Jump to content

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு


Recommended Posts

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு

 

 

by : Anojkiyan

52710185_303-720x450.jpg

கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது

மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

வர்த்தக போக்குவரத்து தவிர, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிஸ்லாந்துடனான அதன் எல்லைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டன.

இதேவேளை அண்மைய நாடான போலந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் வோஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், டொமினிகன் குடியரசு தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது. இது சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பிய 47 வயதான பெண்மணி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ஜேர்மனியை-உலுக்கும்-கொரோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

எல்லா போடரும் மூடீட்டாங்கள்.இனி ஒரு நாய் உள்ளடேலாது.போற போக்கை பாத்தால் ஊரடங்கு சட்டம் வரும் போலை கிடக்கு.அப்பிடி வந்தாலும் ஒரு வழிக்கு நல்லதுதான். வெய்யில் எறிக்குது....எல்லாரும் ஐஸ்கடையிலை சண்கிளாசையும் போட்டுக்கொண்டு குந்தியிருக்கிறாங்கள்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

Lkw so weit das Auge reicht. Zwischen Weischenberg und Bautzen endet der Stau auf der A4. Die Grenze zu Polen ist dort noch 40 Kilometer entfernt!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

16 minutes ago, Kavi arunasalam said:

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

யேர்மனி என்றதால் 60 கிலோ மீற்றர். இதுவே இலங்கை, இந்தியா, பாக்கி என்றால்.... பக்கத்து றோட்டும், கான்களும் நிறைந்து ஒரு 10 கிலோ மீற்றர்தான் ஆகியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

அஞ்சை எடுத்துவிட்டாலும் சனம் வருதில்லை....😷

Link to comment
Share on other sites

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

அங்கை சீனா அமளிதுமளிப்பட  இவங்கள் இஞ்சை உசாராகிட்டாங்கள்.😷

அதோடை வாற திங்கள் தொடக்கம் நாடு முழுக்க ஊரடங்குச்சட்டம் வருமெண்டு முக்கியமான ஒராள் சொல்ல கேள்விப்பட்டன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

‘கும்ஸ்’ குறிப்பிட்டது போல்தான்.
ஏற்கனவே தயார்நிலையில் இருந்திருக்கிறார்கள். அதேநேரம் மக்களை பதட்டத்துக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொண்டார்கள். நேற்று யேர்மனிய கன்ஸிலர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்,”ஜெர்மனி ஒரு சிறந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது, ஒருவேளை எங்களது சுகாதார அமைப்பு உலகின் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கலாம்”

“கோரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு, அதற்காக சொல்லப்படும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். மூத்த சந்ததிகளை நோயினில் இருந்து பாதுகாக்க தயவு செய்து வெளி நடமாட்டத்தை, ஒன்று கூடுவதை தவிருங்கள் எல்லாவற்றுக்கு மேலாக இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒற்றுமையாக இருங்கள் “ என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

யுத்தத்தின் பின்னர் யேர்மனியர்கள தங்கள் நாட்டை கட்டி எழுப்பியவர்கள். அவர்கள் உழைப்பு மட்டுமல்ல ஒற்றுமையும் அதற்கு ஒரு காரணம். நான் அவதானித்த வகையில் கன்ஸிலரின் வேண்டுகோளை பலர் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு அப்பால் கோரானாவைப் பற்றிய தெளிவும் அவர்களிடம் இருக்கிறது.

சில இளவட்டங்கள் அதுவும் பிறநாடுகளின் வேர்களைக் கொண்டவர்கள்  ஏனோதானோ என்று வழமை போல் தங்கள் விருந்து விளையாட்டுக்களில் பொது இடங்களில் அசட்டையீனமாக நடந்து கொள்கிறார்கள்.  எல்லொரும் இணைந்து செயற்படாவிட்டால், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆணை பிறப்பிக்க வேண்டி வரும் என்ற உள்நாட்டு அமைச்சர்  எச்சரித்திருக்கிறார்.

இதற்குள் இன்னுமொன்றை அறிவித்திருக்கிறார்கள். அது - Condomஇன் விற்பனை இரண்டு மடங்காகி இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

5 பேருக்கு மேல் கூட்டமாய் நின்றால் பொலீஸ்  பைன் அடிக்க போவதாக சொன்னா 😟

Link to comment
Share on other sites

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தான் வரும் திங்கள் தொடக்கம் ஊரடங்கு சட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள் போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய விட கனடா எவ்வளவோ மேல். தோற்றும் இறப்பு விகிதமும் குறைவு 😀🇨🇦💪

Link to comment
Share on other sites

இங்கு எழுதப்படும் கருத்துக்களை நோக்க அன்று தெற்கில் சிங்களவன் அடித்து நொருக்க, நொருங்கியவர்களை ஒரு கப்பலில் அள்ளிப்போட்டு கப்பல் வடக்கேவர, அதற்குள் நான் பெரும்சாதி, அவன் கீழ்சாதி, இவன்பக்கத்தில் நான் இருக்கமாட்டேன் என்று தடிப்புக் காட்டிய நிகழ்வு ஞாபகம் வருகிறது. கொரோனா ஆள் பார்க்கவில்லை, ஊர்பார்க்கவில்லை, நாடுபார்க்கவில்லை. உலகத்தையே அடித்து நொருக்குகிறது, அவரவர் நாட்டு மக்கள்பற்றி பெருமை பேசுவதைவிட்டு உலகமக்கள் நலனை நோக்கவேண்டும். அவசியமின்றி, உல்லாசத்துக்கு, நாடுவிட்டு நாடுசெல்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கொரோனா, 'ஊரோடு ஒத்துவாழ்' என்று ஊர்பற்றிப் பேசாது 'உலகத்தோடு ஒத்துவாழ்'  என்று  புதிய பாடம் கற்பித்து வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் இலஙகை மாதிரி நாடுகளோடதன் போட்டி என்டு.இப்ப பாத்தால் கனடா யேர்மனி பிரான்ஸ் என்டும் போட்டி களை கட்டுது.வாழ்க நம் இனம்.

Link to comment
Share on other sites

பிரான்சில் அனாவசியமாக வெளியே உலாவுபவர்களைப் பிடித்து 24 மணித்தியாலம் காவலில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலை 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மாங்குயில் said:


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

யாp;ப்பாணம் மட்டும் இல்லை நாடு முழுவதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Munich உம் Muenchen உம் ஒன்றா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.