Jump to content

25 வருட பழைய வழக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40-AF4-B0-D-49-ED-4-FF2-9117-E80872-B265
நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லையேர்மனியில் Osnabrueck  நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது.

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது.

“24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு  நேரத்திலேயே அந்தக் கொலை நடந்திருக்கிறது. விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறோம்என்று பொலீஸ் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அவர்களால் கொலையாளியை மட்டும் கண்டு பிடிக்க முடியாமல் போயிருந்தது.

Silke அணிந்திருந்த Pullover இனால் அவளது கழுத்து நெரிக்கப் பட்டு அந்தக் கொலை நடந்திருந்தது. பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் ஒரு கட்டத்தில் Silke சம்பந்தப்பட்ட கோப்பை போலீஸ் தரப்பில் மூடி வைத்து விட்டார்கள்.

2011இல் 57 வயதான கட்டிட வேலை செய்து கொண்டிருந்த Siegfried என்ற யேர்மனியருக்கு பணம் தேவைப்பட்டது. பணத்தை எங்கே இருந்து எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது தனது அருகாமையில் இருந்த Sparkasse என்ற வங்கி. வங்கிக்குச் சென்ற Siegfried தன்னிடம் இருந்த ஆயுதத்தைக் காண்பித்து பணத்தைக் கேட்டிருக்கிறார். அவர் பணம் கேட்டதோ தகவல்கள் தரும் (Service point) இடத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம். இந்த நிலையை அவதானித்த வங்கி ஊழியர்கள் உசாராகிவிட Siegfried பதட்டமாகி வங்கியில் பணம் கட்ட வந்த 53 வயதான ஒரு பெண்ணிடம் ஆயுதத்தைக் காட்டி அவளிடம் இருந்த 400 யூரோக்களைப் பறித்துக் கொண்டார்.

ஆனால் Siegfried வங்கியை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பொலீஸார் வந்துவிட அவரால் தப்பிக்க முடியாமல் போயிற்று.

வங்கியில் தகவல் தரும்  பெண்ணிடம் பணம் கேட்டு, கொள்ளையடிக்க நினைத்த Siegfried இன் இந்தச் செயல்யேர்மனியின் முட்டள்தனமான வங்கிக் கொள்ளைஎன்று இன்றுவரை வர்ணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

13 சகோதரர்களுடன் பிறந்த Siegfried சிறு வயதிலேயை பல சின்னச்சின்னக் குற்றச் செயல்களைச் செய்திருக்கிறார். அவற்றிற்காக சிறு சிறு தண்டனைகளை அவர் பெற்றிருந்தாலும், வங்கியைக் கொள்ளையிட முயன்றதற்காக அவருக்கு கிடைத்த தண்டனையே அதிகமாக இருந்தது. வங்கியைக் கொள்ளையிட முனைந்ததற்காக அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.பொதுவாக குற்றவாளிகளின் DNA பொலீஸ் தரப்பில் எடுத்து வைத்துக் கொள்வது நடைமுறை.  Siegfried விடயத்திலும் அது நடந்தது

நீண்ட காலமாக மூடி வைக்கப் பட்டிருந்த Silkeஇன் கோப்பு ஒரு பொலீஸ் அலுவலகரின் கண்ணில் பட, அவர் அவளது கொலை பற்றிய தகவலை ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு உண்மை தெரிந்தது.  Silke கொலை செய்யப் பட்ட பொழுது அவளது Pulloverஇல் இருந்து சேகரித்து வைக்கப் பட்டிருந்த தடையங்களுடன் Siegfried இன் DNA ஒத்துப் போனது. அதை அந்த அலுவலகர் உறுதிப் படுத்தினார்.

2011 இல் செய்த குற்றத்துக்காக,  2018இல் சிறையில் இருந்து விடுதலையான Siegfried மேல் குற்றம் உள்ளதாக பொலீஸ் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.

1995இல் Siegfried வேலையில்லாமல் இருந்த காலப்பகுதியில் தனது காரில் அமர்ந்திருந்த சமயம், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதையில் வந்த Silke வாடகைக் கார் என்று கருதி  Siegfried இன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அதுவே அவளது வாழ்க்கைக்கு முடிவானது.

கார் வேறு பாதையில் செல்வதை அவதானித்த Silke காரை நிறுத்தச் சொல்லி அதில் இருந்து இறங்கி ஓடிய போதே அவளைத் துரத்திச் சென்ற Siegfried வயல்வெளியில் அவளைக் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெளிவானது.

வேலை இல்லை.குடும்பத்தில் உள்ள பிரச்சினை, மன அழுத்தம், மது போதை எல்லாம் சேர்ந்து எனது கட்சிக்காரரை இந்தக் கொலையைச் செய்ய வைத்திருக்கிறது என Siegfriedஇன் சட்டத்தரணி நீதி மன்றத்தில்  வாதத்தின் போது குறிப்பிட்டார்.  

களவு, பாலியல் வன்முறை, அடிதடி, ஏமாற்றுதல் என்று ஏகப்பட்ட விடயங்களுக்கு ஏற்கனவே Siegfried சொந்தக்காரனாகி தண்டனைக்கு உள்ளானதை எல்லாம் கவனத்தில் கொண்டு Siegfriedக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கின்றது.

DNA பரிசோதணையில்  மீண்டும் ஏதாவது வழக்கில் மாட்டிக் கொண்டால் அடுத்த ஆயுளை Siegfried எங்கே போய்த் தேடப் போகிறார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.