuclear ☢️ Bomb என ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கின்றனர். ☹️

Link to comment
Share on other sites

யாழ். நகரில் மீண்டும் தீவிர சோதனை நடவடிக்கை!

In இலங்கை     April 8, 2020 10:13 am GMT     0 Comments     1308     by : Litharsan

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாண பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

நாடுமுழுவதும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் நிலையில் இந்த பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் நாட்டின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்படாத போதும் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையைத் தொடர்ந்து பொலிஸார் தீவிரமாக சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, 30 இற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Police-Raid-on-Jaffna-Coronavirus-Alert-

Police-Raid-on-Jaffna-Coronavirus-Alert-

Police-Raid-on-Jaffna-Coronavirus-Alert-

Police-Raid-on-Jaffna-Coronavirus-Alert-

 
Link to comment
Share on other sites

சுவிஸ் போதகரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை! வெளியானது அறிக்கை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவரிடமும் வவுனியாவைச் சேர்ந்த 10 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 8 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்கள் 20 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140814

Link to comment
Share on other sites

கொரோனா சந்தேகம்: யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதி!

In இலங்கை     April 9, 2020 12:04 pm GMT     0 Comments     1140     by : Litharsan

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) மாலை தொரிவிக்கையில், “யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் இதுவரையில் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் 5 பேர் குறித்த காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் நேற்று அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், இன்று அனுமதிக்கப்பட்ட 3 பேருடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவ ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூடத்தின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என பணிப்பாளர் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனா-சந்தேகம்-யாழ்-போத/

 

கொரோனா தொடர்பாக யாழில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

In இலங்கை     April 9, 2020 11:37 am GMT     0 Comments     1172     by : Litharsan

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மற்றும் அதன் நடைமுறைகள் பற்றிய விளக்கம் இதன்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடக சந்திப்பில் , யாழ். போதனா வைத்தியசாலைச் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன்,  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறை சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியசாலையின் தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

http://athavannews.com/யாழ்-பல்கலைக்கழக-மருத்த-2/

Link to comment
Share on other sites

யாழில் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவு: மன்னாரைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று இல்லை!

In இலங்கை     April 10, 2020 12:18 pm GMT     0 Comments     1322     by : Litharsan

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) 10 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒருவர் நேற்று மாலை மன்னாரிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர் என்பதுடன் குறித்த நபர் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்தவர் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரஸ் தொற்றுடையவர்களோடு தொடர்புடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று குறித்த ஆய்வுகூடப் பரிசோதனை இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/யாழில்-இன்றைய-கொரோனா-பரி/

 

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு!

In இலங்கை     April 10, 2020 12:43 pm GMT     0 Comments     1056     by : Litharsan

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காரைநகரைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை உல்லாசக் கடற்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவன் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாணவியால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதற்கமைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-சிறுமியை-வன்புணர்/

Link to comment
Share on other sites

யாழ். தாவடிக்கு விடுதலை - வடக்கு சுகாதார பணிப்பாளர் தகவல்!
 
Northern-Province-Health-Services-Director-A.Sathyamoorthy.jpg

கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர் வசித்த தாவடிப் பகுதி முழுமையாகக் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினருடைய முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிவரும் 13 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழ்-தாவடிக்கு-விடுதலை-வ/

Link to comment
Share on other sites

யாழில் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் அடையாளம் காணப்பட்டார்

யாழ்.கோட்டை முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பேதுருப்பிள்ளை அல்பிரட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்தில் தொண்டாற்றி வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

“முதியவரின் சடலம் மாலை கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை” என்று பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் நேற்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனை தொடர்ந்து முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்..

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/141082?ref=imp-news

Link to comment
Share on other sites

வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா

Coronavirus-Worldwide-Update.jpg

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 8 பேரில் நால்வரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி,

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

(குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.)

http://athavannews.com/வடக்கில்-இன்று-மட்டும்-12-ப/

Link to comment
Share on other sites

யாழில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்று: பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இச்சூழ்நிலையில், வடபகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் தொடர்பிலும், தொற்றாளர்களின் நிலைப்பாடு குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார் பணிப்பாளர் சத்தியமூர்த்தி,

https://www.ibctamil.com/srilanka/80/141252

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படும்?

யாழ்ப்பாணத்தில் மேலும் எட்டு கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் இனம் காணப்பட்டுள்ள நிலையில் குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை இப்பகுதிகளில் அடுத்துவரும் நாள்களில் விரைவாக கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

எனவே இனம்காணப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு கருதி மீளவும் முடக்குவது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/141233?ref=rightsidebar

 

யாழில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Coronavirus-Worldwide-Update.jpg

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் நல்லூர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-இன்று-மேலும்-இருவ/

Link to comment
Share on other sites

District/Area COVID-19 patients
Colombo 47
Kalutara 45
Quarantine centers 37
Puttalam 35
Gampaha 26
Jaffna 13
Kandy 7
Ratnapura 5
Foreigners 3
Under Observation 4
Kurunegala 2
Matara 2
Ampara 2
Kegalle 2
Galle 1
Batticaloa 1
Badulla 1
Total 233
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.