Jump to content

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு


Recommended Posts

ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு

 

 

by : Anojkiyan

52710185_303-720x450.jpg

கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது

மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

வர்த்தக போக்குவரத்து தவிர, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிஸ்லாந்துடனான அதன் எல்லைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டன.

இதேவேளை அண்மைய நாடான போலந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் வோஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், டொமினிகன் குடியரசு தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது. இது சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பிய 47 வயதான பெண்மணி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/ஜேர்மனியை-உலுக்கும்-கொரோ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

எல்லா போடரும் மூடீட்டாங்கள்.இனி ஒரு நாய் உள்ளடேலாது.போற போக்கை பாத்தால் ஊரடங்கு சட்டம் வரும் போலை கிடக்கு.அப்பிடி வந்தாலும் ஒரு வழிக்கு நல்லதுதான். வெய்யில் எறிக்குது....எல்லாரும் ஐஸ்கடையிலை சண்கிளாசையும் போட்டுக்கொண்டு குந்தியிருக்கிறாங்கள்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

Lkw so weit das Auge reicht. Zwischen Weischenberg und Bautzen endet der Stau auf der A4. Die Grenze zu Polen ist dort noch 40 Kilometer entfernt!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனி தனது எல்லைகளை மூடியதின் விளைவு.

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

16 minutes ago, Kavi arunasalam said:

60 கிலோ மீற்றர் அளவுக்கு வாகனங்களின் வரிசை நீண்டு இருப்பதாக செய்தி சொல்கிறது.

யேர்மனி என்றதால் 60 கிலோ மீற்றர். இதுவே இலங்கை, இந்தியா, பாக்கி என்றால்.... பக்கத்து றோட்டும், கான்களும் நிறைந்து ஒரு 10 கிலோ மீற்றர்தான் ஆகியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜேர்மனியில் , அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர,மற்றது எல்லாம் பூட்டாமே ! உண்மையா?

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

அஞ்சை எடுத்துவிட்டாலும் சனம் வருதில்லை....😷

Link to comment
Share on other sites

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சென்ற திங்கள் முதல் பிரான்சில் அத்தியாவசியக் கடைகள் தவிர ஏனையவை பூட்டப்பட்டுள்ளன. வாங்கிச் செல்லும் சாப்பாட்டுக் கடைகள் தவிர ஏனையவை எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. பரிஸ் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கின்றது.

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

அங்கை சீனா அமளிதுமளிப்பட  இவங்கள் இஞ்சை உசாராகிட்டாங்கள்.😷

அதோடை வாற திங்கள் தொடக்கம் நாடு முழுக்க ஊரடங்குச்சட்டம் வருமெண்டு முக்கியமான ஒராள் சொல்ல கேள்விப்பட்டன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

ஜேர்மனியிலும் பிரான்சைப் போலான எண்ணிக்கையானவர்களுக்கே தொற்று ஏற்பட்டிருந்தாலும் அங்கு இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு. என்ன காரணமாக இருக்கும் ?🧐

‘கும்ஸ்’ குறிப்பிட்டது போல்தான்.
ஏற்கனவே தயார்நிலையில் இருந்திருக்கிறார்கள். அதேநேரம் மக்களை பதட்டத்துக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொண்டார்கள். நேற்று யேர்மனிய கன்ஸிலர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்,”ஜெர்மனி ஒரு சிறந்த சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது, ஒருவேளை எங்களது சுகாதார அமைப்பு உலகின் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கலாம்”

“கோரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு, அதற்காக சொல்லப்படும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள். மூத்த சந்ததிகளை நோயினில் இருந்து பாதுகாக்க தயவு செய்து வெளி நடமாட்டத்தை, ஒன்று கூடுவதை தவிருங்கள் எல்லாவற்றுக்கு மேலாக இந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒற்றுமையாக இருங்கள் “ என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

யுத்தத்தின் பின்னர் யேர்மனியர்கள தங்கள் நாட்டை கட்டி எழுப்பியவர்கள். அவர்கள் உழைப்பு மட்டுமல்ல ஒற்றுமையும் அதற்கு ஒரு காரணம். நான் அவதானித்த வகையில் கன்ஸிலரின் வேண்டுகோளை பலர் வரவேற்றிருக்கிறார்கள். அதற்கு அப்பால் கோரானாவைப் பற்றிய தெளிவும் அவர்களிடம் இருக்கிறது.

சில இளவட்டங்கள் அதுவும் பிறநாடுகளின் வேர்களைக் கொண்டவர்கள்  ஏனோதானோ என்று வழமை போல் தங்கள் விருந்து விளையாட்டுக்களில் பொது இடங்களில் அசட்டையீனமாக நடந்து கொள்கிறார்கள்.  எல்லொரும் இணைந்து செயற்படாவிட்டால், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆணை பிறப்பிக்க வேண்டி வரும் என்ற உள்நாட்டு அமைச்சர்  எச்சரித்திருக்கிறார்.

