Jump to content

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு


Recommended Posts

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு

 

 

by : Anojkiyan

52710185_303-720x450.jpg

கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது

மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

வர்த்தக போக்குவரத்து தவிர, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிஸ்லாந்துடனான அதன் எல்லைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டன.

இதேவேளை அண்மைய நாடான போலந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் வோஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், டொமினிகன் குடியரசு தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது. இது சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பிய 47 வயதான பெண்மணி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ஜேர்மனியை-உலுக்கும்-கொரோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

எல்லா போடரும் மூடீட்டாங்கள்.இனி ஒரு நாய் உள்ளடேலாது.போற போக்கை பாத்தால் ஊரடங்கு சட்டம் வரும் போலை கிடக்கு.அப்பிடி வந்தாலும் ஒரு வழிக்கு நல்லதுதான். வெய்யில் எறிக்குது....எல்லாரும் ஐஸ்கடையிலை சண்கிளாசையும் போட்டுக்கொண்டு குந்தியிருக்கிறாங்கள்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

Lkw so weit das Auge reicht. Zwischen Weischenberg und Bautzen endet der Stau auf der A4. Die Grenze zu Polen ist dort noch 40 Kilometer entfernt!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

16 minutes ago, Kavi arunasalam said:

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

யேர்மனி என்றதால் 60 கிலோ மீற்றர். இதுவே இலங்கை, இந்தியா, பாக்கி என்றால்.... பக்கத்து றோட்டும், கான்களும் நிறைந்து ஒரு 10 கிலோ மீற்றர்தான் ஆகியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

அஞ்சை எடுத்துவிட்டாலும் சனம் வருதில்லை....😷

Link to comment
Share on other sites

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

அங்கை சீனா அமளிதுமளிப்பட  இவங்கள் இஞ்சை உசாராகிட்டாங்கள்.😷

அதோடை வாற திங்கள் தொடக்கம் நாடு முழுக்க ஊரடங்குச்சட்டம் வருமெண்டு முக்கியமான ஒராள் சொல்ல கேள்விப்பட்டன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

‘கும்ஸ்’ குறிப்பிட்டது போல்தான்.
ஏற்கனவே தயார்நிலையில் இருந்திருக்கிறார்கள். அதேநேரம் மக்களை பதட்டத்துக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொண்டார்கள். நேற்று யேர்மனிய கன்ஸிலர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்,”ஜெர்மனி ஒரு சிறந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது, ஒருவேளை எங்களது சுகாதார அமைப்பு உலகின் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கலாம்”

“கோரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு, அதற்காக சொல்லப்படும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். மூத்த சந்ததிகளை நோயினில் இருந்து பாதுகாக்க தயவு செய்து வெளி நடமாட்டத்தை, ஒன்று கூடுவதை தவிருங்கள் எல்லாவற்றுக்கு மேலாக இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒற்றுமையாக இருங்கள் “ என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

யுத்தத்தின் பின்னர் யேர்மனியர்கள தங்கள் நாட்டை கட்டி எழுப்பியவர்கள். அவர்கள் உழைப்பு மட்டுமல்ல ஒற்றுமையும் அதற்கு ஒரு காரணம். நான் அவதானித்த வகையில் கன்ஸிலரின் வேண்டுகோளை பலர் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு அப்பால் கோரானாவைப் பற்றிய தெளிவும் அவர்களிடம் இருக்கிறது.

சில இளவட்டங்கள் அதுவும் பிறநாடுகளின் வேர்களைக் கொண்டவர்கள்  ஏனோதானோ என்று வழமை போல் தங்கள் விருந்து விளையாட்டுக்களில் பொது இடங்களில் அசட்டையீனமாக நடந்து கொள்கிறார்கள்.  எல்லொரும் இணைந்து செயற்படாவிட்டால், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆணை பிறப்பிக்க வேண்டி வரும் என்ற உள்நாட்டு அமைச்சர்  எச்சரித்திருக்கிறார்.

இதற்குள் இன்னுமொன்றை அறிவித்திருக்கிறார்கள். அது - Condomஇன் விற்பனை இரண்டு மடங்காகி இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

5 பேருக்கு மேல் கூட்டமாய் நின்றால் பொலீஸ்  பைன் அடிக்க போவதாக சொன்னா 😟

Link to comment
Share on other sites

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தான் வரும் திங்கள் தொடக்கம் ஊரடங்கு சட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள் போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய விட கனடா எவ்வளவோ மேல். தோற்றும் இறப்பு விகிதமும் குறைவு 😀🇨🇦💪

Link to comment
Share on other sites

இங்கு எழுதப்படும் கருத்துக்களை நோக்க அன்று தெற்கில் சிங்களவன் அடித்து நொருக்க, நொருங்கியவர்களை ஒரு கப்பலில் அள்ளிப்போட்டு கப்பல் வடக்கேவர, அதற்குள் நான் பெரும்சாதி, அவன் கீழ்சாதி, இவன்பக்கத்தில் நான் இருக்கமாட்டேன் என்று தடிப்புக் காட்டிய நிகழ்வு ஞாபகம் வருகிறது. கொரோனா ஆள் பார்க்கவில்லை, ஊர்பார்க்கவில்லை, நாடுபார்க்கவில்லை. உலகத்தையே அடித்து நொருக்குகிறது, அவரவர் நாட்டு மக்கள்பற்றி பெருமை பேசுவதைவிட்டு உலகமக்கள் நலனை நோக்கவேண்டும். அவசியமின்றி, உல்லாசத்துக்கு, நாடுவிட்டு நாடுசெல்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கொரோனா, 'ஊரோடு ஒத்துவாழ்' என்று ஊர்பற்றிப் பேசாது 'உலகத்தோடு ஒத்துவாழ்'  என்று  புதிய பாடம் கற்பித்து வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் இலஙகை மாதிரி நாடுகளோடதன் போட்டி என்டு.இப்ப பாத்தால் கனடா யேர்மனி பிரான்ஸ் என்டும் போட்டி களை கட்டுது.வாழ்க நம் இனம்.

Link to comment
Share on other sites

பிரான்சில் அனாவசியமாக வெளியே உலாவுபவர்களைப் பிடித்து 24 மணித்தியாலம் காவலில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலை 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மாங்குயில் said:


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

யாp;ப்பாணம் மட்டும் இல்லை நாடு முழுவதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Munich உம் Muenchen உம் ஒன்றா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.