Jump to content

யாழ் மறைமாவட்டத்தில் அனைத்து திருப்பலிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை -யாழ். ஆயர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மறைமாவட்டத்தில் அனைத்து திருப்பலிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை -யாழ். ஆயர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை திருப்பலிகள் வழிபாடுகள் எதுவும் நடைபெறமாட்டாது என யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவித்துள்ளார்.அத்துடன் மக்களையும் குருக்கள் துறவிகளையும் இல்லங்களில் இருந்தவாறு இக்கடின காலத்தில் இருந்து விடுதலை பெற இறை வேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களை ஒன்று கூட்டும் எந்த ஒரு நிகழ்வையும் ஒழுங்கு செய்ய வேண்டாமென பங்குத் தந்தையர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.இதன்படி மறு அறிவித்தல் வரை தவக்காலத்தின் விசேட நிகழ்வுகளான திருச்சிலுவைப்பாதை திருயாத்திரை திருப்பாடுகளின் காட்சி போன்றவை எதுவும் நடைபெறமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ் மறைமாவட்டத்தில் அனைத்து திருப்பலிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுவதாக யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மறைமாவட்டத்தில்-அனை/

Link to comment
Share on other sites

On 3/17/2020 at 4:45 AM, கிருபன் said:

அத்துடன் மக்களையும் குருக்கள் துறவிகளையும் இல்லங்களில் இருந்தவாறு இக்கடின காலத்தில் இருந்து விடுதலை பெற இறை வேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லது,  வேறு என்னதான் செய்ய முடியும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.