Jump to content

உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்?


Recommended Posts

உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்?

 

 

by : Anojkiyan

maxresdefault-3-720x450.jpg

உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.

அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியவில்லை.

ஐ.பி.எல். தொடரில்; பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், அவராலும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை.

இந்நிலையில், டுவிட்டரில் ஏராளமான இரசிகர்கள் அவுஸ்ரேலிய சுழற்பந்துவீச்சாளர் பிரட் ஹாக்கிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தனர். அதில், ‘ரி-20 போட்டியில் யார் முதன்முதலில் இரட்டைச் சதம் அடிப்பார் எந்த நாட்டைச் சேர்ந்த வீரராக இருப்பார் என்று கேட்டிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘உலகிலேயே ரி-20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் வீரர், அதற்கு தகுதியான வீரர் என்னைப் பொறுத்தவரை அது இந்திய வீரர் ரோஹித் சர்மாதான். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

நல்ல டைமிங்கில் ஷொட்களை அடிக்கும் திறமை உடையவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிடும் திறமை உடையவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் துணைத் தலைவர் ரோஹித் சர்மா, கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரி-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடி 2,331 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். சராசரி 32.37 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 137 வைத்துள்ளார். இதில் 4 சதங்கள், 16 அரை சதங்கள் அடங்கும்.

ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டில் 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 8,010 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

http://athavannews.com/உலகிலேயே-ரி-20-கிரிக்கெட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாத்திய‌ம் இல்லை , ரி20 விளையாட்டில் இர‌ட்டை ச‌த‌ம் அடிப்ப‌து என்ப‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்க‌ முடியும் , ஜ‌பிஎல்ல‌ கிறிஸ் கெயில் 175 ஓட்ட‌ம் தான் ஒரு விளையாட்டில் அடித்தார் , அடிச்சு இப்ப‌ 7வ‌ருட‌த்துக்கு மேல‌ இதுவ‌ரை யாரும் அந்த‌ இல‌க்கை தாண்ட‌ வில்லை , ச‌ர்மாவாள் 200 ஓட்ட‌ம் ரீ20 விளையாட்டில் ஒரு போதும் அடிக்க‌ முடியாது , 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.