இதற்குள் இன்னுமொன்றை அறிவித்திருக்கிறார்கள். அது - Condomஇன் விற்பனை இரண்டு மடங்காகி இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை. வருகின்ற திங்கள் கிழமை பல பூட்டப் படலாம்.
உணவுப்  பொருட்களை விற்கும் கடைகளை தவிர,
புடவைக் கடை போன்றவைகள் வெறிச்சோடி உள்ளன.

உணவு விடுதிகளில்.... 10 மேசை இருந்தால்,
அதில்... ஐந்தை நீக்கி, மற்றவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை 
அதிகரிக்கும் படி அறிவுறுத்தல் வந்துள்ளது. 

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

என்னுடைய சகோதரி முஞ்சனில் இருக்கிறா...அவ சொன்னா அவ வேலை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டி கட்டாய ஹொலிடே 2 கிழமைக்கு கொடுத்து இருக்கினமாம் 

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷

5 பேருக்கு மேல் கூட்டமாய் நின்றால் பொலீஸ்  பைன் அடிக்க போவதாக சொன்னா 😟

Link to comment
Share on other sites

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, இணையவன் said:

இன்று பிரான்சில் அனாவசியமாக் வெளியில் திரிந்த 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு போலீஸ் தண்டம் அடித்துள்ளது. வெளியில் செல்லும் யாவரும் அவர் வெளியில் செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரத்துடன் செல்ல வேண்டும். மீறினால் 135 ஈரோ தண்டம். சிறு நிறுவனங்கள் பூட்டப்பட்டு அதற்கான வாடகை, மின்சாரம் போன்ற செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது.

ஜேர்மனியில் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. வைரஸ் தாக்கம் ஆரம்பம் தாமதமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தாலியை விட ஜேர்மனி 2 வாரங்களும் பிரான்சை விட 1 வாரமும் தாமதமாக வீரியமடைந்துள்ளது. இதன்படி இன்னும் 10 நாட்களில் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தான் வரும் திங்கள் தொடக்கம் ஊரடங்கு சட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள் போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய விட கனடா எவ்வளவோ மேல். தோற்றும் இறப்பு விகிதமும் குறைவு 😀🇨🇦💪

Link to comment
Share on other sites

இங்கு எழுதப்படும் கருத்துக்களை நோக்க அன்று தெற்கில் சிங்களவன் அடித்து நொருக்க, நொருங்கியவர்களை ஒரு கப்பலில் அள்ளிப்போட்டு கப்பல் வடக்கேவர, அதற்குள் நான் பெரும்சாதி, அவன் கீழ்சாதி, இவன்பக்கத்தில் நான் இருக்கமாட்டேன் என்று தடிப்புக் காட்டிய நிகழ்வு ஞாபகம் வருகிறது. கொரோனா ஆள் பார்க்கவில்லை, ஊர்பார்க்கவில்லை, நாடுபார்க்கவில்லை. உலகத்தையே அடித்து நொருக்குகிறது, அவரவர் நாட்டு மக்கள்பற்றி பெருமை பேசுவதைவிட்டு உலகமக்கள் நலனை நோக்கவேண்டும். அவசியமின்றி, உல்லாசத்துக்கு, நாடுவிட்டு நாடுசெல்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கொரோனா, 'ஊரோடு ஒத்துவாழ்' என்று ஊர்பற்றிப் பேசாது 'உலகத்தோடு ஒத்துவாழ்'  என்று  புதிய பாடம் கற்பித்து வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் இலஙகை மாதிரி நாடுகளோடதன் போட்டி என்டு.இப்ப பாத்தால் கனடா யேர்மனி பிரான்ஸ் என்டும் போட்டி களை கட்டுது.வாழ்க நம் இனம்.

Link to comment
Share on other sites

பிரான்சில் அனாவசியமாக வெளியே உலாவுபவர்களைப் பிடித்து 24 மணித்தியாலம் காவலில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலை 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எல்லா இடத்தையும் விட முஞ்சனிலை கட்டுப்பாடுகள் ஆக மோசம்.முஞ்சன் ஆக்களும் ஒரு மார்க்கமானவைதான்😷


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மாங்குயில் said:


 

Muenchen -  நாசிகளின் கூடாரம். 

Corono Virus  இருக்குதோ, இல்லையோ - கறுப்புத் தலைகளைக் கண்டால்,  Bayern போலீஸ் விட்டு வைக்காது.

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கள் காலைவரை ஊரடங்குச்சட்டம் போட்டுள்ளார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த பலரைக் காணவில்லையாம். வீடுகளுக்குள்ளும் படைகள் புகுந்து தேடவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். நகைக் கடைகளிலும் சனம் குவியுதாம். 

 

யாp;ப்பாணம் மட்டும் இல்லை நாடு முழுவதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கேயும் ஏராளமான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். கிழக்கு ஜேர்மனி பக்கத்தை விட முஞ்சன் பரவாயில்லை.😷

Munich உம் Muenchen உம் ஒன்றா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.